செவ்வாய், 11 டிசம்பர், 2018

தேர்தல் முடிவுகளும், தணியும் சந்தை பதற்றமும்

நேற்றைய கட்டுரையில் நாம் எதிர்பார்த்தவாறே சந்தையும் நடந்து கொண்டது நன்றாக இருந்தது.


சந்தையை பொறுத்தவரை சட்டீஸ்காரில் மட்டுமாவது வெற்றி பெறுவார்கள் என்று தான் எதிர்பார்ப்பில் இருந்தது.



ஆனால் சட்டீஸ்கார் இந்த அளவிற்கு தோல்வி கொடுக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.

அதே நேரத்தில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் போன்ற பெரிய மாநிலங்களில் பிஜேபி கொடுத்த கடுமையான போட்டி சந்தைக்கு இன்னும் நம்பிக்கையை அளிப்பதாகவே இருந்தது.

அதனால் தான் சந்தையும் நாள் முடிவில் பச்சை நிறத்தில் இறங்கி வந்தது.

ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநிலங்களை சேர்த்து மொத்தமாக 50 எம்பி தொகுதிகள் வருகின்றன.

ஞாயிறு, 9 டிசம்பர், 2018

கருத்து கணிப்பு, தேர்தல் முடிவு, மனதில் திக் திக்...

ஒரு மிக அதிக வேலை பளுவில் சிக்கி கொண்டதால் கடந்த மாதத்தில் கட்டுரைகளை எழுத முடியவில்லை. மன்னிக்கவும்!


அதிக அளவில் நண்பர்கள் தேர்தலையும் சந்தையும் இணைத்து கேட்டு கொண்டிருப்பதால் இந்த கட்டுரையை தொடர்கிறோம்.



மிக நீண்ட நாள் எதிர்பார்க்கப்பட்ட மாநில தேர்தல் முடிவுகள்.

தமிழ்நாடு, கேரளா என்றால் கண்டிருக்கவே மாட்டார்கள். ஆனால் பிஜேபி வலிமையாக உள்ள ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கார் மாநிலங்கள் என்பதால் ஒரு மினி லோக் சபா தேர்தல் போன்று தான் கவனிப்பு.

இதனை ஒரு விளையாட்டு தொடராகவே பார்க்கிறார்கள்.

வெள்ளி, 9 நவம்பர், 2018

தேர்தலை புறந்தள்ளி வரும் சந்தை

தற்போது இந்திய பங்குச்சந்தை அடி மட்டத்தில் இருந்து எழுந்து 10,600 புள்ளிகளில் நிலை பெற்றுள்ளது என்பது மகிழ்வான செய்தி தான்.

ஒரு புறம் உலக காரணிகள் மிக சாதகமாக இந்தியாவிற்கு அமைந்துள்ளது.



85 டாலருக்கு சென்ற கச்சா எண்ணெய் இன்று 70$ அளவை தொட்டு விட்டது.

கச்சா எண்ணெய் 70 டாலரில் நிலை பெறும் என்பது அதிக கணிப்பாகவும் உள்ளது.

அதன் பக்க விளைவாக இந்திய ரூபாய் மதிப்பும் ஓரளவு உயர்வை கண்டு வருகிறது.

ஆனாலும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குகளை வாங்குவது என்பது இன்னவும் நடக்கவில்லை.

புதன், 7 நவம்பர், 2018

இன்று முஹுரத் ட்ரேடிங் ...

நமக்கு நேற்றே தீபாவளி கோர்ட் உத்தரவுடன் சுபமாக நடந்து விட்ட சூழ்நிலையில் இன்று வட இந்தியர்கள் தீபாவளியை கொண்டாடுகிறார்கள்.


நாம் நரகாசுரனை அழித்ததற்காக மட்டன் சாப்பிட்டு வெடியோடு கொண்டாடுகிறோம் என்றால்,



வட இந்தியர்கள் லக்ஷ்மி பூஜை, திருக்கார்த்திகை போன்று சுத்த சைவ தீப ஒளியாக கொண்டாடுகிறார்கள்.

ஒரு இந்தியா, ஒரே மத பண்டிகை ஆனால் எத்தனை வேறுபாடுகள். வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியா வாழ்க..!

இன்று பங்குசந்தையில் ஒரு விசேச தினம்.

வெள்ளி, 26 அக்டோபர், 2018

வரியை வாரி வழங்க தொடங்கும் இந்தியர்கள்

மத்திய அரசின் செலவுகளுக்கு வரி மூலமே பிரதான வருமானம்.


இது பல வழிகளில் பெறப்பட்டாலும் மூன்றை முக்கியமாக கருதலாம்.



ஒன்று , 
தனிப்பட்ட நம்மை போன்றவர்கள் மாத சம்பளத்தில் கிடைக்கும் வருமானத்திற்கு கட்டும் Personal Income Tax.

இரண்டாவது, 
தனிப்பட்ட வியாபாரம் செய்து கிடைத்து வரும் வருமானத்தில் கட்டும் Personal Income Tax.

மூன்றாவது,
நிறுவனங்கள் தங்கள் லாபத்தில் கட்டும் Corporate Tax.

இந்த மூன்றும் சேர்ந்து தான் Direct Tax என்று அழைக்கப்படுகிறது.

புதன், 24 அக்டோபர், 2018

Amazon Great India சலுகைகளின் தொகுப்பு


அமேசான் தளம் அக்டோபர் 24 முதல் 28 வரை Great India Festival Offers என்ற பெயரில் சலுகைகளை வழங்குகிறது.

சரியும் எண்ணெய் விலையால் சாதகமாகும் இந்திய சந்தை

இந்திய சந்தையின் அண்மைய வீழ்ச்சிகளுக்கு அடிப்படை காரணமாக பார்க்கப்படுவது கச்சா எண்ணெய் விலை தான்.


ஆறு மாதங்களுக்கு முன்பு வரை 50 டாலரில் வர்த்தகமாகி கொண்டிருந்த கச்சா எண்ணெய் ஒரு கட்டத்தில் 85 டாலரையும் தொட்டது.



இனி 100 டாலரை தொட்டாலும் ஆச்சர்யமில்லை என்று நிதி நிறுவனங்கள் கூற, ரூபாய் மதிப்பும் வீழ்ச்சி அடைய தொடங்கியது.

இந்த பதற்றம் முழுமையாக இந்திய சந்தையை பாதித்து 20% அளவிற்கு நாம் முன்பில் இருந்து வீழ்ச்சியில் இருக்கிறோம்.

வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இரண்டு வகையில் பாதிப்பு இருந்தது.

திங்கள், 22 அக்டோபர், 2018

NBFC பங்குகளில் என்ன நடக்கிறது?

தற்போது இந்திய பங்குசந்தையில் நடக்கும் வீழ்ச்சிகளுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காரணமும் சொல்லப்படுகின்றன.

வெள்ளி, 12 அக்டோபர், 2018

அடிப்படையால் காளையின் எழுச்சியைக் கண்ட சந்தை

கடந்த சில வாரங்களுக்கு பின் இந்த வார சந்தை கொஞ்சம் நம்பிக்கையைக் கொடுப்பதாக அமைந்தது.


நேற்று முன்தினம் புதனன்று சந்தை 600 சென்செக்ஸ் புள்ளிகள் வரை சென்றது.



ஆனாலும் அடிப்படைகளை (Fundamental) என்பதை விட Technical என்பதே அதில் மேலோங்கி இருந்தது.

அதாவது பங்கு வர்த்தகம் செய்பவர்கள் சரிவுகளின் தொடக்கத்தில் Short Positions என்பதை எடுத்து இருப்பார்கள்.

ஆனால் மிக அதிக அளவில் சந்தை தொடர்ந்து சரிந்து விட்டதால் இனி மேலும் Short Positions வைத்து இருந்தால் அவர்களுக்கு நஷ்டமாகி விடும்.

அதனால் Short Positions நிலையை விற்று விட முனைவார்கள். இதனை Short Covering என்று அழைப்பர்.

ஞாயிறு, 7 அக்டோபர், 2018

பணக்கடவுள் வாரன் பப்பெட் - புத்தக விமர்சனம்

பங்குச்சந்தையின் தற்போது வீழ்ச்சியை பார்த்து பதற்றத்தில் இருக்கும் நண்பர்களுக்கு,

தங்கள் பொன்னான நேரத்தை அடுத்த சில மாதங்களுக்கு தினசரி பங்குச்சந்தை புள்ளிகளை பார்த்து டென்சன் அடையாதீர்கள்!



அதற்கு மாற்று வழியாக நீண்ட கால முதலீடு தொடர்பான பங்குச்சந்தை படிப்பினைகளில் கவனம் செலுத்தக் கேட்டுக் கொள்கிறோம்.

நமது தளத்திலும் அது தொடர்பான கட்டுரைகள் அதிகம் வெளிவரும்.

அதில் தொடக்கமாக செல்லமுத்து குப்புசுவாமி அவர்கள் எழுதிய 'பணக்கடவுள் வாரன் பப்பெட்' என்ற புத்தகத்தின் விமர்சனத்தை இங்கு பகிர்கிறோம்.

சனி, 6 அக்டோபர், 2018

ஒன்றுமே புரியவில்லை ...

பங்குசந்தையில் முதலீடு செய்து லாபங்கள் எதிரமறையில் சென்று கொண்டிருக்கும் இந்த தருணத்தில் நண்பர்களின் கவலையில் நாமும் பங்கு கொள்கிறோம்.


வெற்றி கொடி நாட்டிய ராகேஷ் ஜூன் ஜூன் வாலாவின்  பங்குகளில் சில 75% அளவு சரிந்திருக்கிறது என்பதையும் நினைத்து மனதை தேற்றிக் கொள்க!



அதே போல் வீழ்ச்சி என்பதும் நிரந்தரமல்ல, இன்னும் அடிப்படைகள் வலுவாக உள்ளது என்பதை ஏற்றுக் கொண்டு அடுத்தக் கட்டத்திற்கு செல்லும் நேரமிது.

ஏழரை சனியில் சனி பகவான் கடைசி உச்சக் கட்டத்தில் படுத்தி எடுத்து அதன் பின் வாங்கி வழங்குவது போல் தான் பங்குசந்தையும்.

2008 சரிவுகளிலோ அல்லது அதற்கு முன் ஹர்ஷத் மேத்தாவால் நடந்த சரிவுகளிலோ வீழ்ச்சி என்பது ஒரு வருடம் கூட முழுமையாக நிலைக்கவில்லை என்பதையும் கவனிக்கவும்.

நேற்று ICICI Securities கொடுத்த ஒரு ரிப்போர்ட்டில் வீழ்ச்சி என்பதன் மீழ்ச்சி காலம் சராசரியாக 66 நாட்கள் என்று தான் தரவுகளுடன் குறிப்பிட்டு இருந்தார்கள்.

புதன், 3 அக்டோபர், 2018

RBI அதிரடிகளால் அலறும் வங்கி நிறுவனர்கள்

கடந்த சில மாதங்களாக RBI மேற்கொண்டு வரும் சில அதிரடி நடவடிக்கைகளால் சில நல்ல வங்கி பங்குகள் கூட அகல பாதாளத்திற்கு சென்று வருகின்றன.

சனி, 29 செப்டம்பர், 2018

PayTm நிறுவனத்தை அலற வைக்கும் GPay

தற்போது டிவிக்களில் Google நிறுவனத்தின் GPay தொடர்பான விளம்பரங்கள் அதிகம் வருவதை காண முடிந்து இருக்கலாம்.

செவ்வாய், 25 செப்டம்பர், 2018

Garden Reach IPOவை வாங்கலாமா?

இன்று மின் அஞ்சல் வழியாக எமது பதிவுகளை பெறுபவர்கள் எண்ணிக்கை 1500 என்பதை தாண்டியது.


முதலீடு தொடர்பான இந்த கட்டுரைகளுக்கு ஆதரவு அளித்ததற்கு மிக்க நன்றி!



மின் அஞ்சல் வழியாக பகிர்வதில் சிறிது கூடுதல் தகவல்களையும் சேர்த்து அனுப்புகிறோம். அது பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்.

ஞாயிறு, 23 செப்டம்பர், 2018

சென்செக்ஸின் 1500 புள்ளிகள் சரிவிற்கு காரணம் என்ன?

நேற்று முன்தினம் வெள்ளியன்று சந்தையை முழுமையாக பார்த்துக் கொண்டு இருந்தவர்களுக்கு மாரடைப்பே வந்து இருக்கலாம்.


சில மணித்துளிகள் என்ன நடக்குதென்றே புரியவில்லை.



நண்பர்களிடம் இருந்து எமக்கும் whatsapp வழியாக அதிக கேள்விகள்.

எமக்கும் காரணம் புரியவில்லை. தேடினாலும் சரியான காரணங்கள் கிடைக்கவில்லை.

ஆனால் சந்தை சீட்டுக் கட்டு போல் சரிவதை பார்த்த பிறகு பிற வேலைகள் செய்வதில் தடங்கல்கள் ஏற்பட்டதால் அப்படியே விட்டு விடுவோம் என்று அந்த இரண்டு மணி நேரமும் சந்தை பக்கம் வரவே இல்லை.

வியாழன், 20 செப்டம்பர், 2018

பரோடா வங்கியுடன் இணைப்பு, யாருக்கு பலன்?

நேற்று முன்தினம் மத்திய அரசு சில வங்கி இணைப்புகளை அறிவித்தது. நீண்ட நாளாகவே எதிர்பார்க்கப்பட்டது. தற்போது நடந்து விட்டது.

செவ்வாய், 18 செப்டம்பர், 2018

IRCON IPOவை வாங்கலாமா?

நாளை செப்டம்பர் 19 வரை IRCON நிறுவனத்தின் விண்ணப்பங்கள் வாங்கப்படுகின்றன.


அதனை வாங்கலாமா? என்பதை பற்றி பார்ப்போம்.



IRCON என்பது Indian Railway Construction Company என்பதன் சுருக்கமாகும்.

இந்திய ரயில்வேயால் மேற்கொள்ளப்படும் கட்டுமான பணிகளை மேற்கொள்வது தான் இதன் முதன்மை பணி.

90%க்கும் மேற்பட்ட ஆர்டர்கள் இந்தியன் ரயில்வே வழியாகத் தான் வருகின்றன.

ஞாயிறு, 16 செப்டம்பர், 2018

பரம்பிக்குளம் - ஒரு சுற்றுலா அனுபவம்

கடந்த ஒரு வார காலமாக திருமண மற்றும் சுற்றுலா நிகழ்வுகளில் இருந்ததால் கட்டுரைகளை எழுத முடியவில்லை.

சனி, 8 செப்டம்பர், 2018

ஏன் நுகர்வோர் பங்குகள் வீழ்கின்றன?

கடந்த வாரத்தில் FMCG பங்குகளின் விலை பத்து சதவீதம் வரை வீழ்ந்துள்ளது.


நண்பர் ராஜா அவர்களும் இது தொடர்பான கேள்வியினை கேட்டு இருந்தார். அதனால் விவரமாக பார்ப்போம்.



நாம் ஐந்து வருடங்களுக்கு முன்பு கொடுத்த இலவச பங்கு போர்ட்போலியோவில் Britannia பங்கினை பரிந்துரை செய்து இருந்தோம்.

பார்க்க: Revmuthal மாதிரி போர்ட்போலியோ

பரிந்துரை செய்யும் போது ஒரு பங்கின் விலை 750 ரூபாய் தான். அப்பொழுது P/E மதிப்பு 35 என்ற அளவிலே இருந்தது.

இருக்கிற FMCG பங்குகளிலே பிரிட்டானியா தான் மலிவாக இருந்தது. மேலும் வளர்ச்சியும் அதிகம் எதிர்பார்க்கப்பட்டது.

அதற்கேற்ப பிரிட்டானியா லாபமும் வருடத்திற்கு 40%க்கும் மேலே கூடி வந்தது.

வியாழன், 6 செப்டம்பர், 2018

OYO ROOMS பிசினஸ் மாடல் எவ்வாறு இயங்குகிறது?

சுயதொழில் பற்றி கட்டுரைகள் எழுதி நீண்ட நாள் ஆகி விட்டது. அதனை மீண்டும் தொடர்கிறோம்.

ஞாயிறு, 2 செப்டம்பர், 2018

சந்தையின் உயர்விற்கு தோள் கொடுக்கும் ஜிடிபி எழுச்சி

தற்போது ஒவ்வொரு நாளும் இந்திய சந்தைகள் உயரும் போது எப்பொழுது இறங்கி விடுமோ என்ற ஒரு வித பயம் ஏற்படுகிறது.

கச்சா எண்ணெய், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, அந்நிய செலாவணி பற்றாகுறை என்று பல விடயங்கள் ஒரு பக்கம் தாக்க ஆரம்பித்து இருக்கிறது.



மேலே உள்ள எதுவும் சில நாட்கள் மட்டும் வந்து போவதில்லை. குறைந்த பட்சம் அடுத்த இரண்டு ஆண்டுகளாவது நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்து வரும் தேர்தல்களில் கூட சந்தை பிஜேபியை எதிர்பார்க்கிறது. ஆனால் தற்போதுள்ள அளவு நிலை வருமா? என்பதிலும் பலத்த சந்தேகம் இருக்கிறது.

புதன், 29 ஆகஸ்ட், 2018

மாற்றி யோசிக்கும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம்

அடுத்த சில ஆண்டுகளில் இந்திய விமான துறை கணிசமான வளர்ச்சியைக் காணும் என்பது பல முதலீட்டாளர்களது எதிர்பார்ப்பு.

ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2018

பங்குகளில் ROEயை எவ்வாறு கணக்கிடுவது?

இன்று பங்குகளை மதிப்பிடுவதற்கான இன்னொரு முறையை பற்றி பார்ப்போம்.


கடந்த வார கட்டுரையில் L&T Buyback முறையை எவ்வாறு அணுகுவது? என்று எழுதி இருந்தோம்.



நாம் எதிர்பார்த்தது போலவே L&T நிறுவனமும் 1500 ரூபாயில் பங்குகளை வாங்குவதாக அறிவித்து விட்டது. வாழ்த்துக்கள்!

அதே நேரத்தில் இன்னும் நிதி நிறுவனங்கள் L&T நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்கு பரிந்துரை செய்துள்ளன.

ஏன் என்று பார்த்தால் ஒரு முக்கிய காரணம் Return on Equity (ROE) என்பதாகும்.

அதனை பற்றி கொஞ்சம் விவரமாகவே பார்ப்போம்.

சனி, 25 ஆகஸ்ட், 2018

கச்சா எண்ணெய் விலை எங்கு போய் நிற்கும்?

மோடி அரசின் ஐந்தாவது வருடம் முந்தைய நான்கு வருடங்களை போல் எளிதாக அமையவில்லை என்றே சொல்லலாம்.

திங்கள், 20 ஆகஸ்ட், 2018

L&T Buyback முறையை எவ்வாறு அணுகுவது?

கடந்த சனியன்று L&T நிறுவனம் Buyback முறையில் பங்குகளை வாங்குவதாக அறிவித்தது.


கட்டுமானத் துறையில் இருக்கும் இந்த நிறுவனம் நல்ல நிதி அறிக்கையை கொடுத்து வந்தாலும் அதன் பங்கின் மதிப்பு மட்டும் உயரவில்லை.



இதற்கு ஆப்ரேடர்களும் ஒரு முக்கிய காரணம்.

இதே போன்று நல்ல நிதி அறிக்கை கொடுத்த பங்குகள் மேலும் கூடும் என்று முதலீடு செய்பவர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பது தான் இவர்கள் வேலை.

ட்ரெண்டை மாற்றுவதன் மூலம் மிக அதிக அளவில் சம்பாதித்து விடுவார்கள்.

தற்போது இருக்கும் நம்பிக்கையற்ற ஒரு சூழ்நிலையில் ஆப்ரேடர்கள் பங்கு என்பது மிக அதிகமாக இருக்கும்.

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018

கேரள வெள்ளத்தால் ஆட்டம் காணும் பங்குகள்

வரலாறு காணாத வெள்ளத்தில் சிக்கி கொண்டிருக்கும் கேரள மக்கள் விரைவில் மீண்டு வர இறைவனை வேண்டுகிறோம்!

வியாழன், 16 ஆகஸ்ட், 2018

துருக்கியில் பொருளாதார பதற்றம், ஏன்?

தற்போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 70க்கு அருகில் சென்று வீழ்ச்சியில் உள்ளது.

திங்கள், 13 ஆகஸ்ட், 2018

உச்சக்கட்ட மதிப்பீட்டலில் நிப்டி, நிலைக்குமா?

2018ம் வருடத்தின் ஆகஸ்ட் மாதம் இந்திய பங்குசந்தைக்கு பரவாயில்லை என்று சொல்லுமளவு வரலாற்று உயர்வுகளை தொட்டுள்ளது.

சனி, 11 ஆகஸ்ட், 2018

வேகத்தடையால் கனவாகும் பதாஞ்சலி இலக்கு

கடந்த ஐந்து வருடங்களில் பதாஞ்சலி நிறுவனம் அடைந்த வளர்ச்சி என்பது அசுரத்தனமானது.

வியாழன், 9 ஆகஸ்ட், 2018

PAT லாப மார்ஜினை எப்படி பயன்படுத்துவது?

எமது ஐந்தாவது ஆண்டு நிறைவு பதிவில் இனி அதிக அளவில் பங்குச்சந்தை அடிப்படை, சூத்திரங்கள் பற்றி எழுதுவதாக கூறி இருந்தோம்.

அதனை தொடர்கிறோம்.



இதற்கு முன் Revmuthal.com தளத்தில் P/E, P/B போன்ற விகிதங்கள் தொடர்பாகவும் எழுதி இருந்ததை பார்த்திருக்கலாம்.

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2018

கலைஞர் - நிரப்ப முடியாத ஒரு வெற்றிடம்

ஆறு சகாப்தங்களுக்கு மேல் ஓய்வின்றி இயங்கி கொண்டிருந்த கலைஞர் அவர்கள் இன்று காலமாகினார்.

CreditAccess Grameen IPOவை வாங்கலாமா?

கடந்த வாரம் நாம் பரிந்துரை செய்த HDFC AMC ஐபிஒ 67% அளவு லாபம் கொடுத்திருக்கிறது.


பலன் பெற்ற நண்பர்கள் அனைவருக்கும் எமது வாழ்த்துக்கள்!

பார்க்க: HDFC AMC IPOவை வாங்கலாமா?




அடுத்து நாளை ஆகஸ்ட் 8 முதல் CreditAccess Grameen நிறுவனத்தின் ஐபிஒ வெளிவரவிருக்கிறது.

இதனை வாங்கலாமா? வேண்டாமா? என்பதை பற்றி பார்ப்போம்.

எப்பொழுதுமே ஊருக்கு செல்லும் போது கிராம அளவில் அதிக அளவு கந்து வட்டி பிரச்சினை இருப்பதைக் காண்பதுண்டு.

வெள்ளி, 3 ஆகஸ்ட், 2018

ஓட முடியாத இடியாப்ப சிக்கலில் ஜெட் ஏர்வேஸ்

தொழில் துறைகளிலே விமான போக்குவரத்து துறை என்பது கடினமான ஒன்று.

வியாழன், 2 ஆகஸ்ட், 2018

ஐந்தாவது வருட முடிவில் REVMUTHAL.COM

நண்பர்களுக்கு,

வணக்கம்!

ஞாயிறு, 29 ஜூலை, 2018

மீண்டும் பலன் தரத் தயாராகும் சுற்றுலாத் துறை

தற்போது சென்செக்ஸ், நிப்டி புள்ளிகளை அடிப்படையாக வைத்து கட்டுரைகளை எழுதுவதை விட முதலீடு பார்வையில் கட்டுரைகள் எழுதுவது எமக்கும் உற்சாகமாக இருக்கிறது.

வியாழன், 26 ஜூலை, 2018

ம்யூச்சல் பண்ட் முதலீடுகளை மறுபரிசீலனை செய்யும் நேரமிது

தற்போது டிவியை திறந்தால் 'Mutual Fund Sai Hai' என்று வரும் விளம்பரங்கள் ம்யூச்சல் பண்ட் பற்றிய விழிப்புணர்வை கொடுக்கின்றன.


ஆனால் அதே பணத்தைக் கொட்டிக் கொடுக்கும் விளம்பரங்களாகவே காட்டப்படுகின்றன.



அதிலும் விளம்பரத்தில் இறுதியில் 'ம்யூச்சல் பண்ட் முதலீடுகள் சந்தை அபாயத்திற்கு உட்பட்டவை' என்பதும் சிறிதளவில் கவனிக்கபடாத ஒன்றாகவே தான் இருக்கிறது.

அதனால் மக்களும் நம்பி முதலீடுகளை போடுவதும் அதிகரித்து வருகிறது.

ம்யூச்சல் பண்ட் என்பதே நமது சார்பாக மற்றொருவர் பங்குசந்தைகளில் முதலீடு செய்து லாபம் கொடுக்கிறார் என்பது தான்.

செவ்வாய், 24 ஜூலை, 2018

HDFC AMC IPOவை வாங்கலாமா?

நாளை ஜூலை 25 முதல் HDFC AMC நிறுவனத்தின் ஐபிஒ வெளிவரவிருக்கிறது.


அதனைப் பற்றி விரிவாக பார்ப்போம்.



HDFC AMC என்பது HDFC குழுமத்தின் ஒரு பிரிவு தான். HDFC Asset Management Company என்பதன் சுருக்கம் தான் இந்த நிறுவனம்.

அதாவது மக்களின் சேமிப்பிற்கு தேவையான ம்யூச்சல் பண்ட், இன்சுரன்ஸ் போன்றவற்றில் நிதி மேலாண்மை செய்து வருகிறது.

இந்த நிறுவனத்தில் Standard Life நிறுவனமும் குறிப்பிட்டத்தக்க பங்குகளைக் கொண்டுள்ளது.

திங்கள், 23 ஜூலை, 2018

சமச்சீர் இல்லாத நிப்டி உயர்வு, சரியான அளவுகோலா?

எமக்கு வரும் கேள்விகளில் முக்கிய ஒன்று...நிப்டி மட்டும் உயர, தாங்கள் வைத்து இருக்கும் பங்குகள் ஏன் கூடவில்லை என்பது தான்.


இது உண்மை தான்.



நிப்டி என்பது ஐம்பது பெரிய இந்திய நிறுவனங்களின் சந்தை மதிப்பை குறிக்க பயன்படுத்தும் குறியீடு.

இந்திய பங்குசந்தையை மதிப்பிட உதவும் ஒரு முக்கிய அளவுகோல் தான் நிப்டி.

ஆனால் தற்போதைய  ஏற்ற, இறக்கங்கள் நிப்டியை ஒரு சமசீரான அளவோலாக கருத முடியாத நிலையில் தான் வைக்கின்றன.

வெள்ளி, 20 ஜூலை, 2018

பெற்றோரை கவனிக்கவில்லை? சொத்தை திருப்பிக் கொடுக்க..

ஒரு சமுதாயத்தில் பெண், வயதானனவர்கள், குழந்தைகள் போன்றோர் வலுவற்றவர்களாக கருதப்படுவதால் அவர்களுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கிறது. 

வியாழன், 19 ஜூலை, 2018

TCNS Clothing IPOவை வாங்கலாமா?

நேற்று ஜூலை 18 முதல் TCNS Clothing நிறுவனத்தின் விண்ணப்பங்கள் வாங்கப்படுகின்றன.


இந்த ஐபிஒவினை வாங்கலாமா? என்பது பற்றி பார்ப்போம்.



TCNS Clothing நிறுவனமானது பெண்களுக்கு தேவையான ஆடைகளை வடிவமைத்து விற்பனை செய்து வருகிறது.

இதனுடைய பிராண்ட்கள் W, Aurelia மற்றும் Wishful என்ற பெயர்களில் அறியப்படுகிறது.

இதில் W என்பது நகரங்களில் பிரபலமானதே.மேல் உள்ள லோகோவை பார்த்தால் தெரிய வரும்.

புதன், 18 ஜூலை, 2018

ஓவர்லோட் குழப்பத்தால் பதறும் ஆட்டோ நிறுவனங்கள்

மோடி அரசுக்கு எல்லோரையும் பதற்றத்தில் வைத்து இருப்பது பிடித்த வேலை போல.

திங்கள், 16 ஜூலை, 2018

ட்ரேட் மார்க்கில் பாடம் கற்பிக்கும் சரவண பவன்

கடந்த நான்கு நாட்களாக திருப்பதி பயணம். கீழ் திருப்பதியில் இருந்து மேல் திருப்பதிக்கு நடை பயணம். அதனால்  பதிவுகள் எழுத முடியவில்லை.


எங்கும் கூட்டம், எதிலும் தமிழ் என்று ஆந்திர மாநிலத்தில் இருந்தது போலவே தோன்றவில்லை.



திருப்பதிக்கு அண்மையில் உள்ள காளகஸ்தியில் கூட இதே அனுபவம் தான்.

மதராஸ் மனதே என்று கேட்டவர்களுக்கு திருப்பதி அமைந்திருக்கும் சித்தூர் மாவட்டத்தை கொடுத்து விட்டோம். ஆனால் தமிழின் ஆதிக்கம் இன்னும் அதிகமாகவே உள்ளது என்றே சொல்லலாம்.

திருப்பதியில் கிடைத்த ஒரு அனுபவத்தை நிர்வாக ரீதியாக பார்ப்போம்.

புதன், 11 ஜூலை, 2018

அபராதம் தவிர்த்து வருமான வரி பதிவு செய்க..

ஒவ்வொரு வருடமும் ஜூலை 31க்குள் வருமான வரி பதிவு செய்ய வேண்டும்.

இந்த வருடமும் வருமான வரி பதிவு செய்வதற்கான கடைசி தேதி நெருங்குகிறது.



ஆனால் இந்த வருடம் முதல் அரசு கட்டாய அபராதம் நிர்ணயித்துள்ளது.

ஐந்து லட்சத்திற்கு மேல் உள்ளவர்கள் ஜூலை 31க்கு பிறகு பதிவு செய்தால் 5000 ரூபாய் அபராதம் கட்ட வேண்டும். அதே நேரத்தில் டிசம்பர் 31க்கு மேல் பதிவு செய்தால் 10000 ரூபாய் அபராதம் கட்ட வேண்டும்.

ஐந்து லட்சத்திற்கு கீழ் உள்ளவர்கள் 1000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.

செவ்வாய், 10 ஜூலை, 2018

MSP விலை விவசாயிகளுக்கு எவ்வளவு பலன் தரும்?

கடந்த வாரம் மத்திய அரசு விவசாய விளை பொருட்களுக்கான குறைந்த பட்ச விலைகளை உயர்த்தியுள்ளது.

வியாழன், 5 ஜூலை, 2018

பாலிசி போடும் மக்களும், நாமம் போடும் அரசும்

நமக்கு இன்சுரன்ஸ் பாலிசி என்றாலே முன் வருவது LIC தான்.


அரசு நிறுவனமான LICயில் போட்ட பணத்திற்கு என்றுமே பாதுகாப்பு இருக்கும் என்ற ஒரு நம்பிக்கையும் இதற்கு காரணம்.




ஆனால் அரசு வங்கிகள் நலிந்த பிறகு எல்ஐசியை ஒரு பகடை காயாகத் தான் மத்திய அரசுகள் பயன்படுத்தி வருகின்றன.

நஷ்டத்தில் ஓடும் மத்திய அரசு நிறுவன பங்குகளை வாங்க ஆட்கள் இல்லையா? உடனே எல்ஐசியிடம் ஒப்படைத்து விடு.

அரசிடம் 24% பங்குகள் வைத்து இருக்க வேண்டும் என்ற கொள்கையால் நஷ்டத்தில் இயங்கும் ஏர் இந்தியாவை வாங்க யாரும் வரவில்லை.

புதன், 4 ஜூலை, 2018

ஒரு வழியாக ஐரோப்பிய டீலை கொண்டாடிய டாடா ஸ்டீல்

டாடா குழுமத்தை பொறுத்தவரை சந்திரசேகர் அவர்கள் பொறுப்பேற்ற பிறகு பல நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

திங்கள், 2 ஜூலை, 2018

பங்குகளை பேப்பரில் வைத்து இருந்தால் மாற்றுவீர்..அவசரம்!

இருபது வருடங்களுக்கு முன்னர் பங்குசந்தையில் முதலீடு என்பது இப்போது உள்ளது போல் கணினி முறைகளில் இல்லை.


அதனால் ஏகப்பட்ட அசௌகரியங்கள் இருந்தன.



நினைத்த நேரத்தில் ஆர்டர் செய்ய முடியாது. அப்படியே ஆர்டர் செய்தாலும் எதிர்பார்த்த பங்கு விலைகளில் மாற்றம் ஏற்பட்டு இருக்கும்.

