வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

உறுதிப்படுத்தப்பட்ட வீழ்ச்சி

கடந்த வெள்ளியன்று நிர்மலா சீதாராமன் அவர்கள் கொடுத்த பேட்டி காரணமாக மேலே சென்ற சந்தை இன்று காலை மீண்டும் பழைய நிலைக்கு வந்தது.


மீண்டும், இன்று வெள்ளி மாலை அடுத்த பேட்டி என்று அறிவிப்பு வந்தது.



இதையடுத்து மீண்டும் கடந்த வெள்ளி மாலை நிலையான 11000 நிப்டி புள்ளிகளுக்கும் மேல் சென்றது.

ட்ரேடர்களுக்கு கொண்டாட்டம் தான்.

செய்தி அடிப்படையில் கண்ணா பின்னா என்று மாற்றங்களை காணும் சந்தையில் பணம் பண்ணும் நேரம் அவர்களுக்கு.

திங்கள், 26 ஆகஸ்ட், 2019

சில செயற்கை மாயைகள்

ஒரு மாதத்திற்கு முன்பு பழமை வாய்ந்த HDFC வங்கி முதல் பார்லி பிஸ்கட் நிறுவனங்கள் வரை பொருளாதரத்தில் எதோ நடக்கிறது என்று சொல்லி வந்தன.


திடீர் என்று கடந்த வெள்ளியன்று HDFC வங்கி அப்படி எல்லாம் பொருளாதார தேக்கத்தை பார்க்கவில்லையே என்றது.



அதன் தொடர்ச்சியாக பார்லி பிஸ்கட் நாங்கள் 10000 ஆட்களை வேலையை விட்டு தூக்குவதாக சொல்லவில்லையே என்று சொல்லியது.

அதே நாள் முடிவில் சீதாராமன் பிரஸ் கூட்டத்தை வைத்து இருந்தார். இப்படி தொடர்ச்சியாக எல்லாம் திட்ட்மிடுதலாகவே தோன்றியது.

அவர் சொன்னவற்றில் முக்கியம்சம் இது தான்.

வியாழன், 22 ஆகஸ்ட், 2019

நேர்மையை நம்ப மறுக்கும் நிறுவனங்கள்

இன்று எமது நெருங்கிய நண்பர் அவர்கள் தாம் முதலீடு செய்த ஒரு நிறுவனத்தின் பங்குகளை விற்க முடியாமல் இருக்கும் நிலையை கவனத்திற்கு கொண்டு வந்தார்.


என்னவென்று பார்த்தால், அந்த நிறுவனம் கடந்த வருடமே NCLT மன்றத்திற்கு சென்று திவாலான நிலைக்கு சென்று விட்டது.



தற்போது ட்ரேடிங்கும் நிறுத்தப்பட்டது.

நிறுவனத்திடம் இருக்கும் சொத்தை கடனில் கழித்து பார்த்தால் எதிர்மறையிலே செல்கிறது.

அதனால் அந்த நிறுவனத்தின் பங்குகள் மதிப்பில்லாதவை என்றே கருத வேண்டியுள்ளது.

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2019

அரசு நிதி உதவியை மட்டும் நம்பும் சந்தை

எமது கடந்த சில பதிவுகள் தமிழ் முதலீட்டாளர்களுக்கு சந்தை மேலே வரும் போது வெளியே வருவதற்கு உதவி இருக்கும் என்று நம்புகிறோம்.


அடுத்த கட்டம் என்னவென்று பார்த்தால், எல்லோர் முகத்திலும் குழப்பம் தான்...



தற்போதைய நிலையில் சந்தை ஒன்றை மட்டுமே நம்பியுள்ளது. மற்ற எல்லாமே கவலை தரும் விடயங்கள் தான்.

அந்த நம்பிக்கை, பொருளாதார தேக்கம் நீங்க அரசு என்ன செய்யும்? என்பது தான்.

செவ்வாய், 6 ஆகஸ்ட், 2019

ஏற,ஏற அடி வாங்கும் சந்தை

எமது கடந்த பதிவில் திசை மாற்றும் பிரச்சினைகள் என்ற தலைப்பில் காஷ்மீர் தொடர்பாக எழுதி இருந்தோம்.


இதற்கு ஆதரவும், எதிர்த்தும் சரி சம விகிதத்தில் இருந்தன.



ஒரு சிறு தன்னிலை விளக்கம்.

இந்த தளம் அரசியல் தளமல்ல. நாமும் எந்த கட்சியை சார்தவருமல்ல. பொருளாதார, முதலீடுகள் தொடர்பான தகவல்களை தருவது தான் எமது நோக்கம்.

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2019

திசை மாறும் பிரச்சினைகள்

இந்தியாவின் தற்போதைய நிலையில் உண்மை பிரச்சினை என்பதே வேறு.


பிஜேபி அரசு அதனை வேறு கோணத்தில் எடுத்து செல்ல ஆரம்பித்து உள்ளது.



பாகிஸ்தான் பிரதமர் சிக்கன நடவடிக்கையாக பொது விமானத்தில் பயணித்து தான் அமெரிக்கா சென்று உள்ளார்.

அந்த அளவிற்கு பாகிஸ்தானில் நிதி நெருக்கடி.

இந்த நிலையில் பாகிஸ்தானுடன் மோதுவது என்பது அடி பட்ட பாம்பை அடிப்பது போல் தான்.