புதன், 5 மார்ச், 2014

பனிப்போர் இன்னும் முடியவில்லை?

இந்த வாரம் பங்குச்சந்தையில் ஏற்ற, இறக்கங்களுக்கு காரணமாக இருந்த உக்ரைன் பிரச்சனை பற்றிய அலசலே இந்த கட்டுரை.


உக்ரைன் நம்முடைய பீகார், உ.பி போல் விவசாயம் செய்வதற்கு ஏற்ற சமவெளிப் பகுதியை கொண்ட செழிப்பான நாடு. ஆனாலும் அதனுடைய செழிப்பை விட புவியியல் கேந்திரம் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது.

அதாவது ஆசியா மற்றும் ஐரோப்பா கண்டங்களுக்கு இடையே கருங்கடலை ஒட்டி உள்ள நாடு. இந்த இடத்தில நிலை கொள்வதன் மூலம் முக்கிய கண்டங்களான ஆசியா மற்றும் ஐரோப்பாவை எளிதில் கண்காணிக்கலாம்.


அதனால் தான் உலகப் போர்களுக்கு முன் ஜெர்மனி என்று ஐரோப்பிய நாடுகளால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது. அதன் பிறகு சோவியத் யூனியன் கட்டுப்பாட்டில் இருந்தது.

சோவியத் யூனியன் சிதறிய பிறகு உக்ரைன் தனி நாடானது. அதன் பிறகும் உக்ரைனின் கருங்கடல் கடற்பரப்பு ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. அந்த அளவு விட்டுக் கொடுக்க முடியாத இடமாக உள்ளது.

தற்போது அமெரிக்கா 'மக்கள் புரட்சி' என்ற பெயரில் சிரியா, எகிப்து போன்ற நாடுகளில் செய்ததை உக்ரைனிலும் செயல்படுத்த தொடங்கி விட்டது. அதாவது ஜனாதிபதி ரஷ்யாவிற்கு ஆதரவாகவும், புரட்சி குழு அமெரிக்காவுக்கு ஆதரவாகவும் செயல்படுகின்றனர்..

கிட்டத்தட்ட பனிப்போர் காலத்தில் கொரியா, வியட்நாம் நாடுகளில் ஏற்பட்ட சூழ்நிலை உக்ரைன் நாட்டிலும் ஏற்பட இருக்கிறது.

அது சரி..உக்ரைனில் பிரச்சனை வந்தால் நமது சென்செக்ஸ் ஏன் அடி வாங்குகிறது?

உலக மயமாக்கல் காரணமாக உலகின் ஏதேனும் மூலையில் நடக்கும் பிரச்சனை அணைத்து நாடுகளையும் பாதித்து வருவது வழக்கமாகி வருகிறது.

அதில் அடிப்படை இல்லாமலே வளரும் நாடுகளின் பொருளாதாரமும் சில நாட்களுக்கு ஆட்டம் காண்பதும் ஒன்றாக உள்ளது. இந்தியா சிவாஜி கணேசன் போல் கொஞ்சம் அதிகபட்சமாக ஓவர் ரியாக்சன் காட்டுகிறது.

பங்குச்சந்தை என்று பார்த்தால் இந்தியாவில் மருந்து கம்பெனிகள் மட்டுமே அதிக அளவில் பாதிப்படையும்.

ஏனென்றால் இந்திய மருந்து நிறுவனங்களின் ஏற்றுமதி கிட்டத்தட்ட 10% அளவு ரஷ்யாவைச் சார்ந்த நாடுகளுக்கு ஏற்றுமதியாகி வருகிறது. அதில் அதிகமாக Dr.Reddy Labs நிறுவனம் 18% ஏற்றுமதி செய்து வருகிறது.

இந்த நிறுவனங்களுக்கு தான் ஓரளவு பாதிப்பு இருக்குமே மற்ற துறை சார்ந்த நிறுவனங்களுக்கு மிகக் குறைந்த அளவே பாதிப்பு இருக்கும். அதனால் தான் 170 புள்ளிகள் வரை குறைந்த சென்செக்ஸ் மீண்டும் ஒரே நாளில் இழந்ததை மீட்டு விட்டது.

அதனால் இந்த மாதிரி உலக நிகழ்வுகள் நடக்கும் போது சந்தை நல்ல எதிர்வினை காட்டும். அதனை வாங்குவதற்கான வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

இன்னும் உக்ரைனை வைத்தே பங்குகளை வாங்கும் வாய்ப்புகள் நமக்கு வரலாம். ஏனென்றால் பிரச்சனை இன்னும் முடிந்த பாடில்லை. போரும் வர வாய்ப்புகள் இல்லை.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

1 கருத்து:

  1. Dear Admin,
    You Are Posting Really Great Articles... Keep It Up...We recently have enhanced our website, "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...

    To add "Nam Kural - External Vote Button" to your blog/website. Kindly follow the instructions given here, http://www.namkural.com/static/external-vote-button/

    To get more visibility for our users webpage, We promote them through social networking platforms as well. We upload 80% - 100% of daily links of NamKural in social networking websites such as,
    1. Facebook: https://www.facebook.com/namkural
    2. Google+: https://plus.google.com/113494682651685644251
    3. LinkedIn: https://www.linkedin.com/company/namkural

    தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com/

    நன்றிகள் பல...
    நம் குரல்

    பதிலளிநீக்கு