வெள்ளி, 28 ஜூன், 2013

முதலீடை எப்படி பிரிக்கலாம் ? - 4

முந்தைய பதிவின் தொடர்ச்சி..



மேல் உள்ள படத்தில் உள்ளவாறு ஒரு பகுதியினை பங்கு சார்ந்தவற்றில் முதலீடு செய்யுங்கள்.

பங்குச்சந்தை சார்ந்த முதலீடை இரண்டு வகையாக பிரிக்கலாம் 
1. Mutual Fund.
2. Direct to Stocks


1. Mutual Fund:
சிலருக்கு  வேலை பளு காரணமாக பங்குசந்தையினை கண்காணிக்க முடியாமல் இருக்கலாம். பங்குச்சந்தை பற்றி படிக்க ஆர்வமில்லாமல் இருக்கலாம். அவர்களுக்கு ஏற்ற முதலீடு Mutual Fund ஆகும். தேர்ந்த பொருளாதார நிபுணர்களால் பலதரப்பட்ட பங்குகளில் முதலீடு செய்யப்படுவதால் நேரடி பங்கு முதலீடை விட RISK குறைவு. இதில் சராசரியாக 15~20% வருமானம்  எதிர்பார்க்கலாம். 



முதலீடு செய்யும் போது DIVIDEND optionக்கு பதிலாக GROWTH option தேர்ந்தெடுத்தால் சில வருடம் பிறகு பெரிய தொகையாக கிடைக்கும். சில பண்ட்களில் (ELSS) வருமான வரி பலனும் பெறலாம்.

2. Direct to Stocks
இது பங்குகளில் நேரடி முதலீடு செய்தல். சில சமயங்களில் கோடிஸ்வரன், லட்சாதிபதியாக்கி விடும். அதே சமயத்தில் பிச்சாதிபதியும் ஆக்கி விடும். ஆனால் பங்குச்சந்தை அடிப்படையை கற்று, தேர்ந்தெடுத்த பங்குகளில் முதலீடு செய்தால் பிச்சாதிபதி வாய்ப்பு மிகவும் குறைவு.



மிகுந்த பொறுமையும் கொஞ்சம் RISK எடுத்தால் எளிதில் இலக்கை அடையலாம். தங்கை கல்யாணத்துக்கு சேர்த்துவைத்த  தொகை, அவசர கால பணம் போன்றவற்றை இதில் தவிர்த்தல் நலம்.

பங்குகளில் முதலீடு செய்யும் போது ஒரே கூடையில் போடாமல் முதல் படத்தில் உள்ளவாறு பிரித்து போட வேண்டும். ஆனால் பங்குகளின் எண்ணிக்கை  15~20க்குள் இருந்தால் கண்காணிப்பது எளிது.

English Summary:
Dividing Investments helps to reduce the risks. Investments can be divided based on equity, fixed income, real estate, Gold etc. 

அடுத்த பதிவில் பங்குகளை எவ்வாறு பிரிப்பது என்று எழுதுகிறேன்.

தொடரும்..

தொடர்ச்சியான பதிவு:
முதலீடை எப்படி பிரிக்கலாம் ? - 5



« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

5 கருத்துகள்: