வெள்ளி, 14 ஆகஸ்ட், 2020

ரியல் எஸ்டேட் REIT பங்குகளில் முதலீடு செய்யலாமா?

கடந்த வருடமே  REIT வழியில் நிறைய ஐபிஓக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அது பற்றி நிறைய சந்தேகங்கள் வந்து கொண்டிருப்பதால் எழுதுகிறோம்.

REIT என்பது Real Estate Investment Trust என்பதன் சுருக்கம்.

கடந்த 2019ம் ஆண்டு ரியல் எஸ்டேட்டில் நிலவி வரும் மந்த நிலையை போக்குவதற்காக REIT கொள்கை மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.


கடந்த ஐந்து ஆண்டுகளாக ரியல் எஸ்டேட்டில் Liquidity என்பது மிகவும் சுருங்கி போனது. எதிர்பார்த்த அளவு மாநகரங்களில் பிளாட்கள் விற்கவில்லை. இதனால் பணப்புழக்கம் குறைந்து பல அபார்ட்மெண்ட் ப்ராஜெக்ட்கள் அந்தரத்தில் தான் நிற்கின்றன. இதே நிலை தான் கம்ர்சியல் ப்ரொஜெக்ட்களிலும் நீடிக்கிறது.

ரியல் எஸ்டேட் மக்கள் வாங்க முடியாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் அதன் விலை தான். 


செவ்வாய், 11 ஆகஸ்ட், 2020

2G இல்லாத இந்தியாவும், வஞ்சக எண்ணமும்

கடந்த சில நாட்களுக்கு முன்பு முகேஷ் அம்பானி டெலிகாம் துறை தொடங்கப்பட்ட 25வது வருட மாநாட்டில் முக்கியமான வார்த்தைகளை உதிர்த்துள்ளார்.

அதாவது 2G இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பது தான் அது. வறுமை இல்லாத இந்தியா, போலியோ இல்லாத இந்தியா என்ற அரசியல் வாதிகளின் பொன்மொழி போன்று இது ஒரு புதிய பதம் தான்.


2G என்பது ஆரம்ப கட்டங்களில் NOKIA 1100 போன்ற Feature Phones வழியாக பேசும்  முறை தான். இன்னமும் இந்தியாவில் 35 கோடி மக்கள் பயன்படுத்துகிறார்கள்.

அதனை தான் ஒழிக்க வேண்டும் என்று கூறுகிறார்.

சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பதால் கொஞ்சம் பின்புலத்தையும் பார்ப்போம்.

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2020

இரண்டு செய்திகள், உயர்ந்த நிப்டி

நேற்று வரை நான்கு நாட்கள் இந்திய சந்தை கடுமையான வீழ்ச்சியில் தான் இருந்தது. ஒரு கட்டத்தில் 10,850 நிப்டி என்ற புள்ளிகளில் 200 நாள் சராசரியையும் தொட்டு வந்தது. ஆனால் அதில் கடுமையான தடை இருந்ததால் அதற்கு கீழ் செல்லவில்லை.

அதே நேரத்தில் INDIA VIX என்ற Volatility குறியீடும் 25 என்ற அளவில் கட்டுக்குள் இருந்ததால் இதற்கு கீழ் உடனே செல்லும் என்று தோன்றவில்லை.



ஆனால் மேலே ஏற்றி செல்லும் காரணிகளும் குறைவாகவே இருந்ததன. அதனால் சந்தை உடனே மேல் செல்வது கடினம் தான் என்று எண்ணிக் கொண்டிருந்தோம்.

இந்த நேரத்தில் இன்று காலை வந்த இரண்டு செய்திகள் இந்திய பங்குசந்தைகளை நல்ல அளவில் மேலே கொண்டு சென்றது.

வெள்ளி, 31 ஜூலை, 2020

தங்கம் விலை ஏன் உயர்கிறது?

கடந்த மூன்று மாதங்களாக தங்கத்தின் விலை உயர்வதை பார்த்தால் பாமர மக்கள் தங்கம் வாங்குவது என்பது எட்டா கனி தான்.

ஏன் இப்படி உயர்கிறது என்று தெரிந்து கொள்வது என்பதும் இந்த சூழ்நிலையில் அவசியமாகிறது.



தங்கத்தை பொறுத்தவரை, அட்சய  திருதி அன்று கூடும். தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் கூடும். முஹூர்த்த தினங்கள் இல்லாத ஆடி போன்ற மாதங்களில் குறையும் என்பது தான் பாமர சூழ்நிலையில் உள்ள பேச்சு வழக்குகள்.

அப்படி பார்த்தால் இந்த வருட ஆடி மாதம் தங்கம் விலை குறைந்து இருக்க வேண்டும். ஆனால் அதற்கு பதிலாக பல சதவீதங்கள் கணிசமாக கூடியுள்ளது.

உலக அளவில் தங்கம் 2 லட்சம் டன் அளவு தங்கம் தரைக்கு மேல் புழங்கி கொண்டிருக்கிறது. அதில் 20,000 டன் அளவு தங்கம் தான் இந்தியாவில் நகைகளாக இருக்கிறது. அதனால் நமது பங்களிப்பு என்பது உலக அளவில் இன்னும் குறைவு தான்.

வெள்ளி, 24 ஜூலை, 2020

ராபின்ஹூட் முதலீட்டாளர்கள் கவனமாக இருக்கும் தருணம்

தற்போதைய பங்குச்சந்தை உயர்விற்கு எமது முந்தைய சந்தேகத்தில் நிற்கும் சந்தை கட்டுரையில் Liquidity Driven Market என்பதையும் குறிப்பிட்டு இருந்தோம். 

அதன்படி பார்த்தாலும் கடந்த ஜூனில் நிகரமாக 2500 கோடி அளவு FIIகள் வாங்கியுள்ளனர். தற்போதைய ஜூலையில் நேற்று வரை 3500 கோடி அளவு FIIகள் வாங்கியுள்ளனர். 

Bull Market என்பதில் கடந்த கால வரலாற்றை ஒப்பிடுகையில் இது ஒன்றும் பெரிய தொகையல்ல. ஆனாலும் சந்தை ஏன் உயர்கிறது என்று பார்த்தால் அங்கு Robinhood Investors என்று சொல்லப்படும் புதிய முதலீட்டாளர்கள் வந்து நிற்கின்றனர்.



முதலில் Robinhood Investors யார் என்று பார்ப்போம்.

அமெரிக்காவை பொறுத்தவரை பங்குச்சந்தை முதலீடு என்பது மிகவும் காஸ்டிலியானது. ஆமாம். ஒரு 50$மதிப்புடைய பங்கு வாங்குவதற்கு 10$ புரோக்கர் கமிஷன் கொடுக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. நமது முதலீட்டில் 20% அளவு கமிஷனாக போகும் போது ஆரம்பத்திலே முதலீட்டின் ஒரு பகுதி சென்று விடுகிறது. அதனை மீட்டு எடுப்பதே ஒரு பெரிய வேலை.

இந்த சமயத்தில் தான் அமெரிக்காவில் 2014ம் வருடத்தில் Robinhood என்ற Stock Brokerage நிறுவனத்தை ஆரம்பித்தார்கள். இருப்பவர்களிடம் இருந்து  இல்லாதவர்களுக்கு கொடுப்பது தான் பிரபலமான ராபின்ஹூட் அவர்களது வேலை. அது போல் இந்த நிறுவனத்தில் Retail Investors என்ற சில்லறை முதலீட்டாளர்களுக்கு மலிவாக பங்கு வாங்கும் வசதியை உருவாக்குவதே இதன் முக்கிய நோக்கம். இந்தியாவில் நமது Zerodha புரோக்கர் நிறுவனத்திற்கு முன்னோடி என்றும் சொல்லி கொள்ளலாம். 


புதன், 22 ஜூலை, 2020

தோசை பொருளாதாரத்தில் குறையும் தோசைகள்

எப்பொழுதுமே ரிசர்வ் வங்கியில் கவர்னர்களாக இருப்பவர்களுக்கும், மத்திய அரசுக்கும் ஏழாம் பொருத்தம் தான்.

சுப்பா ராவ்,  ரகுராம் ராஜன், படேல் என்று தொடர்ந்து பல கவர்னர்களுக்கும் மத்திய அரசுக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தது.

இதில் மத்திய அரசு என்பது பிஜேபி, காங்கிரஸ் என்று இரண்டு அரசுகளையுமே குறிக்கும். சிதம்பரம் சுபபா ராவுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தார். தற்போதைய அரசு அடுத்த இருவர்களிடமும் மோதியது.



கருத்து வேறுபாடுகள் எங்கு வருகிறது என்றால் வட்டி குறைப்பில் தான் அதிகம் வரும். இது போக, பிஜேபி காலத்தில் ரிசர்வ் வங்கியிடம் இருக்கும் கையிருப்பு தொகையிலும் இருந்து வந்தது. 

இதற்காக தான் சக்தி காந்த் தாசையும் கொண்டு வந்தார்கள். ரிசர்வ் வங்கியின் அவசர காலத்திற்கு வைத்து இருந்த கையிருப்பு தொகையை வாங்கி செலவு செய்தார்கள். தற்போது அவசர காலத்தில் பெரிதளவு பணம் நம்மிடம் இல்லை என்பதையும் கவனிக்க.

இது போக, சக்தி காந்த் தாஸ் செய்தது என்னவென்றால் வங்கிகளின் Repo Rate என்பதை குறைத்து கொண்டே வந்தது தான். அதாவது ஒவ்வொரு கூட்டத்திற்கும் ஒரு கால் சதவீதமாவது குறைத்து விடுவார். தற்போது ரெபோ விகிதம் என்பது கடந்த 12 வருடங்களில் இல்லாத அளவு 4% குறைந்துள்ளது. 

வெள்ளி, 17 ஜூலை, 2020

ரயில்வே தனியார் மயமாக்கல் IRCTC பங்கை பாதிக்குமா?

நண்பர் தட்சிணா மூர்த்தி எமது muthaleedu@gmail.com முகவரிக்கு மெயில் அனுப்பி இருந்தார். ரயில்வே துறை வேகமாக தனியார் மயமாக்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் IRCTC பங்கை வைத்து இருக்கலாமா? என்று கேட்டு இருந்தார்.

சரியான கேள்வி என்றே பார்க்கிறோம்.



பொதுவாக வெளியில் இருந்து பார்க்கும் போது IRCTC பங்கிற்கு இந்த தனியார் மயமாக்கல் எதிர்மறை மாற்றமாகவே தோன்றும். ஆனால் உள்ளே சென்றால் கொஞ்சம் வித்தியாசமாகவே உள்ளது.

IRCTC IPOவாக வரும் போதே நாம் பரிந்துரை செய்து இருந்தோம். அதற்கு முக்கிய காரணமாக குறிப்பிட்டது இதன் monopoly தன்மை. ஒரு நிறுவனம் போட்டியே இல்லாமல் செயல்படுகிறது என்றால் அதுவே பாதி வெற்றி தான். பல நண்பர்களுக்கு ஏற்கனவே நல்ல ரிட்டர்ன் கொடுத்து இருக்கும் என்று நம்புகிறோம்.

வியாழன், 16 ஜூலை, 2020

மியூச்சல் பண்ட் தேர்ந்தெடுக்க சில அடிப்படைகள்


கூகுள் வோடாபோனில் முதலீடு செய்யுமா?  என்ற கட்டுரையில் இருக்கும் சாத்தியக்குறைவுகள் பற்றி எழுதி இருந்தோம். நேற்றைய ரிலையன்ஸ் AGM மீட்டிங்கில் முகேஷ் அம்பானி கூகிள் ஜியோவில் முதலீடு செய்யவிருப்பதாக அறிவித்தார். அதனால் வோடாபோனுக்கு இனி வாய்ப்பு இல்லை என்ற சூழ்நிலையில் இன்று வோடாபோன் பங்கும் 10% விலை குறைந்துள்ளது. 

எமது முந்தைய கட்டுரை வோடாபோன் முதலீட்டில் இருந்து நண்பர்கள் வெளியேற உதவியிருக்கும் என்று நம்புகிறோம். 

அண்மையில் நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது உங்கள் பழைய கட்டுரைகளை தேடி பிடித்து படிப்பது கடினமாக இருக்கிறது என்று கூறி இருந்தார்.

அதன் பிறகு தான் ஆயிரம் கட்டுரைகள் இந்த தளத்தில் இருக்கும் போது அதில் ஒன்றை தேர்ந்தெடுத்து படிப்பதில் இருப்பதன் கஷ்டத்தை புரிந்து கொண்டோம். 



இந்த தளத்தில் உள்ள 70%க்கும் மேற்பட்ட  கட்டுரைகள் பொதுவானது தான். அதாவது படிப்பினை கட்டுரைகள் தான். அதனால் சூழ்நிலை அல்லது தொடர்பான செய்திகள் வரும் போது மேற்கோள் காட்டி எழுதுகிறோம். 

இது போக, சில முக்கியமான கட்டுரைகளை தற்போதை சூழ்நிலைக்கு தக்கவாறு மீள்பதிவு செய்து எழுதி இருக்கிறோம். அதனையும் பகிர்கிறோம்.

அதில் ஒன்று மியூச்சல் பண்ட் தொடரில் இருக்கும் ஐந்து கட்டுரைகளும். 2013ல் மியூச்சல் பண்ட் தொடர்பாக ஒரு தொடரை எழுதி இருந்தோம். அந்த கட்டுரை பயனாக இருந்தது என்பதை அறிந்து கொண்டதால் தற்போதைய சூழ்நிலைககு ஏற்றவாறு மீண்டும் எழுதி இருக்கிறோம்.

திங்கள், 13 ஜூலை, 2020

Rossari Biotech IPO வை வாங்கலாமா?

நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு IPO வெளியீடு வந்துள்ளது. 

Rossari Biotech என்ற நிறுவனம் தனது IPO வெளியீட்டின் விண்ணப்பங்களை இன்று ஜூலை 13 முதல் பெற ஆரம்பித்துள்ளது. இதனை பற்றிய ஒரு விரிவான பார்வையை பார்க்கலாம்.



இந்த  நிறுவனம் மார்ச் மாதத்திலே IPOவிற்கான அறிவிப்பை வெளியீட்டு இருந்தது. ஆனால் கொரோனா பிரச்சினை காரணமாக IPO நிகழ்வை தள்ளி வைத்து இருந்தது. 

தற்போது கொரோனாவிற்கு பிறகு வெளிவரும் முதல் ஐபிஓவாகும். பங்குசந்தையில் 500 கோடி அளவு பணத்தை திரட்ட உள்ளது. இந்த பணம் நிறுவனத்தின் ப்ரோமோட்டர்களுக்கு செல்கிறது.

வெள்ளி, 10 ஜூலை, 2020

சந்தேகத்தில் நிற்கும் சந்தை

தற்போது இந்திய பங்குச்சந்தை 10800 NIFTY புள்ளிகளில் நின்று கொண்டு இருக்கிறது. டெக்னிகலாக இது ஒரு முக்கிய தடை புள்ளி என்று சொல்லலாம்.

கடந்த இரு வாரங்களாகவே NIFTY நிலையானது 10600 புள்ளிகள் முதல் 10800 புள்ளிகள் வரை ஊசலாடி கொண்டே தான் இருக்கிறது.



நிப்டியின் 200 DMA என்று சொல்லப்படும் 200 நாள் சராசரி நிலையான 10885 என்பது ஒரு முக்கியமான நிலையாகும். இதனை தாண்டும் போது மேலும் அதிக உயர்வை பார்க்கலாம்.

ஆனால் அந்த நிலையை தாண்டுவது எளிதல்ல என்பதையும் கவனிக்க வேண்டும்.

கடந்த ஜூன் மாதத்தில் ம்யூச்சல் பண்ட் முதலீடுகளில் இருந்து பெருமளவு பணம் எடுக்கப்பட்டுள்ளது. அப்படி என்றால் எங்கிருந்து பணம் வந்து கொண்டிருக்கிறது என்று பார்த்தால் Institution Investors என்ற பெரு முதலைகளிடம் இருந்து தான் வருகிறது.

செவ்வாய், 7 ஜூலை, 2020

Kisan Credit Card - விவசாய கடன்களுக்கு மாற்று வழி

கிராமப்புறங்களில் தங்க நகைகளுக்கான விவசாய கடன் என்பது பிரபலமான ஒன்று.

தங்க நகையை ஈடாக வைத்து எளிதில் விவசாய கடன் பெற்றுக் கொள்ள முடிந்தது. இதற்கான வட்டியில் பகுதியை மத்திய அரசு மானியமாக வங்கிகளுக்கு அளித்து வந்தது. இதனால் வட்டியும் 4% என்ற அளவிலே இருந்தது. 



அதிக பட்சம் மூன்று லட்சம் வரை கடனாக பெற்று கொள்ளலாம். ஒரு வருடத்திற்குள் திருப்பி செலுத்திக் கொள்ள வேண்டும்.

ஆனால் அண்மையில் மத்திய அரசு இந்த கடனுக்கான மானியத்தை நீக்கி விட்டது. இதனால் வட்டி என்பது வழக்கமான கடன் போல மீண்டும் 8~9% அளவிற்கு சென்று விட்டது.

வெள்ளி, 3 ஜூலை, 2020

எட்டாவது வருடத்தில் முதலீடு தளம் ...

நண்பர்களுக்கு வணக்கம்!

2013ல் ஆரம்பிக்கப்பட்ட முதலீடு தளம் இந்த ஜூலை மாதத்தில் எட்டாவது வருடத்தை ஆரம்பிக்கிறது. தங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி!



முதலில் muthaleedu.blogspot.com என்ற பெயரில் சிறு முயற்சியாக ஆரம்பிக்கப்பட்ட இந்த தளம் அதன் பின் Revmuthal.com என்று பெயரில் மாற்றம் செய்யப்பட்டது.

அதில் இருக்கும் உச்சரிப்பு பிரச்சினை காரணமாக இறுதியில் Muthaleedu.IN என்ற பெயரில் இயங்க ஆரம்பித்துள்ளது.

எல்லா மாற்றங்களிலும் வாசகர்கள் உடன் இருந்த காரணத்தால் வளர்ச்சி என்பதும் மாற்றம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது.

இது வரை 1015 பொருளாதாரம் மற்றும் முதலீடு சார்ந்த கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. அதனை 28 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகள் பார்க்கப்பட்டுள்ளன. அதில் 1071 கருத்துக்கள் பகிரப்பட்டுள்ளன.

அதே போல் 25,000க்கும் மேற்பட்ட நண்பர்கள் Facebook, Twitter, Email போன்றவற்றில் முதலீடு தளத்தை தொடர்ந்து வருகிறார்கள்.

PPக்கு VV சிக்கன் ஊட்டுவதை மில்லியன் கணக்கில் பார்க்கும் இந்த காலக்கட்டத்திலும் ஒரு பொருளாதாரம் சார்ந்த தளம் இவ்வளவு வரவேற்பு பெற்றதற்கு உங்கள் வாசிப்பு தரமும் ஒரு முக்கிய காரணம்.

செவ்வாய், 30 ஜூன், 2020

ஐந்து நிமிடங்களில் 18 லட்சம் இழந்த கதை

பங்குச்சந்தை என்பது மிக அதிக அளவில் லாபம் தரும் ஒரு முதலீடு தான். சரியான கணிப்பு இருந்தால் மற்ற எல்லா முதலீடுகளையும் விட அதிகம் லாபம் தருமிடம்.

2013ல் ஒரு கட்டுரையில் விப்ரோவில் ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து இருந்தால் இப்ப 43 கோடி என்ற தலைப்பில் எழுதி இருந்தோம்.

இந்த கட்டுரையானது நண்பர்களுக்கு மிக அதிக அளவில் பங்குச்சந்தையில் உற்சாகத்தை கொடுத்து இருந்ததை கருத்துக்கள் வாயிலாக அறிந்தோம்.



பங்குசந்தையில் நேர்மறையான லாபங்களை வெளியிடும் போது மற்றோரு பக்கமான நஷ்ட உதாரணங்களையும் பகிர்வது அவசியமாகிறது.

அந்த வகையில் இந்த கட்டுரையில் நண்பர் ஒருவர் ட்ரேடிங் முறையில் ஐந்தே நிமிடங்களில் 18 லட்சம் இழந்ததையும் பகிர்கிறோம்.

இந்த கட்டுரையை புரிந்து கொள்வதற்கு ஓரளவு Futures & Options பற்றிய புரிதலும் அவசியம். இது வரை இந்த முதலீடு தளத்தில் ட்ரேடிங் பற்றி விவரமாக எழுதியதில்லை. இனி எழுத முயற்சிக்கிறோம்.

வெள்ளி, 26 ஜூன், 2020

கொரோனாவால் ஒழியும் தமிழ் ஹீரோயிசம்

கொரோனா வரவால் பல தொழில் துறைகளில் மந்த நிலை நீடிக்கிறது. ஆனாலும் சில துறைகளில் சில வியாபாரத் தன்மையே மாற்ற செய்து இருக்கிறது. .

அதில் ஒன்று தான் சினிமா துறை. 



கொரோனா இரண்டாவது அலை, மூன்றாவது என்று இப்பொழுது இருக்கும் நிலைமையை பார்த்தால் இந்த வருடம் முழுவதும் தியேட்டர்கள், மால்கள் மூடப்பட்டாலும் ஆச்சர்யமில்லை.

இதன் தொடர்ச்சியாக தான் பொன்மகள் வந்தாள், பென்குயின் போன்ற திரைப்படங்கள் அமேசான் பிரைமில் வெளிவந்திருக்கிறது. எம்மை பொறுத்தவரை கதை களம் வலுவில்லாததால் படங்கள் ஓகே போன்று தான்.


செவ்வாய், 23 ஜூன், 2020

கூகுள் வோடாபோனில் முதலீடு செய்யுமா?

எமக்கு அண்மையில் நண்பர்களிடம் இருந்து கூகுள் நிறுவனம் வோடாபோனில்  முதலீடு செய்யுமா? என்று அதிக கேள்விகள் வந்திருந்தது.

இதே போல் எமது Quora பக்கத்திலும் கேள்விகள் வந்திருந்தது.இதன் தொடர்ச்சியான எமது பார்வையை இந்த கட்டுரையில் வைக்கிறோம்.

கடந்த மூன்று மாதங்களாக ரிலையன்ஸ் பங்கு சந்தையில் சக்கை போடு போட்டு வருகிறது. இதற்கு முழு முதற்காரணம் JIO நிறுவனத்தில் பேஸ்புக் செய்த முதலீடு தான்.



JIO நிறுவனமானது டெலிகாம் நிறுவனம் என்பதையும் தாண்டி ஒரு டிஜிட்டல் நிறுவனமாக பார்க்கப்படுகிறது; அதனால் தான் இரண்டே மாதங்களில் ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடையும் திரட்டி உள்ளது.

இது தொடர்பாக ஏற்கனவே எழுதிய கட்டுரையையும் பார்க்க.

இதன் காரணமாக பேஸ்புக் நிறுவனத்தின் போட்டியாளரான  கூகுள் நிறுவனமானது வோடாபோனிலும் முதலீடு செய்யலாம் என்று சில செய்திகள் வந்தன. இது ஊர்ஜிதமானது அல்ல, எதிர்பார்ப்பு தான்.


புதன், 17 ஜூன், 2020

சீனா மோதலும் சில சந்தேகங்களும்

நேற்று முன்தினம் சீனாவுடன் நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள். அவர்கள் தியாகங்களுக்கு எமது வணக்கங்கள்!

அதே போல் சீனா சார்பாக 40 பேர் வரை மரணம் அடைந்துள்ளார்கள் என்று யூகிக்கப்படுகிறது.



கிட்டத்தட்ட 45 ஆண்டுகளுக்கு பின் எல்லை மோதலில் சீனா - இந்தியா வீரர்கள் மரணம் தழுவுவது என்பது இது தான் முதல் முறை. அதனால் பிரச்சினை கொஞ்சம் வீரியமானது என்று தான் நினைக்க தோன்றுகிறது.

அடிப்படையில் எமக்கு பாதுகாப்பு துறை தொடர்பாக எந்த நிபுணத்துவம் கிடையாது. ஆனால் ஒரு பாமரனாக சில சந்தேகங்கள் வரத் தான் செய்கின்றன.

ஞாயிறு, 14 ஜூன், 2020

கொரோனா இரண்டாவது அலைக்கு பயப்படும் சந்தை

தற்போது பங்குசந்தையானது 10100 புள்ளிகளில் தடுமாறி கொண்டிருக்கிறது.இது 100 நாள் சாராசரியில் இயங்கி கொண்டிருக்கும் இது ஒரு முக்கியமான தடை புள்ளி ஆகும்.

இதனை தாண்டி மேலே செல்ல வேண்டுமானால் வலுவான காரணங்கள் இருக்க வேண்டும்.



