செவ்வாய், 31 மார்ச், 2015

தமிழை நாடும் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள்

இந்த முறை விடுமுறைக்கு செல்லும் போது ஊரில் அதிக அளவில் ப்ளிப்கார்ட் டெலிவரி நபர்களை பார்க்க முடிந்தது.

இனி சுயதொழில் செய்பவர்கள் பங்குச்சந்தையில் பணம் திரட்டலாம்

இதுவரை இந்திய பங்குச்சந்தையில் ஒரு நிறுவனம் இடம் பெற வேண்டும் என்றால் குறைந்த பட்சம் நிறுவனத்தின் மதிப்பு ஒரு கோடிரூபாய்  என்று இருக்க வேண்டும்.


அப்படி இருந்தால் தான் IPO என்ற முறையில் வெளிவந்து பங்கு முதலீட்டாளர்களிடம் பணம் பெற முடியும்.

இதில் ஒரு கோடி என்பது சுய தொழிலாக சிறு நிறுவனம் ஒன்றை ஆரம்பிப்பவர்களுக்கு இன்றும் பெரிய தொகை தான்.



எழு வருடங்கள் முன் ஆரம்பிக்கப்பட்ட ப்ளிப்கார்ட் வெறும் நான்கு லட்ச ரூபாய் முதலீட்டில் தான் ஆரம்பிக்கப்பட்டது என்பதையும் நினைவில் கொள்க.

பார்க்க: இளைஞர்களுக்கு நம்பிக்கை தரும் ப்ளிப்கார்ட் வெற்றி

இவ்வாறான சிறு நிறுவனங்கள் ஆரம்பிக்கும் போது முதலில் வங்கிகளை நோக்கி தான் ஓட வேண்டும். அப்படி கஷ்டப்பட்டு கடன்களை பெற்றாலும் வட்டியிலே ஆரம்ப கட்ட வருமானம் சென்று விடும்.

திங்கள், 30 மார்ச், 2015

ஏப்ரல் '15 போர்ட்போலியோ பற்றிய அறிவிப்பு

நமது தளத்தில் கட்டுரைகள், பரிந்துரைகள் என்பதுடன் கட்டண போர்ட்போலியோ சேவையும் கொடுத்து வருகிறோம். இதன்படி ஒவ்வொரு மாதமும் அந்த மாத சூழ்நிலையைக் கருதி பங்குகளை பரிந்துரை செய்து வருகிறோம்.

பங்கினை பிரிப்பதற்கும், போனஸ் பங்கு கொடுப்பதற்கும் என்ன வித்தியாசம்? (ப.ஆ - 39)

பங்குச்சந்தை ஆரம்பம் என்ற இந்த தொடரின் முந்தைய பகுதியை இந்த இணைப்பில் காணலாம் .

கடந்த வருடம் சந்தையில் ஏற்பட்ட உயர்வால் நிறைய பங்குகள் எட்ட முடியாத உயரத்திற்கு சென்றுள்ளன.

வெள்ளி, 27 மார்ச், 2015

ஏன் 900MHz ஸ்பெக்ட்ரத்தை நோக்கி நிறுவனங்கள் ஓடுகின்றன?

தற்போது நடந்து முடிந்த ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் 900MHz என்ற அலைக்கற்றை வரிசை எதிர்பார்த்த ஏல தொகையை விட 100% அதிக தொகையில் போனதாம்.

வியாழன், 26 மார்ச், 2015

பதற்றப்படாமல் பங்குச்சந்தையை அணுகுக..

இந்திய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் தற்போது  27,500 புள்ளிகளுக்கும் கீழ் வந்த விட்டது.

அம்மா பட்ஜெட்டால் எகிறிய TVS பங்கு

ஒவ்வொரு பட்ஜெட்டிலும் வித்தியாசமான புள்ளிவிவரங்கள் வெளிவரும்.
 
அருண் ஜெட்லி தாக்கல் செய்த பட்ஜெட்டில் அதிக அளவு 'முதலீடு' என்ற வார்த்தை இடம் பெற்றதாம். அதே போல் சிதம்பரம் செய்த பட்ஜெட்டில் 'பொருளாதாரம்' இடம் பெற்றதாம்.

புதன், 25 மார்ச், 2015

அதிக நிலையான வருமானம் கொடுக்கும் NCD பத்திரங்கள்

இந்த பதிவு எழுதுவதற்கு வேண்டுகோள் விடுத்த ராதா அவர்களுக்கு நன்றி!


பொதுவாக நிலையான வருமானம் கொடுப்பவை என்றால் வங்கிகளின் வைப்பு நிதி (Fixed Deposit) தான் நியாபகம் வரும். அடுத்து அரசின் பல பத்திரங்கள் நினைவுக்கு வரும்.

இது போக, தனியார் நிறுவனங்களும் நிலையான வருமானம் கொடுக்கும் பத்திரங்களை வெளியிட்டு வருகின்றன.

இதில் ஒரு வித பத்திரம் தான் Non Convertible Debentures (NCD).



பொதுவாக நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான பணத்தினை பெற வங்கிகளை நாடும். ஆனால் வணிக அளவிலான வட்டி என்பது வங்கிகளில் கொஞ்சம் அதிகமே.

செவ்வாய், 24 மார்ச், 2015

இந்தியாவில் சொந்தமாக டெலிவரி செய்யும் அமேசான்

உலக அளவில் இ-காமெர்ஸ் துறையில் புகழ் பெற்று விளங்கும் அமேசான் இந்தியாவில் அந்த அளவு ஜொலிக்க முடியவில்லை.

திங்கள், 23 மார்ச், 2015

ஸ்பெக்ட்ரம் ஏலத்தால் ஏறும் டெலிகாம் நிறுவனங்களின் கடன் சுமை

இந்தியாவில் மட்டும் 84 கோடி தொலைபேசி சந்தாதாரர்கள் உள்ளனர். அதற்கு காரணம் இந்தியாவில் டெலிகாம் வட்டங்கள் 22 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது.

பொய்த்து பெய்த மழையால் பணவீக்கம் கூடுகிறது

நீண்ட நாட்களாக பணவீக்கம் உச்சத்தில் இருந்து வந்தது. இதற்கு மழை இல்லாத வறட்சியும் காரணமாக சொல்லப்பட்டது.

வெள்ளி, 20 மார்ச், 2015

வேலை தேடுவோருக்கு ஒரு ஆறுதல் செய்தி

கடந்த வருடத்தில் பார்த்தால் ஏகப்பட்ட வேலை இழப்புகள். Nokia, IBM, Cisco, TCS என்று பல நிறுவனங்கள் பெருமளவில் வேலையை விட்டு பணியாளர்களை விலக்கி கொண்டு இருந்தன. அதிலும் TCS நிறுவனத்தின் வேலை நீக்கங்கள் போராட்டம் வரை சென்று வந்தது.

வியாழன், 19 மார்ச், 2015

பங்குகளின் விலையை சுற்ற வைக்கும் காரணிகள் (ப.ஆ - 38)

பங்குச்சந்தை ஆரம்பம் என்ற இந்த தொடரின் முந்தைய பகுதியை இந்த இணைப்பில் காணலாம் .


  • பங்கு போர்ட்போலியோவை மறு சமநிலை செய்வது எப்படி? (ப.ஆ - 37)

  • தினமும் பங்குச்சந்தை நடக்கிறது. தினசரி பங்குகளின் விலைகளிலும் மாற்றம் நடக்கிறது.

    ஒரு வார்த்தையில் சந்தையை மாற்றிய அமெரிக்க மத்திய வங்கி

    கடந்த ஒரு வாரமாக உலக சந்தைகள் அனைத்தும் சுனக்கதிலே இருந்தன. சந்தை மட்டுமல்லாமல் தங்கம், கச்சா எண்ணெய் போன்றவற்றின் விலைகளில் தொய்வு இருந்தது.

    செவ்வாய், 17 மார்ச், 2015

    INOX Wind IPOவை வாங்கலாமா?

    Inox Wind Ltd என்ற நிறுவனம் இந்திய பங்குச்சந்தைக்குள் வருகிறது. நாளை முதல் IPO வெளியீட்டிற்கு வின்னப்பிக்கலாம். கடைசி தேதி மார்ச் 20.

    திங்கள், 16 மார்ச், 2015

    பங்கு போர்ட்போலியோவை மறு சமநிலை செய்வது எப்படி? (ப.ஆ - 37)

    பங்குச்சந்தை ஆரம்பம் என்ற இந்த தொடரின் முந்தைய பகுதியை இந்த இணைப்பில் காணலாம் .

    முதலில் இந்த பதிவு எழுதுவதற்கு காரணமாக இருந்த நண்பர் ராஜா அவர்களுக்கு நன்றியைக் கூறி கொள்கிறோம்.

    உயர முடியாத சந்தையில் உள்ளிருந்து என்ன செய்வது?

    கடந்த சில நாட்களாக நிறைய மின் அஞ்சல்கள் சந்தையின் நிலையை பற்றி வந்து கொண்டே இருக்கின்றன.

    ஞாயிறு, 15 மார்ச், 2015

    பங்குச்சந்தைக்கு வரும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள்

    ராஜ்யசபாவில் இன்சூரன்ஸ் நிறுவனங்களில் வெளிநாட்டு முதலீடுகள் செய்வதற்கான உச்ச வரம்பு உயர்த்தப்பட்டதால் பங்குச்சந்தையில் அவை சார்ந்த பங்குகள்நேர்மறையிலே இருந்தன.

    மார்ச் 14 போர்ட்போலியோ பகிரப்பட்டது

    இந்த மாதம் நாம் அறிவித்து இருந்த மார்ச் 14 போர்ட்போலியோ நேற்று இரவு பகிரப்பட்டது.

    சனி, 14 மார்ச், 2015

    மோடியால் பாதுகாப்பு துறை நிறுவனங்களுக்கு கடும் டிமேண்ட்

    மோடியின் Make in India என்ற வாக்கியம் பரவலமாக பிரபலமடைந்து உள்ளது அறிந்ததே. அந்த திட்டத்தில் முதல் வரிசையில் இருப்பது ராணுவம், கப்பல், விமான படை சார்ந்த பாதுகாப்பு நிறுவனங்கள்.

    வியாழன், 12 மார்ச், 2015

    வேகமாக முதலீடுகளை திரட்டும் இந்திய ரயில்வே

    சிங்கப்பூர், தாய்லாந்து, கொரியா போன்ற நாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. இந்த எல்லா நாடுகளிலும் ரயில்வே என்பது வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு வகிப்பதைக் காண முடிகிறது.

    செவ்வாய், 10 மார்ச், 2015

    Adlabs IPOவை வாங்கலாமா?

    நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு IPO நிகழ்வை சந்தையில் பார்க்க முடிகிறது. இந்த முறை சந்தைக்கு வருவது Adlabs Entertainment என்ற நிறுவனம்.

    முதலீடு கட்டண போர்ட்போலியோவின் செயல்திறன்

    எமது முந்தைய கட்டண சேவை போர்ட்போலியோக்கள் எவ்வாறு செயல்பட்டு உள்ளன? என்பதை வாசகர்கள் பார்வைக்கு வைக்கிறோம்.

    திங்கள், 9 மார்ச், 2015

    யுஎஸ்க்கு நெறி கட்டினால் இந்தியா இரும வேண்டும்

    நேற்றைய சந்தை எப்படி இருக்கும் என்பதை கொஞ்சம் முன்னரே நிபுனர்கள் கணித்து விட்டனர். அதற்கு அமெரிக்கா ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.

    ஞாயிறு, 8 மார்ச், 2015

    பணத்தை முதலீடுகளாக மாற்றும் தருணம்

    கடந்த வாரம் ரிசர்வ் வங்கி கவர்னர் வங்கிகளுக்கு வழங்கும் கடன்களின் வட்டி விகிதத்தை 0.25% குறைத்தார்.

    சனி, 7 மார்ச், 2015

    191% லாபம் கொடுத்த முதலீடு போர்ட்போலியோ

    நீண்ட நாட்களுக்கு பிறகு நமது முதலீடு தளத்தின் சார்பில் வழங்கப்பட்ட இலவச பங்கு போர்ட்போலியோவின் நிலையை பகிர்கிறோம்.

    வெள்ளி, 6 மார்ச், 2015

    லாபத்தை எதிர்பார்க்காதீங்க! பின்வாங்கும் ஐடி நிறுவனங்கள்

    சில விடயங்கள் திடிரென்று நடந்து விட்டால் விளைவுகள் பயங்கரமாக இருக்கும். பங்கு சந்தையிலும் இந்த அடித்து துவைத்து போடும் பழக்கம் அதிகம் உண்டு.

    வியாழன், 5 மார்ச், 2015

    தூய்மை இந்தியாவால் டைல்ஸ் நிறுவனங்கள் ஜொலிக்கின்றன

    சில சமயங்களில் பங்குச்சந்தைகளில் சுவராஸ்யமானவைகள் நடக்கும். அதில் ஒன்று தான் இன்றைய கட்டுரை.

    புதன், 4 மார்ச், 2015

    பெண் குழந்தைகளுக்கு பயனுள்ள செல்வமகள் திட்டம்

    இந்த பட்ஜெட்டில் பெண் குழந்தைகளுக்கான ஒரு சேமிப்பு திட்டத்திற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதனைப் பற்றி பார்ப்போம்.

    இந்த திட்டத்தின் பெயர்  "செல்வமகள் திருமணத்திட்டம் "



    இந்த திட்டம் அஞ்சலங்களால் நடத்தப்படுகிறது. பத்து வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகள் மட்டுமே சேரலாம்.

    முதலில் 1000 ரூபாய் கட்ட வேண்டும். அதன் பிறகு மாதந்தோறும் நமது விருப்பப்படி கட்டிக் கொள்ளலாம். அதற்கேற்ப ரிடர்ன் கிடைக்கும்.

    மார்ச் போர்ட்போலியோ பற்றிய அறிவிப்பு

    நமது தளத்தில் கட்டுரைகள், பரிந்துரைகள் என்பதுடன் கட்டண போர்ட்போலியோ சேவையும் கொடுத்து வருகிறோம். இதன்படி ஒவ்வொரு மாதமும் அந்த மாத சூழ்நிலையைக் கருதி பங்குகளை பரிந்துரை செய்து வருகிறோம்.

    செவ்வாய், 3 மார்ச், 2015

    பட்ஜெட்டிற்கு பிறகு பங்குச்சந்தையை எப்படி அணுகலாம்?

    கடந்த மாதத்தில் எழுதிய ஒரு கட்டுரையில் இந்திய பொருளாதார முன்னேற்றத்தின் மீது ஒரு தெளிவு இல்லாததால் கொஞ்சம் காத்து இருக்குமாறு சொல்லி இருந்தோம். அதனால் தான் பிப்ரவரி போர்ட்போலியோவை கூட தவிர்த்து இருந்தோம்.

    பங்குச்சந்தைக்கு வரும் PF பணம்

    நமது ஓய்வூதிய பணம் EPFO அலுவலகத்தால் பரமாரிக்கப்படுகிறது. இதில் கிட்டதட்ட ஐந்து லட்சம் கோடி ரூபாய் பணம் உள்ளது.

    திங்கள், 2 மார்ச், 2015

    2015 பட்ஜெட்டால் தனி நபருக்கு என்ன லாபம்?

    இந்த வாரம் முழுமையும் பட்ஜெட்டால் பயன் பெறும் விடயங்களைத் தான் விரிவாக எழுதி வருகிறோம்.

    ஏற்கனவே பட்ஜெட்டை பங்குச்சந்தையின் பார்வையில் பார்த்தோம். நேற்று தங்க முதலீட்டில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை பார்த்தோம்.

    இன்று தனி மனிதர்களுக்கு என்னென்ன வரி விலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன என்பதையும் பார்ப்போம்.



    கடந்த வருடம் தான் ஜெட்லி வருமான வரி வரம்பை இரண்டு லட்சம் என்பதிலிருந்து 2.5 லட்சமாக உயர்த்தி இருந்தார். அதனால் இந்த வருடம் எந்த உயர்வும் காணப்படவில்லை. அதே வரம்புகளே தொடர்கிறது.

    அதற்கு பதிலாக சில வருமான வரி விலக்கு சலுகைகளை வழங்கியுள்ளார்.

    ஞாயிறு, 1 மார்ச், 2015

    தங்கத்தை வீட்டிற்கு பதில் வங்கியில் வைத்தால் வட்டி கிடைக்கும்

    இந்த வருட பொது பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட தங்கம் தொடர்பான சில முடிவுகள் நாட்டிற்கும், மக்களுக்கும் நல்ல பலன்களை கொடுக்கலாம்.


    உலக அளவில் தங்கம் அதிகமாக வாங்கப்படும் ஒரு நாடு இந்தியா. பெருமளவு தங்கம் வெளிநாடுகளில் இருந்து இங்கு இறக்குமுதி செய்யப்படுவதால் கணிசமான அந்நிய செலாவணி பற்றாக்குறை ஏற்படுகிறது.



    அதே நேரத்தில் இறக்குமதி செய்யப்படும் தங்கம் அப்படியே பிரோவில் தூங்கும் போது யாருக்கும் பயன்படாமல் போய் விடுகிறது. இந்த Dead Asset காரணமாக பெருமளவு பணம் அப்படியே முடங்கி விடுகிறது.  இது நாட்டின் பொருளாதரத்திற்கும்  பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது.