சனி, 29 ஜூன், 2019

FundsIndia நிறுவனர்கள் வெளியேற்றம், என்ன செய்வது?

FundsIndia என்பது இந்தியாவின் ஆரம்ப கட்டங்களில் இருந்து ஆன்லைன் வழியாக ம்யூச்சல் பண்ட் முதலீடுகளுக்கு உதவி செய்து வரும் நிறுவனம்.


சந்திரசேகர், ஸ்ரீகாந்த் மீனாட்சி என்ற இரு தமிழர்களால் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் தான்.



இது வரை நன்றாகவே சென்று கொண்டு இருந்தது.

நாமும் எமது தளத்தில் சில வருடங்கள் முன்பு ஒரு முறை பரிந்துரை செய்து இருந்தோம்.

தற்போது ம்யூச்சல் பண்ட் முதலீடு Direct முறையிலும் செய்யலாம். அல்லது டிமேட் கணக்கு வழியாக கூட செய்து கொள்ளலாம்.

செவ்வாய், 25 ஜூன், 2019

IndiaMart நிறுவன ஐபிஒவை வாங்கலாமா?

நேற்று ஜூன் 24 முதல் IndiaMart நிறுவனத்தின் ஐபிஒ விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. நாளையுடன் முடிவடைகிறது.


அதனை வாங்கலாமா? என்பது பற்றி சிறிது விரிவாக பார்ப்போம்.



ப்ளிப்கார்ட், அமேசான் போல் இணைய வழியாக பொருட்கள் விற்கும் நிறுவனம் தான் IndiaMart.

ஆனால் ப்ளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் நேரடியாக நுகர்வோர்களை விற்பவர்களுடன் இணைக்கிறது.

IndiaMart நிறுவனமானது மொத்த விற்பனையாளர்களுடன் சில்லறை விற்பனையாளர்களை இணைக்கிறது.

செவ்வாய், 18 ஜூன், 2019

கார்களை லீசுக்கு விடும் ஆட்டோ நிறுவனங்கள், எது லாபம்?

தற்போதைய சந்தையின் சரிவிற்கு மிக முக்கிய காரணமாக சுட்டிக் காண்பிப்பது பொருளாதார தேக்கம்.


அதிலும் நான்கு, இரண்டு சக்கர வாகனங்களில் பத்து வருடங்களில் இல்லாத அளவு ஒரு தேக்கம் ஏற்பட்டுள்ளது.



இதனை தேக்கம் என்று சொல்வதை விட, வாடிக்கையாளர்களின் மன நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் என்று சொல்லலாம்.

உதாரணத்திற்கு தற்போது சிட்டியில் கார் வாங்கும் ஒருவர் யோசிப்பது.

ட்ராபிக்கில் எப்படி வண்டி ஓட்டுவது? அப்படியே புதிய இடத்திற்கு சென்றாலும் எங்கு வண்டியை பார்க் செய்வது? என்பது தான்.

திங்கள், 17 ஜூன், 2019

முன்சுவடுகள் - புத்தக விமர்சனம்

பொதுவாக எமது சொந்த ஊர் கன்னியாகுமரியில் பேசுவது தமிழா, மலையாளமா? என்று தெரியாது.


நாம் கொரியாவிற்கு புதிதாக சென்ற போது எமது பேச்சு நண்பர்களால் கேலிப்பேச்சானதும் நினைவிற்கு வருகிறது. வெங்காயத்தை உள்ளி என்று சொல்வதை இன்னும் எம்மால் மறக்க முடியவில்லை.




ஆனால் அங்கு தமிழ் எழுத்தாளர்களுக்கு பஞ்சமே இருக்காது.

சுந்தர ராமசாமி, நாஞ்சில் நாடன், ஜெயமோகன், க்ரூஸ் என்று பிரபல எழுத்தாளர்கள் அதிகம். அதில் இருவர் சாகித்ய அகாடமி விருது கூட வாங்கி இருக்கிறார்கள்.

கேரளாவுடன் இருந்ததால் என்னவோ, கலையுணர்வும் அது தொடர்பான தர்க்கங்களும் அதிகமாவே இருக்கும்.

தர்க்கம் என்றால் எத்தகைய எல்லைக்கும் செல்லும் என்பதற்கு நேற்று முன்தினம் ஜெயமோகன் புளித்த இட்லி மாவிற்காக வாங்கிய அடியே உதாரணம்.

வெள்ளி, 14 ஜூன், 2019

ஆடிட்டர்களின் நம்பிக்கையிழப்பு, ஏஜென்சிகளின் போலி ரேட்டிங்

கடந்த சில நாட்களாக YES BANK பங்கு அருவி நீர் போல் கீழே விழுந்து கொண்டு இருக்கிறது.


DHFL கடன் பத்திரங்களுக்கு வட்டி கூட கொடுக்க முடியவில்லை.

ILFS 90,000 கோடி அளவிற்கு கடன்.




ஆனால் இவை எல்லாவற்றிகும் பொதுவான ஒன்றாக பார்த்தால்,

ஒரு வருடம் முன்பு வரை ஏஜென்சிகளின் ரொம்ப பாதுகாப்பான நிறுவனம் என்று தரம் கொடுத்து இருந்தார்கள்.

ஆடீட்டர்கள் உத்தம புத்திரன் என்று வருட சான்றிதழ் கூட கொடுத்து இருந்தார்கள்.

ஆனால் இன்று எல்லாவற்றிலும் வீழ்ச்சி, இன்னும் எந்த புற்றில் என்ன பாம்பு இருக்கிறதோ என்று தெரியவில்லை.

வெள்ளி, 7 ஜூன், 2019

எலெக்ட்ரிக் கார்களுக்கு மாறும் ஓலா, உபர்...முதலீட்டிற்கு சில பங்குகள்

சில சமயங்களில் செய்திகளின் தாக்கங்களை முன்பே யூகித்து கொண்டால் பங்கு முதலீட்டில் லாபம் அதிகம் பெற முடியும்.


அப்படியான செய்தி ஒன்றை பகிர்கிறோம்.



அரசு ஒரு புதிய விதி முறையை கொண்டு வருவதாக சில யூகங்கள் வந்து கொண்டு இருக்கின்றன.

வருவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளது.

அதன்படி, வரும் 2026ம் ஆண்டிற்குள் ஓலா, உபர் போன்ற கால் டேக்ஸி நிறுவனங்கள் தங்களிடம் ஓடும் 40%க்கும் மேற்பட்ட வாகனங்களை எலெக்ட்ரிக் கார்களாக மாற்ற வேண்டுமாம்.

இந்திய அரசு பெட்ரோல், டீசல் போன்றவற்றால் அதிக அளவில் அந்நிய செலாவணியை இழந்து வருகிறது.

இது போக, பாரிஸ் பருவமழை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. அதனால் புகையும் அதிக அளவு கட்டுக்கு கொண்டு வரக் கூடிய நிலைமையும் உள்ளது.

புதன், 5 ஜூன், 2019

DHFL சரிவால் அகல பாதாளத்தில் ம்யூச்சல் பண்ட்கள்

ம்யூச்சல் பண்ட்கள் பல வகைப்படும்.

பெரும்பாலும், பங்குசந்தையில் தான் ம்யூச்சல் பண்ட்கள் முதலீடு செய்யப்படும்.


ஆனால் சில பண்ட்கள் பாதுகாப்பு என்ற போர்வைக்காக கடன் பத்திரங்களில் முதலீடு செய்கின்றன.

இவை Debt ம்யூச்சல் பண்ட்கள் என்று அழைக்கப்படுகின்றன.



இந்த பண்ட்களில் முதலீடு செய்யப்படும் நிதி அரசு அல்லது தனியார் நிறுவனங்கள் வழங்கும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்படுகின்றன.

இந்த கடன் செய்யப்படும் முதலீட்டிற்கு ஒரு நிலையான வட்டி வழங்கப்படும்.

கிரெடிட் ஏஜென்சிகள் கொடுக்கும் தரத்திற்கு ஏற்ப வட்டி விகிதங்களும் மாறுபடும்.

திங்கள், 3 ஜூன், 2019

ஆட்டோ துறையை மீட்கும் ரட்சகர் யார்?

கடந்த முறை மோடி ஆட்சிக்கு வந்த போது இந்திய பங்குசந்தையை பார்த்தால் மிக குறுகிய காலத்தில் 30% வரை உயர்ந்து சென்றது.


ஆனால் இந்த முறை ஒரு சந்தேகக் கண்ணோடு இருப்பதால் புதிய உச்சத்தை தொடுவதற்கு நிறைய தடுமாற்றங்களை சந்தித்துக் கொண்டே இருக்கிறது.



அதற்கு முக்கிய காரணமாக பார்த்தால்,

ஒரு பக்கம், கிராமப்புறங்களில் பணப்புழக்கம் என்பது மிகக் குறைந்து விட்டது.

அதனால் சோப்பு முதல் ஷாம்பூ வரை விற்பனை எண்ணிக்கை குறைந்து விட்டது.