வெள்ளி, 31 ஜூலை, 2015

இறுதிக் கட்ட அமலாக்கத்தை நெருங்கும் GST வரி

ஏற்கனவே GST வரி விதிப்பின் பலன்கள் பற்றி விரிவாக எழுதி இருந்தோம்.

பார்க்க:  GST வரியால் என்னென்ன பயன்கள் கிடைக்கும்?

வியாழன், 30 ஜூலை, 2015

மேகி தடையால் முதல் முறையாக நஷ்டம் கொடுத்த நெஸ்லே

இந்த காலாண்டில் மிக முக்கியமாக எதிர்பார்க்கப்பட்ட நிதி அறிக்கை நெஸ்லே நிறுவனத்தின் முடிவுகள் தான்.

ஷேர்கானை வாங்கிய பரிவாஸ்

இந்தியாவில் டிமேட் சேவை கொடுக்கும் நிறுவனங்களில் ஷேர்கானும் ஒன்று. (ShareKhan)

புதன், 29 ஜூலை, 2015

32 மடங்கிற்கும் அதிகமாக விண்ணப்பங்கள் பெற்ற Syngene IPO

கடந்த வாரம் ஒரு பதிவில் Syngene IPOவிற்கு விண்ணப்பிக்குமாறு பரிந்துரை செய்து இருந்தோம்.

நெஞ்சைத் தொடும் கலாமின் இளமைப் பருவம்

Tamil.oneindia.என்ற இணையதளத்தின் ஆசிரியர் திரு.ஏ.கே.கான் அவர்களின் கட்டுரைகளுக்கு நாம் பரம ரசிகர்.

சஹாரா ம்யூச்சல் பண்ட் அங்கீகாரம் ரத்து செய்யப்படுகிறது

சஹாரா நிறுவனத்தை பற்றி தெரிந்து இருக்கும். ஓகோவென்று இருந்து மோசடி புகார்களால் ஒன்றுமில்லாமல் போனவர்கள். பொது மக்களின் இருபதாயிரம் கோடி ரூபாய்க்கும் மேலான பணத்தை ஸ்வாகா செய்தவர்கள்.


அதனை பற்றிய விவரமான கட்டுரையை இங்கு காணலாம்.
சஹாரா - மற்றொரு இந்திய கார்ப்பரேட் கரும்புள்ளி



சஹாரா நிறுவனம் ம்யூச்சல் பண்ட் சேவையும் கொடுத்து வருகிறது. 24 பரஸ்பர நிதிகள் மூலம் கிட்டத்தட்ட 150 கோடி ரூபாயை ம்யூச்சல் பண்ட் மூலம் திரட்டியுள்ளார்கள்.

இந்த நிலையில் ம்யூச்சல் பண்ட் போர்ட்போலியோ சேவையில் ஈடுபட சஹாரா நிறுவனத்திற்கு தகுதி இல்லை என்று செபி அறிவித்து உள்ளது.

செபியின் உத்தரவின் படி,
  • புதிதாக எந்த பயனாளிகளையும் சேர்க்க கூடாது.
  • அடுத்த ஐந்து மாதங்களுக்குள் சஹாரா ம்யூச்சல் பண்ட் சேவையை வேறொரு நிறுவனத்திடம் கொடுக்க வேண்டும்.
  • அவ்வாறு கொடுக்க முடியாவிட்டால் ஆறாவது மாதத்தில் மக்களிடம் சேகரித்த பணத்தை எந்த வித கட்டணமும் இல்லாமல் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று செபி அறிவுறுத்தியுள்ளது.

சஹாரா நிறுவனம் செய்த பிற மோசடிகளின் எதிர்விளைவாகவே இந்த அனுமதி ரத்தை பார்க்க வேண்டி உள்ளது.

செவ்வாய், 28 ஜூலை, 2015

பங்குச்சந்தை ரகசியங்கள் - புத்தக விமர்சனம்

பங்குச்சந்தை மற்றும் தனி நபர் மேம்பாடு பற்றி அதிக அளவில் எழுதி வந்துள்ள திரு,சோம வள்ளியப்பன் அவர்கள் எழுதிய ஒரு புத்தகத்தை படித்த அனுபவத்தை பதிவு செய்கிறோம்.


