வெள்ளி, 14 ஆகஸ்ட், 2020

ரியல் எஸ்டேட் REIT பங்குகளில் முதலீடு செய்யலாமா?

கடந்த வருடமே  REIT வழியில் நிறைய ஐபிஓக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அது பற்றி நிறைய சந்தேகங்கள் வந்து கொண்டிருப்பதால் எழுதுகிறோம்.

REIT என்பது Real Estate Investment Trust என்பதன் சுருக்கம்.

கடந்த 2019ம் ஆண்டு ரியல் எஸ்டேட்டில் நிலவி வரும் மந்த நிலையை போக்குவதற்காக REIT கொள்கை மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.


கடந்த ஐந்து ஆண்டுகளாக ரியல் எஸ்டேட்டில் Liquidity என்பது மிகவும் சுருங்கி போனது. எதிர்பார்த்த அளவு மாநகரங்களில் பிளாட்கள் விற்கவில்லை. இதனால் பணப்புழக்கம் குறைந்து பல அபார்ட்மெண்ட் ப்ராஜெக்ட்கள் அந்தரத்தில் தான் நிற்கின்றன. இதே நிலை தான் கம்ர்சியல் ப்ரொஜெக்ட்களிலும் நீடிக்கிறது.

ரியல் எஸ்டேட் மக்கள் வாங்க முடியாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் அதன் விலை தான். 


செவ்வாய், 11 ஆகஸ்ட், 2020

2G இல்லாத இந்தியாவும், வஞ்சக எண்ணமும்

கடந்த சில நாட்களுக்கு முன்பு முகேஷ் அம்பானி டெலிகாம் துறை தொடங்கப்பட்ட 25வது வருட மாநாட்டில் முக்கியமான வார்த்தைகளை உதிர்த்துள்ளார்.

அதாவது 2G இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பது தான் அது. வறுமை இல்லாத இந்தியா, போலியோ இல்லாத இந்தியா என்ற அரசியல் வாதிகளின் பொன்மொழி போன்று இது ஒரு புதிய பதம் தான்.


2G என்பது ஆரம்ப கட்டங்களில் NOKIA 1100 போன்ற Feature Phones வழியாக பேசும்  முறை தான். இன்னமும் இந்தியாவில் 35 கோடி மக்கள் பயன்படுத்துகிறார்கள்.

அதனை தான் ஒழிக்க வேண்டும் என்று கூறுகிறார்.

சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பதால் கொஞ்சம் பின்புலத்தையும் பார்ப்போம்.

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2020

இரண்டு செய்திகள், உயர்ந்த நிப்டி

நேற்று வரை நான்கு நாட்கள் இந்திய சந்தை கடுமையான வீழ்ச்சியில் தான் இருந்தது. ஒரு கட்டத்தில் 10,850 நிப்டி என்ற புள்ளிகளில் 200 நாள் சராசரியையும் தொட்டு வந்தது. ஆனால் அதில் கடுமையான தடை இருந்ததால் அதற்கு கீழ் செல்லவில்லை.

அதே நேரத்தில் INDIA VIX என்ற Volatility குறியீடும் 25 என்ற அளவில் கட்டுக்குள் இருந்ததால் இதற்கு கீழ் உடனே செல்லும் என்று தோன்றவில்லை.



ஆனால் மேலே ஏற்றி செல்லும் காரணிகளும் குறைவாகவே இருந்ததன. அதனால் சந்தை உடனே மேல் செல்வது கடினம் தான் என்று எண்ணிக் கொண்டிருந்தோம்.

இந்த நேரத்தில் இன்று காலை வந்த இரண்டு செய்திகள் இந்திய பங்குசந்தைகளை நல்ல அளவில் மேலே கொண்டு சென்றது.