திங்கள், 28 ஏப்ரல், 2014

பன்சால்களால் முடிந்தது தமிழரால் முடியாதா?

ஒவ்வொரு பத்து வருடங்களுக்கு ஒரு முறை சில துறைகள் முன்னணியில் வந்து புதிய கோடிஸ்வரர்களை உருவாக்கி செல்லும்.


நாராயண மூர்த்தி, அசிம் பிரேம்ஜி, அடோனி, சிவ்நாடார் போன்ற புதியவர்கள், எதிர்காலத்தை சற்று முன்னால் கணித்ததால், எதிர்பாராத அளவு மேலே சென்றனர்.

ஒரே கார்ட் மாயம் தான்..
முப்பது வருடங்கள் முன் மென்பொருள் ஒன்று இருப்பதே நமக்கு தெரியாது. ஆனால் அதற்கு இந்திய சூழ்நிலைகளின் சாதகத்தை இனங்கண்டு பார்த்ததன் மூலம் இன்று உலக சிறந்த நிறுவனங்கள் வரிசையில் இந்திய மென்பொருள் நிறுவனங்கள் உள்ளன.

அதே போல் பெட்ரோலிய பொருட்கள் சார்ந்த தேவைகள் அதிகமாக இருப்பதை உணர்ந்து, அடோனி உட்பட பல புதிய தொழிலதிபர்கள் உருவாகினர்.

புதன், 23 ஏப்ரல், 2014

24% அதிக லாபம் ஈட்டிய HDFC வங்கி. தொடரலாமா?

கிட்டத்தட்ட 30 காலாண்டுகளாக 30% சதவீத வளர்ச்சி கொடுத்து வந்த HDFC வங்கி நேற்று நிதி முடிவுகளை அறிவித்தது.

செவ்வாய், 22 ஏப்ரல், 2014

ULIPல் முதலீடு செய்யலாமா?

இரண்டு, மூன்று வருடங்களுக்கு முன்னாள் மிகவும் பிரபலமான முதலீடு திட்டம் ULIP.

ULIP என்றால் Unit Linked Insurance Plan.


தொடக்கக் காலத்தில் மிக அதிக அளவில் விளம்பரப் படுத்தப்பட்டது. அதாவது இதில் முதலீடு செய்தால் 10 வருடங்கள் கழித்து முதலீடு பத்து மடங்காகும் என்று கூறி முகவர்கள் விளம்பரம் செய்தது இன்னும் நியாபகத்தில் நிற்கிறது.

இப்படித் தவறான தகவல்களைக் கொடுத்ததால் இன்று முதலீட்டாளர்கள் நம்பிக்கையை இழந்து காணப்படுகிறது. அதாவது முதலீடு செய்தவர்கள் கூட ஒரு கட்டத்தில் மொத்தமாக முதலீட்டினை வாபஸ் வாங்கியது பெருத்த பின்னடைவை ஏற்படுத்தியது.

ஆனால் இன்றும் இத்தகைய திட்டங்கள் செயல்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன. மக்களும் ஏமாற்றப்பட்டு கொண்டு தான் இருக்கிறார்கள்.

எப்படி என்று விவரமாகப் பார்ப்போம்.

எல்லாம் கலந்த தெளிவில்லாத கலவை 


ULIP என்பது நிரந்தர வருமானம், இன்சூரன்ஸ் மற்றும் பங்குச்சந்தை என்ற மூன்றையும் ஒருங்கிணைத்து வடிவமைக்கப்பட்டது. அதாவது தனித்தனியாக ஒவ்வொரு திட்டங்களிலும் சேராமல் ஒரே திட்டத்தில் மூன்று பயன்களைப் பெறலாம் என்பதே இதன் சிறப்பம்சம்.

திங்கள், 21 ஏப்ரல், 2014

RBIக்கு வந்த வித்தியாசமான சட்ட சிக்கல்

இந்தியாவில் திறனாக பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ஒரு வங்கி HDFC. இது வரை மற்ற வங்கிகளைக் காட்டிலும் நல்ல வருமானத்தையும், வளர்ச்சியையும் காட்டி வருகிறது.

Standalone, Consolidated நிதி அறிக்கைகளுக்கு என்ன வித்தியாசம்? (ப.ஆ - 12)

இது நிறுவனங்களின் நிதி அறிக்கைகள் வெளிவந்து கொண்டிருக்கும் காலம். இந்த சமயத்தில் நமக்கு ஏற்படும் ஒரு முக்கியமான சந்தேகத்தை தீர்ப்பதற்காக இந்த பதிவு பயன்படும்.

வியாழன், 17 ஏப்ரல், 2014

முன்னணி IT நிறுவனமாக மாறும் HCL

நேற்று மட்டும் மூன்று முக்கிய IT நிறுவனங்கள் தங்கள் நிதி நிலை அறிக்கையை அறிவித்தன.

புதன், 16 ஏப்ரல், 2014

சரியும் பங்குகள், வாங்குவதற்கான வாய்ப்புகள்

தற்போது சந்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. ஆனால் எவ்வளவு வரை குறையும் என்பதை அறுதியிட்டு கூற முடியாத நிலைமை.

செவ்வாய், 15 ஏப்ரல், 2014

இன்போசிஸ் தரும் சில பங்குச்சந்தை குறிப்புகள்

இன்போசிஸ் நிறுவனத்தின் செயல்பாடுகள் தற்போது மந்தமாக இருந்தாலும் அவர்களது நிதி நிலை அறிக்கை வெளிவரும் போது, மற்ற நிறுவனங்களை விட ஒரு தெளிவான பாதையைக் காண்பிப்பார்கள்.

திங்கள், 14 ஏப்ரல், 2014

Basis Point: ஒரு எளிய விளக்கம் (ப.ஆ - 11)

இந்த கட்டுரை 'பங்குச்சந்தை ஆரம்பம்' தொடரின் தொடர்ச்சி. இதன் முந்தைய பாகத்தை இங்கு காணலாம்.
P/E விகிதத்தை வைத்து பங்கினை எப்படி மதிப்பிடலாம்? (ப.ஆ-10)

ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

மென்பொருள் நிறுவனங்களின் HEDGING பற்றி அறிவோம்.

இந்த பதிவில் மென்பொருள் நிறுவனங்கள் 'HEDGING' என்று சொல்லப்படும் நாணய மாற்று பிரச்சனையை எவ்வாறு சமாளிக்கின்றன என்பதைப் பற்றி எழுதப்பட்டுள்ளது.

புதன், 9 ஏப்ரல், 2014

P/E விகிதத்தால் பங்கினை எப்படி மதிப்பிடலாம்? (ப.ஆ-10)

இந்தக் கட்டுரையில் P/E என்றதொரு விகிதத்தினை பயன்படுத்தி பங்கினை எவ்வாறு மதிப்பிடலாம் என்பதனைப் பார்க்கலாம்.

திங்கள், 7 ஏப்ரல், 2014

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இரு புதிய வங்கிகள், முதலீடு செய்யலாமா?

கடைசியாக 2004ல் YES Bank மற்றும் Kotak Mahindra Bank என்ற இரண்டு வங்கிகளுக்கு அனுமதி கொடுத்தது. அதன் பிறகு தற்போது இரு புதிய வங்கிகளுக்கு அனுமதி கொடுத்துள்ளது.

வெள்ளி, 4 ஏப்ரல், 2014

பங்குச்சந்தையில் PCA பற்றி தெரிந்து கொள்ளுங்கள். (ப.ஆ-9)

PCA என்பது பங்குச்சந்தையில் கடந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு புதிதான முறையாகும். இதன் விரிவாக்கம் Periodic Call Auction என்பது.

வியாழன், 3 ஏப்ரல், 2014

வாரிசு வரியும், மறைமுக சமத்துவமும்..

இது இந்தியர்களுக்கு புதிய தகவலாக இருக்கலாம். சில நாடுகளில் 'Inheritance Tax' என்று நமக்குத் தெரியாத புது வித வரி உண்டு. தமிழில் சொன்னால் 'வாரிசு வரி'..இதனைப் பற்றி விவரமாகப் பார்ப்போம்,


ஒருவர் தன்னுடைய சொத்தினை தனது வாரிசுகளுக்கு கொடுக்க நினைக்கிறார். கொடுப்பதற்கு முன் அரசாங்கத்திற்கு இவ்வளவு சதவீதம் என்று வரி கட்ட வேண்டும். இந்த சதவீத அளவு ஒவ்வொரு நாடுகளிக்கிடையும் வேறுபடுகிறது.

பெரும்பாலான மேலைநாடுகள் மற்றும் வளர்ந்த நாடுகளில் இந்த வரி முறை கடைபிடிக்கப்படுகிறது.

உதாரணத்திற்கு,

கொரியாவில் இரண்டரை கோடி அளவிற்கு மேல் சொத்தினை தமது வாரிசுக்கு கொடுப்பதாக இருந்தால் 40% அரசிற்கு வரி கட்ட வேண்டும்.

இதனால் கொரியாவில் உள்ள பெரிய கம்பனிகளான சாம்சங், LG, ஹயுண்டாய் போன்ற நிறுவனங்கள் வித்தியாசமான முறையில் அரசினை ஏமாற்றி வருகின்றன.

அதாவது, தங்களது வாரிசின் பெயரில் துணை நிறுவனங்களை ஆரம்பிக்கின்றன. அதன் பிறகு தாய் நிறுவனத்தில் இருந்து பெரும்பாலான வியாபாரங்களை 'Outsourcing' என்ற பெயரில் துணை நிறுவனங்களுக்கு வழங்குகின்றன. இதனால் லாபமும் வெளியே செல்வதில்லை. அரசாங்கத்துக்கும் வரி கட்ட வேண்டிய தேவை இல்லை. இப்படி மிக விவரமாக அரசினை ஏமாற்றி வருகின்றன.

இந்த நேர்முக வரி நமது நாட்டில் இல்லை என்று நாம் பரவசம் அடையலாம்.

ஆனால் இதில் மறைமுகமாக சமத்துவம் என்ற கம்யுனிச கொள்கை ஒளிந்து இருப்பதை அழகாகப் பார்க்கலாம்.

அம்பானியின் பில்லியன் டாலர் வீடு 
தற்போதைய தனி நபர் வருமான வரியில் கூட அரசிற்கு கிடைக்கும் வருமானம் மற்ற வரி வசூல்களுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைவே.

ஏன், நமது நாட்டில் தனி நபர் வருமான வரி இல்லாமலே அரசை நடத்த முடியும்.  அந்த அளவிற்கு மறைமுக வரி வசூல்கள் அதிகமாக உள்ளது.

ஆனால் தனி நபர் வருமான வரியின் முக்கிய நோக்கமே ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசத்தைக் குறைப்பதே.

உதாரணத்துக்கு ஒரு குடும்பத்தை நடத்துவதற்கு வருட வருமானம் 10 லட்சம் என்பது தாராளமாக போதுமானது. அதன் மேல் வருமானம் அதிகப்படியான வருமானமே.