முதலில் ஆசிரியர் சோம வள்ளியப்பன் அவர்களைப் பற்றி சொல்லி விடலாம்.



பல நிறுவனங்களில் மேலாண்மை துறைகளில் பணிபுரிந்து தற்போது அதிக அளவில் புத்தகங்களை எழுதி வருகிறார். இதைப் போல் மீடியாக்களிலும் தனிநபர் மேம்பாடு பற்றிய கருத்தரங்குகளிலும் காண முடிகிறது.

அவரது எளிய எழுத்து நடை எதனையும் எளிதாக புரிய வைத்து விடும் என்பதை அவரது அணைத்து புத்தகங்களிலும் காணலாம். இந்த புத்தகமும் விதி விலக்கல்ல..

P-Notes என்றால் ஜெட்லி இவ்வளவு பயப்படுவதேன்?

நேற்று சந்தை 500 புள்ளிகளுக்கும் கீழ் வீழ்ச்சி அடைந்தது. அதற்கு ஒரு முக்கியக் காரணமாக கருதப்பட்டது P-Notes என்பதாகும்.

திங்கள், 27 ஜூலை, 2015

அப்துல் கலாம் அவர்களுக்கு அஞ்சலி!

இன்று முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் மேகாலாயா மாநிலத்தில் சொற்பொழிவு நடக்குமிடத்தில் காலமானார்.

ரியல் எஸ்டேட் விலைகள் இறங்குவதற்கு ஒரு வாய்ப்பு..

இந்தியாவில் மற்ற எல்லாத் துறைகளையும் விட ரியல் எஸ்டேட் துறை தான் மட்டமான வளர்ச்சியில் உள்ளது என்று சொல்லலாம்.


தற்போதைய நிலவரப்படி, கட்டிப் போட்டு காலியாக கிடக்கும் அபார்ட்மென்ட்களின் எண்ணிக்கை கணிசமாக உள்ளது.



அதாவது இந்த காலியாக கிடக்கும் அபார்ட்மென்ட்களை விற்க மட்டும் இன்னும் ஒன்றரை வருடம் தேவைப்படுமாம்.

இதனால் பெரும்பாலான கட்டுமான நிறுவனங்கள் புதிய ப்ராஜெக்ட்கள் தொடங்குவதையே நிறுத்தி விட்டார்கள். இருப்பதை முதலில் விற்று விடுவோம் என்ற முடிவுக்கு வந்து விட்டார்கள்.

ஞாயிறு, 26 ஜூலை, 2015

மீண்டும் சாதகமாக திரும்பும் பங்குச்சந்தை காரணிகள்

கடந்த வாரம் பங்குச்சந்தைகளில் திருத்தங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக எழுதி இருந்தோம்.

வெள்ளி, 24 ஜூலை, 2015

ரிசர்வ் வங்கிக்குள் அரசியல் புகும் அபாயம்

இந்தியாவில் சில அரசு அமைப்புகளான ரிசர்வ் வங்கி, இஸ்ரோ, செபி, உச்ச நீதி மன்றம், ஐஐடி, தேர்தல் கமிசன் போன்றவற்றின் செயல்பாடுகள் நன்றாக இருப்பதற்கு ஒரே காரணம் அங்கு அரசியல் புகாமல் இருப்பதே.

வியாழன், 23 ஜூலை, 2015

SYNGENE IPOவை வாங்கலாமா?

கடைசியாக ஏப்ரல் மாதத்தில் தான் VRL IPOவைத் தான் பரிந்துரை செய்து இருந்தோம். அதுவும் 40% அளவு லாபம் கொடுத்து இருந்தது.

பார்க்க: VRL Logistics IPOவை வாங்கலாமா?

ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு நிதி திரட்டுவது எவ்வளவு கடினமாகிறது?

தற்போது இந்தியா Start-up என்று சொல்லப்படும் சுயதொழில் முனைவோர் காலத்திற்குள் நுழைந்துள்ளது.


கடந்த இரண்டு வருடங்களில் மிக அதிக அளவில் புதிய நிறுவனங்கள் தொடங்கப்படுவதாக செய்திகள் வருகின்றன.



சிலர் பெரிய நிறுவனங்களில் கிடைத்த அனுபவங்களைப் பெற்ற பிறகு அதனைத் தங்கள் சுயதொழில் நிறுவனங்கள் துவங்குவதற்கு பயன்படுத்தி வருகின்றனர்.

பல பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் இந்த செய்திகள் மிக நல்ல மாற்றம் என்று சொல்லலாம்.

இந்த சூழ்நிலையில் சில யதார்த்தங்களையும் மற்றொரு பக்கமாக பார்க்கலாம்.

புதன், 22 ஜூலை, 2015

வேலை தேட ஒரு அரசு இணைய தளம்

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் மோடி அரசு தேசிய அளவில் ஒரு வேலை வாய்ப்பு இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

நோக்கியாவால் நஷ்டக்கணக்கு எழுதும் மைக்ரோசாப்ட்

ஒரு காலக்கட்டத்தில் மொபைல் வியாபாரத்தில் கோலோச்சிக் கொண்டிருந்த நோக்கியா கீழே வீழ்ந்தது என்பது மிகக் குறுகிய காலத்தில் நடந்து விட்டது.

செவ்வாய், 21 ஜூலை, 2015

ஐந்து வருட குறைவு விலையில் தங்கம், வாங்கலாமா?

கடந்த இரு வாரங்களாக தங்கத்தின் மதிப்பு மிக வேகமாக வீழ்ச்சி அடைந்து வருகிறது.


அதற்கு இரு முக்கிய காரணங்கள் குறிப்பிடப்படுகிறது.



ஒன்று, அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தைக் கூட்டலாம் என்று பேச்சு அடிபடுகிறது. இதனால் அமெரிக்க டாலரின் மதிப்பு கூடுவதற்கான வாய்ப்பு உள்ளது.

திங்கள், 20 ஜூலை, 2015

எதிர்பார்ப்புகளையும் மீறிய இன்போசிஸ் நிதி அறிக்கை

இன்று இன்போசிஸ் நிறுவனத்தின் நிதி அறிக்கை வெளியானது.

சாம்சங் நிறுவனத்தை கைக்குள் கொண்டு வர கஷ்டப்படும் நிறுவனர்

சாம்சங் நிறுவனத்தை பற்றி அறிந்து இருப்போம்.அதனை நாம் ஒரு எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனமாகவே அறிந்து இருப்போம்.

ஞாயிறு, 19 ஜூலை, 2015

இந்திய பங்குச்சந்தை திருத்தமடைய வாய்ப்பு

சீனா, கிரீஸ் என்று ஆடிக் கொண்டிருந்த உலகக் காரணிகள் எல்லாம் தற்போது அமைதியாகி உள்ளன.

வியாழன், 16 ஜூலை, 2015

இந்தியாவில் எந்த கண்டுபிடிப்பும் இல்லை - யார் காரணம்?

நேற்று இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி கடந்த 60 ஆண்டுகளாக எந்தக் கண்டுபிடிப்பும் இல்லை என்று ஒரு விமர்சனத்தை வைத்துள்ளார்.

ஜூலையில் மழை அளவு குறைந்தது

இந்த வருடம் பருவமழை குறைவாக இருக்கும் என்று தான் பரவலாக அறியப்பட்டது.

இனி வாட்ஸ்ஆப்பில் பேச காசு கொடுக்க வேண்டும்?

ஏர்டெல் ஆரம்பித்து வைத்த நெட் ஜீரோ என்ற திட்டம் இணைய சமநிலை பற்றி பல விவாதங்களை தோற்றுவித்தது.

ஒரு சிறு உதவி வேண்டுதல்..

நண்பர்களுக்கு,

ஜூலை 18ந் தேதி  தரவுள்ள போர்ட்போலியோவில் ஆர்வமாக இணைந்ததற்கு நன்றி!

புதன், 15 ஜூலை, 2015

மொபைல் டவர் பரிமாற்றங்களில் ஏர்டெல், வோடபோன், ஐடியா

இந்த சந்தேகம் பல நாட்களாக இருந்ததுண்டு.

ஸ்பெக்ட்ரம் ஏலம் அடிக்கடி நடக்கிறது. சில நிறுவனங்கள் வெற்றி பெறுகின்றன. சில ஸ்பெக்ட்ரத்தை இழந்து விடுகின்றன.

விவேகமும் பொறுமையும் சுயதொழிலில் எவ்வளவு அவசியமாகிறது?

இணையத்தில் எமது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக திரட்டிய தகவல்களை கட்டுரை வடிவத்தில் பகிர்கிறோம்,


கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவை பார்த்தால் சிறு நிறுவனங்களை ஆரம்பிப்பவர் எண்ணிக்கை மிக அதிகமாகி விட்டது.



அதற்கு இ-காமெர்ஸ் துறையும் ஒரு முக்கிய காரணம் என்று சொல்லலாம். ப்ளிப்கார்ட், ஸ்னேப்டீல் என்று சாதரணமாக ஆரம்பிக்கப்பட்ட நிறுவனங்கள் மிகப்பெரிய நிறுவனங்களாகி விட்டன. இந்த நிறுவனங்கள் பல மடங்கு தன்னம்பிக்கையை மக்களிடம்  விதைத்துள்ளன என்று சொன்னால் மிகையாகாது.

மற்றொரு பார்வையில் பார்த்தால்,
முன்பு போல் இல்லாமல் மக்களிடம் பெரிய அளவில் பணப்புழக்கம் உள்ளது. அதே நேரத்தில் ஆரம்ப கட்ட முதலீடு என்பதை விட நல்ல ஐடியாக்களும், அதனை செயல்படுத்தும் திறமையுமே தற்போது முக்கியத்துவம் பெறுகிறது.

செவ்வாய், 14 ஜூலை, 2015

ULIP முதலீடுகள் ரிடர்ன் அதிக வீழ்ச்சியடைய வாய்ப்பு

நமது ஊரில் இன்சுரன்ஸிற்கும் முதலீட்டிற்கும் அவ்வளவு வித்தியாசம் இல்லாததால் வந்த ஒரு வித்தியாசமான பண்ட் தான் ULIP.


இதைப் போல் ஒரு மோசமான முதலீடு திட்டம் எந்த நாட்டிலும் இருக்காது.



உறவுக்கார ஏஜெண்ட் ஒருவர் தொல்லையால் ULIPல் முதலீடு செய்து ஒரு மோசமான அனுபவத்தை பெற்று இருந்தோம்.

அந்த அனுபவத்தால் ஏற்கனவே ஒரு எதிர்மறை விமர்சனம் கொடுத்து இருந்தோம்.

ஒரு வருடத்தில் இரண்டு மடங்கு லாபம் கொடுத்த DION

இது ஒரு மகிழ்வான செய்தி...

திங்கள், 13 ஜூலை, 2015

பகுதி நேர வேலைக்கு வருமான வரி செலுத்துவது எப்படி?

தற்போது இணைய உலகம் பிரபலமாகிய பிறகு பகுதி நேர வேலைகளும் அதிகரித்து விட்டது. அதிக அளவு வருமானம் தருமளவு பகுதி நேர வேலைகளும் மாறி விட்டது.


Freelancers, ப்ளாக் எழுதுவது என்று பல வழிகள்  மூலம் சம்பாதிப்பது என்பது இன்று மிக அதிகமாகி விட்டது. நல்ல விசயமும் கூட...

சில இந்திய ப்ளாக்கர்கள் மாதத்திற்கு ஐந்து லட்ச ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பதாக இணையத்தில் பார்த்து இருக்கிறோம். கண்டிப்பாக நாம் அந்த பட்டியலில் இல்லை...:)



இவ்வாறு அதிகமாக வரும் வருமானத்திற்கும் கணக்கு காட்ட வேண்டும். வருமான வரியும் செலுத்த வேண்டும் என்பது ஒரு முக்கிய விதிமுறை.

தற்போது வரை யாரும் இதனை பெரிதாக எடுத்துக் கொள்வது கிடையாது என்பதே உண்மை. ஏனென்றால் நமது வங்கி கணக்குகள் மேலை நாடுகளை போல் வருமான வரி அலுவலகத்துடன் இது வரை இணைக்கப்படவில்லை.

ஞாயிறு, 12 ஜூலை, 2015

LIC வேதாந்தாவை எதிர்த்து ஓட்டளிக்கிறது

வேதாந்தா குழுமம் Cairn நிறுவனத்தை எப்படி அடிமாட்டு விலைக்கு ஆட்டையை போட நினைக்கிறது என்பதை பற்றி ஏற்கனவே பதிவு செய்து இருந்தோம்.

வெள்ளி, 10 ஜூலை, 2015

கடுமையாக விலை குறைக்கப்பட்ட Redmi மற்றும் iPhone4 மொபைல்கள்


ஒரு பொருளாதாரம் சாராத ஒரு கட்டுரையை தளத்தில் பார்ப்போம்.

வியாழன், 9 ஜூலை, 2015

ஓரளவு எதிர்பார்ப்புடன் ஒன்றி வந்த டிசிஎஸ் முடிவுகள்

பொதுவாக ஐடி நிறுவனங்களை பொறுத்தவரை டிசிஎஸ் மற்றும் இன்போசிஸ் முடிவுகள் அதிகம் எதிர்பார்க்கப்படும்.

புதன், 8 ஜூலை, 2015

சீனாவின் பங்குச்சந்தை குமிழ் வெடிப்பிற்கு காரணம் என்ன? - 2

சீனாவில் பொருளாதார தேக்கம் பரபரப்பாக பேசப்படும் சூழ்நிலையில் அதனைப் பற்றி விரிவாக எழுதுகிறோம். முந்தைய பாகத்தை இங்கே படித்து தொடரவும்..

சீனாவின் பங்குச்சந்தை குமிழ் வெடிப்பிற்கு காரணம் என்ன?

சீனாவின் பங்குச்சந்தை குமிழ் வெடிப்பிற்கு காரணம் என்ன?

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சீனாவின் பங்குச்சந்தை 30% சரிந்துள்ளது. இதனைத் தடுக்க சீன அரசு எவ்வளவோ முயன்றும் அது சக்திக்கு மீறிய விடயமாக மாறி உள்ளது.

ஜூன் காலாண்டு முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்து சென்செக்ஸ்...

கடந்த வாரம் உலக எதிர்மறை நிகழ்வுகளின் தாக்கத்தை தாங்கி பிடித்த சந்தை இந்த வாரம் அதிக அளவில் திருத்தத்தை எதிர் கொள்கிறது.

செவ்வாய், 7 ஜூலை, 2015

கிரீஸால் விவாதத்திற்கு வரும் ஐரோப்பிய யூனியனின் ஸ்திரத்தன்மை

கிரீஸ் நாட்டில் நடந்த பொது வாக்கெடுப்பில் 61% வாக்குகள் சர்வதேச மற்றும் ஐரோப்பிய நிதியகங்களின் முடிவுகளுக்கு எதிராக அமைந்துள்ளன.

ஞாயிறு, 5 ஜூலை, 2015

தோல்விகளை வெற்றி படிக்கட்டுகளாக மாற்றிய அலிபாபாவின் ஜாக் மா - 2

அலிபாபா நிறுவனர்  ஜாக் மா அவர்களின் தன்னம்பிக்கை வெற்றி பற்றிய இந்த கட்டுரையின் முந்தைய பாகத்தினை இங்கு படிக்கலாம்.
தோல்விகளை வெற்றி படிக்கட்டுகளாக மாற்றிய அலிபாபாவின் ஜாக் மா


மீதி இரண்டிற்கும் அந்த சமயத்தில் எந்த நிறுவனங்களுமே இல்லை. ஜாக் மாவிற்கு வாய்ப்பும் அந்த புள்ளியில் தான் கிடைத்தது.

சீனாவை பொறுத்த வரை அப்பொழுது தான் ஏற்றுமதி பொருளாதரத்திற்கு மாறி இருந்தது. அதாவது அதிக அளவில் சீனாவின் குறுந்தொழில் நிறுவனங்கள் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து கொண்டு இருந்தன.



இது தான் வாய்ப்பு என்று ஜாக் மா நினைத்தார். சீனாவில் இருக்கும் பெரும்பாலான குறுந்தொழில் நிறுவனங்களையும், உலகம் முழுவதும் அவர்களுக்கு இருக்கும் நுகர்வோர் நிறுவனங்களை மறு முனையில் இணைத்து ஒரு இணையதளத்தை திட்டமிட்டார்.

இந்த B2B என்ற முறையை மையமாக வைத்து தான் அலிபாபா தொடங்கப்பட்டது.

தோல்விகளை வெற்றி படிக்கட்டுகளாக மாற்றிய அலிபாபாவின் ஜாக் மா

தோல்விகள் எப்பொழுதும் நிலையாக இருப்பதில்லை. அதில் துவண்டு விடாமல் படிப்பினைகளே என்று நினைத்து அடுத்த நிலைக்கு சென்றவர்கள் வாழ்வில் பெருவெற்றியை பெற்றிருக்கின்றனர்.


அதில் ஒருவர் தான் சீனாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான அலிபாபா நிறுவனத்தை தோற்றுவித்த ஜாக் மா. (Jack Ma)



அவரது தனிப்பட்ட வாழ்க்கை பலருக்கு பெரிய அளவில் தன்னம்பிக்கை கொடுக்க வாய்ப்பு இருக்கிறது. அதனால் கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.

சீனாவின் கிழக்கு மாகாணம் ஒன்றில் தான் ஜாக் மா பிறந்தார். அவர் பிறந்த போது சீனா தீவிர கம்யூனிசம் காரணமாக பிற நாடுகளில் இருந்து விலகி ஒரு தனி உலகத்திலே இருந்தது.

வெள்ளி, 3 ஜூலை, 2015

இலங்கை இனப்படுகொலை விசாரணைக்காக இணைய வாக்கெடுப்பு

நமது தளம்  பொருளாதாரம் சார்ந்ததாக இருந்தாலும் தமிழ் சமூகத்திற்காக இந்த வேண்டுகோளை வைக்கிறோம். 

ஆவணங்களை பாதுகாப்பாக வைக்க உதவும் டிஜிட்டல் லாக்கர் திட்டம்

இந்த வாரம் பிரதமர் மோடி அவர்கள் டிஜிட்டல் இந்தியா என்ற பெயரில் பல புதிய திட்டங்களை அறிவித்தார்.

வியாழன், 2 ஜூலை, 2015

மீட்சியில் இந்திய பொருளாதாரம், ராஜன் பேட்டி தரும் முக்கிய குறிப்புகள்

தற்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் முன்னால் இருந்தவர்களை விட அதிகம் வெளிப்படையானவர் என்றே சொல்லலாம்.

ஒரு வழியாக விவசாயத்தைக் கண்டு கொண்ட மோடி

ரொம்ப நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த விடயம். மோடி ஆட்சிக்கு வந்த பிறகு விவசாயத்தையும் சேர்த்து தான் வளர்ச்சி என்று சொல்கிறார் நினைத்து இருந்தோம்.

புதன், 1 ஜூலை, 2015

வாய்ப்புகளை வீணாக்கி பதவி இழந்த ராகுல் யாதவ்

வாழ்க்கையில் எல்லோருக்கும் நல்ல வாய்ப்புகள் கிடைத்து விடுவதில்லை. சிலருக்கு தான் கிடைக்கிறது. அதில் சிலர் வலிய வந்த வாய்ப்புகளை வீணாக்கி விடுகின்றனர்.

பத்தாயிரம் கோடியை திரட்ட வரிசையில் நிற்கும் முன்னணி IPO பங்குகள்

இந்திய பங்குச்சந்தை தற்போது சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.