சனி, 23 மே, 2020

EMI தவிர்ப்பது யாருக்கு லாபம்?

கொரோனா வந்த பிறகு ரிசர்வ் வங்கி கடன்களில் EMI கட்டுபவர்களுக்கு ஒரு கரிசனம் காட்டியது. அதாவது மூன்று மாதங்கள் EMI கட்டுவதை தவிர்க்கலாம்.

தற்போதும் நிலைமையில் முன்னேற்றம் இல்லாததால் மீண்டும் மூன்று மாதங்களுக்கு நீட்டி உள்ளது.



நேற்றைய RBI கூட்டத்தில் கவர்னர் அறிவித்துள்ளார்.

முன்பை விட நிறைய நண்பர்கள் பயன்படுத்துவார்கள் என்று இனி எதிர்பார்க்கப்படுகிறது.

அரசானது கொரோனா காலத்தில் நிறுவனங்கள் கட்டாயம் ஊதியம் கொடுக்க வேண்டும் என்ற அரசாணையை திரும்ப பெற்று விட்டது. அதனால் வரும் மாதங்களில் நிறுவனங்கள் நெருக்கடி இல்லாமலே ஆட்குறைப்பு செய்யவும் வாய்ப்பு உள்ளது.

அந்த சூழ்நிலையில் நண்பர்கள் இந்த  EMI தவிர்ப்பு லாபமா? என்பதை தெரிந்து கொள்வதும் அவசியமாகிறது.

வியாழன், 21 மே, 2020

பங்குச்சந்தைக்கு கொடுக்கப்படும் செயற்கை ஊட்டம்

நேற்று முதல் சந்தை பச்சை வண்ணத்திற்கு திரும்பி உள்ளது.

ஏதேனும் சாதகமான சூழ்நிலைகள் திரும்பி விட்டதா என்று பார்த்தால் ஒன்றுமில்லை.



நிர்மலாஜி 20 லட்சம் கோடி தந்த போது கூட சந்தை இப்படி துள்ளி குதிக்கவில்லை. சிறிது உயர்ந்து அப்புறம் கீழே வந்து விட்டது. எப்படியும் எதுவும் கொடுக்க போவதில்லை என்ற நம்பிக்கையும் இருந்து இருக்கலாம்.

ஆனாலும் தற்பொழுது சந்தை ஏன் உயருகிறது என்று உன்னிப்பாக கவனித்தால் செபி நேற்று கொண்டு வந்த ஒரு விதிமுறை கண்ணுக்கு வருகிறது.

ஞாயிறு, 17 மே, 2020

20 லட்சம் கோடிக்கு கணக்கு வந்தாச்சு..

மோடி சொன்ன பிறகு கொரோனா உதவி தொகை பற்றி அதிக பேச்சு எழுந்தது. பங்குசந்தையில் கூட உயர்வை எதிர்பார்த்தார்கள். ஆனால் வெறும் 200 புள்ளிகள் உயர்வை மட்டும் பார்த்தது. அதன் பிறகு மேலும் கீழே வந்து விட்டது.

நண்பர்கள் கூட இது தொடர்பாக கட்டுரை எழுத கேட்டு இருந்தார்கள். அதனால் வெள்ளியன்றே எழுத வேண்டிய கட்டுரை. ஆனால் புரியாமல் இருந்ததால் என்ன எழுதவென்றே தெரியவில்லை. சரி மூன்று நாளும் உட்கார்ந்து கேட்போம் என்று இருந்தோம். அது நான்கு நாளானது. இன்று ஐந்தாவது நாளோடு வில்லிசை முடிந்தது.



இறுதியில் நிர்மலாஜி ஒரு புன் முறுவலோடு நீங்கள் கேட்ட 20 லட்சம் கோடிக்கு கணக்கு கொடுக்குறேன் என்று சொல்லிய போது அவர்களுக்கே மீம்ஸ் தாக்கம் புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

ஞாயிறு, 10 மே, 2020

அரசு கடன் பத்திரங்கள் எவ்வாறு செயல்படுகிறது?

நேற்று ஒரு செய்தியை பார்க்க நேரிட்டது.

டாஸ்மாக் வருமானத்தில்  தங்களுக்கும் பங்கு  வேண்டும் என்று மத்திய அரசின் வருமான வரித்துறை நீதி மன்றத்தில்  நீதியை நாடி இருக்கிறார்கள். அதிலும் கடந்த வருடத்தில் மட்டும் 14,000 கோடி ரூபாய் அளவு தர வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள்.



தமிழக அரசே பல பேர் ஏச்சு, பேச்சுக்களை கடந்து டாஸ்மாக்கை திறந்தால் அதற்கும் தடை வாங்கி வைத்துள்ளார்கள். இதில் மத்திய அரசுக்கும் பங்கு கொடுக்க வேண்டும் என்றால் பிச்சை எடுத்த பெருமாளிடம் திருடி தின்னும் அனுமார் கதை தான்.

புதன், 6 மே, 2020

வருமானத்திற்கு குறுக்கு வழியை நாடும் மாநில அரசுகள்

கடந்த ஏப்ரல் மாதம் டெல்லி அரசுக்கு 3500 கோடி அளவு வரும் வருவாய் 300 கோடியாக குறைந்துள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் கூறி உள்ளார். பல மாநிலங்களுக்கும் கிட்டத்தட்ட இதே நிலை தான்.

GST கொண்டு வரப்பட்ட பிறகு மாநிலங்களின் கையில் இருக்கும் வருவாய் என்பது மதுவும், பெட்ரோலும் தான். மீதி எல்லாமே மத்திய அரசின் கைக்கு சென்று விட்டது.



வெள்ளி, 1 மே, 2020

நிச்சயமற்ற நிலையும், முதலீடுகளும்

நேற்று சந்தை மீண்டும் ஏற்றத்தை கண்டது. வாய்ப்பை விட்டு விட்டோம் என்று தோன்றி இருக்கலாம். அதனால் பல நண்பர்களிடம்  முதலீடு செய்யலாமா? என்ற கேள்வியை பார்க்க முடிந்தது.

இந்த வாரம் முழுவதும் சந்தை உயர்ந்தாலும் அதற்கான ஒரு நேர்மறை காரணியை உருப்படியாக சொல்ல முடியாது என்பது தான் நிதர்சனம்.



கச்சா எண்ணெய் விலை இந்த அளவிற்கு எதிர்மறை நிலையில் செல்லும் என்று யாரும் கனவில் கூட நினைத்து இருக்க முடியாது.