செவ்வாய், 24 செப்டம்பர், 2019

வரிகுறைப்பு, யாருக்கு லாபம்? - Video

கடந்த பதிவில் வரிகுறைப்பும், கொண்டாட்டங்களும் என்ற தலைப்பில் எழுதி இருந்தோம்.



அது தொடர்பாக விரிவாக எழுதுமாறு நண்பர்கள் கேட்டு இருந்தார்கள்.

அதனை Video வடிவில் YouTube வழியாக பகிர்கிறோம்.

இதில் வரிகுறைப்பு தொடர்பான சில கணக்கீடுகளும் உள்ளன. அதனால் பங்கின் விலையில் ஏன் இவ்வளவு மாற்றமடைகிறது ?என்பதையும் அறியலாம்.

சில சமயங்களில் விரிவான விளக்கத்திற்கு எழுத்து வடிவத்தை விட Video அதிகம் பயனாக இருக்கும் என்று உணர்கிறோம்.

அதனால் எமது YouTube Channel Subscribe செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


Video வடிவம் கீழே உள்ளது.



திங்கள், 23 செப்டம்பர், 2019

அவதார புருஷர்கள்

கடவுளின் மனித ரூபமே அவதார புருஷர்கள்!

ஆனால் இன்று ஊருக்கு ஊரு, மாநில அளவில், நாடு அளவில் அவதார புருஷர்கள் புகழ் பாடுவது என்பது மிக அதிகமாகி விட்டது.



நேற்று பிகில் திரைப்படத்தின் இசை விழாவை சன் டிவியில் பார்க்க முடிந்த்தது.

நொடிக்கு நொடி, விஜயை புகழ்ந்து கொண்டே இருந்தது மிகப் பெரிய சலிப்பை தான் கொடுத்து இருந்தது.

திரைப்படங்களை ப்ரொமோட் செய்வதற்கு கதையை பற்றி சொல்லாமல் விழா முழுவதும் அவர் அப்படி, இப்படி என்று தேவலோகத்தில் இருந்து குதித்தவர் ரேஞ்சிற்கு மேலே கொண்டு வைக்கிறோம்.

வெள்ளி, 20 செப்டம்பர், 2019

வரிக்குறைப்பும், கொண்டாட்டங்களும்

இன்று நமது பங்குச்சந்தை பத்தாண்டுகளில் இல்லாத அளவு குத்தாட்டம் போட்டது.

எல்லாம், நிர்மலா சீதாராமன் அவர்களது ஒரு பேட்டி தான்.



கார்பரேட் நிறுவனங்கள் இதுவரை 30% அளவு லாபத்தில் வரி கட்டி வந்தார்கள். இனி இது 25% என்ற நிகர அளவில் குறையும்.

அதே போல், புதிதாக துவங்கும் ப்ராஜெக்ட்களுக்கு 15% அளவு வரி கட்டினால் போதுமானது.

அதனைத் தான் இன்று சந்தையின் பங்குகள் கொண்டாடி தீர்த்தன.

என்றாலும், அளவுக்கு மிஞ்சிய கொண்டாட்டம் போலே தெரிகிறது.

புதன், 18 செப்டம்பர், 2019

புலி வரும் கதை

கடந்த சில நாட்களாக சந்தை 11000 மற்றும் 10800 புள்ளிகளுக்கு இடையே தான் ஊசலாடிக் கொண்டிருக்கிறது.

நம்முடைய நிலைமைக்கு இன்னும் கீழே தான் செல்ல வேண்டும்.



ஆனால் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் ஏதாவது சலுகையுடன் வருவார் என்று சந்தை எதிர்பார்த்து கொண்டிருக்கிறது.

அம்மையாரும் இது வரை நான்கு தடவை மீட்டிங் வைத்துள்ளார்கள்.

அதனை வைத்து ஒன்றுமே செய்ய முடியாது என்பது தான் யதார்த்தம்.

அதாவது எல்லாமே நிர்வாக ரீதியான பிரச்சினைக்கான தீர்வுகள். பொருளாதார தேக்கத்திற்கான தீர்வுகள் அல்ல.

என்னிடம் ஒரு நிர்வாக பிரச்சினை இருந்தால் ஊரை கூட்டி தீர்த்து விடுவேன் என்று சொல்ல வேண்டிய அவசியமில்லை. அடக்கமாகவே செய்யலாம்.

ஞாயிறு, 15 செப்டம்பர், 2019

நீதிமன்ற உத்தரவிற்கு இணங்க..

கடந்த வாரத்தில் IndiaBulls தொடர்பாக வெளிச்சத்திற்கு வரும் IndiaBulls ஊழல் என்ற கட்டுரை எழுதி இருந்தோம்.

நீதிமன்றத்தில் IndiaBulls நிறுவனத்தில் நடந்த சில மோசடி பண வர்த்தனைகள் தொடர்பாக தொடரப்பட்ட பொது வழக்கு பற்றி எழுதி இருந்தோம்.



கடந்த வெள்ளியன்று டெல்லி நீதிமன்றம் IndiaBulls தொடர்ந்த வழக்கில் கீழ் உள்ளவாறு தீர்ப்பு வழங்கி உள்ளது.

"சுப்ரமணிய சுவாமி அவர்களோ அல்லது இணையதளம், ட்விட்டர், பேஸ்புக் வழியாகவோ IndiaBulls நிறுவனத்திற்கு எதிராக எழுத கூடாது.

ஏற்கனவே எழுதப்பட்ட கட்டுரைகளும் நீக்கப்பட வேண்டும்"

புதன், 11 செப்டம்பர், 2019

OLA, UBER மட்டும் தான் காரணமா? - Video

நேற்று நிர்மலா சீதாராமன் அவர்கள் ஆட்சியின் நூறு நாள் சாதனைகளை கூறும் போது, ஆட்டோ துறையின் வீழ்ச்சிக்கு OLA, UBER போன்றவை காரணம் என்று கூறி இருந்தார்.

அவர் கூறியது போல் ஒலாவும் ஊபரும் காரணங்களில் ஒன்றாக இருக்கலாம். ஆனால் அதுவே முக்கிய காரணமாக இருக்க முடியாது.



நாமும் பல வளர்ந்த நாடுகளில் பார்த்து இருக்கிறோம்.

இந்த அளவிற்கு Taxi Aggregators நிறுவனங்களுக்கு எங்கும் வரவேற்பு இருந்ததில்லை.

சாலையில் நிற்க, டாக்ஸிக்கு கை நீட்டினால் மீட்டர் கட்டணத்தில் சொல்லும் இடத்திற்கு சென்று விடுவார்கள். அதனால் OLA, UBER தேவையும் குறைவு தான்.

ஆனால் இங்கு நிலைமை வேறு.

இப்பொழுதும் ஆட்டோவில் செல்லும் போது உங்களது வருமானத்தில் 30%, 40% இழப்பதற்கு நீங்கள் தான் காரணம் என்று டிரைவர்களிடம் சொல்வதுண்டு.

சனி, 7 செப்டம்பர், 2019

வெளிச்சத்திற்கு வரும் IndiaBulls ஊழல்

பொது மக்கள் பணம் எப்படி தனியார் நிறுவனங்களால் சூறையாடுப்படுகிறது என்பதை இந்த கட்டுரை விளக்கும்.

IndiaBulls நிறுவனம் வங்கி சாராத கடன்களை அளிக்கும் ஒரு நிறுவனம்.



நண்பர் ஒருவர் IndiaBulls நிறுவனத்திடம் வீட்டுக் கடன் வாங்குவதற்கு Approval இல்லாததால் எண்பதாயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்து கடன் வாங்கி இருந்தார்.

அப்பொழுதே நாம் SBIக்கு லோ லோ என்று அலைந்து கடன் வாங்கும் சூழ்நிலையில் IndiaBulls போன்ற நிறுவனங்களுக்கு இந்தக் கடன் எப்படி லாபமாக இருக்கும் என்று நினைத்தது உண்டு.

ILFS, DHFL போன்ற நிறுவனங்கள் கூட இதே முறையில் தான் மக்கள் பணத்தை ஆட்டையை போட்டுள்ளன.

நேற்று டெல்லி நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வியாழன், 5 செப்டம்பர், 2019

நாளைக்கு என்னவோ?

நாளை வெள்ளிக்கிழமை. நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு நல்ல நாள்.

நிதி அமைச்சராக பதவி ஏற்ற பிறகும் பட்ஜெட் தாக்கல் செய்த பிறகும் இவர் பேட்டி கொடுக்க மாட்டார்களோ என்று பத்திரிகையாளர்கள் அலைந்தனர்.



ஆனால் ஒரு சில வாரங்களில் நடந்த மாற்றங்கள் வாரந்தோறும் பிரஸ் மீட் வழியாகவே மினி பட்ஜெட்டை தாக்கல் செய்யும் அளவிற்கு கொண்டு சென்றுள்ளது.

அந்த வகையில் கடந்த இரு வாரங்களாக வெள்ளிக் கிழமை தோறும் நான்கு மணிக்கு பேட்டிக்கு வந்து விடுகிறார்.

அந்த செய்தி வரும் சூழ்நிலையில் நிப்டி ஒரு சதவீதமாவது ஏறி விடுகிறது.:)

ட்ரேடிங் செய்பவர்களுக்கு தெரிந்து இருக்கலாம்.

செவ்வாய், 3 செப்டம்பர், 2019

எந்த பக்கம் வழி இருக்கிறது?

கடந்த வெள்ளியன்று எழுதியது போல் இன்று சந்தை பெரு வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

ஜிடிபி குறைவு, ஆட்டோ விற்பனை வீழ்ச்சி போன்று பல எதிர்மறை விடயங்களை கடந்த வார இறுதி நாட்கள் சேர்த்து வைத்து இருந்தன.



ஆனாலும் ET போன்ற சில மீடியாக்கள் Mild Start எதிர்பார்க்கலாம் அல்லது மேலே போகலாம் என்று சொன்னது ஆச்சர்யமே அளித்தது.

இவ்வளவுக்கும் நேற்று சிங்கப்பூர் எக்ஸ்சேஞ்சில் நேற்றே ஒரு சதவீதத்திற்கும் மேல் சரிந்து இருந்தது.