வியாழன், 31 ஜூலை, 2014

தில் இருப்பவர்கள் இந்த பங்கில் முதலீடு செய்யலாம்

பெரும்பாலும் எமது பங்கு பரிந்துரைகள் அதிக அளவு ரிடர்ன் என்பதை மையமாக வைத்து இருக்காது. அதிக அளவு ரிடர்ன் என்றால் அதிக அளவு ரிஸ்க் உள்ளது என்பதும் உண்மையே. ஆதலால் பாதுகாப்பிற்காக போர்ட்போலியோவில் மிக அதிக ரிஸ்க் உள்ள பங்குகளை பரிந்துரை செய்வதில்லை.

புதன், 30 ஜூலை, 2014

பணம் போட்டிப் போட்டு கொட்டப்படுகிறது இந்திய ஆன்லைன் சந்தையில்..

இந்தியாவில் அதிகமாக பயன்பாட்டிற்கு வரும் இன்டர்நெட் உலகமும், அதிகரித்து வரும் இளைய தலைமுறையும் ஆன்லைன் ஷாப்பிங் துறைக்கு சாதகமாக உள்ளன.

இன்னும் மூன்று வருடங்களில் ஆன்லைன் வியாபாரம் இரண்டு மடங்காக மாறவும் வாய்ப்புகள் உள்ளது.

அதனால் தான் கடந்த பதிவில் இதில் ஊக்கப்படுத்தும் விதமாக ஒரு கட்டுரையை எழுதி இருந்தோம். அதில் சில நண்பர்கள் விரிவான விளக்கங்களையும் கேட்டு எழுதி இருந்தார்கள். அந்த கட்டுரையை இங்கு பார்க்க..
பன்சால்களால் முடிந்தது தமிழரால் முடியாதா?

அவர்களுக்கு இந்த பதிவும் பயனாக இருக்கும் என்று நம்புகிறோம்.



நேற்றைய முந்தைய நாள் ப்ளிப்கார்ட் வெளிநாடுகளில் இருந்து 6000 கோடி முதலீட்டை பெற்றுள்ளது. இது அவர்களது இணையத்தை மொபைல் பயன்பாட்டில் மேம்படுத்துவதற்கும் ஸ்மார்ட்போன் பயனாளிகளுக்கு விரிவாக்குவதற்கும் பயன்படும் என்று தெரிகிறது.

இந்த நிதி திரட்டல் மூலம் ப்ளிப்கார்ட் நிறுவனத்தின் மதிப்பு 42,000 கோடியாக உயரந்துள்ளது.

செவ்வாய், 29 ஜூலை, 2014

பங்குச்சந்தையில் Depreciation பற்றிய விளக்கம் (ப.ஆ - 25)

இன்று 'பங்குச்சந்தை  ஆரம்பம்' தொடரின் பகுதியாக நிறுவன நிதி அறிக்கைகளில் வரும் 'DEPRECIATION'  என்ற பதத்தைப் பற்றி பார்ப்போம்.

திங்கள், 28 ஜூலை, 2014

இந்தியாவின் மிகப்பெரிய பவர் நிறுவனமாக மாறிய ரிலையன்ஸ்

அனில் அம்பானியால் நிர்வகிக்கப்படும் ரிலையன்ஸ் பவர் நிறுவனம் 12000 கோடி மதிப்பில் ஜெய் பிரகாஷ் அசோசியேட்ஸ் நிறுவனத்தின் ஒரு பிரிவான ஜெய் பிரகாஷ் பவர் நிறுவனத்தின் நீர் மின்சாரம் தயாரிக்கும் உலைகளை வாங்கியுள்ளது.

ஞாயிறு, 27 ஜூலை, 2014

வருமான வரியை இலவசமாகவே பதிவு செய்யும் வழி

வருமான வரியைப் பதிவு செய்ய கடைசி நாள் ஜூலை 31 நெருங்கி வருகிறது.

லோன் எடுப்பதிலிருந்து விசா கிடைப்பது வரை வருமான வரி சான்றிதழ் தேவையாக இருப்பதால் அதனைப் பதிவு செய்து வைத்து இருப்பது நல்லது.



இதற்கு முன் சில இடைத்தரகர்கள் மூலமே வருமான வரி பதிவு செய்ய வேண்டி இருந்தது. அதற்கு 250 ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டி இருந்தது. இல்லாவிட்டால், அரசு அலுவலத்தில் கால் கடுக்க வரிசையில் நிற்க வேண்டி இருக்கும்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அரசு ஆன்லைனிலே வருமான வரி பதிவு செய்யலாம் என்ற முறையைக் கொண்டு வந்த பிறகு எல்லாம் எளிதாகி விட்டது.

சனி, 26 ஜூலை, 2014

நேர்மையில்லாத CAIRN பங்கை என்ன செய்யலாம்?

CAIRN நிறுவனம் உள்நாட்டில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. அடுத்த மூன்று வருடங்களில் நிறுவனத்தின் உற்பத்தி இரண்டு மடங்கு அளவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக எமது போர்ட்போலியோக்களில் பரிந்துரைக்கப்பட்டது.

வியாழன், 24 ஜூலை, 2014

அடுத்த வாரம் குறையும் போது பங்குகளை வாங்கிப் போடலாம்

பாண்டி செல்வன் என்ற நண்பர் நமது தளத்தில் பங்குச்சந்தை செய்திகளை தினமும் எழுதலாம் என்று ஒரு கருத்தை பதிவு செய்து இருந்தார். அவரது கருத்திற்கு நன்றி!

புதன், 23 ஜூலை, 2014

வங்கியில் போடும் பணத்திற்கு உத்தரவாதம் எப்படி கிடைக்கிறது?

கடந்த வார சந்தையில் வங்கி பங்குகள் நல்ல உயர்வைக் கொடுத்தன. ரிசர்வ் வங்கி SLR என்ற விகிதத்தை குறைத்தது தான் இந்த உயர்விற்கு முக்கியக் காரணமாக அமைந்தது. அந்த SLR விகிதத்தைப் பற்றி இந்த பதிவில் விவரமாக பார்க்கலாம்.

திங்கள், 21 ஜூலை, 2014

புதியவர்களுக்கு பங்குச்சந்தையில் சில டிப்ஸ் (ப.ஆ - 24)

'பங்குச்சந்தை ஆரம்பம்' தொடரின் முந்தைய பகுதியை இங்கு காணலாம்.
பங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர் (ப.ஆ - 23)

எமது தளத்தின் வாசகர்களில் பலர் பங்குச்சந்தையில் புதியவர்கள் என்பது வரும் மின் அஞ்சல்களில் இருந்து தெரிகிறது.

ஞாயிறு, 20 ஜூலை, 2014

இந்திய ஐடி நிறுவனங்கள் மீதான நம்பிக்கையை குறைத்த சத்யம் ஊழல்

திருட்டை ஒழிக்க திருடன் திருந்த வேண்டும் அல்லது ஏமாறுபவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பங்குச்சந்தையிலும் இது மிகவும் பொருந்தும். அதனால் தான் பங்குச்சந்தை ஊழல்கள் மற்றும் மோசடிகளை பற்றி அடிக்கடி நாம் எழுதுவதற்கு காரணம்.

சனி, 19 ஜூலை, 2014

பதற்ற பூமிகளால் தவிர்க்க வேண்டிய பங்குகள்

இஸ்ரேல் காசாவில் இரக்கமற்ற தாக்குதல்களை நடத்தி வருகிறது. உக்ரைனின் உள்ளூர் பிரச்சினைகளில் ஒன்றுமே தெரியாமல் வானில் சென்ற உயிர்கள் பலி வாங்கப்படுகின்றன. அரசியலும், நாட்டின் எல்லைகளும் உண்மையிலே அவசியம் தேவைதானா? என்று  நினைக்க வைக்கிறது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்!

புதன், 16 ஜூலை, 2014

உலக வங்கியின் ஆளுமையைக் குறைக்கும் பிரிக்ஸ் வங்கி

இரண்டாம் உலகப் போரில் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட பேரழிவிற்கு பிறகு அந்த நாடுகளை சீரமைக்க உருவாக்கப்பட்டது தான் உலக வங்கி. பெயரில் தான் உலகம் என்று இருக்கிறதே தவிர அமெரிக்கா, ஜப்பான் மற்றும் மேற்கு நாடுகளின் கைப்பாவையாகவே செயல்பட்டு வந்தது.

செவ்வாய், 15 ஜூலை, 2014

பட்ஜெட்டிற்கு பிறகு வருமான வரி கணக்கிடுவது எப்படி?

அருண் ஜெட்லி தாக்கல் செய்த பட்ஜெட்டில் தனி நபர் பிரிவினருக்கான வருமான வரியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு அதிக பலனைத் தருகிறது.

இந்த பதிவில் முதலில் என்னனென்ன சலுகைகள் தரப்பட்டுள்ளன என்பதைப் பார்ப்போம். அதன் பிறகு எப்படி பயன்படுத்தலாம் என்பதை உதாரணங்களுடன் பார்ப்போம்.

சம்பளக்காரர்களுக்கு கொஞ்சம் கரிசனை
காட்டி இருக்கிறார்கள் 

இவ்வளவு நாள் குறைந்தபட்சம் இரண்டு லட்சம் வருமானம் வந்தாலே வரி கட்ட வேண்டும். இனி 2.5 லட்சத்துக்கு மேல் வருமானம் வந்தால் மட்டுமே வரி கட்ட வேண்டும். இதனால் 10% வருமான வரி வரம்பிற்குள் வருபவர்கள் 5000 ரூபாயும், 20% வருமான வரி வரம்பிற்குள் வருபவர்கள் 10000 ரூபாயும், 30% வருமான வரி வரம்பிற்குள் வருபவர்கள் 15000 ரூபாயும் வருடத்திற்கு சேமிக்கலாம்.

