புதன், 31 டிசம்பர், 2014

புத்தாண்டில் கார் விலைகள் கூடுகிறது

கடந்த ஆண்டு பொருளாதார தேக்கத்தால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட ஆட்டோ துறைக்கு 4% வரி சலுகை வழங்கப்பட்டது.

பங்குச்சந்தையில் வாரி வாரிக் கொடுத்த 2014

எமது வாசகர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

கடந்த 2014ம் ஆண்டு பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர்களுக்கு மிக நல்ல ஆண்டாக இருந்து உள்ளது.

செவ்வாய், 30 டிசம்பர், 2014

பட்டும் படாமல் வந்துள்ள சீனாவின் தொழில் வளர்ச்சி தரவுகள்

சீனாவின் தொழில் துறை உற்பத்தி தரவு நேர்மறையும், எதிர்மறையும் கலந்து வந்துள்ளது.

DEBT RATIO: கடனை எளிதாக மதிப்பிட உதவும் அளவுகோல் (ப.ஆ - 36)

பங்குச்சந்தை ஆரம்பம் என்ற இந்த தொடரின் முந்தைய பகுதியை இந்த இணைப்பில் காணலாம் .
நிறுவனத்தின் கடன் அளவைத் தான் ஆங்கிலத்தில் Debt என்ற பதத்தால் குறிப்பிடுகிறார்கள்.

GST வரி விதிப்பில் மும்முரம் காட்டும் மத்திய அரசு

GST வரி விதிப்பிற்கு ஏற்கனவே மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது., அதனையடுத்து GST வரி விதிப்பிற்கு தயாராவதற்கு மாநிலங்களுக்கு ஒரு வருட கால அவகாசம் கொடுத்துள்ளது.

முதலீடு தளத்தில் செய்திகள் பிரிவு

நண்பர்களே!

நமது தளத்தை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்லும் முயற்சியாக "செய்திகள்" என்ற ஒரு பிரிவை சோதனை அடிப்படையில் ஆரம்பிக்கிறோம்.

இனி ஒப்புதல் இல்லாமலே நிலத்தை எடுத்துக் கொள்ளலாம்

நேற்று புதிதாக நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பான புதிய கொள்கை வெளியானது. பங்குச்சந்தை இதனை சாதகமாக ஏற்றுக் கொண்டாலும் கூட பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை.

திங்கள், 29 டிசம்பர், 2014

தமிழகத்தில் தொழில் துவங்குவது அவ்வளவு கடினமா?

பன்சால்களால் முடிந்தது தமிழர்களால் முடியாதா?  என்ற தலைப்பில் ஒரு சுயதொழில் தொடர்பான கட்டுரை முன்பு எழுதி இருந்தோம். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதே வேளையில் சில கருத்துக்களையும் விமர்சனங்களாக பெற முடிந்தது.

ஞாயிறு, 28 டிசம்பர், 2014

உந்தும் காரணிகளுக்கு காத்திருக்கும் பங்குச்சந்தை

பங்குச்சந்தை தற்போது கடலில் உள்ள அலைகள் போல் சிறிய ஏற்ற இறக்கங்களுடன் மெதுவாக அசைந்து கொண்டு இருக்கிறது.

வியாழன், 25 டிசம்பர், 2014

கடன் தொல்லையால் சொத்துக்களை வேகமாக விற்கும் JP

இந்த வாரம் Jaiprakash Associates நிறுவனம் தனது இரண்டு சிமெண்ட் ஆலைகளை Ultratech Cement நிறுவனத்திற்கு விற்றது. இது இரண்டு நிறுவனங்களுக்குமே லாப நஷ்டம் அதிகமின்றி Win-Win டீலாக அமைந்தது.

செவ்வாய், 23 டிசம்பர், 2014

உலக அரசியலில் தள்ளாடும் ரஷ்ய பொருளாதாரம்

கடந்த வாரம் ரஷ்ய மத்திய வங்கி தமது வட்டி விகிதங்களை 10 சதவீதத்தில் இருந்து 17.5 சதவீதமாக கூட்டியது. நமது ஊரில் அரை சதவீதம் வட்டி விகிதங்களில் மாற்றம் இருக்குமானால் கூட பல ஆலோசனைகளும் அதிக நேரமும் பிடிக்கும்.

திங்கள், 22 டிசம்பர், 2014

தமிழ் இணைய வெளியில் உள்ள வணிக வெற்றிடம்

தமிழில் கணினி தொடர்பான www.techtamil.com என்ற இணையதளத்தை நண்பர் கார்த்திக் அவர்கள் சிறப்பாக நடத்தி வருகிறார். அவரது தளத்தில் Guest blooging முறையில் சில கட்டுரைகளை எழுதுமாறு எமக்கு அழைப்பு கொடுத்து இருந்தார்.

ஞாயிறு, 21 டிசம்பர், 2014

ஏமாற்றங்களுக்கு காரணம் அதிக எதிர்பார்ப்புகள்

நேற்று முன்தினம் எமது டிசம்பர் போர்ட்போலியோ பகிரப்பட்டது. நல்ல வரவேற்பு கொடுத்ததற்கு நன்றி!

ஒவ்வொரு போர்ட்போலியோ தயார் செய்யும் போதும் சில காரணிகளின் அடிப்படையில் பங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

வியாழன், 18 டிசம்பர், 2014

GST வரியால் என்னென்ன பயன்கள் கிடைக்கும்?

கடந்த சில நாட்களாக வீழ்ச்சியில் இருந்த சந்தை நேற்று GST வரி விதிப்பிற்கு அமைச்சரவை அனுமதி அளித்தது என்ற செய்தியால் நல்ல உயர்வை சந்தித்தது. GST என்பதன் விரிவாக்கம் Goods and Services Tax.

புதன், 17 டிசம்பர், 2014

Make In India: ராஜன் விமர்சனத்தின் பின்புலத்தில் ஆசிய நாடுகளின் வீழ்ச்சி

நேற்று முன்தினம் RBI கவர்னர் ரகுராம் ராஜன் அவர்கள் Make In India தொடர்பான தமது கருத்துக்களை விமர்சனமாக வைத்து இருந்தார். தமது பொறுப்பில் இருந்து கொண்டு அரசின் கொள்கை தொடர்பாக துணிவாக கூறியது பாராட்டத்தக்கது. அதே நேரத்தில் ஏற்றுக்கொள்ளக் கூடியவையும் கூட.

செவ்வாய், 16 டிசம்பர், 2014

ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் லாபமடையும் IT பங்குகள்

ஒரு வாரம் முன் ஒரு பதிவில் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடையும் வாய்ப்பு இருப்பதால் வெளிநாட்டில் இருப்பவர்கள் ஊருக்கு பணம் ஏற்ற தருணம் என்று குறிப்பிட்டு இருந்தோம். தற்போது நடந்து விட்டது.

திங்கள், 15 டிசம்பர், 2014

Deflation: பூஜ்ய பணவீக்கம் குறைந்தால் வேலையும் போகலாம்

நேற்று ஒரு செய்தி. கடந்த மாதத்தில் இந்தியாவின் பணவீக்கம்(Inflation) பூஜ்யத்திற்கு அருகில் வந்து விட்டது என்பது தான். அப்படி என்றால் விலைவாசி குறைந்து விட்டது என்பது நடுத்தர மக்களுக்கு நல்ல விடயம்.

ஞாயிறு, 14 டிசம்பர், 2014

எதிர்மறை தரவுகளால் இன்னும் சரியும் வாய்ப்புள்ள சந்தை

கடந்த வாரம் நாம் எதிர்பார்த்தவாறு சந்தை சரிந்து தற்போது சென்செக்ஸ் 27,600 புள்ளிகள் குறைந்து விட்டது. வழக்கமாக கடந்த சில மாதங்களாக சரிவு என்பது மிக குறுகிய காலத்திற்கு மட்டுமே இருந்து வந்தது. அதாவது ஓரிரு நாட்கள் மட்டும்.

வெள்ளி, 12 டிசம்பர், 2014

இந்திய ரயில் நிலையங்களில் பிட்சாவும், பர்கரும்

இன்றைய தினமலரில் ஒரு செய்தி தலைப்பு.
"முக்கிய ரயில் நிலையங்களில் இனி சுவையோ சுவை: பிட்சா, பர்கர், வடாபாவ் விற்க அனுமதி"

வியாழன், 11 டிசம்பர், 2014

சர்க்கரை நிறுவனங்களுக்கு அடித்த யோகம்

முந்தைய ஒரு கட்டுரையில் அரசு பெட்ரோலுடன் எத்தனால் கலந்து விற்க திட்டமிடுவதை பற்றிக் குறிப்பிட்டு இருந்தோம். தற்போது நடைமுறைக்கு வர உள்ளது.

பார்க்க: பெட்ரோலுடன் எத்தனால் கலக்க விரும்பும் அரசு

இதனால் நலிந்து போய் இருந்த சர்க்கரை நிறுவனங்கள் மீண்டும் நல்ல நிலைக்கு வர வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

இதன் காரணமாக பங்குச்சந்தையில் சர்க்கரை நிறுவனங்களான Sakthi Sugar, Renuka Sugar, EID Parry, Andhra Sugar போன்ற பங்குகள் நல்ல உயர்வை சந்தித்தன.

புதன், 10 டிசம்பர், 2014

Spice Jet மீண்டும் எழுச்சியாக பறக்குமா?

சன் டிவி நிறுவனர் கலாநிதி மாறன் அவர்களால் நிர்வகிக்கப்படும் ஒரு விமான நிறுவனம் Spice Jet. குறுகிய காலத்தில் Indigo, Jet Airways போன்ற நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி முன்னணி இடம் பிடித்தது.

செவ்வாய், 9 டிசம்பர், 2014

வளத்தை அழித்து தான் வளர்ச்சியை பார்க்க வேண்டுமா?

தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சையில் வருடத்திற்கு மூன்று போகம் நெல் விளையுமாம்.. அதற்கு அங்குள்ள வண்டல் மண்ணும் ஒரு காரணம் என்று கேள்வி பட்டிருக்கிறோம்.

திங்கள், 8 டிசம்பர், 2014

பங்குச்சந்தையில் இன்றும் சரிவு தொடரலாம்?

நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று சந்தை ஒரு கடுமையான வீழ்ச்சியை சந்தித்தது. கிட்டத்தட்ட 350 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் சரிந்தது.

வியாழன், 4 டிசம்பர், 2014

புகை பிடித்தாலும் கேடு, பிடிக்காவிட்டாலும் கேடு தான்.

நேற்று முன்தினம் மத்திய அரசு கடைகளில் சில்லறையாக சிகெரட் விற்க கூடாது என்று சொல்லி இருந்தது.

புதன், 3 டிசம்பர், 2014

பெட்ரோல் விலை குறைந்தால் பெயிண்ட் கம்பெனிக்கும் யோகம் தான்..

கடந்த ஒரு பதிவில் கச்சா என்னைய் குறைவிற்கான காரணங்களைப் பற்றி கட்டுரை எழுதி இருந்தோம். இந்த பகுதியில் பெட்ரோலியம் பொருட்களின் விலை குறைவால் எந்தெந்த துறைகள் பலன் பெறும் என்பதைப் பற்றி பார்ப்போம்.

செவ்வாய், 2 டிசம்பர், 2014

தங்கத்தில் முதலீடு செய்யும் தருணம்.

எமது முந்தைய ஒரு கட்டுரையில் தங்கத்தில் முதலீடு செய்யும் வழிமுறைகளைப் பற்றி கூறி இருந்தோம். நமது முதலீடுகளை சமநிலைப்படுத்த தங்கமும் அவசியமாகிறது.

திங்கள், 1 டிசம்பர், 2014

திருவள்ளுவர் தேசியரானதும் கூடவே வரும் பயம்

கடந்த வாரம் திருவள்ளுவர் தினத்தை தேசிய தினமாக கொண்டாடவும், திருக்குறளை வட இந்தியாவில் கற்பிக்க இருப்பதாகவும் மத்திய அரசு அறிவித்து உள்ளது. தமிழுக்கு கிடைத்த ஒரு நல்ல அங்கீகாரமாகவே பார்க்கப்படுகிறது.

ஞாயிறு, 30 நவம்பர், 2014

முக்கோண அரசியலில் அடிமாட்டு விலைக்கு செல்லும் பெட்ரோல்

பெட்ரோல் விலை ஆறு வருடங்களில் இல்லாத அளவிற்கு குறைந்து கொண்டே செல்கிறது. இது போக, கடந்த சனியன்று பெட்ரோலியம் உற்பத்தி செய்யும் அரபு நாடுகளின் கூட்டமைப்பு (OPEC) கச்சா எண்ணெய் உற்பத்தியை தொடர்வோம் என்றும் அறிவித்துள்ளது.

வெள்ளி, 28 நவம்பர், 2014

சென்னையில் டாடாவின் பட்ஜெட் விலை அபார்ட்மெண்ட்

சென்னை மற்றும் பெங்களூரில் டாடா நிறுவனம் பட்ஜெட் அபார்ட்மெண்ட் வீடுகளை கட்டித் தரும் பணியில் இறங்கியுள்ளது. சென்னையில் பூந்தமல்லி மற்றும் OMR போன்ற இடங்களில் இந்த அபார்ட்மெண்ட்கள் வருகின்றன.

வியாழன், 27 நவம்பர், 2014

அதிக காசு உள்ளவர்கள் MRF டயரோடு பங்குகளையும் வாங்கலாம்.

இன்று ஒரு புதிய பங்கை இலவசமாக பரிந்துரை செய்கிறோம். MRF Tyres என்ற நிறுவனத்தை பற்றி கேள்விபட்டிருப்பீர்கள். நமது சென்னையை தளமாக கொண்டு இயங்கும் நிறுவனம் தான். இதன் முழு விரிவாக்கம் Madras Rubber Factory.

புதன், 26 நவம்பர், 2014

தனது வியாபர எல்லையை சுருக்கும் சாம்சங்

சாம்சங் என்பது ஒரு எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனமாக நமக்கு அறியப்பட்டு இருக்கலாம். ஆனால் அதையும் தாண்டி இன்ஜினியரிங், மருத்துவம், சில்லறை வர்த்தகம், பாதுகாப்பு ஆயுதங்கள், கப்பல் கட்டுதல், கெமிக்கல் என்று பல பரிமாணங்கள் சாம்சங் குழுமத்திற்கு உள்ளது.

கோடக் வங்கியின் மெகா டீலுக்கு வந்த சுவராஸ்ய பிரச்சினை

எமது முந்தைய ஒரு கட்டுரையில் கோடக் மகிந்திரா வங்கி இங்க் வைஸ்யா வங்கியை வாங்குவதைப் பற்றி குறிப்பிட்டு இருந்தோம். இதில் இங்க்கை விட கோடக்கிற்கு இந்த டீல் லாபகரமானது என்றும் எழுதி இருந்தோம்.

செவ்வாய், 25 நவம்பர், 2014

சந்தையில் கொஞ்சம் கொஞ்சமாக வாங்கி போடலாம்

நேற்று இந்திய சந்தையில் இருநூறு புள்ளிகளுக்கும்  மேல் சரிவு காணப்பட்டது. இறுதியாக 160 புள்ளிகளில் சரிவடைந்து முடிவடைந்தது.

திங்கள், 24 நவம்பர், 2014

வளர்ச்சியை மகிழ்ச்சியை வைத்து அளவிடும் பூடான் (ப.ஆ - 35)

பங்குச்சந்தை ஆரம்பம் என்ற இந்த தொடரின் முந்தைய பகுதியை இந்த இணைப்பில் காணலாம் .

தற்போது சந்தை அதற்கும் மேலே மேலே என்று பறந்து கொண்டு இருப்பதால் சுவாரஸ்யம் கொஞ்சம் குறைந்து தான் உள்ளது. இதனால் நாம் வேடிக்கை தான் பார்க்க வேண்டி உள்ளது.

ஞாயிறு, 23 நவம்பர், 2014

GDP என்பதன் விரிவான விளக்கம் (ப.ஆ - 34)

பங்குச்சந்தை ஆரம்பம் என்ற இந்த தொடரின் முந்தைய பகுதியை இந்த இணைப்பில் காணலாம் .

கடந்த வாரம் ஒரு கட்டுரையில் பொருளாதார சரிவிற்குள் நுழையும் ஜப்பான் என்ற தலைப்பில் எழுதி இருந்தோம். அதில் GDP தொடர்ந்து இரண்டு காலாண்டுகளாக எதிர்மறையில் சென்று கொண்டு இருந்தால் பொருளாதாரம் தேக்க நிலைக்கு செல்வதாக கருதலாம் என்று குறிப்பிட்டு இருந்தோம்.

வியாழன், 20 நவம்பர், 2014

கோடக் மகிந்திரா வங்கியுடன் இங்க் வைஸ்யா இணைந்தது

நேற்று இந்திய வங்கித் துறையில் ஒரு பெரிய டீல் நடந்து முடிந்தது. இந்த டீல் மூலம் கோடக் மகிந்திரா வங்கி இந்தியாவின் நான்காவது பெரிய வங்கியாக மாறுகிறது. (KOTAK MAHINDRA BANK)

தவறான வர்த்தகத்தை தடுக்க உதவும் INSIDER TRADING (ப.ஆ - 33)

இந்த கட்டுரை பங்குச்சந்தை ஆரம்பம் தொடரின் ஒரு பகுதி.

பங்குச்சந்தை ஆரம்பம் என்ற இந்த தொடரின் முந்தைய பகுதியை இந்த இணைப்பில் காணலாம் .

பங்குச்சந்தையில் எந்த பங்குகளை வாங்கலாம் என்பதற்கு ஒரு குறிப்பாக அண்மைய காலங்களில் நடந்து இருக்கும் பங்கு பரிவர்த்தனைகளை பார்ப்பது வழக்கம்.

புதன், 19 நவம்பர், 2014

100 மாதங்களில் இரட்டிப்பாக்கும் கிசான் விகாஸ்

பொருளாதார வீழ்ச்சிகளின் காரணமாக கடந்த ஐந்து ஆண்டுகளில் சேமிக்கும் தன்மை மக்களிடம் நன்கு குறைந்து விட்டது. அதாவது 36 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாக குறைந்து விட்டது.

திங்கள், 17 நவம்பர், 2014

பொருளாதார வீழ்ச்சிக்குள் நுழையும் ஜப்பான்

ஒரு நாட்டின் தொழில் உற்பத்தி (GDP) தொடர்ந்து இரண்டு காலாண்டுகளாக எதிர்மறையில் சென்றால் அந்த பொருளாதாரம் தேக்க நிலைக்கு (RECESSION) செல்கிறது என்று குறிப்பிடப்படுகிறது. அந்த வரையறையின் படி, ஜப்பான் தற்போது பொருளாதார தேக்க நிலைக்கு சென்றுள்ளது.

ஞாயிறு, 16 நவம்பர், 2014

இன்னும் சந்தை சரிய வாய்ப்பு உள்ளது.

கடந்த வாரத்திலே சந்தையில் ஒரு சிறிய திருத்தம் எதிர்பார்க்கப்படுவதாக கூறி இருந்தோம். ஆனால் சில நாட்கள் மட்டும் குறைந்து மீண்டும் சந்தை 28,000 புள்ளிகளிலே நிலை கொண்டுள்ளது.

முதலீடு தளத்தில் விளம்பரங்கள் வரவேற்கப்படுகின்றன

Revmuthal.com தளத்தில் விளம்பரம் செய்ய விரும்பும் நண்பர்கள் muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

வியாழன், 13 நவம்பர், 2014

தங்கத்தில் முதலீடு செய்ய சில வழிமுறைகள்

முதலீடு' தளத்தின் ஆரம்ப கால கட்டுரையில் முதலீடுகளை பிரிப்பது எப்படி? என்று ஒரு சிறு தொடரை சுருக்கமாக எழுதி இருந்தோம். அதில் முதலீடுகளை ஒரே இடத்தில முதலீடு செய்யாமல் பரவலாக முதலீடு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தோம்.

புதன், 12 நவம்பர், 2014

குழப்பத்தில் முடிந்த ஏர்டெல்லின் லூப் டீல்

இந்தியாவில் முதன் முதலில் டெலிகாம் தொழிலை ஆரம்பித்தது யாரென்று பார்த்தால் BPL மொபைல் நிறுவனம் தான். ஆனால் அவர்கள் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக BPL வளர முடியாமல் பொய் விட்டது.

செவ்வாய், 11 நவம்பர், 2014

ராஜீவ் பங்கு முதலீட்டுத் திட்டம் - ஒரு விமர்சனம்

கடந்த ஒரு வருடத்தில் சென்செக்ஸ் பட்டியலில் உள்ள பல பங்குகள் 50% அளவு ரிடர்ன் கொடுத்துள்ளன. ஆனால் இந்த லாபம் முழுவதும் இந்தியர்களுக்கு கிடைத்து இருக்குமா என்றால் இல்லை. இந்த லாபத்தின் பெரும்பங்கு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு தான் சென்று உள்ளது.

ஞாயிறு, 9 நவம்பர், 2014

பங்குச்சந்தையின் அடுத்த கட்ட நகர்வுகள் எப்படி இருக்கலாம்?

தற்போது சந்தை 28,000 புள்ளிகளைத் தொட்டு சிறிய திருத்த நிலைக்கு வந்துள்ளது. இந்த சமயத்தில் அடுத்தக் கட்ட நகர்வுகள் எதனை அடிப்படையாக வைத்து இருக்கும் என்று ஓரளவு அனுமானிக்க முடிகிறது.

சனி, 8 நவம்பர், 2014

'முதலீடு' சமூக உதவி: 'எபோலா' ஆப்ரிக்கா நாடுகளுக்கு செல்கிறது

அன்பு நண்பர்களுக்கு,

வணக்கம்!

நாம் முந்தைய ஒரு கட்டுரையில் (செய்நன்றி கூறும் தருணம்) எமது கட்டண போர்ட்போலியோ சேவையில் கிடைக்கும் வருமானத்தின் ஒரு பகுதியை(5%) சமூக உதவிக்கு பயன்படுத்துவதாக கூறி இருந்தோம். அந்த கடமையை இன்று நிறைவு செய்தோம்.

இவங்க வேலை பார்த்தால் அவ்வளவு ஆச்சர்யம்

சில வருடங்களுக்கு முன்னர் படித்த செய்தி நியாபகம் வருகிறது. பெங்களூரில் இருந்து கௌஹாத்திக்கு செல்லும் ரயில் இது வரை ஒரு முறை கூட சரியான சமயத்திற்கு சென்றது கிடையாதாம். அதனால் வரலாற்றில் என்றாவது ஒரு நாள் இந்த ரயில் சரியான நேரத்திற்கு சென்று விட்டால் அதனைப் பொறித்து வைப்பதற்கு நாம் ஒரு கல்வெட்டை தேட வேண்டி வரும்.

புதன், 5 நவம்பர், 2014

பெட்ரோல் பங்கு டீலராக வாய்ப்பு. லாபம் எப்படி கிடைக்கிறது?

நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு சுயதொழில் தொடர்புடைய கட்டுரையை எழுதுகிறோம்.


கடந்த சில நாட்கள் முன்னர் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் சார்பில் டீலர்களுக்கு விண்ணப்பங்கள் கேட்டுஇருந்தார்கள். இதற்கான கடைசி தேதி நவம்பர் 12, 2014.

நாமும் ஆர்வமாக இருந்ததால் சில தகவல்களை சேகரிக்க முற்பட்டோம். இறுதியில் சில தனிப்பட்ட காரணங்களால் தொடர முடியாமல் போய் விட்டது. ஆனாலும் சேகரித்த தகவல்களைப் பகிர்வது நமது வாசகர்களுக்கு பலனாக இருக்கும் என்று நம்புகிறோம்.



இந்த டீலர்களுக்கான விளம்பரம் ஏற்கனவே நமது செய்தி தாள்களில் தமிழ்லும் ஆங்கிலத்திலும் வெளிவந்து விட்டது. அதே போல் ஆன்லைன் தளத்திலும் முழு விவரங்கள் உள்ளன.

இந்த முறை தமிழ்நாட்டில் பரவலாக டீலர்கள் விண்ணப்பங்கள் வரவேற்க்கபடுகின்றன என்று தெரிகிறது. அதனால் நண்பர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

திங்கள், 3 நவம்பர், 2014

CROSS HOLDING: முதலாளித்துவத்தின் உச்சக்கட்ட நரித்தந்திரம்

நாம் முன்னர் நேர்மையில்லாத CAIRN பங்கை வாங்கலாமா? என்ற தலைப்பில் கட்டுரை எழுதி இருந்தோம். CAIRN நிறுவனம் தனது தாய் நிறுவனத்திற்கு மற்ற முதலீட்டாளர்கள் விருப்பம் இல்லாமலே ஒரு மிகப் பெரிய தொகையை வெறும் 3% வருடாந்திர வட்டிக்கு கொடுத்தது. அதனால் அந்த பங்கை விட்டு விலகி விடலாம் என்று கூறி இருந்தோம்.

ஞாயிறு, 2 நவம்பர், 2014

வீட்டு லோன் மூலம் பங்குச்சந்தையில் சரியான நேரத்தில் முதலீடு செய்வது எப்படி?

பங்குச்சந்தையில் LIQUIDITY என்ற ஒரு பிரபலமான வார்த்தை உண்டு. இதனை கையிருப்பு பணம் என்று கருதிக் கொள்ளலாம்.

வியாழன், 30 அக்டோபர், 2014

உண்மையான காரணத்தில் உயர்ந்து காணப்படும் சந்தை..

கடந்த ஒரு ஆண்டுகளாக இந்திய பங்குச்சந்தையைப் பார்த்தால் 20,000 புள்ளிகளில் இருந்து 27,000 வரை உயர்ந்துள்ளது. ஆனால் ஒவ்வொரு முறை உயர்விற்கும் மோடி என்ற பெயர் ஒரு முக்கிய காரணமாக இருக்கும். அதனால் ஒவ்வொரு முறை உயர்வின் போதும் ஒரு பயம் இருக்கும்.

புதன், 29 அக்டோபர், 2014

பங்குச்சந்தையில் சமூக அக்கறையுடன் தவிர்க்க வேண்டிய பங்குகள்

கடந்த வாரம் 'கத்தி' திரைப்படம் பார்த்து முடியும் போது ஒரு வித சமூக அக்கறையை நமக்குள் கொடுத்தது. படத்தில் வருவது போல் கார்பரேட் நிறுவனங்களை எதிர்ப்பது ஒன்றும் அவ்வளவு சுலபமல்ல. அவர்களை அவர்கள் வழியில் சென்று தான் எதிர்க்க வேண்டி உள்ளது.

வேலை நிறுவனங்களில் கிடைக்கும் பங்குகளை என்ன செய்வது? (ப.ஆ - 32)

பங்குச்சந்தை ஆரம்பம் என்ற இந்த தொடரின் முந்தைய பகுதியை இந்த இணைப்பில் காணலாம் .

இந்த வாரத்தில் நாம் பணிபுரியும் நிறுவனமான Samsung SDS நாளை மறுநாள் கொரிய பங்குச்சந்தையில் IPOவாக வருகிறது.

செவ்வாய், 28 அக்டோபர், 2014

வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் டிமேட் கணக்கு திறப்பது எப்படி? (ப.ஆ - 31)

பங்குச்சந்தை ஆரம்பம் என்ற இந்த தொடரின் முந்தைய பாகம்
பங்குச்சந்தை முதலீடுகள் - ஒரு ஒப்பீடு (ப.ஆ - 30)

நேற்றும் ஒரு என்ஆர்ஐ தொடர்பான பதிவு தான் எழுதி இருந்தோம். (வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்களுக்கு ஆப்பு வைத்த அரசு). இன்றும் அவர்களுக்கான ஒரு கட்டுரை தான் வருகிறது.

திங்கள், 27 அக்டோபர், 2014

வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்களுக்கு ஆப்பு வைத்த அரசு

வரி விதிப்பதில் இந்திய அரசை விட்டால் ஆள் கிடையாது. இருந்தால், நின்றால், காற்றுக்கு, தண்ணீருக்கு என்று அனைத்திற்கும் வரி விதிப்பார்கள் போல.. ஒவ்வொரு பட்ஜெட்டிலும் ஒரு புது வரி வித்தியாசமாக கண்டுபிடிப்பார்கள்.

புதன், 22 அக்டோபர், 2014

காப்புரிமை போரில் விழி பிதுங்கும் மொபைல் நிறுவனங்கள்

தமது கண்டுபிடிப்புகளுக்காக பெறும் ஒரு உரிமையே காப்புரிமை என்று அழைக்கப்படுகிறது. இது பல காலங்கள் ஆராய்ச்சிக்காக செலவிட்டதன் பயனை திரும்பி அளிப்பதற்காக உருவாக்கப்பட்டது. இதனால் பல புதிய கண்டுபிடிப்புகள் உருவாவதற்கு காப்புரிமை வழிவகுத்தது.

செவ்வாய், 21 அக்டோபர், 2014

தீபாவளி வாழ்த்துக்களுடன் ஒரு பங்கு பரிந்துரை

இந்த வருடம் எமக்கு சிறப்பு தீபாவளியாக அமைந்தது. முகம் தெரியாத பல நண்பர்கள் மெயிலில் தீபாவளி வாழ்த்துக்களை அனுப்பி இருந்தார்கள். அதற்கு 'முதலீடு' தளமே முதற்காரணம். நண்பர்களுக்கு நன்றி!

திங்கள், 20 அக்டோபர், 2014

புது நிலக்கரிக் கொள்கையால் யார் யாருக்கு லாபம்?

நேற்று அருண் ஜெட்லி அவர்கள் நிலக்கரி சுரங்கங்கள் தொடர்பான அரசின் கொள்கையை வெளியிட்டு உள்ளார். இது ஓரளவு ஆதரவும் எதிர்ப்பும் கலந்ததாக காணப்படுகிறது. சந்தையில் சில நிறுவனங்களுக்கு சாதகமாகவும், சிலவற்றிக்கு பாதகமாகவும் அமையும்.

ஞாயிறு, 19 அக்டோபர், 2014

பங்குச்சந்தைக்கு சாதகமாகும் பிஜேபி தேர்தல் வெற்றி

கடந்த ஒரு மாதமாக  பல வித உலகக் காரணிகளின் காரணமாக பங்குச்சந்தை கரடியின் பிடியில் சிக்கி இருந்தது. இதற்கு ஹாங்காங் அரசியல் சிக்கல்கள், ஜப்பான், யூரோ நாடுகளின் பொருளாதார பிரச்சினைகள் போன்றவை கூட்டுக் காரணமாக அமைந்தன.

வியாழன், 16 அக்டோபர், 2014

இரட்டை இலக்க வருமானத்தில் ஒரு அரசு ஓய்வூதிய திட்டம்

அருகி வரும் கூட்டுக் குடும்ப கலாச்சார வாழ்க்கையில் ஓய்வூதியத்திற்கும் திட்டமிடப்படுவதும் தேவையான ஒன்று.

புதன், 15 அக்டோபர், 2014

உலகக் காரணிகளால் மந்தமாக இயங்கும் இந்திய சந்தை

மோடி பதவியேற்று கிட்டத்தட்ட ஆறு மாதங்களாகியுள்ளதால் அவர் மேல் இருத்த ஒரு அதிக பட்ச எதிர்பார்ப்பு தற்போது வழக்கமான நிலைக்கு வந்துள்ளது. இதனால் ஒரே வேகத்தில் ஓடிக் கொண்டிருந்த சந்தை தற்போது நிதானமாக சிந்தித்துக் கொண்டிருக்கிறது என்றும் சொல்லலாம்.

செவ்வாய், 14 அக்டோபர், 2014

கடினமான காலக்கட்டத்தில் DLF நிறுவனம்

நேற்று DLF நிறுவனம் மற்றும் அதன் நிறுவனர்கள் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட மூன்று வருடங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக நேற்று மட்டும் DLF நிறுவன பங்குகள் 28% சரிவை சந்தித்தன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பல வித காரணங்களால் 170ல் வர்த்தகமாகிக் கொண்டிருந்த பங்கு தற்போது 100ல் வந்து நிற்கிறது.

திங்கள், 13 அக்டோபர், 2014

இன்ப அதிர்ச்சியில் இன்போசிஸ்

நேற்று உலக சந்தைகள் கடுமையான வீழ்ச்சியில் இருக்க, இந்திய சந்தை மட்டும் மென்பொருள் மற்றும் மிட்கேப் பங்குகளின் தயவால் ஓரளவு தப்பித்தது.

ஞாயிறு, 12 அக்டோபர், 2014

போர்ட்போலியோ பெறுபவர்களுக்காக 'அறிவிப்பு' வசதி

நாம் முன்னர் ஒரு பதிவில் அறிவிப்பு என்ற பகுதியினை தளத்தில் இணைப்பதாக சொல்லி இருந்தோம். அதனை தற்போது தளத்தில் இணைத்து உள்ளோம். இதனை இங்கு பார்க்கலாம்.

வெள்ளி, 10 அக்டோபர், 2014

பங்குச்சந்தை முதலீடுகள் - ஒரு ஒப்பீடு (ப.ஆ - 30)

பங்குச்சந்தை ஆரம்பம் என்ற இந்த தொடரின் முந்தைய பகுதி..
Stock Split: பங்கினை ஏன் பிரிக்கிறார்கள்? (ப.ஆ - 29)

நண்பர் முத்துசுவாமி அவர்கள் பங்குச்சந்தை முதலீடுகளைப் பற்றிய சில ஒப்பீடுகளை பற்றி மின்அஞ்சலில் கேட்டு இருந்தார். இது ஒரு பொதுவான விடயம் என்பதால் இங்கு சுருக்கமான கட்டுரையாக பகிர்கிறோம்.

ஹாங்காங்கிற்கும் சீனாவிற்கும் என்ன தான் பிரச்சினை?

உலகத்தில் பல சிக்கலான அரசியல் மற்றும் பூகோள பிரச்சினைகள் உள்ளன. அதில் ஒன்று தான் சீனா-ஹாங்காங்கின் "ஒரு நாடு இரு கொள்கை" பிரச்சினை.

செவ்வாய், 7 அக்டோபர், 2014

திருவிழாவை நடத்தி அதிருப்தியை சம்பாதித்த ப்ளிப்கார்ட்

நேற்று முன்தினம் Big Billion Day என்று ஒரு திருவிழாவை ப்ளிப்கார்ட் நடத்தியது. ப்ளிப்கார்ட் 6-10 என்ற இலக்கமுடைய பிளாட்டில் ஆரம்பிக்கப்பட்டதன் நினைவாக அக்டோபர் 6 தேதியை தேர்ந்தெடுத்துள்ளார்கள்.

திங்கள், 6 அக்டோபர், 2014

நீண்ட நாட்களுக்கு பிறகு திறக்கப்படும் பங்குச்சந்தை...

தசரா விடுமுறைக்கு பின் ஐந்து நாள் அடைக்கப்பட்ட பங்குச்சந்தை இன்று மீண்டும் திறக்கப்படுகிறது..நமது திருப்திக்காக அதிமுகவினர் கலகத்தினால் அடைக்கப்பட்ட பங்குச்சந்தை இன்று மீண்டும் திறக்கப்படுகிறது என்றும் கருதிக் கொள்ளலாம்.

ஞாயிறு, 5 அக்டோபர், 2014

5000 கோடியை தானமாக கொடுக்கும் ஜூன்ஜூன்வாலா

இரண்டு நாள் முன் தினமலரில் ஒரு செய்தி பார்க்க நேரிட்டது. ஒவ்வொரு முறையும் பணக்காரர்கள் பட்டியல் வெளியிடப்போகும் போது இந்தியாவிலிருந்து ஏன் புதியவர்கள் அதிகம் பட்டியலுக்குள் வரவில்லை என்பதை அழகாக எழுதி இருந்தார்கள்.

புதன், 1 அக்டோபர், 2014

பங்குச்சந்தையில் மோடியின் கவர்ச்சி குறைகிறது...

தேர்தல் கருத்துக் கணிப்புகள், தேர்தல் முடிவுகள், மோடி மீதான எதிர்பார்ப்பு போன்றவற்றின் காரணமாக கடந்த ஆறு மாதங்களாக இந்திய பங்குச்சந்தை ஒரே வேகத்தில் ஓடிக் கொண்டு இருக்கிறது.

செவ்வாய், 30 செப்டம்பர், 2014

சந்தையின் அடுத்த நகர்வைத் தீர்மானிக்கும் காரணிகள்

இன்று மூன்றாவது நிதிக்காலாண்டு பிறக்கிறது. கடந்த இரண்டு காலாண்டுகளில் சந்தை அதிக அளவு ஏற்றம் கண்டு விட்டதால் கடந்த இரு வாரங்களாக சந்தை கரடியின் பிடியிலே இருக்கிறது.

திங்கள், 29 செப்டம்பர், 2014

ஜெயலலிதா கைதைக் கொண்டாடும் சன் டிவி பங்கு

கடந்த மாதம் சுதர்சன் சுஹானி என்ற குறுகிய கால முதலீட்டிற்கான பங்குச்சந்தை நிபுணர் சன் டிவி பங்கைப் பற்றி சொன்ன ஒரு நிகழ்வு சுவையானது.

வியாழன், 25 செப்டம்பர், 2014

ஆசியக் கோப்பையும், மதிக்கப்படாத இந்தியத் திறமைகளும்

நேற்று கொரியாவில் உள்ள இன்ச்சியானில் நடைபெறும் ஆசியக் கோப்பையில் ஒரு முக்கியமான போட்டியைக் காணும் வாய்ப்பு கிடைத்தது.

புதன், 24 செப்டம்பர், 2014

பரபரப்பான தீர்ப்பில் பதறும் பவர் நிறுவனங்கள்

நேற்று உச்சநீதி மன்றத்தில் நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பாக வந்த தீர்ர்ப்பு அநேக பவர் நிறுவனங்களைக் கலங்கடித்து விட்டது.

செவ்வாய், 23 செப்டம்பர், 2014

சிரியா மீதான தாக்குதலும், மிட்கேப் பங்குகளும்

இன்றைய பொழுது "மங்க்ள்யான் செயற்கை கோள் செவ்வாயின் சுற்று வட்டத்தை வெற்றிகரமாக அடைந்தது" என்ற மகிழ்ச்சியான செய்தியுடன் புலர்ந்துள்ளது.

திங்கள், 22 செப்டம்பர், 2014

Stock Split: பங்கினை ஏன் பிரிக்கிறார்கள்? (ப.ஆ - 29)

இது 'பங்குச்சந்தை ஆரம்பம்' தொடரின் ஒரு பகுதி. முந்தைய கட்டுரையை இங்கு காணலாம்.

சில நாட்கள் முன் ஒரு நண்பர் ஐசிஐசிஐ வங்கியில் பங்கு பிரிக்கப்பட்டது (Stock Split) தொடர்பாக ஒரு கட்டுரை எழுதுமாறு கேட்டு இருந்தார்.

ஞாயிறு, 21 செப்டம்பர், 2014

Dividend Yield: பங்கினை மதிப்பிட உதவும் ஒரு வழி (ப.ஆ - 28)

'பங்குச்சந்தை ஆரம்பம்' தொடரின் முந்தைய பகுதியை இங்கு காணலாம்.

நிறுவனத்தை மதிப்பிட உதவும் டிவிடென்ட்டை எப்படி கணக்கிடுவது?

பொதுவாக லாபத்தில் இயங்கும் நிறுவங்களை டிவிடென்ட் வழங்க முன் வரும். இதனால் சில சமயங்களில் நிறுவனங்கள் வழங்கும் டிவிடென்டும் அந்த நிறுவனத்தை மதிப்பீடுவதில் முக்கிய பங்கு வகிக்கும்.

வியாழன், 18 செப்டம்பர், 2014

நம்பிக்கை தரும் இன்போசிஸ் சிக்காவின் முயற்சிகள்

எமது இலவச போர்ட்போலியோவில் HCL Technologies பங்கை 1080 ரூபாய்க்கு பரிந்துரை செய்து இருந்தோம். தற்போது 50% உயர்வில் 1620 ருபாயில் வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது.

புதன், 17 செப்டம்பர், 2014

இந்தியாவில் பிட்சா டெலிவரி ஆகுமா? DONUTS ருசிக்குமா?

பொதுவாக பெரிய அளவில் புகழ் பெற்ற உணவு நிறுவனங்கள் தங்கள் கிளைகளை விரிவாக்குவதற்கு FRANCHISE முறையைத் தான் அதிகம் பின்பற்றுகிறார்கள்.

செவ்வாய், 16 செப்டம்பர், 2014

சரிவதற்கு காரணங்களைத் தேடிப் பிடிக்கும் சந்தை

கடந்த வெள்ளியன்று இன்னும் சரிவிற்காக காத்திருக்கும் சந்தை என்ற தலைப்பில் எழுதி இருந்தோம். நாம் எதிர்பார்த்தது போல் நேற்றைய சரிவு அமைந்தது.

ரியல் எஸ்டேட்டில் ஒரு சோகக் கதை

இந்தக் கட்டுரை 'தி இந்து' இதழில் வெளியானது. நம்மைப் போன்ற சிறு முதலீட்டாளர்களுக்கு மிகவும் பயனாக இருக்கும் என்று நம்புகிறோம்.

ஞாயிறு, 14 செப்டம்பர், 2014

இன்னும் இந்தியாவில் முதலீடு செய்ய தயங்கும் வெளிநாட்டு நிறுவனங்கள்

கடந்த வாரம் ஹோண்டா, வோடபோன் மற்றும் BP இந்தியா போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் செய்வதற்கு இருக்கும் கஷ்டங்களை வெளிப்படையாகவே கூறியுள்ளன. இந்தியாவின் அடுத்தக் கட்ட வளர்ச்சிக்கு அவர்கள் கூறிய கருத்துக்களையும் பரீசீலனை செய்வது அவசியமானதே!

வியாழன், 11 செப்டம்பர், 2014

இன்னும் சரிவிற்காக காத்திருக்கும் பங்குச்சந்தை

இந்த வாரத்தில் பங்குசந்தையில் நடந்த நிகழ்வுகளை இன்று பார்ப்போம்.

அதற்கு முன், சுரேஷ் நடராஜன் என்ற நண்பர் நமது போர்ட்போலியோவை பயன்படுத்திக் கிடைத்த லாபத்தின் ஒரு பகுதியை காஷ்மீர் வெள்ள நிவாரணத்திற்காக பிரதம மந்திரி நிதிக்கு அனுப்பி வைத்துள்ளார். அவருக்கு 'முதலீடு' பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது.

புதன், 10 செப்டம்பர், 2014

SNOWMAN பங்கை லிஸ்ட் செய்யும் போது வாங்கலாமா?

நேற்றைய கிரே சந்தை பற்றிய கட்டுரையில் SNOWMAN IPOவில் பங்குகள் கிடைத்த 'அதிர்ஷ்டகார' நண்பர்களைப் பற்றி கேட்டிருந்தோம். நமக்கு தெரிந்து பத்து பேர் விண்ணப்பித்ததில் ஒருவருக்கு மட்டுமே கிடைத்துள்ளது.

செவ்வாய், 9 செப்டம்பர், 2014

பங்குச்சந்தையில் ஒரு கருப்பு சந்தை

எமது முந்தைய பதிவில் SNOWMAN IPOவை 47 ரூபாய்க்கு வாங்குமாறு பரிந்துரை செய்து இருந்தோம். தற்போது இந்த பங்கின் மதிப்பு வெளிச் சந்தையில் 65~70 ரூபாய்.

உற்சாகத்தில் இருக்கும் டயர் பங்குகளை வாங்கி போடலாம்

கடந்த சில நாட்களாக வாகனங்களுக்கு டயர் தயாரிக்கும் நிறுவனங்கள் நல்ல டிமாண்டில் உள்ளன. இதற்கு இரண்டு காரணங்கள் முக்கியமாக அமைந்தன.

ஞாயிறு, 7 செப்டம்பர், 2014

மிதமிஞ்சிய பணத்தை வைத்துக் கொண்டு தள்ளாடும் இன்போசிஸ்

"ஒரு மனிதன் தனது வாரிசை உருவாக்கும் போது பயனற்றவனாகி விடுகிறான்" என்று ஒரு புத்தகத்தில் படித்த நியாபகம். ஆமாம். அவனை சார்ந்திருக்கும் தன்மை அதன் பிறகு உலகத்திற்கு குறைந்து விடுகிறது.

வியாழன், 4 செப்டம்பர், 2014

உச்சத்தில் உள்ள சந்தையில் என்ன செய்வது?

நீண்ட நாள் உச்சத்திலே சென்று கொண்டிருந்த நேற்று தான் கொஞ்சம் கீழே வந்தது. வாங்கும் வாய்ப்புகளுக்கு இனி கொஞ்ச நாள் இறக்கங்களை எதிர்பார்க்கலாம்.

புதன், 3 செப்டம்பர், 2014

'Shardha Cropchem' IPOவை வாங்கலாமா?

சந்தை காளையின் பிடியில் இருக்கும் போது அந்த சூழ்நிலையை IPO வெளியிடும் நிறுவனங்களும் நன்றாக பயன்படுத்திக் கொள்ளும். அதனால் தான் தற்போதும் அடுத்தடுத்து  IPO வெளிவர ஆரம்பித்துள்ளன.

செவ்வாய், 2 செப்டம்பர், 2014

வரலாற்றை வேகமாக திருப்பி பார்க்கும் "கி.மு, கி.பி"

நமது தளத்தில் எப்பொழுதும் பொருளாதாரம், முதலீடு என்று தொடர்ந்து கட்டுரைகளை எழுதி வந்ததற்கு மாற்றாக இந்த கட்டுரையில் ஒரு சின்ன பிரேக் எடுத்துக் கொள்வோம்.

ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

Snowman IPOவில் எத்தனை பங்குகள் கிடைக்கும்?

கடந்த வாரத்தில் Snowman IPOவை வாங்குமாறு பரிந்துரை செய்து இருந்தோம். அதன்படி, பல நண்பர்கள் முதலீடு செய்ததை மெயில்கள் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது. தங்கள் நம்பிக்கைக்கு நன்றி!

வியாழன், 28 ஆகஸ்ட், 2014

சிறிய இடைவெளிக்கு பிறகு செப்டெம்பர் மாதத்தில் போர்ட்போலியோ

SNOWMAN IPOவை வாங்குமாறு கடந்த பதிவில் கூறி இருந்தோம். சில சமயங்களில் நல்ல டிமேண்ட் இருப்பதும் கெடுதலாக அமைந்து விடுகிறது. ஆமாம். நாம் முன்னர் சொல்லியவாறு Oversubscription ஆகி உள்ளது.

புதன், 27 ஆகஸ்ட், 2014

நிலங்களை விற்கும் போது இப்படி வரியை சேமிக்கலாம்

இதற்கு முன் பங்கு வருமானத்திற்கு வரி உண்டா? என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதி இருந்தோம்.

அதில் Long Term Capital Gain (LTCG) என்பதன் மூலம் பங்கு முதலீட்டில் முழுமையாக வரியை சேமிக்கலாம் என்று கூறி இருந்தோம். அதே கட்டுரையில் பங்குச்சந்தை அல்லாத ரியல் எஸ்டேட், தங்க முதலீடு போன்றவற்றிக்கு வரி உள்ளதையும் சுட்டிக் காட்டி இருந்தோம்.


சில கணக்கீடுகள் மூலம் அரசு நமக்கு வரியை சேமிக்கும் வழியை அளிக்கிறது. அதனைப் பற்றி விவரமாக பார்ப்போம்.

Long Term Capital Gain Tax


ரியல் எஸ்டேட் முதலீடுகளை மூன்று வருடத்திற்குள் விற்றால் அது Short Term Capital Gain (STCG) என்ற பிரிவிற்குள் வந்து விடும். அதாவது உங்கள் லாபத்திற்கு 30% வரை வரி கட்ட வேண்டி இருக்கும்.

ஆனால் மூன்று வருடத்திற்கு பிறகு விற்றால் LTCG முறை மூலம் அதிக பலனை பெறலாம். ஆனால் LTCG முறையில் கூட 20% வரி கட்ட வேண்டி இருக்கும்.

செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

Snowman IPOவை வாங்கலாமா?

இந்தியாவில் இணைய வணிகம், மின்சாரம் போன்றவற்றை அடுத்து அதிக வளர்ச்சி வருமானம் எதிர்பார்க்கப்படுவது உணவு பதப்பனிடுதல் துறை. இந்த துறையில் முதல் முறையாக ஒரு நிறுவனம் பங்குச்சந்தையில் நுழைகிறது. அந்த நிறுவனத்தின் பெயர் Snowman Logistics Limited.

திங்கள், 25 ஆகஸ்ட், 2014

நிலக்கரி ஊழல் தீர்ப்பில் நாம் என்ன செய்வது?

நேற்று காலையில் 150 புள்ளிகள் வரை உயர்ந்த சென்செக்ஸ், உச்ச நீதிமன்றத்தின் ஒரு தீர்ப்பால் இறுதியில் அனைத்தையும் இழந்து விட்டது. பங்குச்சந்தையைப் பொறுத்த வரை அவ்வளவு ஒரு பரபரப்பு தீர்ப்பாக இருந்தது.

வியாழன், 21 ஆகஸ்ட், 2014

ஆயில் விலை குறைந்ததால் உற்சாகத்தில் பெட்ரோல் பங்குகள்

கடந்த இரண்டு வாரமாக சந்தையைப் பார்த்து வரும் போது ஒரு நல்ல விடயம் புலப்படுகிறது. அதாவது கடந்த சில வருடங்களாக ஒதுக்கப்பட்ட சில துறை பங்குகள் மீண்டும் எழுச்சியை அடைந்து வருவது நாட்டின் பொருளாதரத்திற்கு நல்ல அறிகுறியே.

புதன், 20 ஆகஸ்ட், 2014

நிறுவனத்தை மதிப்பிட உதவும் டிவிடென்ட்டை எப்படி கணக்கிடுவது? (ப.ஆ - 27)

"பங்குச்சந்தை ஆரம்பம்' தொடரின் முந்தைய கட்டுரையில் முக மதிப்பு பற்றி விரிவாக எழுதப்பட்டது. அதன் தொடர்ச்சியாக டிவிடென்ட் பற்றியும், முகமதிப்பை அடிப்படையாக வைத்து டிவிடென்ட் தொகையினை கணக்கிடுவது பற்றியும் தற்போது பார்ப்போம்.

செவ்வாய், 19 ஆகஸ்ட், 2014

மூத்தக் குடிமக்களுக்கு ஒரு பயனுள்ள ஓய்வூதிய திட்டம்

கடந்த ஆகஸ்ட் 15 அன்று நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அவர்கள் மூத்தக் குடிமக்களுக்காக ஒரு ஓய்வூதிய திட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளார். அதனுடைய சாதகங்கள், பாதகங்கள் பற்றி இந்த கட்டுரையில் பார்ப்போம்.

ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2014

பங்குச்சந்தையை மயக்கும் மோடியின் சுதந்திர தின பேச்சு

ஆட்சிக்கு வந்து சில மாதங்களே ஆகியுள்ளதால் மோடி அரசின் செயல்பாடுகளை இன்னும் யாரும் மதிப்பிடவில்லை. ஆனால் தனது ஒவ்வொரு பேச்சின் போதும் மோடி அவர்கள் ஒரு வித புது நம்பிக்கையைப் பெற்று வருகிறார். இது தான் நாட்டை ஆளும் தலைவருக்கு கண்டிப்பாக இருக்க வேண்டிய பண்பு  என்றும் சொல்லலாம்.

செவ்வாய், 12 ஆகஸ்ட், 2014

சன் டிவியின் ஆளுமையும் பங்கும் சரிகிறது

சன் டிவி நிறுவனத்திற்கு தமிழகத்தில் அறிமுகம் கொடுக்கத் தேவையில்லை. இருபது வருடங்களாக தென் இந்தியாவில் மீடியா துறையில் முதல் இடத்தில இருக்கும் நிறுவனம்.

திங்கள், 11 ஆகஸ்ட், 2014

மைக்ரோமேக்ஸ் நிறுவனத்திடம் முதலிடத்தை இழந்த சாம்சங்

"மொபைல் மார்கெட்டை இழக்கும் சாம்சங்?" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை முன்பு எழுதி இருந்தோம். கட்டுரையை நிகழ்வுகளின் அடிப்படையில் ஒரு வித அனுமானத்தில் தான் சொல்லி இருந்தோம்.

ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

முக மதிப்பின் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்வோம் (ப.ஆ - 26)

'பங்குச்சந்தை ஆரம்பம்' தொடரின் முந்தைய பாகத்தில் Depreciation பற்றி விளக்கி இருந்தோம். அதன் தொடர்ச்சியாக "face value" என்ற முக்கிய பதத்தைப் பற்றி இந்த பாகத்தில் காணலாம்.

வியாழன், 7 ஆகஸ்ட், 2014

பங்குச்சந்தையில் ராஜன் எச்சரிக்கையை எப்படி எடுத்துக் கொள்வது?

கடந்த வெள்ளியில் சொல்லியது போல், இந்த வாரம் சந்தை தாழ்வாகவே முடிந்தது. அதனால் வாங்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி இருக்கலாம் என்று நம்புகிறோம். அடுத்து, இந்த வாரத்தின் நிகழ்வுகளைப் பார்ப்போம்.

புதன், 6 ஆகஸ்ட், 2014

நிதி நிறுவனங்கள் ஏன் வளரும் நிறுவனங்களில் முதலீடு செய்கின்றன?

ஈரோட்டைச் சேர்ந்த சதீஷ் என்கிற சுயதொழில் ஆர்வமுடைய நண்பர் முதலீடு தொடர்பான சில கேள்விகளை எமக்கு மின் அஞ்சலில் அனுப்பி இருந்தார். நல்ல கேள்விகள் என்பதால் பதில்களுடன் தளத்திலும் பகிர்கிறோம்.

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

இளைஞர்களுக்கு நம்பிக்கை தரும் ப்ளிப்கார்ட் வெற்றி

இதற்கு முன் நாணயம் விகடன் பத்திரிகை படிக்கும் போது சுயதொழில் வெற்றி பெற்றவர்கள் வாழ்க்கை எழுதி இருப்பார்கள். ஒவ்வொருவரது வாழ்க்கையை படிக்கும் போது ஒரு விடயம் பொதுவாக இருக்கும்.


அதாவது அதிக பொறுமை தேவை. உடனே யாரும் பணக்காரராகி விட முடியாது என்று தெளிவாக சொல்லி இருப்பார்கள். இது உண்மையானதாகவே இருந்தாலும் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு தளர்வை கொடுக்கும் கருத்தாகவே இருக்கும்.

ஆனால் புதிய முயற்சியும் தெளிவான திட்டமிடுதலுடன் கூடிய பாதை இருந்தால் வெற்றியை சுவைக்க அவ்வளவு காலம் காத்து இருக்க தேவையில்லை என்பதை தற்போதைய ப்ளிப்கார்ட் நிறுவனத்தின் வெற்றி சுட்டிக் காட்டுகிறது.

இதற்கு முன் பன்சால்களால் முடிந்தது தமிழரால் முடியாதா? என்று ஒரு கட்டுரை எழுதி இருந்தோம். அதன் தொடர்ச்சியாக இந்த கட்டுரையை கருதிக் கொள்ளலாம்.



பின்னி பன்சால், சச்சின் பன்சால் என்ற 81ல் பிறந்த இரண்டு இளைஞர்கள் 2007ல் வெறும் 4 லட்ச முதலீட்டில் ஆரம்பித்த நிறுவனம் தான் ப்ளிப்கார்ட். ஆனால் இன்று நிறுவனத்தின் மதிப்பு 42,000 கோடியாக உயர்ந்துள்ளது.

இந்த உயர்வை சதவீதத்தில் சொல்வதாக இருந்தால் கூட பல பூஜ்யங்களை போட வேண்டி உள்ளது.

திங்கள், 4 ஆகஸ்ட், 2014

முதலீடு தளத்தில் நீங்களும் எழுதலாம்

பல வித துறைகளில் பணிபுரிந்து வரும் எமது வாசகர்கள் துறை அனுபவங்களை தமிழில் எழுதுவதற்கு எமது தளத்தில் ஒரு வாய்ப்பு.

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014

பணக்கார நாடுகளின் நியாயமற்ற வர்த்தகக் கொள்கை

கடந்த வாரம் மோடி அரசின் ஒரு நிலைப்பாடு பாராட்டத்தக்க வேண்டியது. தடையற்ற வர்த்தக கொள்கையில் இந்தியா தமது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி சரியான நிலைப்பாட்டை எடுத்தது.

வெள்ளி, 1 ஆகஸ்ட், 2014

சரிவுகளில் பங்கு வாங்கும் வாய்ப்புகளை ஏற்படுத்திய வாரம்

எமது கடந்த வார பதிவில் சென்செக்ஸ் 500 முதல் 700 புள்ளிகள் வரை குறைய வாய்ப்புள்ளது என்று கூறி இருந்தோம். அதே போல் இந்த வாரத்தில் 700 புள்ளிகள் வரை குறைந்து பங்குகளை வாங்கும் வாய்ப்புகளை ஏற்படுத்தியது.

வியாழன், 31 ஜூலை, 2014

தில் இருப்பவர்கள் இந்த பங்கில் முதலீடு செய்யலாம்

பெரும்பாலும் எமது பங்கு பரிந்துரைகள் அதிக அளவு ரிடர்ன் என்பதை மையமாக வைத்து இருக்காது. அதிக அளவு ரிடர்ன் என்றால் அதிக அளவு ரிஸ்க் உள்ளது என்பதும் உண்மையே. ஆதலால் பாதுகாப்பிற்காக போர்ட்போலியோவில் மிக அதிக ரிஸ்க் உள்ள பங்குகளை பரிந்துரை செய்வதில்லை.

புதன், 30 ஜூலை, 2014

பணம் போட்டிப் போட்டு கொட்டப்படுகிறது இந்திய ஆன்லைன் சந்தையில்..

இந்தியாவில் அதிகமாக பயன்பாட்டிற்கு வரும் இன்டர்நெட் உலகமும், அதிகரித்து வரும் இளைய தலைமுறையும் ஆன்லைன் ஷாப்பிங் துறைக்கு சாதகமாக உள்ளன.

இன்னும் மூன்று வருடங்களில் ஆன்லைன் வியாபாரம் இரண்டு மடங்காக மாறவும் வாய்ப்புகள் உள்ளது.

அதனால் தான் கடந்த பதிவில் இதில் ஊக்கப்படுத்தும் விதமாக ஒரு கட்டுரையை எழுதி இருந்தோம். அதில் சில நண்பர்கள் விரிவான விளக்கங்களையும் கேட்டு எழுதி இருந்தார்கள். அந்த கட்டுரையை இங்கு பார்க்க..
பன்சால்களால் முடிந்தது தமிழரால் முடியாதா?

அவர்களுக்கு இந்த பதிவும் பயனாக இருக்கும் என்று நம்புகிறோம்.



நேற்றைய முந்தைய நாள் ப்ளிப்கார்ட் வெளிநாடுகளில் இருந்து 6000 கோடி முதலீட்டை பெற்றுள்ளது. இது அவர்களது இணையத்தை மொபைல் பயன்பாட்டில் மேம்படுத்துவதற்கும் ஸ்மார்ட்போன் பயனாளிகளுக்கு விரிவாக்குவதற்கும் பயன்படும் என்று தெரிகிறது.

இந்த நிதி திரட்டல் மூலம் ப்ளிப்கார்ட் நிறுவனத்தின் மதிப்பு 42,000 கோடியாக உயரந்துள்ளது.

செவ்வாய், 29 ஜூலை, 2014

பங்குச்சந்தையில் Depreciation பற்றிய விளக்கம் (ப.ஆ - 25)

இன்று 'பங்குச்சந்தை  ஆரம்பம்' தொடரின் பகுதியாக நிறுவன நிதி அறிக்கைகளில் வரும் 'DEPRECIATION'  என்ற பதத்தைப் பற்றி பார்ப்போம்.

திங்கள், 28 ஜூலை, 2014

இந்தியாவின் மிகப்பெரிய பவர் நிறுவனமாக மாறிய ரிலையன்ஸ்

அனில் அம்பானியால் நிர்வகிக்கப்படும் ரிலையன்ஸ் பவர் நிறுவனம் 12000 கோடி மதிப்பில் ஜெய் பிரகாஷ் அசோசியேட்ஸ் நிறுவனத்தின் ஒரு பிரிவான ஜெய் பிரகாஷ் பவர் நிறுவனத்தின் நீர் மின்சாரம் தயாரிக்கும் உலைகளை வாங்கியுள்ளது.

ஞாயிறு, 27 ஜூலை, 2014

வருமான வரியை இலவசமாகவே பதிவு செய்யும் வழி

வருமான வரியைப் பதிவு செய்ய கடைசி நாள் ஜூலை 31 நெருங்கி வருகிறது.

லோன் எடுப்பதிலிருந்து விசா கிடைப்பது வரை வருமான வரி சான்றிதழ் தேவையாக இருப்பதால் அதனைப் பதிவு செய்து வைத்து இருப்பது நல்லது.



இதற்கு முன் சில இடைத்தரகர்கள் மூலமே வருமான வரி பதிவு செய்ய வேண்டி இருந்தது. அதற்கு 250 ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டி இருந்தது. இல்லாவிட்டால், அரசு அலுவலத்தில் கால் கடுக்க வரிசையில் நிற்க வேண்டி இருக்கும்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அரசு ஆன்லைனிலே வருமான வரி பதிவு செய்யலாம் என்ற முறையைக் கொண்டு வந்த பிறகு எல்லாம் எளிதாகி விட்டது.

சனி, 26 ஜூலை, 2014

நேர்மையில்லாத CAIRN பங்கை என்ன செய்யலாம்?

CAIRN நிறுவனம் உள்நாட்டில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. அடுத்த மூன்று வருடங்களில் நிறுவனத்தின் உற்பத்தி இரண்டு மடங்கு அளவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக எமது போர்ட்போலியோக்களில் பரிந்துரைக்கப்பட்டது.

வியாழன், 24 ஜூலை, 2014

அடுத்த வாரம் குறையும் போது பங்குகளை வாங்கிப் போடலாம்

பாண்டி செல்வன் என்ற நண்பர் நமது தளத்தில் பங்குச்சந்தை செய்திகளை தினமும் எழுதலாம் என்று ஒரு கருத்தை பதிவு செய்து இருந்தார். அவரது கருத்திற்கு நன்றி!

புதன், 23 ஜூலை, 2014

வங்கியில் போடும் பணத்திற்கு உத்தரவாதம் எப்படி கிடைக்கிறது?

கடந்த வார சந்தையில் வங்கி பங்குகள் நல்ல உயர்வைக் கொடுத்தன. ரிசர்வ் வங்கி SLR என்ற விகிதத்தை குறைத்தது தான் இந்த உயர்விற்கு முக்கியக் காரணமாக அமைந்தது. அந்த SLR விகிதத்தைப் பற்றி இந்த பதிவில் விவரமாக பார்க்கலாம்.

திங்கள், 21 ஜூலை, 2014

புதியவர்களுக்கு பங்குச்சந்தையில் சில டிப்ஸ் (ப.ஆ - 24)

'பங்குச்சந்தை ஆரம்பம்' தொடரின் முந்தைய பகுதியை இங்கு காணலாம்.
பங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர் (ப.ஆ - 23)

எமது தளத்தின் வாசகர்களில் பலர் பங்குச்சந்தையில் புதியவர்கள் என்பது வரும் மின் அஞ்சல்களில் இருந்து தெரிகிறது.

ஞாயிறு, 20 ஜூலை, 2014

இந்திய ஐடி நிறுவனங்கள் மீதான நம்பிக்கையை குறைத்த சத்யம் ஊழல்

திருட்டை ஒழிக்க திருடன் திருந்த வேண்டும் அல்லது ஏமாறுபவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பங்குச்சந்தையிலும் இது மிகவும் பொருந்தும். அதனால் தான் பங்குச்சந்தை ஊழல்கள் மற்றும் மோசடிகளை பற்றி அடிக்கடி நாம் எழுதுவதற்கு காரணம்.

சனி, 19 ஜூலை, 2014

பதற்ற பூமிகளால் தவிர்க்க வேண்டிய பங்குகள்

இஸ்ரேல் காசாவில் இரக்கமற்ற தாக்குதல்களை நடத்தி வருகிறது. உக்ரைனின் உள்ளூர் பிரச்சினைகளில் ஒன்றுமே தெரியாமல் வானில் சென்ற உயிர்கள் பலி வாங்கப்படுகின்றன. அரசியலும், நாட்டின் எல்லைகளும் உண்மையிலே அவசியம் தேவைதானா? என்று  நினைக்க வைக்கிறது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்!

புதன், 16 ஜூலை, 2014

உலக வங்கியின் ஆளுமையைக் குறைக்கும் பிரிக்ஸ் வங்கி

இரண்டாம் உலகப் போரில் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட பேரழிவிற்கு பிறகு அந்த நாடுகளை சீரமைக்க உருவாக்கப்பட்டது தான் உலக வங்கி. பெயரில் தான் உலகம் என்று இருக்கிறதே தவிர அமெரிக்கா, ஜப்பான் மற்றும் மேற்கு நாடுகளின் கைப்பாவையாகவே செயல்பட்டு வந்தது.

செவ்வாய், 15 ஜூலை, 2014

பட்ஜெட்டிற்கு பிறகு வருமான வரி கணக்கிடுவது எப்படி?

அருண் ஜெட்லி தாக்கல் செய்த பட்ஜெட்டில் தனி நபர் பிரிவினருக்கான வருமான வரியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு அதிக பலனைத் தருகிறது.

இந்த பதிவில் முதலில் என்னனென்ன சலுகைகள் தரப்பட்டுள்ளன என்பதைப் பார்ப்போம். அதன் பிறகு எப்படி பயன்படுத்தலாம் என்பதை உதாரணங்களுடன் பார்ப்போம்.

சம்பளக்காரர்களுக்கு கொஞ்சம் கரிசனை
காட்டி இருக்கிறார்கள் 

இவ்வளவு நாள் குறைந்தபட்சம் இரண்டு லட்சம் வருமானம் வந்தாலே வரி கட்ட வேண்டும். இனி 2.5 லட்சத்துக்கு மேல் வருமானம் வந்தால் மட்டுமே வரி கட்ட வேண்டும். இதனால் 10% வருமான வரி வரம்பிற்குள் வருபவர்கள் 5000 ரூபாயும், 20% வருமான வரி வரம்பிற்குள் வருபவர்கள் 10000 ரூபாயும், 30% வருமான வரி வரம்பிற்குள் வருபவர்கள் 15000 ரூபாயும் வருடத்திற்கு சேமிக்கலாம்.

திங்கள், 14 ஜூலை, 2014

சந்தையில் நம்பிக்கை கொடுக்கும் பணவீக்க குறைவு

தற்போதைய சந்தை வீழ்ச்சிக்கு 'Profit Booking' தான் அதிக காரணமாக இருக்க முடியும். இந்திய பங்குச்சந்தையில் தரகர்களின் ஆட்டம் கொஞ்சம் அதிகமே. அதில் அதிகம் பாதிக்கபப்டுவது ஒன்று, இரண்டு மாதங்களுக்கு முதலீடு செய்யும் சிறு முதலீட்டாளர்கள் மட்டுமே.

ஞாயிறு, 13 ஜூலை, 2014

பட்ஜெட் போர்ட்போலியோ பகிரப்பட்டது, அடுத்து சிறிய பிரேக்..

நேற்று எமது பட்ஜெட்டை அடிப்படையாக வைத்து வடிவைமைக்கப்பட்ட டைனமிக் போர்ட்போலியோ நண்பர்களிடம் பகிரப்பட்டது.

வியாழன், 10 ஜூலை, 2014

முதலீட்டாளர் பார்வையில் வளர்ச்சிக்கு வழி கொடுக்கும் பட்ஜெட்

நேற்று நிதி அமைச்சர் பட்ஜெட் தாக்கல் செய்த போது நிமிடத்திற்கு நிமிடம் சந்தையில் அவ்வளவு மாற்றங்கள். ஏனென்றால், சந்தை அவ்வளவு எதிர்பார்த்து காத்திருந்தது.

முதலில் 300 புள்ளிகள் வரை கீழே சென்று, அதன் பிறகு 400 புள்ளிகள் வரை உயர்ந்து கடைசியில் ப்ளாட்டாக முடிந்தது.

புதன், 9 ஜூலை, 2014

மொபைல் மார்க்கெட்டை இழக்கும் சாம்சங்?

தென்கொரியாவை சேர்ந்த நிறுவனம் சாம்சங். எலெக்ட்ரானிக்ஸ் துறையில் முன்னணியில் இருக்கும் ஒரு நிறுவனம். தற்போதைய நிலவரத்தில் மொபைல் சந்தையில் 32% அளவைக் கொண்டு முதலிடத்தை பெற்றுள்ளது.

செவ்வாய், 8 ஜூலை, 2014

ரயில்வே பட்ஜெட்டை சிம்பிளாக முடித்த கௌடா

நேற்று சந்தையில் 500 புள்ளிகள் மேல் சரிவு ஏற்பட்டது. நேற்றைய ரயில்வே பட்ஜெட்டும் ஒரு காரணமாக அமைந்தது.

திங்கள், 7 ஜூலை, 2014

கோடீஸ்வரராக ஒரு செயல்முறை விளக்கம்..

பெரும்பாலும் ஒருவர் கோடீஸ்வரராக வேண்டும் என்றால் முதலில் நினைப்பது லாட்டரி வாங்குவது, பணக்கார பெண்ணை கல்யாணம் பண்ணுவது என்று சில குறுக்கு வழிகள் தான் முதலில் நினைவுக்கு வரும். ஏனென்றால் ஒரு கோடி என்பது அவ்வளவு மலைப்பான தொகை.

வெள்ளி, 4 ஜூலை, 2014

பங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர் (ப.ஆ - 23)

கடந்த 'பங்குச்சந்தை ஆரம்பம்' பதிவில் பங்குகளின் விலையைக் கணக்கிடுவது எப்படி? என்பதைப் பற்றி விவரமாக விளக்கி இருந்தோம்.

தமிழில் இப்படியொரு Niche கட்டுரைகளை எழுதுவது பற்றி நண்பர்கள் பாராட்டி மெயில் அனுப்பி இருந்தார்கள். மிக்க நன்றி!

வியாழன், 3 ஜூலை, 2014

ASTRA நிறுவனம் விற்கப்படுமா?

எமது இலவச போர்ட்போலியோவில் 2013, அக்டோபரில் ASTRA Microwave நிறுவனத்தைப் பரிந்துரை செய்து இருந்தோம். பரிந்துரை செய்த போது விலை வெறும் 35 ரூபாய். தற்போது 150 ரூபாய்.

அதாவது 328% லாபம். பத்தாயிரம் முதலீடு செய்து இருந்தால் இன்று 38,000 என்று மாறி இருக்கும். (75% லாபத்தில் 'முதலீடு' இலவச பங்கு பரிந்துரைகள்)

புதன், 2 ஜூலை, 2014

சாஸ்கென் நிறுவனத்திற்கு கிடைத்த 185 கோடி

சில வருடங்களுக்கு முன்னர் மென்பொருள் துறையில் மிகவும் பிரபலமாக இருந்த நிறுவனம் சாஸ்கென்(SASKEN).

திங்கள், 30 ஜூன், 2014

பட்ஜெட்டை நோக்கி பங்குச்சந்தை

நமக்கு வரும் மின் அஞ்சல்களில் ஒரு நண்பர் சந்தை அடுத்து 22,000 க்கு செல்லும் என்கிறார். இன்னொருவர் 28,000க்கு செல்லும் என்கிறார்.

அந்த அளவிற்கு துல்லியமாக கணிக்க முடியமா என்று தெரியவில்லை. ஆனால் சில காரணிகளை பட்டியலிடுகிறோம். அதிலிருந்து யூகமாக தெரிந்து கொள்ள முயலுவோம்.

ஞாயிறு, 29 ஜூன், 2014

Cyclical பங்குகளை ட்ரேடிங் செய்வது எப்படி? (ப.ஆ - 22)

"பங்குச்சந்தை ஆரம்பம்" என்ற இந்த தொடரின் முந்தைய பாகத்தை இங்கு காணலாம்.

"CYCLICAL STOCK" என்பது பங்கு வர்த்தகத்தில் இது ஒரு முக்கியமான வாரத்தை. பொருளாதார தேக்க பிரச்சினைகள் வரும் போது இந்த கட்டுரை மிகவும் பயனாக இருக்கும்.

சனி, 28 ஜூன், 2014

நல்ல நிதி நிலை அறிக்கைகளைக் கொடுத்த பங்குகள்

தற்பொழுது தான் ஞாபகம் வந்தது. எமது இலவச போர்ட் போலியோவில் பரிந்துரை செய்யப்பட்ட நிறுவனங்களின் கடந்த காலாண்டு நிதி நிலை அறிக்கைகளை நாம் எழுதவில்லை என்று. அதனால் இங்கு நிதி முடிவுகளைத் தொகுப்பாக எழுதுகிறோம்.

வியாழன், 26 ஜூன், 2014

பங்குகளின் சரியான விலையை கண்டுபிடிப்பது எப்படி? - (ப.ஆ - 21)

"பங்குச்சந்தை ஆரம்பம்" என்ற இந்த தொடரின் முந்தைய பாகத்தை இங்கு காணலாம்.

புதன், 25 ஜூன், 2014

முதலீடு போர்ட்போலியோ லாபம் 75% கடந்தது

நமது போர்ட்போலியோ ஆகஸ்ட் 2013ல் பரிந்துரை செய்ய ஆரம்பிக்கப்பட்டது. தற்போது 10 மாதங்களில் 75% உயர்ந்துள்ளது.

அதாவது இரண்டு லட்ச முதலீடு என்பது மூன்று லட்சத்து ஐம்பது ஆயிரமாகியுள்ளது.
2,00,000 => 3,50,000 ரூபாய்..

செவ்வாய், 24 ஜூன், 2014

இப்படியும் ஏமாற்றுவோம் BY AstraZeneca

ஒரு பங்குச்சந்தை முதலீட்டாளனாக இருப்பதற்கு முதலீடு தொடர்பான விவரங்களை விட எப்படி எல்லாம் ஏமாற்றுவார்கள்? என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

திங்கள், 23 ஜூன், 2014

சர்க்கரை பங்குகளுக்கு ஏற்பட்ட புதிய மவுசு

கடந்த பதிவில் பெட்ரோலுக்கு பதிலாக எத்தனால் அரசு பயன்படுத்துவதை ஊக்குவிக்க வாய்ப்பு இருந்ததைப் பற்றி எழுதி இருந்தோம். இங்கு பார்க்க..

பெட்ரோலுடன் எத்தனால் கலக்க விரும்பும் அரசு

ஆனால் அது யூகம் என்றே குறிப்பிட்டு இருந்தோம். நேற்று யூகம் உண்மையானது.

ஞாயிறு, 22 ஜூன், 2014

வேகமாக தனியார் மயமாக்கப்படும் அரசு நிறுவனங்கள்

பங்குச்சந்தையை கண்காணிக்கும் செபி அமைப்பு மூன்று வருடங்களுக்குள் அணைத்து அரசு நிறுவனங்களின் பங்குகளில் 25% பொது மக்களிடம் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

சனி, 21 ஜூன், 2014

பங்குகளின் சரியான விலையை கண்டுபிடிப்பது எப்படி? - (ப.ஆ - 20)

இந்த பதிவு எமது முந்தைய பதிவின் மீள் பதிவே.

கடந்த பதிவில் கூறப்பட்ட விவரங்கள் எளிதில் புரியும்படி இல்லை என்று எமக்கு கருத்துக்கள் வந்ததால் தற்போது எளிமைப்படுத்தி எழுதுகிறோம்.

வெள்ளி, 20 ஜூன், 2014

செய்நன்றி கூறும் தருணம்


இந்த மாதத்துடன் நமது தளம் ஆரம்பித்து ஒரு வருடமாகிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்து இருந்தோம். அந்த மகிழ்ச்சியை எமக்கு ஆதரவளித்த நண்பர்களுடன் சேர்ந்து பகிர விரும்புகிறோம்.

வியாழன், 19 ஜூன், 2014

ஏன் இந்தி(ய) ஒருமைப்பாடு திணிக்கப்படுகிறது?

நாடு முழுவதும் விலைவாசி உயர்வும், வேலையில்லா பிரச்சினையும் முக்கியமாக இருக்கும் வேளையில் முழுப் பெரும்பான்மை பெற்று பிஜேபி அரசாங்கம் தனது சொந்த கொள்கைகளை திணிக்க ஆரம்பித்துள்ளது போல் தெரிகிறது.

புதன், 18 ஜூன், 2014

நம்பிக்கையைத் தந்த இந்திய பங்குச்சந்தை

இராக் பிரச்சினை விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளதால் நமது போர்ட்போலியோவில் இணைந்த பல நண்பர்கள் மின் அஞ்சல்களில் தொடர்பு கொண்டு என்ன செய்வது? என்று கேட்டு இருந்தாரகள்.

செவ்வாய், 17 ஜூன், 2014

கிராமப்புறத்தை சேர்ந்தவரா? சூப்பர் பாலிசி இருக்கிறது..

இன்சூரன்ஸ் பாலிசி என்றால் முதலில் நினைவுக்கு வருவது எல்.ஐ.சி தான். அரசின் உத்தரவாதம் இருப்பது முக்கிய காரணம்.

தனியார் நிறுவனம் என்றால், 20 வருடம் கழித்து ஒரு நிறுவனம் இருக்குமா என்ற கேள்விக்குறியில் முதலீடு செய்வது தயக்கமாக இருக்கலாம்.

திங்கள், 16 ஜூன், 2014

உப்பு விற்பது அரசாங்கத்தின் தொழிலா?

தற்போதைய தமிழக அரசின் 'அம்மா' கம்பெனி தயாரிப்புகளை குறை சொல்ல முடியாது. மலிவு விலையில் உணவகங்கள் திறக்கப்படுவதும், காய்கறிகளை குறைவான விலைக்கு விற்பதும் மக்களுக்கு பயன்படக்கூடிய ஒன்றே.

ஞாயிறு, 15 ஜூன், 2014

இந்திய பங்குச்சந்தையின் அடுத்த கட்ட நகர்வு

நேற்றைய பதிவில் ஈராக் தொடர்பான விவகாரங்களால் பங்குச்சந்தையில் ஏற்படும் விளைவுகள் பற்றி எழுதி இருந்தோம். இது ஒரு உலகளாவிய எதிர்மறையான செய்தி தான். ஓரிரு மாதங்கள் கூட இதன் தாக்கம் இருக்கலாம்.

சனி, 14 ஜூன், 2014

ஈராக் பதட்டத்தில் பங்குச்சந்தையில் என்ன செய்வது?

பங்குச்சந்தையில் ஈராக்கில் நிலவி வரும் நிலையற்ற அரசியல் நிலைமை 350 புள்ளிகள் வரை படு வீழ்ச்சியைக் கொடுத்தது.

வியாழன், 12 ஜூன், 2014

பிளாட் வாங்குவது அவ்வளவு லாபமா? (ப.ஆ - 19)

நம்மிடம் உள்ள செல்வத்தை பணம், பத்திரங்கள், ரியல் எஸ்டேட் சொத்துக்கள், பங்குகள் என்று பல வடிவில் வைத்து இருக்கலாம்.

புதன், 11 ஜூன், 2014

ஜூலை டைனமிக் போர்ட்போலியோவிற்கான அறிவிப்பு

ஏப்ரல், ஜூன் மாதங்களைத் தொடர்ந்து ஜூலை 2014 போர்ட்போலியோவை ஜூலை ஒன்றாம் தேதி தரவிருக்கிறோம். 

விரும்பும் நண்பர்கள் muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

செவ்வாய், 10 ஜூன், 2014

ரியல் எஸ்டேட்டை விட பங்கு முதலீடு எப்படி சிறந்தது? (ப.ஆ - 18)

எல்லாருக்கும் முதல் ஆசை சொந்தமாக வீடு வைத்து இருப்பது.

வாடகை வீட்டில் இருந்து கொண்டு வீட்டு உரிமையாளருக்கு பயந்து கொண்டும், ஒவ்வொரு வருடமும் பொருட்களை எடுத்துக் கொண்டு வீடு வீடாக மாறுவதும் நரக வேதனை.

திங்கள், 9 ஜூன், 2014

ஜனாதிபதி உரை தரும் பங்கு குறிப்புகள்

பங்குச்சந்தையின் அடுத்த கட்ட நகர்வு பட்ஜெட்டை எதிர்பார்த்து காத்திருக்கிறது. பட்ஜெட் எப்படி இருக்கும் என்பதற்கு முன்னோட்டமாகவே ஜனாதிபதி உரை இருக்கும்.

ஞாயிறு, 8 ஜூன், 2014

முதலீட்டிற்கும், ட்ரேடிங்கிற்கும் என்ன வித்தியாசம்? (ப.ஆ - 17)

கொஞ்சம் வேலைப்பளுவின் காரணமாக கடந்த மூன்று நாட்களாக பதிவுகள் எழுத முடியவில்லை. ஆனாலும் இடைவெளிகள் ஒரு வித புத்துனர்ச்சியை அளிக்கத் தான் செய்கின்றன.

புதன், 4 ஜூன், 2014

பெட்ரோலுடன் எத்தனால் கலக்க விரும்பும் அரசு

கடந்த போர்ட்போலியோக்களில் சுகர் நிறுவனங்களை பரிந்துரைக்கலாம் என்று தான் நினைத்து இருந்தோம். ஆனால் எதிர்பார்க்கப்படும் நீர் வறட்சி காரணமாக சுகர் பங்குகளை பரிந்துரைக்க முயலவில்லை.

திங்கள், 2 ஜூன், 2014

பங்குச்சந்தை லாபத்திற்கு வரி உண்டா? (ப.ஆ - 16)

நீண்ட கால முதலீட்டை பெரும்பாலானவர்கள் விரும்புவதற்கு ஒரு முக்கிய காரணம். 'லாபத்துடன் சேர்ந்து வரியையும் சேமிப்பது தான்.'

ஞாயிறு, 1 ஜூன், 2014

பாதுகாப்புத் துறையில் 100% அந்நிய முதலீடு, மேலே சென்ற ASTRA

புதிய மத்திய அரசு பாதுகாப்புத் துறையில் முழு அந்நிய முதலீட்டை அனுமதித்துள்ளது.

வெள்ளி, 30 மே, 2014

அமைதியில்லாமல் அகன்ற பாரதம் கிடைக்காது

காங்கிரஸ் மீதுள்ள கடுமையான கோபமும், மோடியின் குஜராத் வளர்ச்சி மாதிரியும் தான் பிஜேபிக்கு இவ்வளவு தனி பெரும்பான்மையை கடந்த தேர்தலில் கொடுத்துள்ளது.

வியாழன், 29 மே, 2014

புத்தக மதிப்பை வைத்து நல்ல நிறுவனத்தை எப்படி கண்டுபிடிக்க? (ப.ஆ - 15)

இந்தக் கட்டுரையில் நிறுவனங்களின் புத்தக மதிப்பை வைத்து பங்குகளை எவ்வாறு மதிப்பிடலாம் என்பதைப் பற்றி கொஞ்சம் விவரமாக பார்ப்போம்.

செவ்வாய், 27 மே, 2014

பங்குச்சந்தை முதலீட்டை ஊக்குவிக்க முயலும் அரசு

அமெரிக்காவில் ஒரு தனி மனிதனின் வருமானத்தில் 47% முதலீடு பங்குகளாக நிறுவனங்களில் முதலீடு செய்யப்படுகிறது.

திங்கள், 26 மே, 2014

சிறிய நிறுவனங்களை வாங்கும் தருணம்

நேற்று மோடி அமைச்சரவை பதவியேற்றம் முடிந்தது.

இனி தான் உண்மையான ஆட்டம்.

ஞாயிறு, 25 மே, 2014

LIBERTY SHOES - வாங்கி போடலாம்!

கடந்த வாரம் நமது போர்ட்போலியோவில் உள்ள ASHAPURA MINECHEM என்ற பங்கை விற்குமாறு பரிந்துரை செய்து இருந்தோம்.

வெள்ளி, 23 மே, 2014

பெரிய மீன்களால் ஆக்கிரமிக்கப்படும் சிறு இகாமர்ஸ் நிறுவனங்கள்

கடந்த ஒரு பதிவில் இந்திய இகாமர்ஸ் வணிகத்தைப் பற்றி விரிவாக எழுதி இருந்தோம்.

வியாழன், 22 மே, 2014

இனி தங்கக் கடத்தல் குறையும்

கடந்த வருடத்தில் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியின் காரணமாக தங்க இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டது. ஏனென்றால், அந்நிய நிதி பற்றாக்குறைக்கு பெரிதும் காரணமாக பெட்ரோலும், தங்கமும் இருந்தன.

புதன், 21 மே, 2014

அடுத்த பத்து வருடத்தில் ஐடியில் யார் ஜாம்பவான்?

எமது ஒரு முந்தைய பதிவில் விப்ரோவில் முப்பது வருடங்களுக்கு முன் 1000 ரூபாய் முதலீடு செய்து இருந்தால் தற்போது அதன் மதிப்பு 43 கோடி என்று குறிப்பிட்டு இருந்தோம். (விப்ரோவில் 1000 முதலீடு செய்திருந்தால் இப்ப 43.6 கோடி)

செவ்வாய், 20 மே, 2014

தேர்தலுக்கு பிந்தைய டைனமிக் போர்ட்போலியோ

ஒரு நிலையான தேர்தல் முடிவுகள், நல்ல நிதி நிலை அறிக்கைகள் என்று தெளிவான சூழ்நிலை ஏற்பட்ட பிறகு எமது டைனமிக் போர்ட்போலியோ சேவையை ஜூன் முதல் தேதி முதல் மீண்டும் ஆரம்பிக்கிறோம்.

திங்கள், 19 மே, 2014

பங்குசந்தையில் பணக்காரனாக ஏற்ற காலம்

நமது தளத்தை படித்துக் கொண்டிருக்கும் நண்பர்களிடமிருந்து வரும் மின் அஞ்சல்கள் நம்மை அதிக அளவிற்கு ஊக்குவிக்கின்றன.

சனி, 17 மே, 2014

தெளிந்த தேர்தல் நீரோடையில் மோடி

கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு பிறகு ஒரு நிலையான தனிக்கட்சி அரசு அமைய இருக்கிறது. இவ்வளவு இடங்களை மோடியே எதிர்பார்த்திருப்பாரா? என்பது சந்தேகம். அந்தளவு மக்கள் அள்ளிக் கொடுத்து உள்ளார்கள்.

புதன், 14 மே, 2014

ஓய்விற்கு பயன்படும் எளிய, நிலையான PPF முதலீடு

ஒரே அடியாக பங்குச்சந்தை மேலே சென்றாலும் போரடித்து விடுகிறது. தற்போதைய யூக சந்தையில் நீண்ட கால முதலீட்டாளர்கள் வேடிக்கை மட்டும் தான் பார்க்க வேண்டியுள்ளது.

செவ்வாய், 13 மே, 2014

குடும்ப சண்டையில் தவிக்கும் கார்பரேட் நிறுவனம்

Ashapura MineChem என்ற நிறுவனத்தை எமது போர்ட்போலியோவில் பரிந்துரை செய்து இருந்தோம். இந்த பங்கும் ஆறு மாதத்தில் 50% அளவு லாபம் கொடுத்து உள்ளது. ஆனால் தற்போது அந்த நிறுவனத்தை விற்குமாறு பரிந்துரை செய்கிறோம்.

பங்குச்சந்தையில் தேர்தல் முடிவுகளை எப்படி அணுகுவது?

இந்த அளவு பரபரப்பாக இந்திய பங்குச்சந்தைகளை என்றும் பார்த்ததில்லை. கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக சந்தை காளையின் பிடியில் உள்ளது.

திங்கள், 12 மே, 2014

எல்நினோ வறட்சியில் தவிர்க்க வேண்டிய பங்குகள்

தற்போது சந்தை 23 ஆயிரத்தை தாண்டியுள்ளது. எக்சிட் போல், மோடி அலை, நிலையான அரசு என்று பலவற்றை நினைத்து சந்தை துள்ளிக் குதித்து செல்கிறது. ஆனாலும் ஒரு வித பய உணர்வு தோன்றுகிறது.

சனி, 10 மே, 2014

போர்ட்போலியோவில் பாய்ந்தோடும் பென்னி ஸ்டாக்குகள் (ப.ஆ - 14)

பொதுவாக பென்னி ஸ்டாக்குகள் என்பது ஆரம்ப நிலையில் உள்ள நிறுவனங்களின் பங்குகள். அதாவது முக மதிப்புடன் ஒத்து வர்த்தகமாகிக் கொண்டிருக்கும் பங்குகள்.

வெள்ளி, 9 மே, 2014

யூக வணிகத்தில் 5500 கோடி மோசடி செய்த NSEL

இந்தியாவைப் பொறுத்த வரை ஊழல் செய்திகள் எங்கு இருந்து வரும் என்று சொல்ல முடியாத அளவிற்கு எங்கிருந்தும் திடீரென்று வந்து விடுகிறது. இதனால் யாரை நம்புவது என்றே தெரியவில்லை.

வியாழன், 8 மே, 2014

ஊசலாடும் சந்தையில் வாங்கும் நிலையில் சில பங்குகள்

சென்செக்ஸ் ஒரு கட்டத்தில் 22,800 புள்ளிகள் வரை சென்றது. தற்போது 500 புள்ளிகள் வரை குறைந்துள்ளது. ஆனாலும் எதிர்பார்ப்பது போல் கணிசமாக குறையவில்லை.

புதன், 7 மே, 2014

பங்குச்சந்தையில் ஜோதிடத்தை நம்பலாமா?

எமது தளத்தில் ஒரு கருத்து கணிப்பு கொடுத்து இருந்தோம்.

அதன் தலைப்பு. "பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஜோதிடம் மீது உங்களுக்கு நம்பிக்கை உண்டா?"

திங்கள், 5 மே, 2014

IPO வாங்கும் முன் தெரிந்து கொள்வோம்(ப.ஆ - 13)

பங்குச்சந்தையில் ஒரு பிரபலமான வார்த்தை IPO என்பது. மிகக் குறுகிய காலத்தில் அதிக அளவு லாபம் கொடுக்கும் ஒரு பங்கு முதலீடு முறை என்று அறியப்படுகிறது.

வெள்ளி, 2 மே, 2014

ரிசர்வ் வங்கி கவர்னருக்கு உதவிய 5ம் வகுப்பு சிறுமி

சில சமயங்களில் குழந்தைகளுக்குள் இவ்வளவு அறிவா? என்று நினைக்கும் அளவு நிகழ்வுகள் நடக்கும். அது போன்ற சம்பவம் கடந்த சில மாதங்கள் முன் நடந்துள்ளது.

திங்கள், 28 ஏப்ரல், 2014

பன்சால்களால் முடிந்தது தமிழரால் முடியாதா?

ஒவ்வொரு பத்து வருடங்களுக்கு ஒரு முறை சில துறைகள் முன்னணியில் வந்து புதிய கோடிஸ்வரர்களை உருவாக்கி செல்லும்.


நாராயண மூர்த்தி, அசிம் பிரேம்ஜி, அடோனி, சிவ்நாடார் போன்ற புதியவர்கள், எதிர்காலத்தை சற்று முன்னால் கணித்ததால், எதிர்பாராத அளவு மேலே சென்றனர்.

ஒரே கார்ட் மாயம் தான்..
முப்பது வருடங்கள் முன் மென்பொருள் ஒன்று இருப்பதே நமக்கு தெரியாது. ஆனால் அதற்கு இந்திய சூழ்நிலைகளின் சாதகத்தை இனங்கண்டு பார்த்ததன் மூலம் இன்று உலக சிறந்த நிறுவனங்கள் வரிசையில் இந்திய மென்பொருள் நிறுவனங்கள் உள்ளன.

அதே போல் பெட்ரோலிய பொருட்கள் சார்ந்த தேவைகள் அதிகமாக இருப்பதை உணர்ந்து, அடோனி உட்பட பல புதிய தொழிலதிபர்கள் உருவாகினர்.

புதன், 23 ஏப்ரல், 2014

24% அதிக லாபம் ஈட்டிய HDFC வங்கி. தொடரலாமா?

கிட்டத்தட்ட 30 காலாண்டுகளாக 30% சதவீத வளர்ச்சி கொடுத்து வந்த HDFC வங்கி நேற்று நிதி முடிவுகளை அறிவித்தது.

செவ்வாய், 22 ஏப்ரல், 2014

ULIPல் முதலீடு செய்யலாமா?

இரண்டு, மூன்று வருடங்களுக்கு முன்னாள் மிகவும் பிரபலமான முதலீடு திட்டம் ULIP.

ULIP என்றால் Unit Linked Insurance Plan.


தொடக்கக் காலத்தில் மிக அதிக அளவில் விளம்பரப் படுத்தப்பட்டது. அதாவது இதில் முதலீடு செய்தால் 10 வருடங்கள் கழித்து முதலீடு பத்து மடங்காகும் என்று கூறி முகவர்கள் விளம்பரம் செய்தது இன்னும் நியாபகத்தில் நிற்கிறது.

இப்படித் தவறான தகவல்களைக் கொடுத்ததால் இன்று முதலீட்டாளர்கள் நம்பிக்கையை இழந்து காணப்படுகிறது. அதாவது முதலீடு செய்தவர்கள் கூட ஒரு கட்டத்தில் மொத்தமாக முதலீட்டினை வாபஸ் வாங்கியது பெருத்த பின்னடைவை ஏற்படுத்தியது.

ஆனால் இன்றும் இத்தகைய திட்டங்கள் செயல்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன. மக்களும் ஏமாற்றப்பட்டு கொண்டு தான் இருக்கிறார்கள்.

எப்படி என்று விவரமாகப் பார்ப்போம்.

எல்லாம் கலந்த தெளிவில்லாத கலவை 


ULIP என்பது நிரந்தர வருமானம், இன்சூரன்ஸ் மற்றும் பங்குச்சந்தை என்ற மூன்றையும் ஒருங்கிணைத்து வடிவமைக்கப்பட்டது. அதாவது தனித்தனியாக ஒவ்வொரு திட்டங்களிலும் சேராமல் ஒரே திட்டத்தில் மூன்று பயன்களைப் பெறலாம் என்பதே இதன் சிறப்பம்சம்.

திங்கள், 21 ஏப்ரல், 2014

RBIக்கு வந்த வித்தியாசமான சட்ட சிக்கல்

இந்தியாவில் திறனாக பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ஒரு வங்கி HDFC. இது வரை மற்ற வங்கிகளைக் காட்டிலும் நல்ல வருமானத்தையும், வளர்ச்சியையும் காட்டி வருகிறது.

Standalone, Consolidated நிதி அறிக்கைகளுக்கு என்ன வித்தியாசம்? (ப.ஆ - 12)

இது நிறுவனங்களின் நிதி அறிக்கைகள் வெளிவந்து கொண்டிருக்கும் காலம். இந்த சமயத்தில் நமக்கு ஏற்படும் ஒரு முக்கியமான சந்தேகத்தை தீர்ப்பதற்காக இந்த பதிவு பயன்படும்.

வியாழன், 17 ஏப்ரல், 2014

முன்னணி IT நிறுவனமாக மாறும் HCL

நேற்று மட்டும் மூன்று முக்கிய IT நிறுவனங்கள் தங்கள் நிதி நிலை அறிக்கையை அறிவித்தன.

புதன், 16 ஏப்ரல், 2014

சரியும் பங்குகள், வாங்குவதற்கான வாய்ப்புகள்

தற்போது சந்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. ஆனால் எவ்வளவு வரை குறையும் என்பதை அறுதியிட்டு கூற முடியாத நிலைமை.

செவ்வாய், 15 ஏப்ரல், 2014

இன்போசிஸ் தரும் சில பங்குச்சந்தை குறிப்புகள்

இன்போசிஸ் நிறுவனத்தின் செயல்பாடுகள் தற்போது மந்தமாக இருந்தாலும் அவர்களது நிதி நிலை அறிக்கை வெளிவரும் போது, மற்ற நிறுவனங்களை விட ஒரு தெளிவான பாதையைக் காண்பிப்பார்கள்.

திங்கள், 14 ஏப்ரல், 2014

Basis Point: ஒரு எளிய விளக்கம் (ப.ஆ - 11)

இந்த கட்டுரை 'பங்குச்சந்தை ஆரம்பம்' தொடரின் தொடர்ச்சி. இதன் முந்தைய பாகத்தை இங்கு காணலாம்.
P/E விகிதத்தை வைத்து பங்கினை எப்படி மதிப்பிடலாம்? (ப.ஆ-10)

ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

மென்பொருள் நிறுவனங்களின் HEDGING பற்றி அறிவோம்.

இந்த பதிவில் மென்பொருள் நிறுவனங்கள் 'HEDGING' என்று சொல்லப்படும் நாணய மாற்று பிரச்சனையை எவ்வாறு சமாளிக்கின்றன என்பதைப் பற்றி எழுதப்பட்டுள்ளது.

புதன், 9 ஏப்ரல், 2014

P/E விகிதத்தால் பங்கினை எப்படி மதிப்பிடலாம்? (ப.ஆ-10)

இந்தக் கட்டுரையில் P/E என்றதொரு விகிதத்தினை பயன்படுத்தி பங்கினை எவ்வாறு மதிப்பிடலாம் என்பதனைப் பார்க்கலாம்.

திங்கள், 7 ஏப்ரல், 2014

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இரு புதிய வங்கிகள், முதலீடு செய்யலாமா?

கடைசியாக 2004ல் YES Bank மற்றும் Kotak Mahindra Bank என்ற இரண்டு வங்கிகளுக்கு அனுமதி கொடுத்தது. அதன் பிறகு தற்போது இரு புதிய வங்கிகளுக்கு அனுமதி கொடுத்துள்ளது.

வெள்ளி, 4 ஏப்ரல், 2014

பங்குச்சந்தையில் PCA பற்றி தெரிந்து கொள்ளுங்கள். (ப.ஆ-9)

PCA என்பது பங்குச்சந்தையில் கடந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு புதிதான முறையாகும். இதன் விரிவாக்கம் Periodic Call Auction என்பது.

வியாழன், 3 ஏப்ரல், 2014

வாரிசு வரியும், மறைமுக சமத்துவமும்..

இது இந்தியர்களுக்கு புதிய தகவலாக இருக்கலாம். சில நாடுகளில் 'Inheritance Tax' என்று நமக்குத் தெரியாத புது வித வரி உண்டு. தமிழில் சொன்னால் 'வாரிசு வரி'..இதனைப் பற்றி விவரமாகப் பார்ப்போம்,


ஒருவர் தன்னுடைய சொத்தினை தனது வாரிசுகளுக்கு கொடுக்க நினைக்கிறார். கொடுப்பதற்கு முன் அரசாங்கத்திற்கு இவ்வளவு சதவீதம் என்று வரி கட்ட வேண்டும். இந்த சதவீத அளவு ஒவ்வொரு நாடுகளிக்கிடையும் வேறுபடுகிறது.

பெரும்பாலான மேலைநாடுகள் மற்றும் வளர்ந்த நாடுகளில் இந்த வரி முறை கடைபிடிக்கப்படுகிறது.

உதாரணத்திற்கு,

கொரியாவில் இரண்டரை கோடி அளவிற்கு மேல் சொத்தினை தமது வாரிசுக்கு கொடுப்பதாக இருந்தால் 40% அரசிற்கு வரி கட்ட வேண்டும்.

இதனால் கொரியாவில் உள்ள பெரிய கம்பனிகளான சாம்சங், LG, ஹயுண்டாய் போன்ற நிறுவனங்கள் வித்தியாசமான முறையில் அரசினை ஏமாற்றி வருகின்றன.

அதாவது, தங்களது வாரிசின் பெயரில் துணை நிறுவனங்களை ஆரம்பிக்கின்றன. அதன் பிறகு தாய் நிறுவனத்தில் இருந்து பெரும்பாலான வியாபாரங்களை 'Outsourcing' என்ற பெயரில் துணை நிறுவனங்களுக்கு வழங்குகின்றன. இதனால் லாபமும் வெளியே செல்வதில்லை. அரசாங்கத்துக்கும் வரி கட்ட வேண்டிய தேவை இல்லை. இப்படி மிக விவரமாக அரசினை ஏமாற்றி வருகின்றன.

இந்த நேர்முக வரி நமது நாட்டில் இல்லை என்று நாம் பரவசம் அடையலாம்.

ஆனால் இதில் மறைமுகமாக சமத்துவம் என்ற கம்யுனிச கொள்கை ஒளிந்து இருப்பதை அழகாகப் பார்க்கலாம்.

அம்பானியின் பில்லியன் டாலர் வீடு 
தற்போதைய தனி நபர் வருமான வரியில் கூட அரசிற்கு கிடைக்கும் வருமானம் மற்ற வரி வசூல்களுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைவே.

ஏன், நமது நாட்டில் தனி நபர் வருமான வரி இல்லாமலே அரசை நடத்த முடியும்.  அந்த அளவிற்கு மறைமுக வரி வசூல்கள் அதிகமாக உள்ளது.

ஆனால் தனி நபர் வருமான வரியின் முக்கிய நோக்கமே ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசத்தைக் குறைப்பதே.

உதாரணத்துக்கு ஒரு குடும்பத்தை நடத்துவதற்கு வருட வருமானம் 10 லட்சம் என்பது தாராளமாக போதுமானது. அதன் மேல் வருமானம் அதிகப்படியான வருமானமே.

திங்கள், 31 மார்ச், 2014

இந்த வருடம் இந்த துறை பங்குகள் ஜொலிக்கலாம்.

பங்குச்சந்தையின் மோசமான கடந்த வருட நிலைமை மாற்றமடைந்து 2014ல் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வருடத்தில் சில துறைப் பங்குகள் நன்றாக இருக்கும் என்று நாம் கருதுவதை இங்குப் பகிர்கிறோம்.

புதன், 26 மார்ச், 2014

பங்குகளும், அந்நிய முதலீடும்

எமது போர்ட்போலியோவில் HDFC வங்கியை 607 ரூபாய்க்கு பரிந்துரை செய்து இருந்தோம். தற்போது 750 ரூபாயை தாண்டியுள்ளது. அதாவது 23% லாபம்.

வியாழன், 20 மார்ச், 2014

டிமேட் சேவைகள் - ஒரு ஒப்பீடு (ப.ஆ- 8)

'பங்குச்சந்தை ஆரம்பம்'  தொடரின் கடந்த பாகத்தில் பங்கு வர்த்தகத்தின் போது பிடிக்கக்கபடும் நேரடி/மறைமுக கட்டணங்களைப் பற்றி பார்த்தோம்.

அதன் தொடர்ச்சியாக டிமேட் சேவை வழங்கும் சில நிறுவனங்கள் பற்றிய ஒப்பீடுகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

திங்கள், 17 மார்ச், 2014

பங்குகளை விற்கும் போது இதனை மறவாதீர்..(ப.ஆ- 7)

இந்தக் கட்டுரை பங்கு வர்த்தகத்தின் போது முதலீட்டாளர்களிடம் வசூலிக்கப்படும் சேவைக் கட்டணங்களைப் பற்றி விரிவாகப் பகிர்கிறது.

வெள்ளி, 14 மார்ச், 2014

சாப்ட்வேர் நிறுவனங்களின் கடினமான காலக்கட்டம்

இந்த கட்டுரை சாப்ட்வேர் நிறுவனங்களின் தற்போதைய கடினமான காலக்கடத்திப் பற்றியும், ஒரு முதலீட்டாளராக என்ன பண்ணலாம் என்பதற்காகவும் எழுதப்பட்டுள்ளது.

செவ்வாய், 11 மார்ச், 2014

சஹாரா - மற்றொரு இந்திய கார்ப்பரேட் கரும்புள்ளி

இந்த கட்டுரை தற்போதைய பங்குச்சந்தையில் மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்டு அகப்பட்டுக் கொண்டுள்ள சஹாரா நிறுவனத்தைப் பற்றியது.

ஞாயிறு, 9 மார்ச், 2014

முதலீடைத் தொடர..

முதலீடு வாசகர்களுக்கு,

வணக்கம்!

எமது கட்டுரைகளை மின் அஞ்சல் மூலம் பெறுவதற்கு பதிவு செய்த நண்பர்களின் எண்ணிக்கை 500 என்பதைக் கடந்து விட்டது.

வியாழன், 6 மார்ச், 2014

பங்குச்சந்தைக்கு கிடைத்த இனிப்பு செய்தி

பங்குச்சந்தையில் நேற்றைய ஒரு புள்ளி விவர செய்தி பங்குச்சந்தைக்கு நீண்ட கால நோக்கில் இனிப்பான செய்தியாக அமைந்தது.

புதன், 5 மார்ச், 2014

பனிப்போர் இன்னும் முடியவில்லை?

இந்த வாரம் பங்குச்சந்தையில் ஏற்ற, இறக்கங்களுக்கு காரணமாக இருந்த உக்ரைன் பிரச்சனை பற்றிய அலசலே இந்த கட்டுரை.

புதன், 26 பிப்ரவரி, 2014

CERC பரிந்துரை, 15% சரிந்த NTPC, பயன்பெறும் TATA

CERC அமைப்பின் பரிந்துரை பங்குச்சந்தையில் மின் துறை சம்பந்தமான நிறுவனங்களுக்கு நேர்மறை, எதிர்மறை என்று இரு விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அதனைப பற்றிய விரிவான பதிவே இந்த கட்டுரை.

ஞாயிறு, 23 பிப்ரவரி, 2014

சிவநாடார் விலகினால் HCL பங்கினை எவ்வாறு அணுகலாம்?

கடந்த வெள்ளியில் சிவநாடார் HCL நிறுவனத்தில் இருந்து விலகி விடுவார் என்று ஒரு செய்தி வந்தது. அதனால் HCL நிறுவன பங்கு ஒரே நாளில் 4% அளவு அதிகரித்தது. அதனைப் பற்றிய எமது பார்வையை இந்த பதிவில் பார்க்கலாம்.

சனி, 22 பிப்ரவரி, 2014

வளர்ச்சியை எதிர்பார்க்கும் வங்கி பங்குகள்

இந்த பதிவானது வங்கித் துறைக்கு இந்த ஆண்டில் வந்துள்ள நேர்மறை செய்திகளின் தொகுப்பையும், அதனால் ஏற்படும் பலன்களையும் விவரிக்கிறது.

வியாழன், 20 பிப்ரவரி, 2014

அதிர வைத்த ஒரு லட்சம் கோடி பேஸ்புக் டீல்

இந்த பதிவு நேற்று பேஸ்புக் நிறுவனம் ஒரு மிகப்பெரிய தொகைக்கு whatsapp நிறுவனத்தை வாங்கியது பற்றியது.

புதன், 19 பிப்ரவரி, 2014

வருமான வரியும் சின்ன வீடும்..

இந்த கட்டுரையில் வீட்டுக் கடன் மூலம் எப்படி அதிக பட்ச வருமான வரி பலனைப் பெறலாம் என்று பார்ப்போம்.

செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

இலவசத்தில் வீழும் தமிழகம்..

சில நாட்களாக பதிவு எழுதமுடியவில்லை. சோம்பலும், ஒரு வகை அலுப்பும் தான் காரணம். அதனால் தான் மொக்கைப் பதிவுகளை எழுதுவதற்கு பதிலாக கொஞ்சம் பொறுத்து இருந்து எழுதலாம் என்று இருந்து விட்டேன்.

செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

வருமான வரி சேமிக்க உதவும் ELSS fund

(16-07-2020 அன்று மீள் பதிவு செய்யப்பட்டது.)

இந்த கட்டுரை வருமான வரியை சேமித்து, அதே நேரத்தில் அதிக ரிடர்ன் தந்து உதவும் ELSS Mutual Fund பற்றியது.

வருமான வரி சேமிப்பதற்கு 80Cயின் படி அரசு சில சேமிப்பு வழிகளை கொடுத்துள்ளது. இந்த சேமிப்பில் இருக்கும் தொகைக்கு 1.5 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு பெறலாம்.

உதாரணத்திற்கு 10% வருமான வரி படியில் வருபவர் 15,000 ரூபாயும், 20% வருமான வரி படியில் வருபவர் 30,000 ரூபாயும், 30% விகிதத்தில் வருபவர் 45,000 ஒரே வருடத்தில் சேமிக்க முடியும்.

பார்க்க: வருமான வரி விலக்கு பெற என்ன செய்யலாம்?




இந்த சேமிப்பானது இன்சூரன்ஸ் திட்டங்கள், பிக்ஸ்ட் டெபாசிட், NSC, மியூச்சல் பண்ட் என்று பலவற்றிற்கும் வரும். இதில் மியூச்சல் பண்ட் தவிர மற்ற எல்லாவையும் குறைந்தது ஐந்து வருட முதலீடுகளாகும்.

மியூச்சல் பண்ட் முதலீட்டிற்கு மட்டும் மூன்று ஆண்டுகளே லாக்-இன் டைம். அதனால் குறைந்த காலம் மட்டுமே வரி விலக்கு முதலீடுகளை வைத்துக் கொள்பவர்கள் மியூச்சல் பண்ட்டை விரும்பலாம்.

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2014

வேலை வாய்ப்புகளை வாரி வழங்கவிருக்கும் வங்கிகள்

இந்த பதிவு அடுத்த சில ஆண்டுகளுக்கு இந்திய வேலை வாய்ப்பு சந்தையை ஆக்கிரமிக்க இருக்கும் வங்கித்துறை நிகழ்வுகளைப் பற்றியது.

வெள்ளி, 7 பிப்ரவரி, 2014

வருமான வரி விலக்கு பெற என்ன செய்யலாம்?

இந்த கட்டுரையில் வருமான வரி விலக்கு பெறும் வழி முறைகளைப் பற்றி விவரமாக பார்ப்போம்.


கடந்த பதிவில் வருமான வரியைக் கணக்கிடுவது எப்படி என்று எழுதி இருந்தோம். நல்ல ரெஸ்பான்ஸ். நன்றி!

அந்த கட்டுரையைக் காண இங்கு செல்லவும்.
வருமான வரியைக் கணக்கிடுவது எப்படி?

பொதுவாக ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வங்கிகளின் காப்பீடு, முதலீடு முகவர்களுக்கு கொண்டாட்டம் தான். அவசர கோலத்தில் ஏதாவது ஒரு முதலீடு செய்து வரியை சேமிக்கலாம் என்று நிறைய பேர் இந்த திட்டங்களில் சேருவார்கள். அப்புறம் தான் அதில் உள்ள எதிர்மறைகள் தெரிய வரும்.


எமக்கும் சில அனுபவங்கள் உண்டு. ஆரம்ப காலங்களில் சில முகவர்களிடம் வரி சேமிக்க சில முதலீடுகள் செய்து ஏமாற்றம் அடைந்தது உண்டு. அதில் ஒன்று ULIP Insurance என்ற திட்டம். அதன் பிறகு தான் தெரிந்தது. இதனை விட FDல் அதிக பலன் உள்ளது. இதனைப் பற்றி தனியாக கட்டுரை எழுதுகிறோம்.

இந்த பதிவில் வரியைக் குறைப்பதற்காக உள்ள வழிமுறைகளை விரிவாக பார்ப்போம்.

புதன், 5 பிப்ரவரி, 2014

வருமான வரியைக் கணக்கிடுவது எப்படி?

இந்த வருட நிதி ஆண்டு மார்ச் 31ல் முடிகிறது. வருமான வரி பதிவு செய்வதற்கான தருணம் நெருங்கி வருகிறது.


அதனால் இந்த பதிவில் வருமான வரியைக் கணக்கிடுவது எப்படி என்பது பற்றி பார்ப்போம். அடுத்த கட்டுரையில் வருமான வரி விலக்கு பெறுவதற்கான வழிமுறைகளையும் பார்க்கலாம்.

ஆரம்பத்தில் வருமான வரி கணக்கிடுவது என்பது கடினமாக இருக்கும். இதனால் வருமான வரி பதிவு செய்வதற்கு சில ஏஜெண்ட் மூலம் பதிவு செய்வது வழக்கம்.

ஆனால் கொஞ்சம் முயன்றால் வருமான வரி தொடர்பான விவரங்கள எளிதில் கற்றுக் கொள்ளலாம். இதனால் ஏஜெண்ட் செலவுகளையும் தவிர்க்கலாம். தகுதியான இடங்களில் முதலீடு செய்யவும் முடியும்.



இந்தியாவில் மாத சம்பளம் வாங்கும் தனி நபர்களுக்கும், பிரிக்கப்படாத இந்து குடும்பங்களுக்கும், வியாபாரம் செய்பவர்களுக்கும் வருமான வரி விதிக்கப்படுகிறது.

இதில் அலுவலகத்தில் மாதச் சம்பளம் வாங்குபவர்களுக்கு வருமான வரி சம்பளத்தின் போதே TDS (Tax Deducted at Source) என்ற முறையில் பிடிக்கப்படுகிறது.

செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

ஏன் இந்தியர்கள் அதிக வரி ஏய்ப்பு செய்கிறார்கள்?

வருமான வரி பதிவு செய்யும் காலம் நெருங்கி வருவதால் இந்த வாரம் வருமான வரி தொடர்பான பதிவுகளை அதிகமாக எழுதுகிறோம்.


இந்திய அரசின் புள்ளி விவரப்படி, வெறும் 3% மக்களே வருமான வரி கட்டுகிறார்கள். அப்படி என்றால் மீதி  97% பேரும் இரண்டு லட்சம் வருட வருமானத்திற்கு குறைவாக உள்ளவர்களா? இல்லை..அமெரிக்காவில் 45% மக்கள் வரி கட்டுகிறார்களாம். எப்படி இவ்வளவு வரி ஏய்ப்பு எளிதாக நடக்கிறது?

முதலில் நமது நிதி கட்டமைப்பு ஒன்றும் அந்த அளவு சரியாக இல்லை. யாருக்கு எவ்வளவு வருமானம் வருகிறது என்பதைக் கண்காணிப்பது மிக கஷ்டமாக உள்ளது.


தற்போதைய கணினி யகத்தில் இதனை செயல்படுத்துவது ஒன்றும் அவ்வளவு கடினம் இல்லை. ஆனால் அதற்கு முதலில் அரசியல்வாதிகள் விட மாட்டார்கள்.

திங்கள், 3 பிப்ரவரி, 2014

சந்தை சரிகிறது..வாங்கி போடுங்க..

இன்று சென்செக்ஸ் இருபதாயிரம் புள்ளிகளுக்கு கீழே சென்றுள்ளது. அதற்கு முக்கியக் காரணம் அமெரிக்க உற்பத்தி துறை புள்ளி விவரங்கள் எதிர்பார்த்த அளவு இல்லை என்று சொல்லப்படுகிறது.

விடுமுறை அனுபவங்கள்...

கடந்த மூன்று வார கால விடுமுறை நேற்று முடிந்தது. சொந்த ஊரில் உறவுகளுடன், நண்பர்களுடன் ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு நீண்ட காலம் இருந்தது மிக இனிமையான அனுபவமாக இருந்தது. சொர்க்கமே என்றாலும் சொந்த ஊர் சொந்த ஊர் தான்..

வியாழன், 9 ஜனவரி, 2014

விடுமுறையில் செல்கிறோம்

நாளை முதல் விடுமுறையில் இந்தியா செல்கிறோம். அதனால் பிப்ரவரி முதல் தேதி வரை பதிவுகள் அதிக அளவு வெளிவராது.

புதன், 8 ஜனவரி, 2014

CRR, Repo, Reverse Repo..அப்படின்னா என்ன?

இந்தக் கட்டுரையில் பாரத வங்கியின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் முக்கியமான ஆயுதங்களான பண இருப்பு விகிதம், ரெபோ, தலைகீழ் ரெபோ (Reverse Repo Rate) போன்ற வட்டி விகிதங்களை பற்றி விரிவாக பகிர்கிறோம்.

இதற்கு முன் இந்த விகிதங்கள் தொடர்பான ஒரு கட்டுரை எழுதி இருந்தோம்.அந்த கட்டுரை நல்ல வரவேற்பு பெற்றது. அதனைப் படிக்காதவர்கள் இந்த இணைப்பில் படிக்கலாம்.


அதன் தொடர்ச்சியாக நண்பர்கள் கேட்டதற்கிணங்க இந்த கட்டுரையை எழுதுகிறோம்.

இரண்டு கயிறும் முக்கியம் 


பொருளாதாரத் துறையினர் மட்டுமல்லாமல் பாமரரும் ரிசர்வ் வங்கியின் இந்த விகிதங்களைப் பற்றி அறிந்து கொள்வது மிக முக்கியமானது.

ஏனென்றால் அதற்கு சில காரனங்களை சொல்லலாம்.

  • இன்று வங்கியில் கடன் வாங்காதவர்கள் மிகக் குறைவு. நமது வங்கிக் கடன் மீதான  வட்டி விகிதங்கள் மேலே சொன்ன விகிதங்களின் அடிப்படையிலே நிர்ணயிக்கப்படுகின்றன. இந்த தருணங்களில் Fixed Rate போகலாமா?, Floating Rate போகலாமா? என்ற பல கேள்விகளுக்கு இந்த விகிதங்களை அடிப்படையாக வைத்து நாம் முடிவு எடுத்துக் கொள்ளலாம்.  

  • நாம் வங்கியில் வைக்கும் நீண்ட கால முதலீட்டிற்கு கிடைக்கும் வட்டியும் இந்த விகிதங்களைப் பொறுத்தே மாறுபடுகிறது. இதே போல் நாம் முதலீடு செய்யும் பணத்தை வங்கிகள் எப்படிப் பயன்படுத்துகின்றன என்பதையும் ஒரு முதலீட்டாளனாக அறிந்து கொள்வதும் அவசியமாகிறது. 

  • கடைசியாக இந்த விகிதங்கள் மாற்றம் செய்யப்படும்போது பங்குச்சந்தையில் அதனுடைய தாக்கம் சில நாட்கள் மிக அதிகமாகக் காணப்படும். அதாவது சென்செக்ஸ் 200, 300, 500 புள்ளிகள் வரை கூடும் அல்லது குறையும். அப்படியென்றால் சிறு முதலீட்டாளர்கள் இந்த விகிதங்களைப் பற்றி அறிவதும் மிக அவசியம்.

இந்த அடிப்படைக் காரணங்களுக்காக  பாரத வங்கியின் CRR, Repo, Reverse Repo போன்ற விகிதங்களை அறிந்து கொள்வது மிக அவசியமாகிறது.

இந்த விகிதங்கள் ஒன்றும் எட்டாக் கனியாக உள்ள புரிந்து கொள்ள முடியாத விடயங்கள் அல்ல. ஆனால் இந்த விகிதங்களைத் தாங்கி நிற்கும் ஆங்கில சொற்கள் நம்மிடமிருந்து அந்நியமாக நிற்கிறது என்பதே உண்மை. அதனால் எம்மால் இயன்ற வரை தமிழில் எளிமையாகக் கூற முற்படுகிறோம்.

வெள்ளி, 3 ஜனவரி, 2014

HCLன் வினீத் நாயர் விலகல் எந்த அளவு பாதிக்கும்?

HCL Technologies நிறுவனத்தின் முன்னாள் CEO வினீத் நாயர் நிர்வாகக் குழு இயக்குனர் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார்.

வியாழன், 2 ஜனவரி, 2014

போர்ட்போலியோ இரண்டு லட்சம், இரண்டரை லட்சமானது

நமது போர்ட்போலியோவின் தற்போதைய லாபம் 25% என்ற எல்லையைக் கடந்துள்ளது.