வியாழன், 28 ஜூன், 2018

பொறுமையின் உச்சத்திற்கு இழுத்து செல்லும் சந்தை

சந்தையில் ஒரு பெரும் சோதனை காலத்தில் உள்ளோம்!

புதன், 27 ஜூன், 2018

Bright Solar IPOவை வாங்கலாமா?

நேற்று Varroc Engineering IPOவை பற்றி எழுதி இருந்தோம்.


அதே நாளில் இன்னொரு ஐபிஒவிற்கும் விண்ணப்பங்கள் திறக்கப்பட்டுள்ளன. நிறுவனத்தின் பெயர். Bright Solar Limited.



இன்னும் ஜூலை 5 வரை நான்கு நிறுவனங்களின் ஐபிஒக்கள் வரவிருக்கின்றன. அதனால் தொடர்ந்து ஐபிஒ கட்டுரைகளே எழுத வேண்டியுள்ளது. மற்ற கட்டுரைகளுக்கு பொறுத்தருள்க!

Bright Solar நிறுவனமானது குஜராத்தை மையமாக கொண்டு விவசாயத்திற்கு தேவையான சோலார் பம்புகள் தயாரிக்கும் நிறுவனம்.

இது போக, பெரிதளவிலான ப்ரோஜெக்ட்களுக்கும் கன்சல்டன்சி சேவையைக் கொடுத்து வருகிறது.

செவ்வாய், 26 ஜூன், 2018

Varroc Engineering IPOவை வாங்கலாமா?

என்ன தான் சந்தை அடி வாங்கினாலும் புதிய ஐபிஒக்கள் அரங்கேற்றம் நின்றபாடில்லை.


தற்போதைய சந்தை வீழ்ச்சி ஒரு தற்காலிகம் என்ற என்னமிருப்பதும் ஒரு காரணம்.



நேற்று தான் Rajnish Wellness IPOவை பற்றி எழுதி இருந்தோம். இன்று அடுத்த ஐபிஒ.

இதுவும் ஒரு வகையில் பல புதிய நிறுவனங்களின் வியாபரத் தன்மையை அறிந்து கொள்வதற்கும் நமக்கு உதவும். அதனால் விவரமாகவே பார்ப்போம்.

இன்று Varroc Engineering என்ற ஒரு நிறுவனத்தின் ஐபிஒ விண்ணப்பிக்கும் பணி தொடங்கி விட்டது.

திங்கள், 25 ஜூன், 2018

Rajnish Wellness IPOவை வாங்கலாமா?

இன்று முதல் Rajnish Wellness என்ற நிறுவனத்தின் ஐபிஒ விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.


இதனை வாங்கலாமா? வேண்டாமா? என்பதை பற்றி பார்ப்போம்.



முதல் முறையாக இந்திய பங்குசந்தையில் பாலியல் நல்வாழ்வு தொடர்புடைய ஒரு நிறுவனம் பங்குசந்தைக்குள் வருகிறது.

இந்த நிறுவனமானது பாதுகாப்பான உடலுறவிற்கு தேவையான காண்டம் உட்பட சில பொருட்களை தயாரித்து வருகிறது.

இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் PlayWin Capsules, PlayWin Condom, Rajnish Lotion, Play Win Spray, PlaWin Oil, Kasaav Powder என்ற ப்ராண்ட்களில் விற்கப்படுகிறது.

சனி, 23 ஜூன், 2018

GM Diet : ஏழு நாள் எடை குறைப்பு அனுபவம்

இது ஒரு முதலீடு சம்பந்தமான தளம்.

வியாழன், 21 ஜூன், 2018

Fine Organics IPOவை வாங்கலாமா?

நேற்று RITES நிறுவனத்தின் ஐபிஒ பற்றி எழுதி இருந்தோம்.

பார்க்க: RITES IPOவை வாங்கலாமா?


அதே நேர வேளையில் Fine Organics என்ற மற்றொரு ஐபிஒவும் வெளிவந்துள்ளது. அதனை பற்றியும் கொஞ்சம் அலசலாம்.



Fine Organics நிறுவனமானது மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது.

தாவர மற்றும் விலங்கு எண்ணெய்களில் இருந்து oleochemical வகை வேதிப்பொருட்களை தயாரித்து வருகிறது.

இவ்வாறு பெறப்படும் வேதிப்பொருட்கள் உணவு, பெயிண்ட், பிளாஸ்டிக், இங்க் போன்றவை தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது.

புதன், 20 ஜூன், 2018

RITES IPOவை வாங்கலாமா?

இன்று முதல் RITES நிறுவனத்தின் IPO பங்குசந்தையில் விண்ணப்ப வடிவில் வருகிறது.


இதனை வாங்கலாமா? தவிர்க்கலாமா? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.



RITES நிறுவனம் முழுக்க மத்திய அரசு சார்ந்த நிறுவனம். RITES என்பதன் விரிவாக்கம் Rail India Technical & Economic Services Ltd. என்பதாகும்.

இந்திய அரசின் ரயில்வே துறை தான் இந்த நிறுவனத்தின் ப்ரோமோடர் என்றும் சொல்லலாம்.

ரயில்வேயின் இரட்டை ரயில்பாதை போடுதல், ரயில் பாதை பராமரிப்பு, புதிய ரயில் பாதைகளை உருவாக்குதல், ரயில் மின் கட்டமைப்பு உருவாக்குதல்  போன்றன இந்த நிறுவனத்தின் முக்கிய பணிகள்.

வியாழன், 14 ஜூன், 2018

ASM பங்குகளை எப்படி கையாளுவது?

இந்த மாத தொடக்கத்தில் பங்குச்சந்தை அமைப்புகள் சில பங்குகளை ASM என்ற பிரிவிற்குள் மாற்றியது.


அதனால் இந்த பங்குகளில் வீழ்ச்சி என்பது ஐம்பது சதவீதம் வரை இருந்தது.



ASM என்பதன் விரிவாக்கம் Additional Surveillance Measures என்பது தான்.

செபியின் இந்த உத்தரவு பங்குசந்தையில் சில்லறை முதலீட்டாளர்களை காப்பாற்றுவதற்காகத் தான் தரப்பட்டது.

திங்கள், 11 ஜூன், 2018

RERA: அபார்ட்மென்ட் வாங்குமுன் அவசியம் கவனிக்க ...

நகர்ப்புறங்களில் அபார்ட்மென்ட் வாங்கும் போது இருக்கும் முக்கிய பிரச்சினை விற்பவரை எப்படி நம்புவது? என்பது தான்.


பங்குச்சந்தை அளவிற்கு இந்திய ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை படுத்தப்படாததால் பெரிய அளவில் ஏமாற்றங்கள் இருந்து வந்தது.



பல மடங்கு சம்பாதிப்பதில் இருக்கும் ஆர்வம் அதே அளவு தரத்துடன் இருக்க வேண்டும் என்பதில் ரியல் எஸ்டேட் விற்பவர்களுக்கு ஆர்வம் மிகவும் குறைவாக தான் இருந்தது.

அது தான் மொத்தமாக ரியல் எஸ்டேட் வீழ்ச்சிக்கும் கூட காரணமாக அமைந்தது என்று கூட சொல்லலாம்.

வெள்ளி, 8 ஜூன், 2018

மிட் கேப் பங்குகள் ஏன் இவ்வளவு அடி வாங்குகின்றன?

தற்போது சந்தையில் நிப்டி அல்லது சென்செக்ஸ் குறியீடுகளை அடிப்படையாக வைத்து ஒருவரது பங்கு போர்ட்போலியோ திறனை மதிப்பிட முடியவில்லை.

புதன், 6 ஜூன், 2018

மருத்துவத்துறையில் எங்கு முதலீடு செய்யலாம்?

பங்குசந்தையில் முதலீடு செய்பவர்கள் பாதுகாப்பாக கருதுவது நுகர்வோர் மற்றும் மருத்துவ துறைகள் தான்.

சனி, 2 ஜூன், 2018

திடீர் ஆடிட்டர் விலகல்களும், சரியும் பங்குகளும்

பங்குச்சந்தை முதலீட்டில் ரிஸ்க் என்பது எந்த விதத்தில் எப்படி வரும் என்றே சொல்ல முடியாது.

புதன், 30 மே, 2018

வேதாந்தாவிடம் என்றும் இல்லாத நம்பகத்தன்மை

பங்குசந்தையில் நம்மைப் போன்ற சிறு முதலீட்டார்களுக்கு இருக்கும் நம்பிக்கையே நிறுவனங்களை நடத்துபவர்கள் தான்.

செவ்வாய், 15 மே, 2018

தீராத கர்நாடக குழப்பத்தில் சந்தைக்கு கிடைத்த தெளிவு

நேற்றைய பதிவில் கர்நாடகா தேர்தல் முடிவுகளில் என்ன செய்வது? என்று எழுதி இருந்தோம்.

திங்கள், 14 மே, 2018

நாளை கர்நாடகா தேர்தல் முடிவுகள், என்ன செய்வது?

நீண்ட இடைவெளிக்கு பின் ஒரு பதிவு. நிறைய மின் அஞ்சல்கள், ஏன் எழுதவில்லை என்று...

வெள்ளி, 23 மார்ச், 2018

அமெரிக்கா-சீனா வர்த்தகப் போர், பாதிப்பு யாருக்கு?

அமெரிக்கா-சீனா வர்த்தகப் போரினால் ஏற்பட்ட  சரிவு நிப்டியின் முக்கிய சைக்கலாஜிகல் சப்போர்ட் நிலையான 10000 புள்ளிகளுக்கு கீழே இழுத்து சென்றது.

புதன், 21 மார்ச், 2018

வர்த்தக போர், தேர்தல், வங்கி முறைகேடு, என்ன செய்வது?

இது வரை வரலாற்று தரவுகளை பார்த்தால் மார்ச் மாதம் ஒன்றும் இந்த அளவு மோசமாக இருந்ததில்லை.

செவ்வாய், 20 மார்ச், 2018

Sandhar Techno IPOவை வாங்கலாமா?

வேகமாக வெளிவரும் IPOக்கள் காரணமாக அது பற்றியே அதிகமாக எழுத வேண்டி உள்ளது.


இதனால் சந்தை நிலவரத்தை கொஞ்சம் அதிகமாக அலசலாம் என்பது பற்றிய கட்டுரையும் தள்ளி போகிறது.

அதனைப் பற்றி நாளை எழுதி விட முயற்சிக்கிறோம்.



இன்று Sandhar Technologies என்ற நிறுவனத்தின் ஐபிஒ வெளியீடை பார்ப்போம்.

நாளை மார்ச் 21 என்பது விண்ணப்பங்களுக்கான கடைசி நாள். ஒரு பங்கின் விலை 332 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தில் இருக்கும் கடன் சுமையைக் குறைப்பதற்காக ஐபிஒ வெளியீட்டின் மூலம் 300 கோடி ரூபாய் திரட்ட முடிவு செய்துள்ளது.

திங்கள், 19 மார்ச், 2018

HAL IPOவை வாங்கலாமா?

நிதி வருட கடைசி என்பதால் என்னவோ பல ஐபிஒக்கள் கரடியின் பிடியில் இருக்கும் சந்தையில் கூட வரிசையில் நிற்கின்றன.


இந்த ஐபிஒக்களுக்கு தேவையான நிதி ஏற்கனவே இருக்கும் பங்குகளை விற்று கூட பெற முனைவதால் சந்தையின் சரிவிற்கு கூட இவை காரணாமாக உள்ளது என்று சொல்லலாம்.



நாளை, மார்ச் 20 அன்று  HAL IPOவின் கடைசி நாள்.

HAL என்பது Hindustan Aeronautical Ltd என்பதன் சுருக்கம் ஆகும்.

ஹெலிகாப்ட்டர், விமானங்கள் போன்றவை தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது.

பெரும்பாலும் மத்திய அரசே HAL நிறுவனத்திற்கு கிளின்ட்டாக உள்ளது.

வெள்ளி, 16 மார்ச், 2018

Bandhan Bank IPOவை வாங்கலாமா?

பந்தன் வங்கியின் ஐபிஒ வெளிவந்துள்ளது. வரும் திங்கள், மார்ச் 19 என்பது விண்ணப்பங்களுக்கு இறுதி நாளாகும்.


இரண்டு வருடங்களுக்கு முன்பு என்று நினைக்கிறோம்.




ரிலையன்ஸ் போன்ற பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் வங்கி லைசென்ஸ் பெறுவதற்கு போட்டியிட்டு இருந்தார்கள்.

அந்த சூழ்நிலையில் ரிசர்வ் வங்கி IDFC, Bandhan Bank என்று இரு வங்கிகளுக்கு மட்டும் அனுமதி அளித்தது.

அதில் பந்தன் வங்கிக்கு அளிமதிக்கப்பட்டதற்கு ஒரு காரணமாக கூறப்பட்டது, வட கிழக்கு இந்தியாவில் வங்கி கட்டமைப்பு இன்னும் பரவலாக இல்லை என்பது தான்.

புதன், 14 மார்ச், 2018

Bharat Dynamics IPOவை வாங்கலாமா?