திங்கள், 14 ஜூலை, 2014

சந்தையில் நம்பிக்கை கொடுக்கும் பணவீக்க குறைவு

தற்போதைய சந்தை வீழ்ச்சிக்கு 'Profit Booking' தான் அதிக காரணமாக இருக்க முடியும். இந்திய பங்குச்சந்தையில் தரகர்களின் ஆட்டம் கொஞ்சம் அதிகமே. அதில் அதிகம் பாதிக்கபப்டுவது ஒன்று, இரண்டு மாதங்களுக்கு முதலீடு செய்யும் சிறு முதலீட்டாளர்கள் மட்டுமே.

ஞாயிறு, 13 ஜூலை, 2014

பட்ஜெட் போர்ட்போலியோ பகிரப்பட்டது, அடுத்து சிறிய பிரேக்..

நேற்று எமது பட்ஜெட்டை அடிப்படையாக வைத்து வடிவைமைக்கப்பட்ட டைனமிக் போர்ட்போலியோ நண்பர்களிடம் பகிரப்பட்டது.

வியாழன், 10 ஜூலை, 2014

முதலீட்டாளர் பார்வையில் வளர்ச்சிக்கு வழி கொடுக்கும் பட்ஜெட்

நேற்று நிதி அமைச்சர் பட்ஜெட் தாக்கல் செய்த போது நிமிடத்திற்கு நிமிடம் சந்தையில் அவ்வளவு மாற்றங்கள். ஏனென்றால், சந்தை அவ்வளவு எதிர்பார்த்து காத்திருந்தது.

முதலில் 300 புள்ளிகள் வரை கீழே சென்று, அதன் பிறகு 400 புள்ளிகள் வரை உயர்ந்து கடைசியில் ப்ளாட்டாக முடிந்தது.

புதன், 9 ஜூலை, 2014

மொபைல் மார்க்கெட்டை இழக்கும் சாம்சங்?

தென்கொரியாவை சேர்ந்த நிறுவனம் சாம்சங். எலெக்ட்ரானிக்ஸ் துறையில் முன்னணியில் இருக்கும் ஒரு நிறுவனம். தற்போதைய நிலவரத்தில் மொபைல் சந்தையில் 32% அளவைக் கொண்டு முதலிடத்தை பெற்றுள்ளது.

செவ்வாய், 8 ஜூலை, 2014

ரயில்வே பட்ஜெட்டை சிம்பிளாக முடித்த கௌடா

நேற்று சந்தையில் 500 புள்ளிகள் மேல் சரிவு ஏற்பட்டது. நேற்றைய ரயில்வே பட்ஜெட்டும் ஒரு காரணமாக அமைந்தது.

திங்கள், 7 ஜூலை, 2014

கோடீஸ்வரராக ஒரு செயல்முறை விளக்கம்..

பெரும்பாலும் ஒருவர் கோடீஸ்வரராக வேண்டும் என்றால் முதலில் நினைப்பது லாட்டரி வாங்குவது, பணக்கார பெண்ணை கல்யாணம் பண்ணுவது என்று சில குறுக்கு வழிகள் தான் முதலில் நினைவுக்கு வரும். ஏனென்றால் ஒரு கோடி என்பது அவ்வளவு மலைப்பான தொகை.

வெள்ளி, 4 ஜூலை, 2014

பங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர் (ப.ஆ - 23)

கடந்த 'பங்குச்சந்தை ஆரம்பம்' பதிவில் பங்குகளின் விலையைக் கணக்கிடுவது எப்படி? என்பதைப் பற்றி விவரமாக விளக்கி இருந்தோம்.

தமிழில் இப்படியொரு Niche கட்டுரைகளை எழுதுவது பற்றி நண்பர்கள் பாராட்டி மெயில் அனுப்பி இருந்தார்கள். மிக்க நன்றி!

வியாழன், 3 ஜூலை, 2014

ASTRA நிறுவனம் விற்கப்படுமா?

எமது இலவச போர்ட்போலியோவில் 2013, அக்டோபரில் ASTRA Microwave நிறுவனத்தைப் பரிந்துரை செய்து இருந்தோம். பரிந்துரை செய்த போது விலை வெறும் 35 ரூபாய். தற்போது 150 ரூபாய்.

அதாவது 328% லாபம். பத்தாயிரம் முதலீடு செய்து இருந்தால் இன்று 38,000 என்று மாறி இருக்கும். (75% லாபத்தில் 'முதலீடு' இலவச பங்கு பரிந்துரைகள்)

புதன், 2 ஜூலை, 2014

சாஸ்கென் நிறுவனத்திற்கு கிடைத்த 185 கோடி

சில வருடங்களுக்கு முன்னர் மென்பொருள் துறையில் மிகவும் பிரபலமாக இருந்த நிறுவனம் சாஸ்கென்(SASKEN).