ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

Snowman IPOவில் எத்தனை பங்குகள் கிடைக்கும்?

கடந்த வாரத்தில் Snowman IPOவை வாங்குமாறு பரிந்துரை செய்து இருந்தோம். அதன்படி, பல நண்பர்கள் முதலீடு செய்ததை மெயில்கள் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது. தங்கள் நம்பிக்கைக்கு நன்றி!

வியாழன், 28 ஆகஸ்ட், 2014

சிறிய இடைவெளிக்கு பிறகு செப்டெம்பர் மாதத்தில் போர்ட்போலியோ

SNOWMAN IPOவை வாங்குமாறு கடந்த பதிவில் கூறி இருந்தோம். சில சமயங்களில் நல்ல டிமேண்ட் இருப்பதும் கெடுதலாக அமைந்து விடுகிறது. ஆமாம். நாம் முன்னர் சொல்லியவாறு Oversubscription ஆகி உள்ளது.

புதன், 27 ஆகஸ்ட், 2014

நிலங்களை விற்கும் போது இப்படி வரியை சேமிக்கலாம்

இதற்கு முன் பங்கு வருமானத்திற்கு வரி உண்டா? என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதி இருந்தோம்.

அதில் Long Term Capital Gain (LTCG) என்பதன் மூலம் பங்கு முதலீட்டில் முழுமையாக வரியை சேமிக்கலாம் என்று கூறி இருந்தோம். அதே கட்டுரையில் பங்குச்சந்தை அல்லாத ரியல் எஸ்டேட், தங்க முதலீடு போன்றவற்றிக்கு வரி உள்ளதையும் சுட்டிக் காட்டி இருந்தோம்.


சில கணக்கீடுகள் மூலம் அரசு நமக்கு வரியை சேமிக்கும் வழியை அளிக்கிறது. அதனைப் பற்றி விவரமாக பார்ப்போம்.

Long Term Capital Gain Tax


ரியல் எஸ்டேட் முதலீடுகளை மூன்று வருடத்திற்குள் விற்றால் அது Short Term Capital Gain (STCG) என்ற பிரிவிற்குள் வந்து விடும். அதாவது உங்கள் லாபத்திற்கு 30% வரை வரி கட்ட வேண்டி இருக்கும்.

ஆனால் மூன்று வருடத்திற்கு பிறகு விற்றால் LTCG முறை மூலம் அதிக பலனை பெறலாம். ஆனால் LTCG முறையில் கூட 20% வரி கட்ட வேண்டி இருக்கும்.

செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

Snowman IPOவை வாங்கலாமா?

இந்தியாவில் இணைய வணிகம், மின்சாரம் போன்றவற்றை அடுத்து அதிக வளர்ச்சி வருமானம் எதிர்பார்க்கப்படுவது உணவு பதப்பனிடுதல் துறை. இந்த துறையில் முதல் முறையாக ஒரு நிறுவனம் பங்குச்சந்தையில் நுழைகிறது. அந்த நிறுவனத்தின் பெயர் Snowman Logistics Limited.

திங்கள், 25 ஆகஸ்ட், 2014

நிலக்கரி ஊழல் தீர்ப்பில் நாம் என்ன செய்வது?

நேற்று காலையில் 150 புள்ளிகள் வரை உயர்ந்த சென்செக்ஸ், உச்ச நீதிமன்றத்தின் ஒரு தீர்ப்பால் இறுதியில் அனைத்தையும் இழந்து விட்டது. பங்குச்சந்தையைப் பொறுத்த வரை அவ்வளவு ஒரு பரபரப்பு தீர்ப்பாக இருந்தது.

வியாழன், 21 ஆகஸ்ட், 2014

ஆயில் விலை குறைந்ததால் உற்சாகத்தில் பெட்ரோல் பங்குகள்

கடந்த இரண்டு வாரமாக சந்தையைப் பார்த்து வரும் போது ஒரு நல்ல விடயம் புலப்படுகிறது. அதாவது கடந்த சில வருடங்களாக ஒதுக்கப்பட்ட சில துறை பங்குகள் மீண்டும் எழுச்சியை அடைந்து வருவது நாட்டின் பொருளாதரத்திற்கு நல்ல அறிகுறியே.

புதன், 20 ஆகஸ்ட், 2014

நிறுவனத்தை மதிப்பிட உதவும் டிவிடென்ட்டை எப்படி கணக்கிடுவது? (ப.ஆ - 27)

"பங்குச்சந்தை ஆரம்பம்' தொடரின் முந்தைய கட்டுரையில் முக மதிப்பு பற்றி விரிவாக எழுதப்பட்டது. அதன் தொடர்ச்சியாக டிவிடென்ட் பற்றியும், முகமதிப்பை அடிப்படையாக வைத்து டிவிடென்ட் தொகையினை கணக்கிடுவது பற்றியும் தற்போது பார்ப்போம்.

செவ்வாய், 19 ஆகஸ்ட், 2014

மூத்தக் குடிமக்களுக்கு ஒரு பயனுள்ள ஓய்வூதிய திட்டம்

கடந்த ஆகஸ்ட் 15 அன்று நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அவர்கள் மூத்தக் குடிமக்களுக்காக ஒரு ஓய்வூதிய திட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளார். அதனுடைய சாதகங்கள், பாதகங்கள் பற்றி இந்த கட்டுரையில் பார்ப்போம்.

ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2014

பங்குச்சந்தையை மயக்கும் மோடியின் சுதந்திர தின பேச்சு

ஆட்சிக்கு வந்து சில மாதங்களே ஆகியுள்ளதால் மோடி அரசின் செயல்பாடுகளை இன்னும் யாரும் மதிப்பிடவில்லை. ஆனால் தனது ஒவ்வொரு பேச்சின் போதும் மோடி அவர்கள் ஒரு வித புது நம்பிக்கையைப் பெற்று வருகிறார். இது தான் நாட்டை ஆளும் தலைவருக்கு கண்டிப்பாக இருக்க வேண்டிய பண்பு  என்றும் சொல்லலாம்.

செவ்வாய், 12 ஆகஸ்ட், 2014

சன் டிவியின் ஆளுமையும் பங்கும் சரிகிறது

சன் டிவி நிறுவனத்திற்கு தமிழகத்தில் அறிமுகம் கொடுக்கத் தேவையில்லை. இருபது வருடங்களாக தென் இந்தியாவில் மீடியா துறையில் முதல் இடத்தில இருக்கும் நிறுவனம்.

திங்கள், 11 ஆகஸ்ட், 2014

மைக்ரோமேக்ஸ் நிறுவனத்திடம் முதலிடத்தை இழந்த சாம்சங்

"மொபைல் மார்கெட்டை இழக்கும் சாம்சங்?" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை முன்பு எழுதி இருந்தோம். கட்டுரையை நிகழ்வுகளின் அடிப்படையில் ஒரு வித அனுமானத்தில் தான் சொல்லி இருந்தோம்.

ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

முக மதிப்பின் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்வோம் (ப.ஆ - 26)

'பங்குச்சந்தை ஆரம்பம்' தொடரின் முந்தைய பாகத்தில் Depreciation பற்றி விளக்கி இருந்தோம். அதன் தொடர்ச்சியாக "face value" என்ற முக்கிய பதத்தைப் பற்றி இந்த பாகத்தில் காணலாம்.

வியாழன், 7 ஆகஸ்ட், 2014

பங்குச்சந்தையில் ராஜன் எச்சரிக்கையை எப்படி எடுத்துக் கொள்வது?

கடந்த வெள்ளியில் சொல்லியது போல், இந்த வாரம் சந்தை தாழ்வாகவே முடிந்தது. அதனால் வாங்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி இருக்கலாம் என்று நம்புகிறோம். அடுத்து, இந்த வாரத்தின் நிகழ்வுகளைப் பார்ப்போம்.

புதன், 6 ஆகஸ்ட், 2014

நிதி நிறுவனங்கள் ஏன் வளரும் நிறுவனங்களில் முதலீடு செய்கின்றன?

ஈரோட்டைச் சேர்ந்த சதீஷ் என்கிற சுயதொழில் ஆர்வமுடைய நண்பர் முதலீடு தொடர்பான சில கேள்விகளை எமக்கு மின் அஞ்சலில் அனுப்பி இருந்தார். நல்ல கேள்விகள் என்பதால் பதில்களுடன் தளத்திலும் பகிர்கிறோம்.

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

இளைஞர்களுக்கு நம்பிக்கை தரும் ப்ளிப்கார்ட் வெற்றி

இதற்கு முன் நாணயம் விகடன் பத்திரிகை படிக்கும் போது சுயதொழில் வெற்றி பெற்றவர்கள் வாழ்க்கை எழுதி இருப்பார்கள். ஒவ்வொருவரது வாழ்க்கையை படிக்கும் போது ஒரு விடயம் பொதுவாக இருக்கும்.


அதாவது அதிக பொறுமை தேவை. உடனே யாரும் பணக்காரராகி விட முடியாது என்று தெளிவாக சொல்லி இருப்பார்கள். இது உண்மையானதாகவே இருந்தாலும் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு தளர்வை கொடுக்கும் கருத்தாகவே இருக்கும்.

ஆனால் புதிய முயற்சியும் தெளிவான திட்டமிடுதலுடன் கூடிய பாதை இருந்தால் வெற்றியை சுவைக்க அவ்வளவு காலம் காத்து இருக்க தேவையில்லை என்பதை தற்போதைய ப்ளிப்கார்ட் நிறுவனத்தின் வெற்றி சுட்டிக் காட்டுகிறது.

இதற்கு முன் பன்சால்களால் முடிந்தது தமிழரால் முடியாதா? என்று ஒரு கட்டுரை எழுதி இருந்தோம். அதன் தொடர்ச்சியாக இந்த கட்டுரையை கருதிக் கொள்ளலாம்.



பின்னி பன்சால், சச்சின் பன்சால் என்ற 81ல் பிறந்த இரண்டு இளைஞர்கள் 2007ல் வெறும் 4 லட்ச முதலீட்டில் ஆரம்பித்த நிறுவனம் தான் ப்ளிப்கார்ட். ஆனால் இன்று நிறுவனத்தின் மதிப்பு 42,000 கோடியாக உயர்ந்துள்ளது.

இந்த உயர்வை சதவீதத்தில் சொல்வதாக இருந்தால் கூட பல பூஜ்யங்களை போட வேண்டி உள்ளது.

திங்கள், 4 ஆகஸ்ட், 2014

முதலீடு தளத்தில் நீங்களும் எழுதலாம்

பல வித துறைகளில் பணிபுரிந்து வரும் எமது வாசகர்கள் துறை அனுபவங்களை தமிழில் எழுதுவதற்கு எமது தளத்தில் ஒரு வாய்ப்பு.

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014

பணக்கார நாடுகளின் நியாயமற்ற வர்த்தகக் கொள்கை

கடந்த வாரம் மோடி அரசின் ஒரு நிலைப்பாடு பாராட்டத்தக்க வேண்டியது. தடையற்ற வர்த்தக கொள்கையில் இந்தியா தமது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி சரியான நிலைப்பாட்டை எடுத்தது.

வெள்ளி, 1 ஆகஸ்ட், 2014

சரிவுகளில் பங்கு வாங்கும் வாய்ப்புகளை ஏற்படுத்திய வாரம்

எமது கடந்த வார பதிவில் சென்செக்ஸ் 500 முதல் 700 புள்ளிகள் வரை குறைய வாய்ப்புள்ளது என்று கூறி இருந்தோம். அதே போல் இந்த வாரத்தில் 700 புள்ளிகள் வரை குறைந்து பங்குகளை வாங்கும் வாய்ப்புகளை ஏற்படுத்தியது.