பங்குச்சந்தை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பங்குச்சந்தை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 11 ஜூன், 2024

மீண்டும் முதலீடு தளத்தில்..

சில தனிப்பட்ட மற்றும் அலுவலக வேலை பளு காரணமாக முதலீடு தளத்தில்  எழுத முடியாமல் போனது. வருந்துகிறோம். நான்கு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் முதலீடு தளத்தில் எழுதுகிறோம். 

இது ஒரு நீண்ட இடைவெளி. ஆனாலும் தொடர்பில் இருந்து விசாரித்த நண்பர்களுக்கு நன்றி!


பொதுவாக Muthaleedu.IN தளத்தில் Stock Fundamentals என்பதை அடிப்படையாக வைத்தே கட்டுரைகளை எழுதி வந்தோம். இந்த இடைப்பட்ட காலத்தில் Stock Technical என்பதிலும் அதிக அளவு அனுபவம் கிடைத்தது. அதையும் கலந்து இனி வரும் கட்டுரைகளை எழுத முயற்சிக்கிறோம்.

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2020

இரண்டு செய்திகள், உயர்ந்த நிப்டி

நேற்று வரை நான்கு நாட்கள் இந்திய சந்தை கடுமையான வீழ்ச்சியில் தான் இருந்தது. ஒரு கட்டத்தில் 10,850 நிப்டி என்ற புள்ளிகளில் 200 நாள் சராசரியையும் தொட்டு வந்தது. ஆனால் அதில் கடுமையான தடை இருந்ததால் அதற்கு கீழ் செல்லவில்லை.

அதே நேரத்தில் INDIA VIX என்ற Volatility குறியீடும் 25 என்ற அளவில் கட்டுக்குள் இருந்ததால் இதற்கு கீழ் உடனே செல்லும் என்று தோன்றவில்லை.



ஆனால் மேலே ஏற்றி செல்லும் காரணிகளும் குறைவாகவே இருந்ததன. அதனால் சந்தை உடனே மேல் செல்வது கடினம் தான் என்று எண்ணிக் கொண்டிருந்தோம்.

இந்த நேரத்தில் இன்று காலை வந்த இரண்டு செய்திகள் இந்திய பங்குசந்தைகளை நல்ல அளவில் மேலே கொண்டு சென்றது.

வெள்ளி, 24 ஜூலை, 2020

ராபின்ஹூட் முதலீட்டாளர்கள் கவனமாக இருக்கும் தருணம்

தற்போதைய பங்குச்சந்தை உயர்விற்கு எமது முந்தைய சந்தேகத்தில் நிற்கும் சந்தை கட்டுரையில் Liquidity Driven Market என்பதையும் குறிப்பிட்டு இருந்தோம். 

அதன்படி பார்த்தாலும் கடந்த ஜூனில் நிகரமாக 2500 கோடி அளவு FIIகள் வாங்கியுள்ளனர். தற்போதைய ஜூலையில் நேற்று வரை 3500 கோடி அளவு FIIகள் வாங்கியுள்ளனர். 

Bull Market என்பதில் கடந்த கால வரலாற்றை ஒப்பிடுகையில் இது ஒன்றும் பெரிய தொகையல்ல. ஆனாலும் சந்தை ஏன் உயர்கிறது என்று பார்த்தால் அங்கு Robinhood Investors என்று சொல்லப்படும் புதிய முதலீட்டாளர்கள் வந்து நிற்கின்றனர்.



முதலில் Robinhood Investors யார் என்று பார்ப்போம்.

அமெரிக்காவை பொறுத்தவரை பங்குச்சந்தை முதலீடு என்பது மிகவும் காஸ்டிலியானது. ஆமாம். ஒரு 50$மதிப்புடைய பங்கு வாங்குவதற்கு 10$ புரோக்கர் கமிஷன் கொடுக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. நமது முதலீட்டில் 20% அளவு கமிஷனாக போகும் போது ஆரம்பத்திலே முதலீட்டின் ஒரு பகுதி சென்று விடுகிறது. அதனை மீட்டு எடுப்பதே ஒரு பெரிய வேலை.

இந்த சமயத்தில் தான் அமெரிக்காவில் 2014ம் வருடத்தில் Robinhood என்ற Stock Brokerage நிறுவனத்தை ஆரம்பித்தார்கள். இருப்பவர்களிடம் இருந்து  இல்லாதவர்களுக்கு கொடுப்பது தான் பிரபலமான ராபின்ஹூட் அவர்களது வேலை. அது போல் இந்த நிறுவனத்தில் Retail Investors என்ற சில்லறை முதலீட்டாளர்களுக்கு மலிவாக பங்கு வாங்கும் வசதியை உருவாக்குவதே இதன் முக்கிய நோக்கம். இந்தியாவில் நமது Zerodha புரோக்கர் நிறுவனத்திற்கு முன்னோடி என்றும் சொல்லி கொள்ளலாம். 


வெள்ளி, 10 ஜூலை, 2020

சந்தேகத்தில் நிற்கும் சந்தை

தற்போது இந்திய பங்குச்சந்தை 10800 NIFTY புள்ளிகளில் நின்று கொண்டு இருக்கிறது. டெக்னிகலாக இது ஒரு முக்கிய தடை புள்ளி என்று சொல்லலாம்.

கடந்த இரு வாரங்களாகவே NIFTY நிலையானது 10600 புள்ளிகள் முதல் 10800 புள்ளிகள் வரை ஊசலாடி கொண்டே தான் இருக்கிறது.



நிப்டியின் 200 DMA என்று சொல்லப்படும் 200 நாள் சராசரி நிலையான 10885 என்பது ஒரு முக்கியமான நிலையாகும். இதனை தாண்டும் போது மேலும் அதிக உயர்வை பார்க்கலாம்.

ஆனால் அந்த நிலையை தாண்டுவது எளிதல்ல என்பதையும் கவனிக்க வேண்டும்.

கடந்த ஜூன் மாதத்தில் ம்யூச்சல் பண்ட் முதலீடுகளில் இருந்து பெருமளவு பணம் எடுக்கப்பட்டுள்ளது. அப்படி என்றால் எங்கிருந்து பணம் வந்து கொண்டிருக்கிறது என்று பார்த்தால் Institution Investors என்ற பெரு முதலைகளிடம் இருந்து தான் வருகிறது.

செவ்வாய், 30 ஜூன், 2020

ஐந்து நிமிடங்களில் 18 லட்சம் இழந்த கதை

பங்குச்சந்தை என்பது மிக அதிக அளவில் லாபம் தரும் ஒரு முதலீடு தான். சரியான கணிப்பு இருந்தால் மற்ற எல்லா முதலீடுகளையும் விட அதிகம் லாபம் தருமிடம்.

2013ல் ஒரு கட்டுரையில் விப்ரோவில் ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து இருந்தால் இப்ப 43 கோடி என்ற தலைப்பில் எழுதி இருந்தோம்.

இந்த கட்டுரையானது நண்பர்களுக்கு மிக அதிக அளவில் பங்குச்சந்தையில் உற்சாகத்தை கொடுத்து இருந்ததை கருத்துக்கள் வாயிலாக அறிந்தோம்.



பங்குசந்தையில் நேர்மறையான லாபங்களை வெளியிடும் போது மற்றோரு பக்கமான நஷ்ட உதாரணங்களையும் பகிர்வது அவசியமாகிறது.

அந்த வகையில் இந்த கட்டுரையில் நண்பர் ஒருவர் ட்ரேடிங் முறையில் ஐந்தே நிமிடங்களில் 18 லட்சம் இழந்ததையும் பகிர்கிறோம்.

இந்த கட்டுரையை புரிந்து கொள்வதற்கு ஓரளவு Futures & Options பற்றிய புரிதலும் அவசியம். இது வரை இந்த முதலீடு தளத்தில் ட்ரேடிங் பற்றி விவரமாக எழுதியதில்லை. இனி எழுத முயற்சிக்கிறோம்.

ஞாயிறு, 14 ஜூன், 2020

கொரோனா இரண்டாவது அலைக்கு பயப்படும் சந்தை

தற்போது பங்குசந்தையானது 10100 புள்ளிகளில் தடுமாறி கொண்டிருக்கிறது.இது 100 நாள் சாராசரியில் இயங்கி கொண்டிருக்கும் இது ஒரு முக்கியமான தடை புள்ளி ஆகும்.

இதனை தாண்டி மேலே செல்ல வேண்டுமானால் வலுவான காரணங்கள் இருக்க வேண்டும்.



இது வரை அனுமானங்களில் தான் சந்தை மேலே உயர்ந்து உள்ளது. அதாவது எப்படியும் மீண்டு விடும் என்ற நம்பிக்கை சில முதலீட்டாளர்களிடம் இருப்பது. 

ஆனால் மற்ற பெரும்பான்மை முதலீட்டாளரார்கள் சந்தைக்குள் வர வேண்டும் என்றால் வெறும் நம்பிக்கை என்பதையும் தாண்டி சில நம்பிக்கை தரும் நிகழ்வுகளும் நடக்க வேண்டும்.

ஞாயிறு, 7 ஜூன், 2020

சந்தை ஒன்றுமில்லாமல் உயருவதேன்?

பல எதிர்மறை செய்திகள் வரிசையில் கட்டி நிற்க சந்தையானது கடந்த இரு வாரங்களாக உயர்ந்து கொண்டே செல்கிறது. தற்போது 10000 நிப்டி புள்ளிகளை தொட்டு விட்டுள்ளது.

அனைவர் மனதிலும் உள்ள பொதுவான கேள்வி இது தான்.



இது தொடர்பாக நேற்றைய மியூச்சல் பண்ட்களுக்கும் வரும் ஆபத்து என்ற பதிவில் நண்பர் சந்துரு  ஒரு கருத்தை பதிவிட்டு கேள்வி எழுப்பி இருந்தார்.

கேள்வி இது தான்.

"Please provide an insight article about why market is rising despite big economic problem. Stimulus package was very bad in india compared with us and europe countries. I initially thought market will never touch 10000 in nifty atleast until this year. But looking now I am in deep confusion?"

அதற்கு நண்பர் தியாகராஜன் இவ்வாறு பதில் அளித்து இருந்தார்.

"Sir Reason is a trap of forign investers having lot of money buying and lifting the nifty so that they will book profits in unexpected time hammering the market plthink bank shares r going up not on performance that too having lot of NPAs Think before investing if it is hard earned My personal view Risk is urs"


எமது பதிலும் நண்பர் தியாகராஜன் அவர்களுடன் ஒத்து போகிறது.

வியாழன், 21 மே, 2020

பங்குச்சந்தைக்கு கொடுக்கப்படும் செயற்கை ஊட்டம்

நேற்று முதல் சந்தை பச்சை வண்ணத்திற்கு திரும்பி உள்ளது.

ஏதேனும் சாதகமான சூழ்நிலைகள் திரும்பி விட்டதா என்று பார்த்தால் ஒன்றுமில்லை.



நிர்மலாஜி 20 லட்சம் கோடி தந்த போது கூட சந்தை இப்படி துள்ளி குதிக்கவில்லை. சிறிது உயர்ந்து அப்புறம் கீழே வந்து விட்டது. எப்படியும் எதுவும் கொடுக்க போவதில்லை என்ற நம்பிக்கையும் இருந்து இருக்கலாம்.

ஆனாலும் தற்பொழுது சந்தை ஏன் உயருகிறது என்று உன்னிப்பாக கவனித்தால் செபி நேற்று கொண்டு வந்த ஒரு விதிமுறை கண்ணுக்கு வருகிறது.