நேற்றே Bharat Dynamicsவின் IPO விண்ணப்பங்கள் திறக்கப்பட்டு விட்டது. நாளை(15/03/2018) இறுதி வரை இருப்பதால் கடைசி நேரத்தில் பயன் பெறும் பொருட்டு இந்த பதிவினை எழுதுகிறோம்.


நமது குடியரசு தின அணிவகுப்புகளில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆகாஸ் ஏவுகணைகள் போன்றவை பார்வைக்கு வைக்கப்பட்டு இருக்கும்.

அதனைத் தயாரிக்கும் நிறுவனம் தான் Bharat Dynamics.



இது முழுக்க, அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பொதுத் துறை நிறுவனம்.

கடந்த அருண் ஜேட்லியின் பட்ஜெட்டில் பொதுத் துறை நிறுவன பங்குகள் மூலம் எண்பதாயிரம் கோடி அளவு நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டு இருந்தது.

அதில் Bharat Dynamics நிறுவனத்தின் பங்குகளும் உள்ளடங்கும்.

ஞாயிறு, 11 மார்ச், 2018

சரியும் மார்ச் மாதமும் கடந்து போகும்...

கடந்த பதிவு எழுதிய பிறகு பதினைந்து நாட்கள் என்பது ஒரு பெரிய இடைவெளி தான். மன்னிக்கவும்!


இந்த மாதம் எப்படி இருக்கும் என்பதை கடந்த மாத சில பதிவுகளிலே குறிப்பிட்டு இருந்ததால் புதிதாக எழுதுவதற்கு பெரிதளவு இல்லை.



இது போக, எமது தனிப்பட்ட சில வேலைகளும் ஒரு காரணமாக இருந்தது.

இந்த பதிவையும்  எமது தனிப்பட்ட முதலீடு சரிதையில் இருந்தே ஆரம்பிக்கிறோம்.

திங்கள், 19 பிப்ரவரி, 2018

டாட்டா ஸ்டீலின் ப்ரீமிய விலை டீல், யாருக்கு லாபம்?

எமது கட்டண போர்ட்போலியோவில் கடந்த வருடம் முதல் அடிக்கடி பரிந்துரைக்கப்பட்ட ஒரு பங்கு Tata Steel.

வியாழன், 15 பிப்ரவரி, 2018

பஞ்சாப் வங்கியில் முறைகேடு நடந்தது எப்படி?

மோடி ஒவ்வொரு முறையும் டிஜிட்டல் பண வர்த்தகம் பற்றி பேசும் போதும் பொது மக்களுக்கு பயம் வருவதற்கு முக்கிய காரணம் இந்திய வங்கிகளில் நடக்கும் முறைகேடுகளும் ஒன்று.

புதன், 7 பிப்ரவரி, 2018

அமெரிக்காவில் நல்லது நடக்க, நமக்கு ஏன் வலிக்கிறது?

நேற்றே இந்த பதிவினை எழுதி இருக்க வேண்டும். போதிய நேரம் இல்லாததால் இன்று தொடர்கிறோம்.

ஞாயிறு, 4 பிப்ரவரி, 2018

ஜேட்லியின் புதிய LTCG வரி, எப்படி சமாளிப்பது?

முந்தைய ஒரு பதிவிலே இந்த வருட தேர்தல் பட்ஜெட் பங்குசந்தைக்கு சாதகமாக இருக்காது என்று கூறி இருந்தோம்.


அதே போலவே, அருண் ஜெட்லியும் நிதி பற்றாகுறையை 3.5% என்று இருக்குமளவு பார்த்து விட்டு இருப்பதை மட்டும் அங்கும் இங்கும் பிரித்துக் கொடுத்து விட்டார்.



இதனால் பங்குச்சந்தையும் மகிழ்வு கொள்ளவில்லை. அதே நேரத்தில் விவசாயிகள், பொது மக்கள் என்று எவருக்கும் திருப்தி அளிக்காமல் போய் விட்டது.

இது ஒரு தற்காலிகம் என்பதால் விட்டு விடுவோம்.

அதே நேரத்தில் அருண் ஜெட்லி பங்குச்சந்தை முதலீடுகளில் கிடைக்கும் லாபத்திற்கு LTCG வரியில் சில மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளார்.

புதன், 31 ஜனவரி, 2018

சரியும் மிட் கேப் பங்குகள், வாங்குவதற்கான வாய்ப்பு

கடந்த பதிவில் உச்ச சந்தையில் பொறுமை காக்கும் நேரமிது என்று எழுதி இருந்தோம்.

செவ்வாய், 23 ஜனவரி, 2018

உச்ச சந்தையில் பொறுமை காக்கும் நேரமிது

கடந்த ஒரு பதிவில் 2018ம் புது வருட சந்தை கடந்த வரும் போல் உயர்வை தரும் என்று நம்ப முடியாது என்று கூறி இருந்தோம்.

செவ்வாய், 9 ஜனவரி, 2018

Apollo Micro Systems IPOவை வாங்கலாமா?

புது வருடத்தின் முதல் ஐபிஒவாக நாளை Apollo Micro Systems என்ற இந்த நிறுவனத்தின் ஐபிஒ வெளிவரவுள்ளது.


Apollo Micro Systems நிறுவனமானது இந்திய பொதுத்துறை பாதுகாப்பு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் ஒரு தனியார் நிறுவனம்.



DRDO, BHEL போன்ற அரசு நிறுவனங்கள் இதன் முதன்மையான வாடிக்கையாளர்கள்.

பாதுகாப்பு துறையில் ஏவப்படும் ராக்கெட், ஏவுகணைகள் போன்றவற்றிற்கு தேவையான எலெக்ட்ரானிக்ஸ் உபகரணங்களை தயாரித்து வருகிறது.

இதனை IP என்று அழைக்கப்படும் சிப்களை தயாரித்து வருவதால் இவை கண்டுபிடிப்புகளுக்கு ஒத்த உரிமத்தை பெற்றன.

அதனால் போட்டியாளர்கள் என்பது மிகக் குறைவு.

புதன், 3 ஜனவரி, 2018

BITCOIN நாணயத்தை எப்படி வாங்கலாம்? (4)

எமது பிட்காயின் தொடருக்கு இவ்வளவு வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. நண்பர்களுக்கு மிக்க நன்றி!

திங்கள், 1 ஜனவரி, 2018

புதிய வருடமும், பங்குச்சந்தை எதிர்பார்ப்புகளும்..

நண்பர்கள் அனைவருக்கும் எமது இதயங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!

2017ம் ஆண்டை பொறுத்தவரை பொது மக்களுக்கு GST, Demonetization என்று பிரச்சினைகளுக்குள் தான் ஓடிக் கொண்டிருந்தார்கள்.