திங்கள், 30 டிசம்பர், 2013

புத்தாண்டு 2014 வாழ்த்துக்கள்!

நண்பர்களுக்கு எமது இதயங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!

உங்கள் பங்கு வர்த்தகம் மற்றும் முதலீடு மடங்குகளில் பெருகவும் எமது வாழ்த்துக்கள்!

பங்குச்சந்தையை 2014ல் எப்படி அணுகலாம்?-2

கடந்தப் பதிவில் 2014ல் பங்குச்சந்தை எப்படி இருக்கலாம் என்ற எமது அனுமானங்களை பதிவு செய்து இருந்தோம். அதன் அடுத்த பாகம் இங்கே தொடர்கிறது.

பங்குச்சந்தையை 2014ல் எப்படி அணுகலாம்?-1

இந்த கட்டுரையில் 2014ல் பங்குச்சந்தை எப்படி இருக்கலாம் என்ற எமது அனுமானங்களை பதிவு செய்கிறோம். எமது போர்ட்போலியோ போல் இதுவும் வாசகர்களுக்கு பயன்படும் என்று நினைக்கிறோம்.

ஞாயிறு, 29 டிசம்பர், 2013

இந்த பங்குகள் மீது ஒரு கண் வைத்துக் கொள்ளுங்கள்

கடந்த வாரத்தில் மத்திய அரசு எடுத்த சில முடிவுகள் சில பங்குகள் மீது நீண்ட கால நோக்கில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் திறன் உள்ளது. இதனை இங்கு பகிர்கிறோம்.

வியாழன், 26 டிசம்பர், 2013

பங்குசந்தையிலும் ஒரு பெரியார் புரட்சி தேவை

தற்பொழுது பங்குச்சந்தையில் ஜோதிடம்(Astrlogy) பார்த்து முதலீடு செய்யும் பழக்கம் அதிகரித்துக் கொண்டு வருகிறது. அதனைப் பற்றிய விமர்சனம் தான் இந்த கட்டுரை.

திரும்பிப் பார்க்கிறோம்! ஒரு லட்சம் கடந்த பொருளாதாரப் பதிவு,

நேற்று முன்தினம் எமது தளத்தில் இது வரை பார்க்கப்பட்ட பக்கங்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்தது. இந்த தருணத்தில் சில நிகழ்வுகளைத் திரும்பி பார்க்க விரும்புகிறோம்.

புதன், 25 டிசம்பர், 2013

வீட்டுக் கடன் அலைச்சலைக் குறைக்க ஒரு எளிய வழி

பல நேரங்களில் வங்கிக் கடன்கள் வாங்கும் போது அதிக அளவு அலைச்சல் ஏற்படுகிறது. இந்தக் கணனியுகத்தில் சில smart வழிகள் உள்ளன. அதனைப் பற்றி இந்த கட்டுரையில் விரிவாகப் பகிர்கிறோம்.

செவ்வாய், 24 டிசம்பர், 2013

சில டீல்களுடன் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!

நண்பர்களுக்கு எமது கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!

நாளை கிறிஸ்துமஸ் தினத்தை ஒட்டி சில இணையதளங்கள் சலுகைகள் வழங்கியுள்ளன. இதனை எமது வாசகர்களுக்காக இங்கு தொகுத்து உள்ளோம்.

திங்கள், 23 டிசம்பர், 2013

தலைமுறை இல்லாமல் தவிக்கும் இன்போசிஸ்

இந்த கட்டுரை 2013 ஆண்டு முழுவதும் பல பிரச்சனைகளில் உழன்று கொண்டு இருக்கும் இன்போசிஸ் நிறுவனத்தைப் பற்றியது. அதாவது ஒரு சரியான அடுத்த தலைமுறை கிடைக்காமல் தவித்து வருவதைப் பற்றியது.

சனி, 21 டிசம்பர், 2013

மியூச்சல் பண்ட் முதலீட்டில் சில தவறுகள் - 5

இந்த கட்டுரை எமது மியூச்சல் பண்ட் தொடரின் செயலாக்க கட்டுரையே.

முந்தைய பதிவுகளில் Mutual Fund அறிமுகம், நமக்கு எது தேவை?, சில சுய கேள்விகள், மியூச்சல் பண்ட்டை அளவிடுதல் என்று பல பிரிவுகளை பார்த்தோம்.

அதனை நிகழ் வாழ்வில் எப்படி பயன்படுத்துவது என்பதையும் சுருக்கமாக பார்ப்போம். இதனால் இந்த தொடரின் முதல் பாகத்தில் இருந்து படித்து வருவது அதிக பலனை தரும்.

பார்க்க: ம்யூச்சல் பண்ட் முதலீடுகளின் அறிமுகம் - 1




எமது நெருங்கிய நண்பர் ஒருவர் ஏஜென்ட் சொல் கேட்டு ஒரு மியூச்சல் பண்ட்டில் முதலீடு செய்தார். அதுவும் வருமான வரி கட்டுவதற்காக அவசரம் அவசரமாக செய்த ELSS முதலீடு.

அடுத்து மூன்று வருடம் கழித்து பார்த்தால் நெகடிவ் ரிடர்ன். நஷ்டத்தில் எடுக்க மனதில்லாமல் அடுத்து வருடம் வரை வைத்து பார்க்கலாம் என்றால் அதிலும் மீளவில்லை.

இவ்வளவிற்கும் அவர் படித்து ஐடி துறையில் இருப்பவர் தான். இணையம் எளிதில் கிடைக்கும் வசதிகள் உள்ளது. ஆனாலும் அந்த தவறிற்கு காரணம் என்று பார்த்தால் அவசரத்தில் தவறாக முதலீடு செய்தது, ஏஜென்ட் பேச்சை அப்படியே நம்பியது என்பது தான்.

பொதுவாக நமது ஊரில் பார்த்தால் நிதி மேலாண்மை செய்யும் ஏஜெண்ட்களுக்கு முதலீடு தொடர்பான ஆழ்ந்த அறிவு என்பது குறைவு தான். எந்த பாலிசி, முதலீடு என்றாலும் இவ்வளவு போட்டால் இரண்டு மடங்கு, மூன்று மடங்கு கிடைக்கும் என்ற பேராசை காட்டுவது தான் முதல் படி. அதில் பல பேர் விழுவார்கள்.

அது எப்படி நிலையான வருமானம் வரும்? என்று மேலும் கேள்வி கேட்டால் அதன் பின் மேல் உள்ள மேலாளரை காட்டுவார்கள். அவர் கொஞ்சம் புரிந்தும் புரியாமலும் விளக்கி எப்படியும் முதலீடு செய்ய வைத்து விடுவார்.

அதன் பின் நாம் முதலீடு செய்யும் வரை அவர்களுக்கு கமிஷன் கிடைத்துக் கொண்டு தான் இருக்கும். அது எத்தனை வருடங்கள் சென்றாலும் சரி தான்.அதனால் கமிஷன் அதிகம் தரும் மியூச்சல் பண்ட்களை தான் அதிகம் பரிந்துரை செய்வார்கள். அது நல்ல நிதியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அந்த நிதியின் முதலீட்டு காலம் முடியும் போது யாரும் திருப்பி கேட்க மாட்டோம் என்ற நம்பிக்கையும் அவர்களுக்கு இருக்கிறது.

எம்மிடம் கேட்டால் Mutual Fund ஒன்றும் ராக்கெட் அறிவியல் போன்று புரியாத ஒன்று அல்ல. பங்குச்சந்தைக்கு நேரடியாக போவதற்கு பதிலாக Mutual Fund ஒரு ஏஜென்ட் போன்று செயல்படுகிறது. அதற்கும் நாம் ஏஜென்ட் ஒருவரை வைத்துக் கொள்வது அவசியமற்றது.

அடுத்து அவசர அவசரமாக வருமான வரிக்காக அலுவலகத்தில் கேட்கும் போது முதலீடு செய்வது. அதிக தவறுகள் இதில் தான் வருகிறது. இதற்கு மாதந்தோறும் SIP முறையில் முதலீடு செய்து வரலாம். டிமேட் ஸ்டேட்மென்ட்களே அலுவலகத்தில் சமர்ப்பிக்க போதுமானது. வருமான வரி பலனும் கிடைத்து விடும்.

சில எளிய அடிப்படை வழிகளை கூறுகிறோம்.

மியூச்சல் பண்ட்டில் முதலீடு செய்தவர்களை பார்த்தால் மூன்று பிரிவினர் தான். கண்டிப்பாக இதில் ஏதாவது ஒன்றில் நாம் வந்திருவோம்.

ஒன்று, 
இளமை துள்ளல் கொண்ட இப்பொழுது தான் வேலை கிடைத்து முதலீட்டை ஆரம்பிப்பாவார்கள். இவர்களுக்கு குறைந்தது இன்னும் 30 வருடங்கள் வேலை பார்க்க அளவு நேரம் இருக்கிறது. அதனாக கொஞ்சம் அதிக ரிஸ்க் எடுக்கலாம். அதிக அளவு பங்குசந்தையில் முதலீடு செய்யப்படும் Equity Fund ஏற்றது. 20% அளவு வருட  ரிடர்ன் எதிர்பார்க்கலாம்.

இரண்டாவது,
35 வயதில் குடும்பம், குழந்தை என்று சுமைகளை சுமககும் நேரம். இந்த நேரத்தில் வருமானமும் தேவைப்படும். ஆனால் பெரிய அளவு ரிஸ்க் எடுக்க முடியாது. அவர்கள் Balanced Fund நிதியில் முதலீடு செய்யலாம். 15% அளவு ரிடர்ன் எதிர்பார்க்கலாம்.

மூன்றாவது,
50 வயது கடந்து பென்ஷன் அல்லது Fixed Deposit வட்டியை நம்பி இருப்பவர்கள். பெரிய அளவில் ரிஸ்க் எடுக்க முடியாது. இவர்கள் Debt Fund வகையில் முதலீடு செய்யலாம். வருடத்திற்கு 10% அளவு ரிட்டர்ன் எதிர்பார்க்கலாம்.

பார்க்க: 

எந்த நிறுவனம்?


அடுத்து எந்த நிறுவனத்தை தேர்ந்தெடுக்க என்று. கேட்டால் பெரிய வங்கி துறை சார்ந்த SBI, HDFC, Axis Bank போன்றவற்றின் நிதிகளை தேர்ந்தெடுப்பது நல்லது. 

மற்ற மியூச்சல் பண்ட் நிறுவனங்களை பொறுத்தவரை ஏதேனும் சூழ்நிலையில் நிறுவனத்தையே விற்று விடுகிறார்கள். அதன் பின் வேறொரு பண்ட்டில் இணைக்கிறார்கள். நிர்வாக சிக்கலும் ஏற்படுகிறது. இங்கு தான் முதலீடு செய்ய வேண்டும் என்று ஒரு நிபந்தனையும் ஏற்பட்டு விடுகிறது.

எந்த மியூச்சல் பண்ட்?

இறுதியாக இந்த கட்டத்தில் வரும் போது குறைந்த பட்சம் உங்கள் மியூச்சல் பண்ட் பட்டியல் ஐந்து என்ற எண்ணிக்கையில் சுருங்கி இருக்கும். இதில் எந்த முதலீடும் ஓரளவு பாதுகாப்பானதாக இருக்கும்.

ஆனாலும் அதில் ஒன்றை தேர்ந்தெடுக்க மியூச்சல் பண்ட்டை அளவிடுவது எப்படி?  -4 என்ற கட்டுரையை படியுங்கள். அதில் பல டெக்னிக்கல் தகவல்கள் விரிவாக விளக்கப்பட்டு இருக்கும்.

என்ன தான் தியரி போன்று விளக்கினாலும் அனுபவமாக எதுவும் வராது. அதனால் ஒரு சிறிய தொகையில் நீங்களே ஒரு நிதியை மேற் சொன்ன அடிப்படைகளை வைத்து தேர்ந்தெடுங்கள். MoneyControl தளத்தில் சென்று மியூச்சல் பண்ட் பட்டியலை முழுவதுமாக பார்க்க முடியும்.

அதன் பின் Paper Investing முறையில் ரிடர்ன் மற்றும் தவறுகளை குறித்து வரலாம். அதனை அடுத்து வரும் முதலீடுகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். 

இந்த தொடரின் அணைத்து பாகங்களையும் E-Book வடிவில் பின்னர் பகிர்கிறோம். ஈமெயில் வழியாக இணைந்து இருங்கள்.


மியூச்சல் பண்ட்டை அளவிடுவது எப்படி? -4

(14-07-2020 அன்று மீள்பதிவு செய்யப்பட்டது)

மியூச்சல் பண்ட் தொடரின் கடந்த பாகங்களில் எந்த பிரிவு மியூச்சல் பண்ட் நமககு உகந்தது? என்பதை முடிவு செய்வது பற்றி எழுதி இருந்தோம்.

பார்க்க: மியூச்சல் பண்ட் முதலீட்டிற்கு சில சுய கேள்விகள் - 3

தற்பொழுது எந்த பிரிவு நமக்கு தேவை என்று முடிவு செய்யப்பட்டதால் சந்தையில் இருக்கும் 200 மியூச்சல் பண்ட்களில் 20 நிதிகளாக பில்டர் செய்யப்பட்டு இருக்கும். அதில் ஒன்றை தேர்ந்தெடுப்பது எப்படி? என்பதனை பார்ப்போம். அதற்கு தனிப்பட்ட நிதிகளை எவ்வாறு அளவிடுவது என்பது பற்றி தெரிந்திருத்தல் நலம்.



நடத்தும் நிறுவனம்?


எந்த நிறுவனம் அந்த மியூச்சல் பண்டை நடத்துகிறது என்பதை முதலில் கவனிக்க வேண்டும். பொதுவாக Mutual Fund முதலீடுகள் என்பது ஐந்து வருடங்கள், பத்து வருடங்கள் என்று நீண்ட காலத்திற்கு முதலீடு செய்யப்படும் வகையாகும்.

அந்த சூழ்நிலையில் அந்த நிதியை நடத்தும் நிறுவனங்கள் நன்றாக இருப்பதும் அவசியமாகும். அண்மையில் கூட பிரபலமான Franklin Templeton நிறுவனத்தின் நிதிகள் நிறுத்தி வைக்கப்பட்டு எப்பொழுது முதலீடு செய்த பணம் கிடைக்கும் என்ற நிலையும் வந்தது.

பார்க்க:
மியூச்சல் பண்ட்களுக்கும் வரும் ஆபத்து 
சஹாரா ம்யூச்சல் பண்ட் அங்கீகாரம் ரத்து செய்யப்படுகிறது

அதனால் மியூச்சல் பண்ட் சார்ந்து இருக்கும் நிறுவனம் குறைந்தபட்சம் கடந்த பத்து வருடங்களில் இந்த மாதிரியான பிரச்சினைகளில் சிக்காமல் இருத்தல் அவசியம்.

வெள்ளி, 20 டிசம்பர், 2013

SBI, HDFC வீட்டுக்கடன் வட்டி குறைக்கப்பட்டுள்ளது

இந்த மாதத்தில் RBI வங்கிகளுக்கான Repo Rate, Reverse Repo Rate என்று எதிலும் மாற்றம் செய்யவில்லை.

வியாழன், 19 டிசம்பர், 2013

இது காமெடி டைம்...

எப்பவும் பொருளாதாரம் என்று நமது பதிவுகளைப் பார்த்து போரடித்துப் போன வாசகர்களுக்கு ஒரு சின்ன காமெடி ப்ரேக்..

புதன், 18 டிசம்பர், 2013

உலக அரங்கில் கேலியாகும் இந்திய அரசின் நியாயம்

கடந்த சில நாட்களாக தேவயானி பிரச்சினையை படிக்காமல் விட்டு விட்டேன். இன்றைக்கு தினமலர் பார்த்தால் நம்ம சல்மான் குர்ஷீத் தேவயானியை மீட்காமல் நாடாளுமன்றத்தில் கால் வைக்க மாட்டேன் என்கிறார்.

செவ்வாய், 17 டிசம்பர், 2013

இந்திய நுகர்வோரைக் குறிவைக்கும் அந்நிய நிறுவனங்கள்(GSK Offer)

GlaxoSmithkline Pharmaceuticals என்ற நிறுவனம் சந்தையில் தமது பங்குகளை 26% அதிகம் கொடுத்து வாங்குவதாக அறிவித்துள்ளது.

திங்கள், 16 டிசம்பர், 2013

அந்நிய முதலீடு வரையறையைத் தொட்ட HDFC

இன்று RBI அந்நிய முதலீட்டார்கள் HDFC வங்கி பங்குகளை வாங்குவதற்கு கட்டுப்பாடு விதித்தது.

டிமேட் கணக்கு எவ்வாறு ஆரம்பிக்க?(ப.ஆ- 6)

கடந்தப் பதிவில் டிமேட் கணக்கை எப்படிப் பயன்படுத்துவது? (ப.ஆ - 5) என்பது பற்றி எழுதி இருந்தோம்.

சில நண்பர்கள் டிமேட் கணக்கு ஆரம்பிப்பது எப்படி என்று கேட்டு இருந்தார்கள்.

சனி, 14 டிசம்பர், 2013

ஒரு விவசாயியின் அனுபவம்

இந்த கட்டுரை விவசாயிகளின் அவல நிலையை உண்மையான தகவல்களுடன் மிக எளிமையாக கூறுகிறது. நன்றி அமுதா, முகநூல்

வெள்ளி, 13 டிசம்பர், 2013

ஊழியர்களை வைத்து விளையாடும் நோக்கியா

சென்னை நோக்கியா நிறுவனத்தின் வரி ஏய்ப்பு விவகாரத்தில் இந்திய அரசு திணறி வருகிறது.

வியாழன், 12 டிசம்பர், 2013

டிமேட் கணக்கை எப்படிப் பயன்படுத்துவது? (ப.ஆ - 5)

பங்குச்சந்தை ஆரம்பம் தொடரின் இந்த பாகத்தில் நடைமுறையில் டிமேட் கணக்கை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதைப் பற்றி பார்ப்போம்.

புதன், 11 டிசம்பர், 2013

சென்செக்ஸ் கீழே செல்கிறது. என்ன செய்வது?

இன்று சென்செக்ஸ் மீண்டும் 21000 புள்ளிகளுக்கு கீழே வந்து கொண்டு இருக்கிறது. இருபதாயிரத்தையும் தொடலாம் என்கிறார்கள். இந்த சமயத்தில் நீண்ட கால முதலீட்டாளர்கள் என்ன செய்வது?

இணைய வணிக திருவிழா (Great Online Shopping Festival )

டிசம்பர் மாதம் 11, 12, 13 தினங்களில் இணைய வணிக தளங்களின் பண்டிகை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு சில இணையதளங்கள் கவர்ச்சிகரமான சலுகைகள் வழங்கியுள்ளன.

கோல் இந்தியா நிறுவனத்துக்கு 1773 கோடி அபராதம்

தரமற்ற நிலக்கரியை சப்ளை செய்ததற்காக COAL INDIA நிறுவனத்துக்கு 1773 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 10 டிசம்பர், 2013

22% லாபத்தில் REVMUTHAL போர்ட்போலியோ

' REVMUTHAL' போர்ட்போலியோ நேற்றைய நிலவரப்படி 22% லாபம் கொடுத்துள்ளது. இது சராசரியாக மூன்று மாதங்களில் கிடைத்த லாபம் ஆகும்.

வரிவிலக்கு போனதால் சரிவை சந்தித்த NTPC

பொதுத்துறை மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட வரி சலுகை நீக்க சொல்லி பரிந்துரைக்கப்பட்டதால் இன்று NTPC பங்குகள் 10% சரிவை சந்தித்தன.

திங்கள், 9 டிசம்பர், 2013

3 மாதத்தில் 67% லாபம் கொடுத்த ASHAPURA

எமது போர்ட்போலியோவில் ASHAPURA MINECHEM என்ற நிறுவனத்தை 40 ரூபாய்க்கு பரிந்துரை செய்து இருந்தோம். இன்று இந்த பங்கின் மதிப்பு 67 ரூபாயைத் தாண்டியுள்ளது. இதனால் நமக்கு கிடைத்த லாபம் 67%. இது மூன்று மாதங்களில் கிடைத்துள்ளது.

ஞாயிறு, 8 டிசம்பர், 2013

டெல்லிக்கு ஒரு சலாம்

மது, பிரியாணி இல்லை. ஓட்டுக்கு பணம் இல்லை, ஆனாலும் டெல்லி தேர்தலில் இரண்டு பெரிய சக்திகளை எதிர்த்து ஒரு நல்ல வெற்றியை ஆம் ஆத்மி கட்சி பெற்றுள்ளது. அந்த வெற்றியை கொடுதததற்க்காக டெல்லி மக்களுக்கு ஒரு சலாம் போடலாம்.

இன்று பங்குச்சந்தையில் வேடிக்கை மட்டும் பார்ப்போம்.

இன்று பங்குச்சந்தை பிஜேபி பெற்ற மாநிலத் தேர்தல்கள் வெற்றியால் பங்குச்சந்தை உணர்ச்சிவசப்பட்டு அதிக உயரம் செல்ல வாய்ப்புள்ளது.

சனி, 7 டிசம்பர், 2013

PFC FPOக்கு 5 மடங்கு அதிக விண்ணப்பம்

PFC நிறுவனத்தின் FPO Offer 5 மடங்கு அளவு அதிகமாக வாங்க முதலீட்டார்கள் ஆர்வம் காட்டியதால் சந்தையில் நேற்று 2.5% பங்கு விலை அதிகரித்தது.

வெள்ளி, 6 டிசம்பர், 2013

50% லாபம் கொடுத்த Finolex பங்கு

நமது போர்ட் போலியோவில் "FINOLEX CABLES" என்ற பொறியியல் நிறுவனத்தை பரிந்துரைத்து இருந்தோம்.

மேலும் விவரங்களுக்கு இங்கு பார்க்க :

இந்த நிறுவனம் 52 ரூபாய்க்கு பரிந்துரைக்கப்பட்டது. தற்போது 78 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. அதாவது நமக்கு இரண்டு மாதங்களில் 50% லாபம் கொடுத்து உள்ளது.

40% சலுகை விலையில் GATE தேர்வு புத்தகங்கள்

இந்த வாரத்திற்கான ஹாட் டீல்..

அமேசான் தளத்தில் பொறியியல் மேற்படிப்பு தொடர்பான GATE புத்தகங்கள் 40% சலுகை விலையில் கிடைக்கின்றது.

வியாழன், 5 டிசம்பர், 2013

ஏன் கெயிலுக்கு வேற வழியே இல்லையா?

இந்த கட்டுரை கெயில் என்ற மத்திய அரசு நிறுவனம் எந்த அளவுக்கு மக்களிடம் இருந்து வலுக்கட்டாயமாக விவசாய நிலங்களைப் பிடுங்க முயலுகிறது என்பதைப் பற்றியது.

கருத்துக் கணிப்புக்கே துள்ளிக் குதித்த பங்குச்சந்தை

இன்றைய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் ஒரு கட்டத்தில் 350 புள்ளிகள் வரை அதிகரித்து இறுதியில் 250 புள்ளி உயர்வில் நிலை நின்றது. நிப்டி 80 புள்ளிகள் வரை அதிகரித்தது.

புதன், 4 டிசம்பர், 2013

வீட்டு கடன் வட்டியை அதிகரித்த HDFC வங்கி

HDFC வங்கியில் வீட்டு கடன் திட்டமிடுபவர்களுக்காக இந்த பகிர்வு. HDFC வங்கி தனது வீட்டுக் கடன் வட்டியை 0.10% அதிகப்படுத்தி உள்ளது.

18% லாப வளர்ச்சி கண்ட Abbott India

நமது போர்ட் போலியோவில் "ABBOTT INDIA" என்ற மருந்து நிறுவனத்தை பரிந்துரைத்து இருந்தோம்.

மேலும் விவரங்களுக்கு இங்கு பார்க்க :
இந்திய ஊட்டச்சத்து மருந்து சந்தையை பிடிக்கும் Abbott

திங்கள், 2 டிசம்பர், 2013

பங்குச்சந்தையில் பங்குகளை எப்படி வாங்குவது? (ப.ஆ - 4)

பங்குச்சந்தை ஆரம்பம் தொடரின்  நான்காம் பகுதி இது.

இந்த பதிவை  'பங்குச்சந்தை ஆரம்பம்' தொடரின் சரியான தொடர்ச்சிக்காக அடுத்த சில பதிவுகளில் தான் எழுதுவதாக இருந்தோம்.

ஞாயிறு, 1 டிசம்பர், 2013

ஜான் கெர்ரி என்ன இந்தியாவின் வெளியறவு அமைச்சரா?

எமது தளத்தில் டாலர் வலுவடையக் காரணமான petrodollar முறை பற்றியும், ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்தியாவின் அந்நிய செலாவணியைப் பெரிதாக குறைக்கலாம் என்பது பற்றியும் விரிவான கட்டுரைகள் எழுதி இருந்தோம்.