வெள்ளி, 1 மே, 2020

நிச்சயமற்ற நிலையும், முதலீடுகளும்

நேற்று சந்தை மீண்டும் ஏற்றத்தை கண்டது. வாய்ப்பை விட்டு விட்டோம் என்று தோன்றி இருக்கலாம். அதனால் பல நண்பர்களிடம்  முதலீடு செய்யலாமா? என்ற கேள்வியை பார்க்க முடிந்தது.

இந்த வாரம் முழுவதும் சந்தை உயர்ந்தாலும் அதற்கான ஒரு நேர்மறை காரணியை உருப்படியாக சொல்ல முடியாது என்பது தான் நிதர்சனம்.



கச்சா எண்ணெய் விலை இந்த அளவிற்கு எதிர்மறை நிலையில் செல்லும் என்று யாரும் கனவில் கூட நினைத்து இருக்க முடியாது.

திங்கள், 21 அக்டோபர், 2019

BREXIT - சந்தையின் மிகை நடிப்பு?

பங்குசந்தைகள் மும்பையை மையமாக வைத்து செயல்படுவதால் இன்று மகராஷ்டிரா சட்டசபை தேர்தலை முன்னிட்டு இந்திய பங்குசந்தைக்கு விடுமுறை.

நாளை பல விளைவுகளையும் சந்தையில் காண முடியும்.



கடந்த வாரத்தின் கடைசி இறுதி இரண்டு நாட்களிலும் BREXIT என்பது சந்தையில் எதிரொலித்தது.

ஐரோப்பியன் யூனியனில் இருந்து விலகுவதற்கு பிரிட்டன் பிரதமர் ஒரு புதிய டீலை ஏற்றுக் கொண்டதாக அறிவித்தார்.

அதனால் இந்திய சந்தையும் நேர்மறையாக மேலே சென்றது.

ஒரு வித்தியாசமாக FIIகளிடம் வாங்கும் முயற்சியை பார்க்க முடிந்தது.

வியாழன், 5 செப்டம்பர், 2019

நாளைக்கு என்னவோ?

நாளை வெள்ளிக்கிழமை. நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு நல்ல நாள்.

நிதி அமைச்சராக பதவி ஏற்ற பிறகும் பட்ஜெட் தாக்கல் செய்த பிறகும் இவர் பேட்டி கொடுக்க மாட்டார்களோ என்று பத்திரிகையாளர்கள் அலைந்தனர்.



ஆனால் ஒரு சில வாரங்களில் நடந்த மாற்றங்கள் வாரந்தோறும் பிரஸ் மீட் வழியாகவே மினி பட்ஜெட்டை தாக்கல் செய்யும் அளவிற்கு கொண்டு சென்றுள்ளது.

அந்த வகையில் கடந்த இரு வாரங்களாக வெள்ளிக் கிழமை தோறும் நான்கு மணிக்கு பேட்டிக்கு வந்து விடுகிறார்.

அந்த செய்தி வரும் சூழ்நிலையில் நிப்டி ஒரு சதவீதமாவது ஏறி விடுகிறது.:)

ட்ரேடிங் செய்பவர்களுக்கு தெரிந்து இருக்கலாம்.

செவ்வாய், 3 செப்டம்பர், 2019

எந்த பக்கம் வழி இருக்கிறது?

கடந்த வெள்ளியன்று எழுதியது போல் இன்று சந்தை பெரு வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

ஜிடிபி குறைவு, ஆட்டோ விற்பனை வீழ்ச்சி போன்று பல எதிர்மறை விடயங்களை கடந்த வார இறுதி நாட்கள் சேர்த்து வைத்து இருந்தன.



ஆனாலும் ET போன்ற சில மீடியாக்கள் Mild Start எதிர்பார்க்கலாம் அல்லது மேலே போகலாம் என்று சொன்னது ஆச்சர்யமே அளித்தது.

இவ்வளவுக்கும் நேற்று சிங்கப்பூர் எக்ஸ்சேஞ்சில் நேற்றே ஒரு சதவீதத்திற்கும் மேல் சரிந்து இருந்தது.

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2019

அரசு நிதி உதவியை மட்டும் நம்பும் சந்தை

எமது கடந்த சில பதிவுகள் தமிழ் முதலீட்டாளர்களுக்கு சந்தை மேலே வரும் போது வெளியே வருவதற்கு உதவி இருக்கும் என்று நம்புகிறோம்.


அடுத்த கட்டம் என்னவென்று பார்த்தால், எல்லோர் முகத்திலும் குழப்பம் தான்...



தற்போதைய நிலையில் சந்தை ஒன்றை மட்டுமே நம்பியுள்ளது. மற்ற எல்லாமே கவலை தரும் விடயங்கள் தான்.

அந்த நம்பிக்கை, பொருளாதார தேக்கம் நீங்க அரசு என்ன செய்யும்? என்பது தான்.

செவ்வாய், 6 ஆகஸ்ட், 2019

ஏற,ஏற அடி வாங்கும் சந்தை

எமது கடந்த பதிவில் திசை மாற்றும் பிரச்சினைகள் என்ற தலைப்பில் காஷ்மீர் தொடர்பாக எழுதி இருந்தோம்.


இதற்கு ஆதரவும், எதிர்த்தும் சரி சம விகிதத்தில் இருந்தன.



ஒரு சிறு தன்னிலை விளக்கம்.

இந்த தளம் அரசியல் தளமல்ல. நாமும் எந்த கட்சியை சார்தவருமல்ல. பொருளாதார, முதலீடுகள் தொடர்பான தகவல்களை தருவது தான் எமது நோக்கம்.

புதன், 10 ஜூலை, 2019

வலுவில்லாமல் சரியும் சந்தை, என்ன செய்வது?

நண்பர்கள் பலர் முன்பு போல் எமது பங்கு பரிந்துரை போர்ட்போலியோ சேவை ஏன் கொடுப்பதில்லை? என்று கேட்டு இருந்தனர்.


கடந்த ஒன்பது மாதாங்களுக்கு மேலாக முற்றிலும் நிறுத்தி வைத்து இருந்தோம்.



காரணம் இது தான்.

இந்திய சந்தை ஒரு அடிப்படை இல்லாத சந்தையாக மாறி வருவது போல் ஒரு சந்தேகம் இருந்து வந்தது.

எமது பங்குச்சந்தை அனுபவத்தில் இந்த அளவிற்கு நிறுவனங்கள் திவாலானதை கண்டதில்லை.

வெள்ளி, 5 ஜூலை, 2019

இந்த பட்ஜெட்டிற்கு காவல் எதுக்கு?

என்ன தான் அரசியல் கவர்ச்சிகள் உருவாக்கப்பட்டாலும், மக்களின் வாங்கும் வசதி கூடவில்லை. நிருவனங்களும் பெரிய அளவில் வளர்ச்சி காணவில்லை. வேலை வாய்ப்புகளும் இல்லை.


இதனால் தான் மோடியின் பெரிய வெற்றியை கூட சந்தை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.



தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் சந்தை அதிகம் எதிர்பார்த்து இருந்தது நிர்மலா சீதாராமனின் இன்றைய பட்ஜெட் தான்.

ஏற்கனவே தேர்தலுக்கு முன்பு ப்யூஸ் கோயல் ஒரு தேர்தல் கவர்ச்சி பட்ஜெட்டை தாக்கல் செய்து விட்டதால் நிர்மலா அவர்களுக்கு பெரிதளவு வேலை இல்லாமல் பொய் விட்டது.

சந்தை எதிர்பார்த்த அளவிற்கு பெரிதாக ஒன்றும் இல்லை.

திங்கள், 3 ஜூன், 2019

ஆட்டோ துறையை மீட்கும் ரட்சகர் யார்?

கடந்த முறை மோடி ஆட்சிக்கு வந்த போது இந்திய பங்குசந்தையை பார்த்தால் மிக குறுகிய காலத்தில் 30% வரை உயர்ந்து சென்றது.


ஆனால் இந்த முறை ஒரு சந்தேகக் கண்ணோடு இருப்பதால் புதிய உச்சத்தை தொடுவதற்கு நிறைய தடுமாற்றங்களை சந்தித்துக் கொண்டே இருக்கிறது.



அதற்கு முக்கிய காரணமாக பார்த்தால்,

ஒரு பக்கம், கிராமப்புறங்களில் பணப்புழக்கம் என்பது மிகக் குறைந்து விட்டது.

அதனால் சோப்பு முதல் ஷாம்பூ வரை விற்பனை எண்ணிக்கை குறைந்து விட்டது.

செவ்வாய், 21 மே, 2019

Exit Poll முடிவுகளை நம்ப மறுக்கும் சந்தை

கடந்த பதிவில் Exit Poll முடிவுகள் உண்மையாகுமா? என்பது பற்றி எழுதி இருந்தோம்.


அதன் படியே இன்றைய சந்தை 'அப்படி இருந்தால் நன்றாக இருக்கும், ஆனால் இருக்குமா?' என்று கமல்ஹாசன் பாணியில் குழம்பி நிற்கிறது.



தந்தி டிவியின் எக்ஸிட் போல் முடிவுகளை பார்த்துக் கொண்டு இருந்தோம்.

தமிழ்நாடு முழுவதும் 12,000 நபர்களிடம் தரவுகளை பெற்றோம் என்று சொல்லி இருந்தார்கள்.

அப்படி என்றால், நாற்பது தொகுதிகளில் ஒரு தொகுதிக்கு 300 என்ற வீதத்தில் எடுக்கப்பட்டு இருந்தது.

ஒரு தொகுதியில் சராசரியாக பத்து லட்சம் வாக்குகள் இருக்கும் பட்சத்தில் 300 என்பது மிக குறைவே.

சனி, 18 மே, 2019

நாளை Exit Poll முடிவுகள், உண்மையாகுமா?

நாளையுடன் கடைசி கட்ட பாராளுமன்ற தேர்தல் முடிவடைகிறது.


தேர்தல் ஆணைய விதிப்படி தேர்தல் நடக்கும் போது கருத்து கணிப்புகளை சொல்லக்கூடாது என்பதால் நாளை மாலை பல டிவிக்கள் Exit Poll கருத்துக் கணிப்புகளை வெளியிடுகின்றன.



இதில் ஒன்றை பார்த்தால்,

கருத்துக் கணிப்புகளை  பொது வெளியில் வெளியிடக் கூடாது என்பது தான் விதி முறை.

கருத்துக் கணிப்புகள் நடத்தும் நிறுவனங்களிடம் நாளை நடக்கும் 60 தொகுதிகளைத் தவிர்த்து மற்ற தொகுதிகளுக்கான கணிப்புகள் தற்போது கூட கையில் இருக்கத் தான் செய்கிறது.

செவ்வாய், 14 மே, 2019

அடுத்து யார்? தடுமாற்றத்தில் சந்தை...

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு பதிவு.

அதிக வேலைப்பளுவும், அலைச்சலும் இருந்த நேரத்தில் கட்டுரைகளை எழுதிக் கொண்டு இருந்தால் ஏனோ தானோ என்று தான் இருக்கும்.


அதனால் தான் அமைதியாக இருந்து விட்டோம். மன்னிக்க!





இந்த வருட தொடக்கம் முதல் எதிர்மறையாகவே சந்தை இருந்து வந்தது.

மோடி வர மாட்டார். கஷ்டம். வர்த்தக போர் என்று எக்க சக்க எதிர்மறை காரணங்கள்.

திடீர் என்று தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டது. கருத்துக் கணிப்புகளும் கூடவே வந்தன. மோடி வந்து விடுவார் என்று வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பணத்தைக் கொட்டினர்.