செவ்வாய், 30 ஜூன், 2015

மே மாதத்தில் நல்ல வளர்ச்சி கண்ட தொழில் துறை

இந்த செய்தி பங்குச்சந்தையில் முதலீடு செய்து இருப்பவர்களுக்கு ஒரு இனிப்பான செய்தியாக இருக்கும்.

மூன்றாவது வருடத்தில் முதலீடு தளம் ...

நாட்கள் செல்லும் வேகத்தில் நமது முதலீடு தளம் இரண்டு வருடங்கள் நிறைவு செய்து நாளை மூன்றாவது வருடத்தில் அடி எடுத்து வைக்கிறது.

திங்கள், 29 ஜூன், 2015

அரசியல் காரணங்களால் முடிவெடுக்காமல் திணறும் கிரீஸ்

பலரும் கிரீஸ் பொருளாதார சிக்கலுக்காக நடைபெறும் பேச்சுவார்த்தையில் ஒரு உடன்பாடு ஏற்படும் என்று தான் நம்பி இருந்தனர்.

ஞாயிறு, 28 ஜூன், 2015

ராஜன் சொல்லும் 1930 பொருளாதார பேரழிவு என்பது என்ன? -2

இந்த சிறிய தொடரின் முந்தைய பாகத்தை இங்கு படித்த பிறகு தொடரலாம்.
ராஜன் சொல்லும் 1930 பொருளாதார பேரழிவு என்பது என்ன?

இப்படி ஒரு கட்டத்தில் அமெரிக்க நிறுவனங்கள் உற்பத்தி செய்த பொருட்கள் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் விலை போகாமல் அப்படியே தொழிற்சாலைகளில் முடங்கின.

ராஜன் சொல்லும் 1930 பொருளாதார பேரழிவு என்பது என்ன?

நேற்று முன்தினம் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் ஒரு கருத்தரங்கில் 1930ல் நடந்த பொருளாதார சீர்குலைவு மீண்டும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்று கூறி உள்ளார்.

வெள்ளி, 26 ஜூன், 2015

முதலீடு மென் புத்தகங்கள் தொடர்பாக அறிவிப்பு

நண்பர்களுக்கு,

வணக்கம்!

கடந்த ஆண்டு எமது தளம் ஆரம்பிக்கப்பட்ட வருடாந்திர நிகழ்வையொட்டி எமது தளத்தின் தொடர்களாக வரும் முக்கிய கட்டுரைகளை ஒரு மென் புத்தக வடிவில் தருவதாக சொல்லி இருந்தோம்.



இது தொடர்பாக நண்பர் ராஜா அவர்கள் மின் அஞ்சலில் இவ்வாறு கேட்டு இருந்தார்.

"இன்று நம் தளத்தில் உள்ள பழைய கட்டுரைகளை படித்தேன் . ஆனால் பலரிடம் 2g மொக்கை இணைப்பு இருப்பதால் படிக்க கடினமாக உள்ளது. இந்த கட்டுரைகளை எல்லாம் ஒருங்கிணைத்து pdf file ஆக தரலாமே."

கருத்துக்களை பகிர்ந்த ராஜாவிற்கு நன்றி!

உண்மையில் நாமும் இதனை மறந்து விட முடியவில்லை. ஆனால் அதிக வேலைப்பளு காரணமாக அந்த புத்தகத்தை தொகுக்க முடியவில்லை. இது தவிர இன்னும் கொஞ்சம் கட்டுரைகள் வந்தால் ஒரு முழுமையான புத்தகமாக மாறலாம் என்று நினைத்தோம்.

அதனால் முதல் கட்டமாக எமது "பங்குச்சந்தை ஆரம்பம் தொடர்" ஐம்பது பாகங்களை கடந்த பிறகு அதிலுள்ள கட்டுரைகளை, தொடர்ச்சி தவறாதவாறு தொகுத்து தருகிறோம். (தற்போது 43வது பாகத்தில் நிற்கிறது.)

அதோடு நின்று விடாமல் மற்ற பிரிவுகளில் உள்ள முக்கிய கட்டுரைகளையும் ஒவ்வொரு கால இடைவெளியில் தொகுத்து தருகிறோம்.

இந்த மென் புத்தகங்களை எமது தள கட்டுரைகளை மின் அஞ்சலில் Subscribe செய்தவர்களுக்கு மட்டும் இலவசமாக தருகிறோம்.

அதனால் கீழே உள்ள இணைப்பை பயன்படுத்தி Subscribe செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். ஏற்கனவே Subscribe செய்தவர்கள் மீண்டும் இணைய தேவையில்லை.

மின் அஞ்சலில் கட்டுரைகளைப் பெற


தங்கள் ஆதரவை தொடர கேட்டுக் கொள்கிறோம்!

நன்றியுடன்,
முதலீடு



கிரீஸ் பொருளாதார தேக்கம் எந்த அளவு இந்திய சந்தையை பாதிக்கும்?

கடந்த இரு நாட்களாக இந்திய பங்குச்சந்தை எதிர்மறையில் கீழே வந்துள்ளது.

வியாழன், 25 ஜூன், 2015

அதிக எதிர்பார்ப்புகளுடன் வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டம்

நேற்று பிரதமர் மோடி மிகப்பெரிய கட்டமைப்பு திட்டங்களுள் ஒன்றான ஸ்மார்ட் சிட்டி ப்ராஜெக்ட்டை துவக்கி வைத்துள்ளார்.

புதிய வருமான வரி படிவங்களை எப்படி பயன்படுத்த வேண்டும்?

காலங்காலமாக தொடர்ந்து வந்த கடினமான வருமான வரி படிவங்கள் இந்த நிதி ஆண்டு முதல் மாற்றப்பட்டுள்ளது.


இதில் தேவையில்லாத தகவல்கள் தவிர்க்கப்பட்டு படிவங்கள் எளிமையாக்கப்பட்டுள்ளன.



மொத்தத்தில் நான்கு படிவங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதில் நமக்கு வரும் வருமானத்திற்கு ஏற்ப படிவங்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.

எந்த படிவத்தை நாம் பயன்படுத்த வேண்டும் என்பதை கீழே பார்க்கலாம்.

புதன், 24 ஜூன், 2015

மாத சம்பளத்தில் PF பிடித்த தொகை உயர்கிறது

மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு இந்த கட்டுரை பயனாக இருக்கும்.


தனியார் நிறுவனங்களில் மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு வரியை மிச்சம் செய்வதற்காக BASIC சம்பளத்தை குறைத்து மற்றவற்றை அலொவன்ஸ் போல் வழங்கி வந்தன. இதனால் பாதிக்கும் குறைவான சம்பளமே அடிப்படை சம்பளமாக இருந்து வந்தது.





ஆனால் நமது PF தொகை BASIC சம்பளத்தை அடிப்படையாக வைத்தே நிர்ணயிக்கப்படுகிறது. அதாவது அடிப்படை சம்பளத்தில் 12% மட்டுமே பிடித்தம் செய்யப்பட்டு வந்தது.

வரவுக்கு மேல் செலவால் கிரீஸ் பொருளாதாரம் வீழ்ந்த கதை

தற்போது பங்குச்சந்தைகளில் முக்கிய பேச்சுக்களில் ஒன்றாக இருப்பது கிரீஸ் நாட்டிற்கு கடன் கொடுத்த நாடுகள் நடத்தும் பஞ்சாயத்து தான்.

செவ்வாய், 23 ஜூன், 2015

இனி கார்டு பயன்படுத்துபவர்கள் வரிப் பலன்களை பெறலாம்

நமது நாட்டில் தான் பணப் பரிவர்த்தனைகளுக்கு எலெக்ட்ரானிக் மீடியம் அவ்வளவாக பயன்படுத்தப்படாமல் உள்ளது.

எதிர்மறை விடயங்கள் சாதகமாவதால் உற்சாகத்தில் சந்தை

கடந்த ஏழு நாட்களாக சந்தை உயர்ந்து கொண்டே உள்ளது. தற்போது சந்தை தாழ்வில் இருந்து 1500 புள்ளிகள் வரை உயர்ந்து 27,800க்கு அருகில் வந்து நிற்கிறது.

சீனாவில் கம்யூனிச சுற்றுலா அனுபவங்கள்..

கடந்த நான்கு நாட்களாக சீனாவிற்கு சுற்றுலா சென்றிருந்தோம். இந்த சிறிய விடுமுறைக்கு பிறகு மீண்டும் சீனம் தொடர்பான கட்டுரையுடன் தொடர்கிறோம்.

வியாழன், 18 ஜூன், 2015

எமது விடுமுறை அறிவிப்பு

வாசகர்களுக்கு,

நாளை முதல் நான்கு நாட்கள் சீனாவிற்கு சுற்றுலா செல்லவிருக்கிறோம்.

புதன், 17 ஜூன், 2015

மெர்ஸ் வைரஸால் மெர்சலாகி நிற்கும் கொரியா

பொதுவாக கொரியா என்றாலே வட கொரியா தான் நியாபகம் வரும். அங்கு இருக்கும் சங்கி மங்கி ஆட்சியாளர்கள் பண்ணும் அட்டூழியங்களே இதற்கு முதற்காரணம். பசி, பட்டினி இருந்தாலும் குண்டு தான் முதலில் தயாரிப்பார்கள்.

5000 ரூபாய் நிரந்தர பென்ஷன் பெற ஒரு அரசு திட்டம்

புதிய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு பென்சன் திட்டம் "அடல் பென்சன் யோஜனா". இது முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களில் பென்சனுக்காக பல திட்டங்கள் உள்ளன. ஆனால் அவற்றில் பிரிமியம் தொகை அதிகம். அதே நேரத்தில் அரசு சாராத நிறுவனங்கள் என்பதால் நம்புவதும் கடினம்.



இந்த சூழ்நிலையில் அரசின் அடல் பென்சன் திட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.

பழைய லேப்டாப்புகளை மாற்றுவதற்கு அமேசான் மூலம் ஒரு வழி

தற்போது எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களின் ஆயுட்காலம் குறுகி கொண்டே செல்கிறது. இது லேப்டாப்புகளுக்கும் பொருந்தும்.

செவ்வாய், 16 ஜூன், 2015

வேதாந்தாவிடம் கூடுதல் டிவிடென்ட் கேட்கும் LIC

நம்மிடம் இன்சுரன்ஸ் என்று பெறப்படும் பணத்தை தான் LIC பங்குச்சந்தையில் முதலீடு செய்கிறது.  இப்படி நம்மிடம் பெறப்பட்ட பணத்தில் ஒரு பகுதியை Cairn நிறுவனத்தில் முதலீடு செய்து உள்ளது.

விவசாய வருமானத்தில் வரியை எப்படி சேமிப்பது?

நமது அரசியல் வாதிகள் வருமான வரித்துறையை ஏமாற்றுவதற்கு உபோயோகிக்கும் ஒரு முக்கிய ஆயுதம் விவசாய வருமானம் என்று சொல்லலாம்.


கடந்த முறை, சரத் பவார் அவர்களது மகள் 10 ஏக்கர் நிலத்தில் 114 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கப்பெற்றதாக தேர்தல் கமிசன் அறிக்கையில் கூறி இருந்தார்,

அவ்வளவு வருமானம் கிடைக்க அப்படி என்னது தான் பயிர் செய்தார் என்று தெரியவில்லை? சொன்னால் நன்றாக இருக்கும்.



இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. இந்திய அரசின் கொள்கைப்படி விவசாயத்தின் மூலம் கிடைக்கப்பெறும் வருமானத்திற்கு வரி கிடையாது. அதனால் தான் அரசியல் வாதிகள் போட்டி போட்டுக் கொண்டு விவசாயிகளாக மாறி விடுகின்றனர்.

உண்மையிலே முழுவதுமாக வரி இல்லை என்று சொல்ல முடியாது. Back Door என்ற முறை கணக்கு படி சிறிது வரி கட்ட வேண்டும். அது உங்களது மற்ற வருமானங்களை சார்ந்தும் இருக்கிறது. இருந்தாலும் அதிக அளவு பயன் உள்ளது.

மகிந்திரா நிறுவனத்திற்கு கிடைத்த மிக முக்கிய ஏர்பஸ் ஆர்டர்

உலகின் மிகப்பெரிய விமான நிறுவனங்கள் என்று ஏர்பஸ் மற்றும் போயிங் என்ற இரண்டைத் தான் சொல்லலாம்.

திங்கள், 15 ஜூன், 2015

பங்குச்சந்தையில் நம்பிக்கை தரும் முக்கிய நல்ல செய்திகள்

கடந்த ஒரு மாதமாக பார்த்தால் பங்குச்சந்தை சில விடயங்களை மட்டும் மையமாக வைத்து எதிர்மறையில் இயங்கி வருகிறது.

ஞாயிறு, 14 ஜூன், 2015

Cairn-Vedanta இணைப்பு மூலம் பகல் நேரக் கொள்ளையில் அணில் அகர்வால்

இந்தியாவில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் எடுக்கும் நிறுவனங்களுள் ஒன்று பிரிட்டிஷ் நிறுவனமான Cairn India. ONGCயை தவிர்த்து மிக நல்ல முறையில் செயல்பட்டு வந்த நிறுவனங்களுள் Cairn நிறுவனமும் ஒன்று.

வியாழன், 11 ஜூன், 2015

வளத்தை வேகமாக பெருக்கும் CAGR கூட்டு வட்டி (ப.ஆ - 43)

பங்குச்சந்தை ஆரம்பம் என்ற இந்த தொடரின் முந்தைய பாகத்தை இங்கு படிக்கலாம்.
பங்குச்சந்தையில் போர்ட்போலியோவை உருவாக்க சில டிப்ஸ் (ப.ஆ - 42)

193% லாபத்தில் முதலீடு போர்ட்போலியோ

சில சமயங்களில் நல்ல பங்குகள் சந்தை கீழே வரும் போது கரெக்ட்சன் நிலைக்கு வரும்.

புதன், 10 ஜூன், 2015

டம்மி ஜுன்ஜுன்வாலாவால் ஏற்றி இறக்கப்பட்ட சுரானா பங்கு

நேற்று காலையில் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா சுரானா பங்குகளில் முதலீடு செய்கிறார் என்று ஒரு செய்தி வந்தது.

பரிந்துரையில் 25% லாபம் கொடுத்த SpiceJet விரிவாக்கம் செய்கிறது

கடந்த டிசம்பரில் Spice Jet நிறுவனம் மாறன்கள் கையில் இருந்தது. மாறன்களுக்கு விமான தொழிலில் சரியான முன் அனுபவம் இல்லாததால் ஒரு கட்டத்தில் கடுமையான நஷ்டங்களை சந்தித்தது.

சர்க்கரை நிறுவனங்களுக்கு வட்டியில்லாக் கடன், போதுமா?

அரசு சர்க்கரை நிறுவனங்கள் மற்றும் கரும்பு விவசாயிகளுக்கு வட்டியில்லாக் கடன்கள் வழங்க ஒப்புதல் வழங்கி உள்ளது.

செவ்வாய், 9 ஜூன், 2015

பப்பெட் பொன்மொழிக்குள் மலிவாக வரும் Nestle பங்கு

கடந்த இரு வாரங்களாக Nestle பங்கு சந்தையில் துவைத்து எடுக்கப்படுகிறது. கிட்டத்தட்ட 25% வீழ்ச்சி அடைந்துள்ளது.

முதலீடு தள இணைப்பு சரி செய்யப்பட்டது

நாம் பயன்படுத்தும் DNS சர்வர் சில பிரச்சினைகளை சந்தித்ததால் இன்று மாலையில் இருந்து நமது தளம் சரிவர இயங்காமல் போனது.

தவறாக புரிந்து அடி வாங்கும் சன் டிவி பங்கு

நேற்று ஒரே நாளில் மட்டும் சன் டிவி பங்கு 30% அளவு சரிந்தது.

திங்கள், 8 ஜூன், 2015

ஓய்வில் கிடைக்கும் Gratuity பற்றிய முக்கிய குறிப்புகள்

தற்போதைய தனியார் மாயா சூழ்நிலையில் யாரும் அதிக காலம் ஒரு நிறுவனத்தில் இருப்பதில்லை என்பதால் Gratuity பற்றிக் கண்டு கொள்வதில்லை.


ஒரு தலைமுறைக்கு முன்னால் சென்று பார்த்தால் Gratuity என்பது ஒரு முக்கிய எதிர்பார்ப்பாக இருந்து வந்தது. திருமணம் மற்றும் வீடு கட்டுதல் போன்ற விடயங்களுக்கு அதிக  பயன்பட்டு வந்தது.

இன்று கூட தமிழர்கள் அவ்வளவாக நிறுவனங்களை மாறுவதில்லை என்பது பல நிறுவனங்களில் ஒரு பேச்சாகத் தான் இருக்கிறது.



அவர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் Gratuity பற்றிய இந்த கட்டுரை பயனாக இருக்கும்.

ஞாயிறு, 7 ஜூன், 2015

நல்ல நிதி அறிக்கையைக் கொடுத்த DION பங்கு

இதற்கு முன்னால் DION Global Solutions என்ற நிறுவனத்தின் பங்கை பரிந்துரை செய்து இருந்தோம்.

வெள்ளி, 5 ஜூன், 2015

500% லாபம் கொடுத்த AEGIS நிறுவனம்

எமது தளத்தில் நவம்பர் 22, 2013 அன்று AEGIS Logistics என்ற நிறுவனத்தை பரிந்துரை செய்து இருந்தோம்.

பார்க்க: AEGIS நிறுவனத்தை ஏன் பரிந்துரை செய்கிறோம்?

குமரி நில நீட்சி - புத்தக விமர்சனம்

தமிழில் ஆய்வு கட்டுரை தொடர்பான புத்தகங்கள் அவ்வளவாக வெளிவரவில்லை என்ற குறையை நீக்கிய ஒரு புத்தகம் "குமரி நில நீட்சி " என்று சொல்ல முடியும்.


ப்ளைட்டில் பயணிக்கும் போது செல்லும் பாதையை குறிப்பிடுவதற்காக ஒரு மேப் டிவியில் காட்டுவார்கள்.



அது சாட்டிலைட் மேப் என்பதால் வரைபடங்கள் இயற்கையானதாகவும் நேர்த்தியாக இருக்கும். அந்த மேப்பில் கடலின் ஆழ விவரங்கள் கூட வெவ்வேறு நிறங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

அந்த நிறத்தை அடிப்படையாக வைத்து பார்த்தால் கடல் வழியாக தமிழ்நாடு ஒரு பாதையில் ஆஸ்திரேலியாவையும், ஆப்ரிக்காவையும் இணைத்து இருக்கும்.

வியாழன், 4 ஜூன், 2015

மழையைக் கண்டு சந்தை அவ்வளவு பயப்பட வேண்டுமா?

ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைக் குறைத்த போதிலும் சந்தை எதிர்மறை விடயங்களை மட்டுமே இது வர எடுத்து வருகிறது.

புதன், 3 ஜூன், 2015

ஏன் அதானி பங்குகள் ஒரே நாளில் 80% சரிந்தது?

நேற்று மட்டும் அதானி பங்குகள் ஒரே நாளில் 80% சரிந்தன. 574 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டிருந்த பங்கு 120 ரூபாயில் நாள் முடிவில் கீழ் இறங்கியது.

மைக்ரோமேக்ஸ் முதல் பத்து இடங்களுக்குள் வந்தது

இந்திய மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான மைக்ரோமேக்ஸ் உலக அளவில் முதல் பத்து இடங்களுக்குள் வந்துள்ளது.

பங்குச்சந்தையில் வெற்றிகளைக் குவிக்கும் ஒரு ரகசிய பேராசிரியர்

இந்திய பங்குச்சந்தையில் வெற்றிகளைக் குவித்தவர் என்று பார்க்கும் போது ராகேஷ் ஜூன்ஜூன்வாலா தான் நினைவுக்கு வருவார்.


ஆனால் அவரையும் தாண்டி சில மனிதர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள். சிலர் அவர்களாகவே மீடியா என்பதற்குள் வராமல் உள்ளனர்.



அதில் ஒருவர் தான் மாங்கேகர் என்ற கல்லூரி பேராசிரியர். இவரைப் பற்றிய பெரும்பாலான விவரங்கள் யாருக்கும் அவ்வளவாக தெரியாததால் Prof M என்றே சந்கேதத்தில் குறிப்பிடப்படுகிறார்.

இவர் 80களிலே சந்தையில் முதலீடு செய்ய ஆரம்பித்தாலும் 2003ல் தான் வெளிச்சத்துக்கு தெரிய வர ஆரம்பித்தார்.

செவ்வாய், 2 ஜூன், 2015

கடனுக்கான வட்டியைக் குறைத்த வங்கிகள்

நேற்று RBI வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டியைக் குறைத்தது.


அதனால் வங்கிகளும் நமக்கு தரும் கடன்களுக்கான வட்டியைக் குறைக்கும் வாய்ப்புகள் இருப்பது பற்றி கூறி இருந்தோம்.

பார்க்க:  ரிசர்வ் வங்கி வட்டியைக் குறைத்தாலும் கீழிறங்கிய சந்தை




இதன் தொடர்ச்சியாக நேற்று இரவே சில வங்கிகள் தங்களுக்கான வட்டி விகிதத்தைக் குறைத்து விட்டன.

ரிசர்வ் வங்கி வட்டியைக் குறைத்தாலும் கீழிறங்கிய சந்தை

இன்று ரிசர்வ் வங்கி பிற வங்கிகளுக்கு கொடுக்கும் கடன்களுக்கான வட்டியைக் குறைத்தது.

திங்கள், 1 ஜூன், 2015

ஐந்து லட்ச ரூபாய் தேவைக்கும் பங்குச்சந்தையில் நிதி திரட்டலாம்

சிறிய நிறுவனங்களும் பங்குச்சந்தையில் நிதி திரட்டும் பொருட்டு செபி சில ஏற்பாடுகளை செய்து இருந்தது. இதற்கு Alternative Capital Raising Platform என்று பெயர் கொடுத்து இருந்தார்கள்.


இதனைப் பற்றி மிக விரிவாக இங்கு எழுதி இருந்தோம்.
இனி சுயதொழில் செய்பவர்கள் பங்குச்சந்தையில் பணம் திரட்டலாம்



அதன் பிறகு இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி அவர்கள் இந்த அமைப்பிற்கு தலைவராக நியமிக்கப்பட்டார்.

அவர் பொறுப்பேற்ற பிறகு சில முக்கியமான மாற்றங்கள் இந்த நிதி திரட்டலில் செய்யப்பட்டு இருந்தன.

மே மாதத்தில் நல்ல வளர்ச்சி கண்ட உற்பத்தி துறை

கடந்த வாரம் வெளியான GDP தரவுகளில் உற்பத்தி துறை நல்ல வளர்ச்சி கண்டு இருந்ததாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

தட்டச்சு தெரிந்தால் இந்திய அரசின் பகுதி நேர வேலை வாய்ப்பு

இந்திய அரசின் டிஜிட்டல் இந்தியா கொள்கையின் கீழ் ஒரு வரவேற்கத்தக்க அறிவிப்பு வந்துள்ளது.