இது வரை அனுமானங்களில் தான் சந்தை மேலே உயர்ந்து உள்ளது. அதாவது எப்படியும் மீண்டு விடும் என்ற நம்பிக்கை சில முதலீட்டாளர்களிடம் இருப்பது. 

ஆனால் மற்ற பெரும்பான்மை முதலீட்டாளரார்கள் சந்தைக்குள் வர வேண்டும் என்றால் வெறும் நம்பிக்கை என்பதையும் தாண்டி சில நம்பிக்கை தரும் நிகழ்வுகளும் நடக்க வேண்டும்.

புதன், 10 ஜூன், 2020

ரியல் எஸ்டேட்டும், ரேட்டிங் ஏஜென்சியும்

கடந்த இரு  வருடங்களாக  எமது பதிவுகளில் ஒரு நெகடிவ் பையாஸ் இருப்பது போல் தோன்றலாம். அதற்காக எதிர்மறை சிந்தனைகளுடன் தான் இந்த தளம் இருக்கும் என்று நினைக்க வேண்டாம்.

இந்த தளம் ஆரம்பிக்கப்பட்ட 2013 முதல் எழுதிய கட்டுரைகளை பார்த்தால் மிக அதிக அளவில் பங்குச்சந்தை முதலீடுகளை நேர்மறை சிந்தனைகளோடு தான் அணுகி இருந்தோம்.  அந்த காலக்கட்டத்தில் சந்தையும் லாபத்தையே கொடுத்து இருந்தது.

அதன் பிறகு குமிழ் இருக்குமோ என்ற சந்தேகம் இருந்ததால் பங்குச்சந்தையை தவிர்க்கவுமளவு தான் அதிக பதிவுகள் வந்தன.



பங்குச்சந்தையை பொறுத்தவரை தவறுகளை தவிர்த்து விட்டாலே பாதி வெற்றி தான். அந்த வகையில் எங்கெங்கு தவறுகள் இருப்பதை உணரும் அளவு கட்டுரைகள் கொடுப்பதும் கடமையாகிறது.

எமது முந்தைய சந்தை ஒன்றுமில்லாமல் உயருவதேன்? கட்டுரையில் நண்பர் பார்த்திபன் அவர்களின் சில கருத்துக்களை பார்த்தால் சில்லறை முதலீட்டாளர்களின் ஏமாற்றங்களையம்  உணரலாம்.

அனைத்திற்கும் அப்பால் பங்குச்சந்தை என்பது எந்த திசையிலும் செல்லலாம். அதனால் எமது கட்டுரைகளையும் தாண்டி சுயமாக முடிவுகளை எடுக்குமாறு நண்பர்களிடம் வேண்டுகோள் வைக்கிறோம். எமது கட்டுரைகள் எவையும் பரிந்துரைகள் அல்ல. படிப்பினை கட்டுரைகளே!

ஞாயிறு, 7 ஜூன், 2020

சந்தை ஒன்றுமில்லாமல் உயருவதேன்?

பல எதிர்மறை செய்திகள் வரிசையில் கட்டி நிற்க சந்தையானது கடந்த இரு வாரங்களாக உயர்ந்து கொண்டே செல்கிறது. தற்போது 10000 நிப்டி புள்ளிகளை தொட்டு விட்டுள்ளது.

அனைவர் மனதிலும் உள்ள பொதுவான கேள்வி இது தான்.



இது தொடர்பாக நேற்றைய மியூச்சல் பண்ட்களுக்கும் வரும் ஆபத்து என்ற பதிவில் நண்பர் சந்துரு  ஒரு கருத்தை பதிவிட்டு கேள்வி எழுப்பி இருந்தார்.

கேள்வி இது தான்.

"Please provide an insight article about why market is rising despite big economic problem. Stimulus package was very bad in india compared with us and europe countries. I initially thought market will never touch 10000 in nifty atleast until this year. But looking now I am in deep confusion?"

அதற்கு நண்பர் தியாகராஜன் இவ்வாறு பதில் அளித்து இருந்தார்.

"Sir Reason is a trap of forign investers having lot of money buying and lifting the nifty so that they will book profits in unexpected time hammering the market plthink bank shares r going up not on performance that too having lot of NPAs Think before investing if it is hard earned My personal view Risk is urs"


எமது பதிலும் நண்பர் தியாகராஜன் அவர்களுடன் ஒத்து போகிறது.

வெள்ளி, 5 ஜூன், 2020

மியூச்சல் பண்ட்களுக்கும் வரும் ஆபத்து

பங்குச்சந்தைக்கு முதலீடு செய்ய வருபவர்களுக்கு தொடக்க புள்ளி என்பது மியூச்சல் பண்ட் தான்.

புதிதாக வரும் நமக்கு அவ்வளவு தெரியாததால் நமக்கு பதிலாக விவரம் தெரிந்தவர்கள் நமது பணத்தை பார்த்துக் கொள்வார்கள் என்பதால் அதிக அளவில் பிரபலமாக இருந்தது.



ஆனால் சில மியூச்சல் பண்ட் மேனேஜர்கள் செய்த தவறுகள், நிறுவனங்கள் செய்த தவறுகள் போன்றவற்றின் காரணமாக அண்மையில் இந்த பரஸ்பர நிதிகளின் தோல்வி என்பது மிக அதிகமாகவே இருக்கிறது.

பொதுவாகவே இந்தியாவில் வங்கிகளை தவிர மற்ற எதில் வைக்கும் பணத்திற்கு  உத்தரவாதம் காகிதங்களில் தான் இருக்கும். சட்டத்தின் ஆயிரம் ஓட்டைகள் வழியாக பெரிய கைகள் தப்பிக்க, பணம் போட்டவர்களின் ஆவென்ற வாய் பிளப்பு தான் அதிகம் இருக்கும்.

மியூச்சல் பண்ட்டும் அந்த வகையில் தான் வருகிறது.

திங்கள், 1 ஜூன், 2020

JIO - Facebook முதலீடு, சூட்சமம் என்ன?

தொழில் நுட்பம் வந்து நன்மை செய்ததோ இல்லையோ. ஆனால் இன்னும் சிறிது காலத்தில் 99% உலக சொத்தும் 1% பணக்காரர்களிடமும் மீதி 1% சொத்து 99% மற்ற மக்களிடமும் இருந்தாலும் ஆச்சர்யமில்லை.

வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களால் வியாபாரம் முழுக்க ஒரு வித மையத்தன்மையை நோக்கி நகருவதையம் பார்க்க முடிகிறது. அந்த வகையில் தான் ஜியோவில் Facebook நிறுவனம் முதலீடு செய்வதையும் காணலாம்.



கிட்டத்தட்ட 45,000 கோடி ரூபாய் அளவு முதலீடு செய்து உள்ளார்கள். இது போக சில இதர நிறுவனங்களும் முதலீடு செய்து மொத்தத்தில் 75,000 கோடி அளவு முதலீடு செய்து உள்ளார்கள். அடுத்து, Microsoft நிறுவனமும் வரிசையில் இருப்பதாக செய்திகள் வருகின்றன.

ஏன், இத்தனை வரிசை என்ற கேள்வி வரும் போது, கொரோனோவானது இல்லுமினாட்டி சதியா? அல்லது மருந்து நிறுவனங்கள் சதியா? என்பதை விட மக்களை அதிகம் குழப்பம் செய்யத் தான் வைக்கிறது.

கொஞ்சம் பின்புலங்களையும் விரிவாக பார்ப்போம்.

சனி, 23 மே, 2020

EMI தவிர்ப்பது யாருக்கு லாபம்?

கொரோனா வந்த பிறகு ரிசர்வ் வங்கி கடன்களில் EMI கட்டுபவர்களுக்கு ஒரு கரிசனம் காட்டியது. அதாவது மூன்று மாதங்கள் EMI கட்டுவதை தவிர்க்கலாம்.

தற்போதும் நிலைமையில் முன்னேற்றம் இல்லாததால் மீண்டும் மூன்று மாதங்களுக்கு நீட்டி உள்ளது.



நேற்றைய RBI கூட்டத்தில் கவர்னர் அறிவித்துள்ளார்.

முன்பை விட நிறைய நண்பர்கள் பயன்படுத்துவார்கள் என்று இனி எதிர்பார்க்கப்படுகிறது.

அரசானது கொரோனா காலத்தில் நிறுவனங்கள் கட்டாயம் ஊதியம் கொடுக்க வேண்டும் என்ற அரசாணையை திரும்ப பெற்று விட்டது. அதனால் வரும் மாதங்களில் நிறுவனங்கள் நெருக்கடி இல்லாமலே ஆட்குறைப்பு செய்யவும் வாய்ப்பு உள்ளது.

அந்த சூழ்நிலையில் நண்பர்கள் இந்த  EMI தவிர்ப்பு லாபமா? என்பதை தெரிந்து கொள்வதும் அவசியமாகிறது.

வியாழன், 21 மே, 2020

பங்குச்சந்தைக்கு கொடுக்கப்படும் செயற்கை ஊட்டம்

நேற்று முதல் சந்தை பச்சை வண்ணத்திற்கு திரும்பி உள்ளது.

ஏதேனும் சாதகமான சூழ்நிலைகள் திரும்பி விட்டதா என்று பார்த்தால் ஒன்றுமில்லை.



நிர்மலாஜி 20 லட்சம் கோடி தந்த போது கூட சந்தை இப்படி துள்ளி குதிக்கவில்லை. சிறிது உயர்ந்து அப்புறம் கீழே வந்து விட்டது. எப்படியும் எதுவும் கொடுக்க போவதில்லை என்ற நம்பிக்கையும் இருந்து இருக்கலாம்.

ஆனாலும் தற்பொழுது சந்தை ஏன் உயருகிறது என்று உன்னிப்பாக கவனித்தால் செபி நேற்று கொண்டு வந்த ஒரு விதிமுறை கண்ணுக்கு வருகிறது.

ஞாயிறு, 17 மே, 2020

20 லட்சம் கோடிக்கு கணக்கு வந்தாச்சு..

