வியாழன், 20 அக்டோபர், 2016

ஏடிம் ரகசிய எண்ணை மாற்றுக..


இது வரை இந்தியா பார்த்திராத இணைய ஊடுருவல் வங்கிகளின் ஏடிம் கார்டு மூலம் நுழைந்துள்ளது.


பொதுவாக ஏடிம் அல்லது டெபிட்  அட்டைகள் வங்கிகள் மூலம் வழங்கப்பட்டாலும் விசா, மாஸ்டர் கார்டு போன்ற நிறுவனங்கள் மூலமாகவே நிதி பரிவர்த்தனைகள் இயக்கப்படுகின்றன.



இந்த நிறுவனங்களின் இணைய சர்வர்கள் சீன கணினி திருடர்களால் ஊடுருவல் செய்யப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 32 லட்சம் நபர்களின் வாங்கி கனககுகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன என்று தெரிகிறது. சீனாவிற்கும் இந்தியாவிற்கும் உறவுகள் சரி இல்லாத தற்போதைய நிலைமையில் பழி வாங்கும் நடவடிககையாகவே இது பார்க்கப்படுகிறது.

SBI, HDFC, ICICI வங்கி டெபிட் கார்டுகள் தான் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன என்று செய்திகள் வருகின்றன.

அதனால் பல வங்கிகள் புதிய டெபிட் கார்டுகளை வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அது வரைக்கும்  நமது டெபிட் கார்டுகளின் ரகசிய எண்ணை மாற்றிக் கொள்வது மேலும் பாதுகாப்பானது!


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக