செவ்வாய், 30 ஜூன், 2020

ஐந்து நிமிடங்களில் 18 லட்சம் இழந்த கதை

பங்குச்சந்தை என்பது மிக அதிக அளவில் லாபம் தரும் ஒரு முதலீடு தான். சரியான கணிப்பு இருந்தால் மற்ற எல்லா முதலீடுகளையும் விட அதிகம் லாபம் தருமிடம்.

2013ல் ஒரு கட்டுரையில் விப்ரோவில் ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து இருந்தால் இப்ப 43 கோடி என்ற தலைப்பில் எழுதி இருந்தோம்.

இந்த கட்டுரையானது நண்பர்களுக்கு மிக அதிக அளவில் பங்குச்சந்தையில் உற்சாகத்தை கொடுத்து இருந்ததை கருத்துக்கள் வாயிலாக அறிந்தோம்.



பங்குசந்தையில் நேர்மறையான லாபங்களை வெளியிடும் போது மற்றோரு பக்கமான நஷ்ட உதாரணங்களையும் பகிர்வது அவசியமாகிறது.

அந்த வகையில் இந்த கட்டுரையில் நண்பர் ஒருவர் ட்ரேடிங் முறையில் ஐந்தே நிமிடங்களில் 18 லட்சம் இழந்ததையும் பகிர்கிறோம்.

இந்த கட்டுரையை புரிந்து கொள்வதற்கு ஓரளவு Futures & Options பற்றிய புரிதலும் அவசியம். இது வரை இந்த முதலீடு தளத்தில் ட்ரேடிங் பற்றி விவரமாக எழுதியதில்லை. இனி எழுத முயற்சிக்கிறோம்.

வெள்ளி, 26 ஜூன், 2020

கொரோனாவால் ஒழியும் தமிழ் ஹீரோயிசம்

கொரோனா வரவால் பல தொழில் துறைகளில் மந்த நிலை நீடிக்கிறது. ஆனாலும் சில துறைகளில் சில வியாபாரத் தன்மையே மாற்ற செய்து இருக்கிறது. .

அதில் ஒன்று தான் சினிமா துறை. 



கொரோனா இரண்டாவது அலை, மூன்றாவது என்று இப்பொழுது இருக்கும் நிலைமையை பார்த்தால் இந்த வருடம் முழுவதும் தியேட்டர்கள், மால்கள் மூடப்பட்டாலும் ஆச்சர்யமில்லை.

இதன் தொடர்ச்சியாக தான் பொன்மகள் வந்தாள், பென்குயின் போன்ற திரைப்படங்கள் அமேசான் பிரைமில் வெளிவந்திருக்கிறது. எம்மை பொறுத்தவரை கதை களம் வலுவில்லாததால் படங்கள் ஓகே போன்று தான்.


செவ்வாய், 23 ஜூன், 2020

கூகுள் வோடாபோனில் முதலீடு செய்யுமா?

எமக்கு அண்மையில் நண்பர்களிடம் இருந்து கூகுள் நிறுவனம் வோடாபோனில்  முதலீடு செய்யுமா? என்று அதிக கேள்விகள் வந்திருந்தது.

இதே போல் எமது Quora பக்கத்திலும் கேள்விகள் வந்திருந்தது.இதன் தொடர்ச்சியான எமது பார்வையை இந்த கட்டுரையில் வைக்கிறோம்.

கடந்த மூன்று மாதங்களாக ரிலையன்ஸ் பங்கு சந்தையில் சக்கை போடு போட்டு வருகிறது. இதற்கு முழு முதற்காரணம் JIO நிறுவனத்தில் பேஸ்புக் செய்த முதலீடு தான்.



JIO நிறுவனமானது டெலிகாம் நிறுவனம் என்பதையும் தாண்டி ஒரு டிஜிட்டல் நிறுவனமாக பார்க்கப்படுகிறது; அதனால் தான் இரண்டே மாதங்களில் ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடையும் திரட்டி உள்ளது.

இது தொடர்பாக ஏற்கனவே எழுதிய கட்டுரையையும் பார்க்க.

இதன் காரணமாக பேஸ்புக் நிறுவனத்தின் போட்டியாளரான  கூகுள் நிறுவனமானது வோடாபோனிலும் முதலீடு செய்யலாம் என்று சில செய்திகள் வந்தன. இது ஊர்ஜிதமானது அல்ல, எதிர்பார்ப்பு தான்.


புதன், 17 ஜூன், 2020

சீனா மோதலும் சில சந்தேகங்களும்

நேற்று முன்தினம் சீனாவுடன் நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள். அவர்கள் தியாகங்களுக்கு எமது வணக்கங்கள்!

அதே போல் சீனா சார்பாக 40 பேர் வரை மரணம் அடைந்துள்ளார்கள் என்று யூகிக்கப்படுகிறது.



கிட்டத்தட்ட 45 ஆண்டுகளுக்கு பின் எல்லை மோதலில் சீனா - இந்தியா வீரர்கள் மரணம் தழுவுவது என்பது இது தான் முதல் முறை. அதனால் பிரச்சினை கொஞ்சம் வீரியமானது என்று தான் நினைக்க தோன்றுகிறது.

அடிப்படையில் எமக்கு பாதுகாப்பு துறை தொடர்பாக எந்த நிபுணத்துவம் கிடையாது. ஆனால் ஒரு பாமரனாக சில சந்தேகங்கள் வரத் தான் செய்கின்றன.

ஞாயிறு, 14 ஜூன், 2020

கொரோனா இரண்டாவது அலைக்கு பயப்படும் சந்தை

தற்போது பங்குசந்தையானது 10100 புள்ளிகளில் தடுமாறி கொண்டிருக்கிறது.இது 100 நாள் சாராசரியில் இயங்கி கொண்டிருக்கும் இது ஒரு முக்கியமான தடை புள்ளி ஆகும்.

இதனை தாண்டி மேலே செல்ல வேண்டுமானால் வலுவான காரணங்கள் இருக்க வேண்டும்.



இது வரை அனுமானங்களில் தான் சந்தை மேலே உயர்ந்து உள்ளது. அதாவது எப்படியும் மீண்டு விடும் என்ற நம்பிக்கை சில முதலீட்டாளர்களிடம் இருப்பது. 

ஆனால் மற்ற பெரும்பான்மை முதலீட்டாளரார்கள் சந்தைக்குள் வர வேண்டும் என்றால் வெறும் நம்பிக்கை என்பதையும் தாண்டி சில நம்பிக்கை தரும் நிகழ்வுகளும் நடக்க வேண்டும்.

புதன், 10 ஜூன், 2020

ரியல் எஸ்டேட்டும், ரேட்டிங் ஏஜென்சியும்

கடந்த இரு  வருடங்களாக  எமது பதிவுகளில் ஒரு நெகடிவ் பையாஸ் இருப்பது போல் தோன்றலாம். அதற்காக எதிர்மறை சிந்தனைகளுடன் தான் இந்த தளம் இருக்கும் என்று நினைக்க வேண்டாம்.

இந்த தளம் ஆரம்பிக்கப்பட்ட 2013 முதல் எழுதிய கட்டுரைகளை பார்த்தால் மிக அதிக அளவில் பங்குச்சந்தை முதலீடுகளை நேர்மறை சிந்தனைகளோடு தான் அணுகி இருந்தோம்.  அந்த காலக்கட்டத்தில் சந்தையும் லாபத்தையே கொடுத்து இருந்தது.

அதன் பிறகு குமிழ் இருக்குமோ என்ற சந்தேகம் இருந்ததால் பங்குச்சந்தையை தவிர்க்கவுமளவு தான் அதிக பதிவுகள் வந்தன.



பங்குச்சந்தையை பொறுத்தவரை தவறுகளை தவிர்த்து விட்டாலே பாதி வெற்றி தான். அந்த வகையில் எங்கெங்கு தவறுகள் இருப்பதை உணரும் அளவு கட்டுரைகள் கொடுப்பதும் கடமையாகிறது.

எமது முந்தைய சந்தை ஒன்றுமில்லாமல் உயருவதேன்? கட்டுரையில் நண்பர் பார்த்திபன் அவர்களின் சில கருத்துக்களை பார்த்தால் சில்லறை முதலீட்டாளர்களின் ஏமாற்றங்களையம்  உணரலாம்.

அனைத்திற்கும் அப்பால் பங்குச்சந்தை என்பது எந்த திசையிலும் செல்லலாம். அதனால் எமது கட்டுரைகளையும் தாண்டி சுயமாக முடிவுகளை எடுக்குமாறு நண்பர்களிடம் வேண்டுகோள் வைக்கிறோம். எமது கட்டுரைகள் எவையும் பரிந்துரைகள் அல்ல. படிப்பினை கட்டுரைகளே!

ஞாயிறு, 7 ஜூன், 2020

சந்தை ஒன்றுமில்லாமல் உயருவதேன்?

பல எதிர்மறை செய்திகள் வரிசையில் கட்டி நிற்க சந்தையானது கடந்த இரு வாரங்களாக உயர்ந்து கொண்டே செல்கிறது. தற்போது 10000 நிப்டி புள்ளிகளை தொட்டு விட்டுள்ளது.

அனைவர் மனதிலும் உள்ள பொதுவான கேள்வி இது தான்.



இது தொடர்பாக நேற்றைய மியூச்சல் பண்ட்களுக்கும் வரும் ஆபத்து என்ற பதிவில் நண்பர் சந்துரு  ஒரு கருத்தை பதிவிட்டு கேள்வி எழுப்பி இருந்தார்.

கேள்வி இது தான்.

"Please provide an insight article about why market is rising despite big economic problem. Stimulus package was very bad in india compared with us and europe countries. I initially thought market will never touch 10000 in nifty atleast until this year. But looking now I am in deep confusion?"

அதற்கு நண்பர் தியாகராஜன் இவ்வாறு பதில் அளித்து இருந்தார்.

"Sir Reason is a trap of forign investers having lot of money buying and lifting the nifty so that they will book profits in unexpected time hammering the market plthink bank shares r going up not on performance that too having lot of NPAs Think before investing if it is hard earned My personal view Risk is urs"


எமது பதிலும் நண்பர் தியாகராஜன் அவர்களுடன் ஒத்து போகிறது.

வெள்ளி, 5 ஜூன், 2020

மியூச்சல் பண்ட்களுக்கும் வரும் ஆபத்து

பங்குச்சந்தைக்கு முதலீடு செய்ய வருபவர்களுக்கு தொடக்க புள்ளி என்பது மியூச்சல் பண்ட் தான்.

புதிதாக வரும் நமக்கு அவ்வளவு தெரியாததால் நமக்கு பதிலாக விவரம் தெரிந்தவர்கள் நமது பணத்தை பார்த்துக் கொள்வார்கள் என்பதால் அதிக அளவில் பிரபலமாக இருந்தது.



ஆனால் சில மியூச்சல் பண்ட் மேனேஜர்கள் செய்த தவறுகள், நிறுவனங்கள் செய்த தவறுகள் போன்றவற்றின் காரணமாக அண்மையில் இந்த பரஸ்பர நிதிகளின் தோல்வி என்பது மிக அதிகமாகவே இருக்கிறது.

பொதுவாகவே இந்தியாவில் வங்கிகளை தவிர மற்ற எதில் வைக்கும் பணத்திற்கு  உத்தரவாதம் காகிதங்களில் தான் இருக்கும். சட்டத்தின் ஆயிரம் ஓட்டைகள் வழியாக பெரிய கைகள் தப்பிக்க, பணம் போட்டவர்களின் ஆவென்ற வாய் பிளப்பு தான் அதிகம் இருக்கும்.

மியூச்சல் பண்ட்டும் அந்த வகையில் தான் வருகிறது.

திங்கள், 1 ஜூன், 2020

JIO - Facebook முதலீடு, சூட்சமம் என்ன?

தொழில் நுட்பம் வந்து நன்மை செய்ததோ இல்லையோ. ஆனால் இன்னும் சிறிது காலத்தில் 99% உலக சொத்தும் 1% பணக்காரர்களிடமும் மீதி 1% சொத்து 99% மற்ற மக்களிடமும் இருந்தாலும் ஆச்சர்யமில்லை.

வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களால் வியாபாரம் முழுக்க ஒரு வித மையத்தன்மையை நோக்கி நகருவதையம் பார்க்க முடிகிறது. அந்த வகையில் தான் ஜியோவில் Facebook நிறுவனம் முதலீடு செய்வதையும் காணலாம்.



கிட்டத்தட்ட 45,000 கோடி ரூபாய் அளவு முதலீடு செய்து உள்ளார்கள். இது போக சில இதர நிறுவனங்களும் முதலீடு செய்து மொத்தத்தில் 75,000 கோடி அளவு முதலீடு செய்து உள்ளார்கள். அடுத்து, Microsoft நிறுவனமும் வரிசையில் இருப்பதாக செய்திகள் வருகின்றன.

ஏன், இத்தனை வரிசை என்ற கேள்வி வரும் போது, கொரோனோவானது இல்லுமினாட்டி சதியா? அல்லது மருந்து நிறுவனங்கள் சதியா? என்பதை விட மக்களை அதிகம் குழப்பம் செய்யத் தான் வைக்கிறது.

கொஞ்சம் பின்புலங்களையும் விரிவாக பார்ப்போம்.