மோடி சொன்ன பிறகு கொரோனா உதவி தொகை பற்றி அதிக பேச்சு எழுந்தது. பங்குசந்தையில் கூட உயர்வை எதிர்பார்த்தார்கள். ஆனால் வெறும் 200 புள்ளிகள் உயர்வை மட்டும் பார்த்தது. அதன் பிறகு மேலும் கீழே வந்து விட்டது.

நண்பர்கள் கூட இது தொடர்பாக கட்டுரை எழுத கேட்டு இருந்தார்கள். அதனால் வெள்ளியன்றே எழுத வேண்டிய கட்டுரை. ஆனால் புரியாமல் இருந்ததால் என்ன எழுதவென்றே தெரியவில்லை. சரி மூன்று நாளும் உட்கார்ந்து கேட்போம் என்று இருந்தோம். அது நான்கு நாளானது. இன்று ஐந்தாவது நாளோடு வில்லிசை முடிந்தது.



இறுதியில் நிர்மலாஜி ஒரு புன் முறுவலோடு நீங்கள் கேட்ட 20 லட்சம் கோடிக்கு கணக்கு கொடுக்குறேன் என்று சொல்லிய போது அவர்களுக்கே மீம்ஸ் தாக்கம் புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

ஞாயிறு, 10 மே, 2020

அரசு கடன் பத்திரங்கள் எவ்வாறு செயல்படுகிறது?

நேற்று ஒரு செய்தியை பார்க்க நேரிட்டது.

டாஸ்மாக் வருமானத்தில்  தங்களுக்கும் பங்கு  வேண்டும் என்று மத்திய அரசின் வருமான வரித்துறை நீதி மன்றத்தில்  நீதியை நாடி இருக்கிறார்கள். அதிலும் கடந்த வருடத்தில் மட்டும் 14,000 கோடி ரூபாய் அளவு தர வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள்.



தமிழக அரசே பல பேர் ஏச்சு, பேச்சுக்களை கடந்து டாஸ்மாக்கை திறந்தால் அதற்கும் தடை வாங்கி வைத்துள்ளார்கள். இதில் மத்திய அரசுக்கும் பங்கு கொடுக்க வேண்டும் என்றால் பிச்சை எடுத்த பெருமாளிடம் திருடி தின்னும் அனுமார் கதை தான்.

புதன், 6 மே, 2020

வருமானத்திற்கு குறுக்கு வழியை நாடும் மாநில அரசுகள்

கடந்த ஏப்ரல் மாதம் டெல்லி அரசுக்கு 3500 கோடி அளவு வரும் வருவாய் 300 கோடியாக குறைந்துள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் கூறி உள்ளார். பல மாநிலங்களுக்கும் கிட்டத்தட்ட இதே நிலை தான்.

GST கொண்டு வரப்பட்ட பிறகு மாநிலங்களின் கையில் இருக்கும் வருவாய் என்பது மதுவும், பெட்ரோலும் தான். மீதி எல்லாமே மத்திய அரசின் கைக்கு சென்று விட்டது.



வெள்ளி, 1 மே, 2020

நிச்சயமற்ற நிலையும், முதலீடுகளும்

நேற்று சந்தை மீண்டும் ஏற்றத்தை கண்டது. வாய்ப்பை விட்டு விட்டோம் என்று தோன்றி இருக்கலாம். அதனால் பல நண்பர்களிடம்  முதலீடு செய்யலாமா? என்ற கேள்வியை பார்க்க முடிந்தது.

இந்த வாரம் முழுவதும் சந்தை உயர்ந்தாலும் அதற்கான ஒரு நேர்மறை காரணியை உருப்படியாக சொல்ல முடியாது என்பது தான் நிதர்சனம்.



கச்சா எண்ணெய் விலை இந்த அளவிற்கு எதிர்மறை நிலையில் செல்லும் என்று யாரும் கனவில் கூட நினைத்து இருக்க முடியாது.

ஞாயிறு, 5 ஏப்ரல், 2020

கணிக்க முடியாத கொரோனா ...

நண்பர்களுக்கு வணக்கம்! நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு பதிவு. இந்த இடைப்பட்ட தினங்களில் நிறைய நிகழ்வுகள் நடந்து விட்டன. அதில் எமது பதிவுகள் இல்லாதது நண்பர்களுக்கு வருத்தம் இருந்ததை அறிய முடிந்தது. மன்னிக்கவும்!



ஞாயிறு, 2 பிப்ரவரி, 2020

அரசாங்கம் என்னும் அட்டை பூச்சி

நீண்ட ஒரு நெடிய மௌனத்திற்கு பிறகு ஒரு பதிவு.

இந்த முறை தனிப்பட்ட விடயங்கள் பெரிய அளவு இல்லை.




ஆனால் இந்திய பொருளாதாரம் பற்றி பெரிதாக சொல்ல ஒன்றும் இல்லை என்றே சொல்ல முடியும்.

எந்த ஒரு குறிப்பிட்ட காரணியில் இருந்து கூட நல்ல செய்தி கிடைக்காத சூழ்நிலையில் சந்தை ஏறி ஏமாற்று வித்தையைக் காட்டிக் கொண்டு இருந்தது.