செவ்வாய், 30 ஜூலை, 2019

பொருளாதார மந்த நிலையை நோக்கி இந்தியா?

எமது கடந்த சில பதிவுகளை பார்க்கும் போது ஒரு வித எதிர்மறை நிலைத்தன்மையை கண்டு இருக்கலாம்.


ஒரு விதமாக இலை மறை காயாக சந்தையின் தன்மையை உணர்த்த பயன்பட்டிருக்கும் என்று நம்புகிறோம்.



கடந்த ஒரு மாத காலமாக பார்த்தால் சந்தையில் ஒரு வித நிசப்தத்தை பார்க்க முடிகிறது.

அரசிடம் இருந்து எந்த வித கவர்ச்சி அறிவிப்புகளும் காணோம்.

பட்ஜெட்டும் ஒரு உப்பு சப்பில்லாத பட்ஜெட் என்பதோடு மட்டுமில்லாமல் ஏகப்பட்ட புதிய வரிகளையும் கொண்டிருந்தது.

புதன், 17 ஜூலை, 2019

YES Bank முடிவுகளை எவ்வாறு அணுகுவது?

இன்று பங்குச்சந்தை முடிவிற்கு பின்னர் YES Bank நிறுவன நிதி முடிவுகள் அறிவிக்கப்பட்டது.


இன்றைய முடிவு மிகவும் எதிர்பார்க்கப்பட்டதாக அமைந்தது.



ஏனென்றால் இதற்கு முன்னர் சிஇஒவாக இருந்த ரானா கபூர் பண்ணிய தகிடுத்தன வேலைகள் ஏராளம்.

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு வித போலி நிதி அறிக்கையே வெளிவந்தது போல.

ஒரு பக்கம் வங்கி வருடத்திற்கு 40% அளவு வளர்ச்சி அடைந்து வந்தது.

புதன், 10 ஜூலை, 2019

வலுவில்லாமல் சரியும் சந்தை, என்ன செய்வது?

நண்பர்கள் பலர் முன்பு போல் எமது பங்கு பரிந்துரை போர்ட்போலியோ சேவை ஏன் கொடுப்பதில்லை? என்று கேட்டு இருந்தனர்.


கடந்த ஒன்பது மாதாங்களுக்கு மேலாக முற்றிலும் நிறுத்தி வைத்து இருந்தோம்.



காரணம் இது தான்.

இந்திய சந்தை ஒரு அடிப்படை இல்லாத சந்தையாக மாறி வருவது போல் ஒரு சந்தேகம் இருந்து வந்தது.

எமது பங்குச்சந்தை அனுபவத்தில் இந்த அளவிற்கு நிறுவனங்கள் திவாலானதை கண்டதில்லை.

வெள்ளி, 5 ஜூலை, 2019

இந்த பட்ஜெட்டிற்கு காவல் எதுக்கு?

என்ன தான் அரசியல் கவர்ச்சிகள் உருவாக்கப்பட்டாலும், மக்களின் வாங்கும் வசதி கூடவில்லை. நிருவனங்களும் பெரிய அளவில் வளர்ச்சி காணவில்லை. வேலை வாய்ப்புகளும் இல்லை.


இதனால் தான் மோடியின் பெரிய வெற்றியை கூட சந்தை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.



தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் சந்தை அதிகம் எதிர்பார்த்து இருந்தது நிர்மலா சீதாராமனின் இன்றைய பட்ஜெட் தான்.

ஏற்கனவே தேர்தலுக்கு முன்பு ப்யூஸ் கோயல் ஒரு தேர்தல் கவர்ச்சி பட்ஜெட்டை தாக்கல் செய்து விட்டதால் நிர்மலா அவர்களுக்கு பெரிதளவு வேலை இல்லாமல் பொய் விட்டது.

சந்தை எதிர்பார்த்த அளவிற்கு பெரிதாக ஒன்றும் இல்லை.