செவ்வாய், 11 டிசம்பர், 2018

தேர்தல் முடிவுகளும், தணியும் சந்தை பதற்றமும்

நேற்றைய கட்டுரையில் நாம் எதிர்பார்த்தவாறே சந்தையும் நடந்து கொண்டது நன்றாக இருந்தது.


சந்தையை பொறுத்தவரை சட்டீஸ்காரில் மட்டுமாவது வெற்றி பெறுவார்கள் என்று தான் எதிர்பார்ப்பில் இருந்தது.



ஆனால் சட்டீஸ்கார் இந்த அளவிற்கு தோல்வி கொடுக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.

அதே நேரத்தில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் போன்ற பெரிய மாநிலங்களில் பிஜேபி கொடுத்த கடுமையான போட்டி சந்தைக்கு இன்னும் நம்பிக்கையை அளிப்பதாகவே இருந்தது.

அதனால் தான் சந்தையும் நாள் முடிவில் பச்சை நிறத்தில் இறங்கி வந்தது.

ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநிலங்களை சேர்த்து மொத்தமாக 50 எம்பி தொகுதிகள் வருகின்றன.

ஞாயிறு, 9 டிசம்பர், 2018

கருத்து கணிப்பு, தேர்தல் முடிவு, மனதில் திக் திக்...

ஒரு மிக அதிக வேலை பளுவில் சிக்கி கொண்டதால் கடந்த மாதத்தில் கட்டுரைகளை எழுத முடியவில்லை. மன்னிக்கவும்!


அதிக அளவில் நண்பர்கள் தேர்தலையும் சந்தையும் இணைத்து கேட்டு கொண்டிருப்பதால் இந்த கட்டுரையை தொடர்கிறோம்.



மிக நீண்ட நாள் எதிர்பார்க்கப்பட்ட மாநில தேர்தல் முடிவுகள்.

தமிழ்நாடு, கேரளா என்றால் கண்டிருக்கவே மாட்டார்கள். ஆனால் பிஜேபி வலிமையாக உள்ள ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கார் மாநிலங்கள் என்பதால் ஒரு மினி லோக் சபா தேர்தல் போன்று தான் கவனிப்பு.

இதனை ஒரு விளையாட்டு தொடராகவே பார்க்கிறார்கள்.