செவ்வாய், 25 ஜூலை, 2017

ஆயுர்வேதத்தால் சரியும் கோல்கேட் சாம்ராஜ்யம்

பல தசாப்தங்களாக பற்பசை மாறும் பிரஷ் பிரிவில் கோல்கேட் நிறுவனம் தான் இந்தியா மற்றும் உலக அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.


இந்தியாவில் மட்டும் 55%க்கும் மேல் சந்தையைக் கொண்டுள்ளது.



பல மருத்துவ நிறுவனங்கள் உள்ளே நுழைந்தும் கூட கோல்கேட் சந்தையை இருபது வருடங்களுக்கு மேலாக அசைக்க முடியவில்லை.

ஆனால் தற்போது இந்த நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது.

இதற்கு இந்தியர்களது மன மாற்றமும் ஒரு முக்கிய காரணம்.

ஆரம்ப கால கட்டத்தில் சாம்பலையும், விழுதுகளையும் மட்டமாக காட்டி சந்தையை பிடித்தது கோல்கேட்.

அதன் ஒரு பிறகு ஒரு கட்டத்தில் உங்கள் டூத் பேஸ்டில் சாம்பல் இருக்கிறதா என்று கேட்க ஆரம்பித்தது.

அதிலும் தற்போது, டாபர், பதாஞ்சலி போன்ற நிறுவனங்கள் முற்றிலும் ஆயுர்வேத ரீதியாக பற்பசை வெளியிட ஆரம்பித்த போது தான் கோல்கேட்டின் சந்தை பெரிய அளவில் ஆட்டம் காண  ஆரம்பித்துள்ளது.

இந்த நிறுவனங்கள் சமையல் அறையில் பயன்படுத்தும் பொருட்களையே பற்பசைக்கும் மூலப் பொருளாக பயன்படுத்துவதால் பெரிய அளவில் பக்க விளைவுகளும் இருப்பதில்லை.

அதே நேரத்தில் இந்தியர்களும் ஆயுர்வேதம் என்று வரும் போது உள்நாட்டு நிறுவனங்களையே பெரிதும் நம்புகிறார்கள்.

அதனால் கோல்கேட் ஆயுர்வேத பற்பசை ஒன்றை வெளியிட்ட போதும் அது வெற்றி பெற முடியவில்லை.

இந்த விளைவுகள் தான் கோல்கேட் நிறுவனத்தின் நிதி அறிக்கையில் எதிரொலிக்க ஆரம்பித்து உள்ளது.

இந்திய சந்தையில் குறுகிய கால கட்டத்தில் கோல்கேட் நிறுவனத்தின் பங்கு 1.7% அளவு குறைந்துள்ளது. வருமானமோ 4% அளவு குறைந்து உள்ளது. இது இருப்பது வருடங்களில் இல்லாத நிலை ஆகும்.

இனி வரும் காலங்களிலும் இந்த நிலை தொடர அதிக வாய்ப்புகள் உள்ளது.

அதனால் கோல்கேட் பங்கில் முதலீடு செய்து இருந்தால் விலகி இருப்பது நல்லது.

அதே போல், இந்தியர்கள் உடல் நலத்தில் அக்கறை காணும் இந்த வேளையில் பிட்சா, பர்கர் போன்ற உணவு பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்களையும் தவிர்ப்பது நல்லது.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக