MutualFund லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
MutualFund லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 16 ஜூலை, 2020

மியூச்சல் பண்ட் தேர்ந்தெடுக்க சில அடிப்படைகள்


கூகுள் வோடாபோனில் முதலீடு செய்யுமா?  என்ற கட்டுரையில் இருக்கும் சாத்தியக்குறைவுகள் பற்றி எழுதி இருந்தோம். நேற்றைய ரிலையன்ஸ் AGM மீட்டிங்கில் முகேஷ் அம்பானி கூகிள் ஜியோவில் முதலீடு செய்யவிருப்பதாக அறிவித்தார். அதனால் வோடாபோனுக்கு இனி வாய்ப்பு இல்லை என்ற சூழ்நிலையில் இன்று வோடாபோன் பங்கும் 10% விலை குறைந்துள்ளது. 

எமது முந்தைய கட்டுரை வோடாபோன் முதலீட்டில் இருந்து நண்பர்கள் வெளியேற உதவியிருக்கும் என்று நம்புகிறோம். 

அண்மையில் நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது உங்கள் பழைய கட்டுரைகளை தேடி பிடித்து படிப்பது கடினமாக இருக்கிறது என்று கூறி இருந்தார்.

அதன் பிறகு தான் ஆயிரம் கட்டுரைகள் இந்த தளத்தில் இருக்கும் போது அதில் ஒன்றை தேர்ந்தெடுத்து படிப்பதில் இருப்பதன் கஷ்டத்தை புரிந்து கொண்டோம். 



இந்த தளத்தில் உள்ள 70%க்கும் மேற்பட்ட  கட்டுரைகள் பொதுவானது தான். அதாவது படிப்பினை கட்டுரைகள் தான். அதனால் சூழ்நிலை அல்லது தொடர்பான செய்திகள் வரும் போது மேற்கோள் காட்டி எழுதுகிறோம். 

இது போக, சில முக்கியமான கட்டுரைகளை தற்போதை சூழ்நிலைக்கு தக்கவாறு மீள்பதிவு செய்து எழுதி இருக்கிறோம். அதனையும் பகிர்கிறோம்.

அதில் ஒன்று மியூச்சல் பண்ட் தொடரில் இருக்கும் ஐந்து கட்டுரைகளும். 2013ல் மியூச்சல் பண்ட் தொடர்பாக ஒரு தொடரை எழுதி இருந்தோம். அந்த கட்டுரை பயனாக இருந்தது என்பதை அறிந்து கொண்டதால் தற்போதைய சூழ்நிலைககு ஏற்றவாறு மீண்டும் எழுதி இருக்கிறோம்.

வெள்ளி, 5 ஜூன், 2020

மியூச்சல் பண்ட்களுக்கும் வரும் ஆபத்து

பங்குச்சந்தைக்கு முதலீடு செய்ய வருபவர்களுக்கு தொடக்க புள்ளி என்பது மியூச்சல் பண்ட் தான்.

புதிதாக வரும் நமக்கு அவ்வளவு தெரியாததால் நமக்கு பதிலாக விவரம் தெரிந்தவர்கள் நமது பணத்தை பார்த்துக் கொள்வார்கள் என்பதால் அதிக அளவில் பிரபலமாக இருந்தது.



ஆனால் சில மியூச்சல் பண்ட் மேனேஜர்கள் செய்த தவறுகள், நிறுவனங்கள் செய்த தவறுகள் போன்றவற்றின் காரணமாக அண்மையில் இந்த பரஸ்பர நிதிகளின் தோல்வி என்பது மிக அதிகமாகவே இருக்கிறது.

பொதுவாகவே இந்தியாவில் வங்கிகளை தவிர மற்ற எதில் வைக்கும் பணத்திற்கு  உத்தரவாதம் காகிதங்களில் தான் இருக்கும். சட்டத்தின் ஆயிரம் ஓட்டைகள் வழியாக பெரிய கைகள் தப்பிக்க, பணம் போட்டவர்களின் ஆவென்ற வாய் பிளப்பு தான் அதிகம் இருக்கும்.

மியூச்சல் பண்ட்டும் அந்த வகையில் தான் வருகிறது.

ஞாயிறு, 10 மே, 2020

அரசு கடன் பத்திரங்கள் எவ்வாறு செயல்படுகிறது?

நேற்று ஒரு செய்தியை பார்க்க நேரிட்டது.

டாஸ்மாக் வருமானத்தில்  தங்களுக்கும் பங்கு  வேண்டும் என்று மத்திய அரசின் வருமான வரித்துறை நீதி மன்றத்தில்  நீதியை நாடி இருக்கிறார்கள். அதிலும் கடந்த வருடத்தில் மட்டும் 14,000 கோடி ரூபாய் அளவு தர வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள்.



தமிழக அரசே பல பேர் ஏச்சு, பேச்சுக்களை கடந்து டாஸ்மாக்கை திறந்தால் அதற்கும் தடை வாங்கி வைத்துள்ளார்கள். இதில் மத்திய அரசுக்கும் பங்கு கொடுக்க வேண்டும் என்றால் பிச்சை எடுத்த பெருமாளிடம் திருடி தின்னும் அனுமார் கதை தான்.

செவ்வாய், 22 அக்டோபர், 2019

நெருக்கடியில் நிலையான வருமானம் தரும் Gilt Fund

எம்முடைய தெரிவை விட வாசகர்களின் வேண்டுதலுக்கிணங்க கட்டுரைகள் எழுதும் போது அந்த கட்டுரை மிக பிரபலமாகி விடுகிறது.

அந்த வகையில் நண்பர் ராஜா கேள்விக்கேற்ப  Liquid Funds முதலீடு பாதுகாப்பானதா? என்ற கட்டுரை எழுதி இருந்தோம்.

அது அதிக அளவு பார்வையாளர்களை ஈர்த்து இருந்தது.



அதன் விளைவு Quoraவில் கேள்வி பதில்களுக்கு கூட தமிழில் பதிலளிக்க ஆரம்பித்தோம்.

நான்கு நாட்களில் நான்காயிரம் பார்வைகளை பெற்று நல்ல ஆதரவு கிடைத்து இருந்தது.

எமது பதில்களை இங்கு பார்க்கலாம். MUTHALEEDU.IN Quora கேள்வி பதில்கள்

Liquid Funds முதலீடு பாதுகாப்பானதா? என்ற கட்டுரையில் Comment பகுதியில் நண்பர் சந்துரு அவர்கள் Gilt Fund பற்றி எழுதுமாறு கேட்டு இருந்தார்.

வெள்ளி, 11 அக்டோபர், 2019

Liquid Funds முதலீடு பாதுகாப்பானதா?

நண்பர் ஒருவர் Liquid Funds நிதியில் முதலீடு செய்வது பாதுகாப்பானதா? என்று கேட்டு இருந்தார்.

அதனை பற்றி கொஞ்சம் விரிவாக பார்க்கலாம்.



தற்போது நம்மிடம் இருக்கும் முதலீடு சூழ்நிலை என்பது வித்தியாசமானது.

இந்தியாவில் இது வரை பார்த்து இராத நிலையாக கூட இருக்கலாம்.

பங்குகளில் முதலீடு செய்தால் கொட்டும் அருவி போல் வீழ்கின்றன.

வங்கிகளில் FDயில் வைத்தால் வட்டி குறைவு. போதா குறைக்கு கூட்டுறவு வங்கிகளே திவாலாகி வருகின்றன.

LIC முதலீடுகள் மீது கூட தற்போது சந்தேகம் வைக்கப்படுகிறது.

சனி, 29 ஜூன், 2019

FundsIndia நிறுவனர்கள் வெளியேற்றம், என்ன செய்வது?

FundsIndia என்பது இந்தியாவின் ஆரம்ப கட்டங்களில் இருந்து ஆன்லைன் வழியாக ம்யூச்சல் பண்ட் முதலீடுகளுக்கு உதவி செய்து வரும் நிறுவனம்.


சந்திரசேகர், ஸ்ரீகாந்த் மீனாட்சி என்ற இரு தமிழர்களால் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் தான்.



இது வரை நன்றாகவே சென்று கொண்டு இருந்தது.

நாமும் எமது தளத்தில் சில வருடங்கள் முன்பு ஒரு முறை பரிந்துரை செய்து இருந்தோம்.

தற்போது ம்யூச்சல் பண்ட் முதலீடு Direct முறையிலும் செய்யலாம். அல்லது டிமேட் கணக்கு வழியாக கூட செய்து கொள்ளலாம்.

புதன், 5 ஜூன், 2019

DHFL சரிவால் அகல பாதாளத்தில் ம்யூச்சல் பண்ட்கள்

ம்யூச்சல் பண்ட்கள் பல வகைப்படும்.

பெரும்பாலும், பங்குசந்தையில் தான் ம்யூச்சல் பண்ட்கள் முதலீடு செய்யப்படும்.


ஆனால் சில பண்ட்கள் பாதுகாப்பு என்ற போர்வைக்காக கடன் பத்திரங்களில் முதலீடு செய்கின்றன.

இவை Debt ம்யூச்சல் பண்ட்கள் என்று அழைக்கப்படுகின்றன.



இந்த பண்ட்களில் முதலீடு செய்யப்படும் நிதி அரசு அல்லது தனியார் நிறுவனங்கள் வழங்கும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்படுகின்றன.

இந்த கடன் செய்யப்படும் முதலீட்டிற்கு ஒரு நிலையான வட்டி வழங்கப்படும்.

கிரெடிட் ஏஜென்சிகள் கொடுக்கும் தரத்திற்கு ஏற்ப வட்டி விகிதங்களும் மாறுபடும்.

வியாழன், 26 ஜூலை, 2018

ம்யூச்சல் பண்ட் முதலீடுகளை மறுபரிசீலனை செய்யும் நேரமிது

தற்போது டிவியை திறந்தால் 'Mutual Fund Sai Hai' என்று வரும் விளம்பரங்கள் ம்யூச்சல் பண்ட் பற்றிய விழிப்புணர்வை கொடுக்கின்றன.


ஆனால் அதே பணத்தைக் கொட்டிக் கொடுக்கும் விளம்பரங்களாகவே காட்டப்படுகின்றன.



அதிலும் விளம்பரத்தில் இறுதியில் 'ம்யூச்சல் பண்ட் முதலீடுகள் சந்தை அபாயத்திற்கு உட்பட்டவை' என்பதும் சிறிதளவில் கவனிக்கபடாத ஒன்றாகவே தான் இருக்கிறது.

அதனால் மக்களும் நம்பி முதலீடுகளை போடுவதும் அதிகரித்து வருகிறது.

ம்யூச்சல் பண்ட் என்பதே நமது சார்பாக மற்றொருவர் பங்குசந்தைகளில் முதலீடு செய்து லாபம் கொடுக்கிறார் என்பது தான்.

திங்கள், 7 ஆகஸ்ட், 2017

Bharat 22, அரசே வழங்கும் ம்யூச்சல் பண்ட், வாங்கலாமா?

தற்போதைய மத்திய அரசு பொது துறை நிறுவனங்களில் இருக்கும் பங்குகளை விற்று நிதி திரட்டி வருகிறது என்பது நாம் அறிந்ததே.


பொதுவாக இந்த நிதியை பங்குச்சந்தை வழியாக தான் திரட்ட வேண்டி உள்ளது.



ஆனால் பல வித எதிர்ப்புகள் காரணமாக பங்குச்சந்தை வழியாக நிதி திரட்டுதல் என்பது பெரும்பான்மையாக தோல்வியிலே முடிந்து வருகிறது.

அதனை சரி கட்ட அரசு கொண்டு வந்த திட்டம் தான் Bharat 22.

கடந்த இரு நாட்களுக்கு முன்னர் தான் ஜெட்லி இந்த திட்டத்தை பற்றி அறிவித்தார்.

வெள்ளி, 26 பிப்ரவரி, 2016

குழந்தைகள் ம்யூச்சல் பண்ட்களை எப்படி பயன்படுத்துவது?

குழந்தை பிறந்துள்ளது என்று அறிந்தவுடனே நண்பர்கள், உறவினர்களுக்கு தெரிகிறதோ இல்லையோ எல்ஐசி ஏஜென்ட்களுக்கு முன்பே தெரிந்து விடுகிறது. எப்படி அறிகிறார்கள் என்றே கண்டு பிடிக்க முடியவில்லை.


இருந்தாலும் அந்த நண்பர் சரியான நேரத்தில் குழந்தைகள் தேவைக்கு பொருளாதார திட்டமிடுதலை ஆரம்பிக்க வேண்டும் என்பதை நியாபகப்படுத்தி விட்டார். அதற்கு நன்றி சொல்ல வேண்டும்!



எம்மைப் பொறுத்தவரை எல்ஐசி பாலிசியும் தேவை தான். ஆனால் அதனை மட்டும் முழுமையாக நம்பி இருக்க வேண்டும் என்பதில் கொஞ்சம் மாறுபாடு உள்ளது.

குழந்தைகளுக்கு என்று திட்டமிடும் போது இரண்டு வகையாக திட்டமிட வேண்டி உள்ளது.

செவ்வாய், 5 ஜனவரி, 2016

இஸ்லாமிய கொள்கைகள் படி ம்யூச்சல் பண்ட் சேவைகள்

வட்டி கொடுப்பதும் வட்டி வாங்குவதும் பாவம் என்பது நபிகள் நாயகத்தின் ஒரு முக்கிய கொள்கை.


அதிக அளவு வட்டி கொடுத்து வந்த நபிகளின் தந்தை கூட தடை செய்யப்பட்டார் என்று வரலாறு கூறுகிறது.



அதனால் தான் இஸ்லாமிய மார்க்கத்தில் வட்டி தொடர்பான பண பரிவர்த்தனைகளில் அதிக அளவு கட்டுப்பாடுகள் உள்ளன. வங்கிகளில் பிக்ஸ்ட் டெபாசிட் செய்வது கூட அனுமதிக்கப்படவில்லை.

ஆனால் இஸ்லாம் முதலீடுகள் செய்வதற்கு அனுமதி அளிக்கிறது. அது பங்கு முதலீடுகளுக்கும் பொருந்தும்.

அதிலும் மது, புகையிலை, சூதாட்டம், ஆயுதம் செய்யும் நிறுவனங்களில் முதலீடு செய்ய அனுமதிப்பதில்லை.

புதன், 14 அக்டோபர், 2015

SIP முறையில் ம்யூச்சல் பண்டில் முதலீடு செய்ய எளிய வழி

இதற்கு முன்னர் SIP முறையில் முதலீடு செய்வதால் ஏற்படும் பலன்களை பற்றி கூறி இருந்தோம்.

பார்க்க: SIP முறையில் முதலீடு செய்வது எப்படி பயனாகிறது?


இந்த SIP முறை வைப்பு நிதிகளுக்கு பொருந்துவதை விட, ரிஸ்க் அதிகமுள்ள பங்குச்சந்தை முதலீடுகளுக்கும், ம்யூச்சல் பண்ட்களுக்கும் தான் அதிகம் பொருந்துகிறது.



ஏனென்றால், இவற்றில் பங்கு விலைகளோ அல்லது ம்யூச்சல் பண்டில் NAV விலையோ தொடர்ந்த மாற்றத்திற்கு உட்பட்டவை.

ஒவ்வொரு நாளும் மாறிக் கொண்டிருக்கும் இந்த விலைகளை உற்றுப் பார்த்து முதலீடு செய்வது என்பது எளிதான காரியமல்ல.

இந்த சமயத்தில் தான் Systematic Investment Plan(SIP) என்ற முறை முக்கியத்துவம் பெறுகிறது.

புதன், 19 ஆகஸ்ட், 2015

ம்யூச்சல் பண்ட் வாங்கும் போது கமிசன் செலவைக் குறைக்க ஒரு டிப்ஸ்

ம்யூச்சல் பண்ட்டில் முதலீடு செய்யும் போது Expense Ratio என்பதும் ஒரு நிதியை தேர்ந்தெடுப்பதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கும்.


Expense Ratio என்பது அந்த பண்டை நிர்வாகம் செய்வதற்காக ம்யூச்சல் பண்ட் நிறுவனம் செலவழிக்கும் தொகை.



இது பொதுவாக இரண்டு முதல் மூன்று சதவீதம் வரை இருக்கும். ஒவ்வொரு வருடமும் பண்ட் லாபம் அல்லது நஷ்டத்தில் சென்றால் கூட பிடித்தம் செய்யப்படும்.

இந்த சதவீதம் என்பது நம்மை சேர்த்து விடும் ஏஜெண்ட்களுக்கு வழங்கப்படும் கமிசன் தொகையும் சேர்த்து தான். நாம் முதலீடு செய்யும் தொகையில் ஒரு சதவீதம் வரை ஏஜெண்ட்களுக்கு கமிசனாக வழங்கப்படுகிறது.

ஆனால் 2013 முதல் ம்யூச்சல் பண்ட் நிறுவனங்கள் இந்த கமிசனை குறைக்கும் பொருட்டு அவர்களது ஒவ்வொரு பண்ட்டிலும் Direct Plan என்ற முறையை அறிமுகப்படுத்தி உள்ளார்கள்.

புதன், 29 ஜூலை, 2015

சஹாரா ம்யூச்சல் பண்ட் அங்கீகாரம் ரத்து செய்யப்படுகிறது

சஹாரா நிறுவனத்தை பற்றி தெரிந்து இருக்கும். ஓகோவென்று இருந்து மோசடி புகார்களால் ஒன்றுமில்லாமல் போனவர்கள். பொது மக்களின் இருபதாயிரம் கோடி ரூபாய்க்கும் மேலான பணத்தை ஸ்வாகா செய்தவர்கள்.


அதனை பற்றிய விவரமான கட்டுரையை இங்கு காணலாம்.
சஹாரா - மற்றொரு இந்திய கார்ப்பரேட் கரும்புள்ளி



சஹாரா நிறுவனம் ம்யூச்சல் பண்ட் சேவையும் கொடுத்து வருகிறது. 24 பரஸ்பர நிதிகள் மூலம் கிட்டத்தட்ட 150 கோடி ரூபாயை ம்யூச்சல் பண்ட் மூலம் திரட்டியுள்ளார்கள்.

இந்த நிலையில் ம்யூச்சல் பண்ட் போர்ட்போலியோ சேவையில் ஈடுபட சஹாரா நிறுவனத்திற்கு தகுதி இல்லை என்று செபி அறிவித்து உள்ளது.

செபியின் உத்தரவின் படி,
  • புதிதாக எந்த பயனாளிகளையும் சேர்க்க கூடாது.
  • அடுத்த ஐந்து மாதங்களுக்குள் சஹாரா ம்யூச்சல் பண்ட் சேவையை வேறொரு நிறுவனத்திடம் கொடுக்க வேண்டும்.
  • அவ்வாறு கொடுக்க முடியாவிட்டால் ஆறாவது மாதத்தில் மக்களிடம் சேகரித்த பணத்தை எந்த வித கட்டணமும் இல்லாமல் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று செபி அறிவுறுத்தியுள்ளது.

சஹாரா நிறுவனம் செய்த பிற மோசடிகளின் எதிர்விளைவாகவே இந்த அனுமதி ரத்தை பார்க்க வேண்டி உள்ளது.

செவ்வாய், 22 ஏப்ரல், 2014

ULIPல் முதலீடு செய்யலாமா?

இரண்டு, மூன்று வருடங்களுக்கு முன்னாள் மிகவும் பிரபலமான முதலீடு திட்டம் ULIP.

ULIP என்றால் Unit Linked Insurance Plan.


தொடக்கக் காலத்தில் மிக அதிக அளவில் விளம்பரப் படுத்தப்பட்டது. அதாவது இதில் முதலீடு செய்தால் 10 வருடங்கள் கழித்து முதலீடு பத்து மடங்காகும் என்று கூறி முகவர்கள் விளம்பரம் செய்தது இன்னும் நியாபகத்தில் நிற்கிறது.

இப்படித் தவறான தகவல்களைக் கொடுத்ததால் இன்று முதலீட்டாளர்கள் நம்பிக்கையை இழந்து காணப்படுகிறது. அதாவது முதலீடு செய்தவர்கள் கூட ஒரு கட்டத்தில் மொத்தமாக முதலீட்டினை வாபஸ் வாங்கியது பெருத்த பின்னடைவை ஏற்படுத்தியது.

ஆனால் இன்றும் இத்தகைய திட்டங்கள் செயல்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன. மக்களும் ஏமாற்றப்பட்டு கொண்டு தான் இருக்கிறார்கள்.

எப்படி என்று விவரமாகப் பார்ப்போம்.

எல்லாம் கலந்த தெளிவில்லாத கலவை 


ULIP என்பது நிரந்தர வருமானம், இன்சூரன்ஸ் மற்றும் பங்குச்சந்தை என்ற மூன்றையும் ஒருங்கிணைத்து வடிவமைக்கப்பட்டது. அதாவது தனித்தனியாக ஒவ்வொரு திட்டங்களிலும் சேராமல் ஒரே திட்டத்தில் மூன்று பயன்களைப் பெறலாம் என்பதே இதன் சிறப்பம்சம்.

செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

வருமான வரி சேமிக்க உதவும் ELSS fund

(16-07-2020 அன்று மீள் பதிவு செய்யப்பட்டது.)

இந்த கட்டுரை வருமான வரியை சேமித்து, அதே நேரத்தில் அதிக ரிடர்ன் தந்து உதவும் ELSS Mutual Fund பற்றியது.

வருமான வரி சேமிப்பதற்கு 80Cயின் படி அரசு சில சேமிப்பு வழிகளை கொடுத்துள்ளது. இந்த சேமிப்பில் இருக்கும் தொகைக்கு 1.5 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு பெறலாம்.

உதாரணத்திற்கு 10% வருமான வரி படியில் வருபவர் 15,000 ரூபாயும், 20% வருமான வரி படியில் வருபவர் 30,000 ரூபாயும், 30% விகிதத்தில் வருபவர் 45,000 ஒரே வருடத்தில் சேமிக்க முடியும்.

பார்க்க: வருமான வரி விலக்கு பெற என்ன செய்யலாம்?




இந்த சேமிப்பானது இன்சூரன்ஸ் திட்டங்கள், பிக்ஸ்ட் டெபாசிட், NSC, மியூச்சல் பண்ட் என்று பலவற்றிற்கும் வரும். இதில் மியூச்சல் பண்ட் தவிர மற்ற எல்லாவையும் குறைந்தது ஐந்து வருட முதலீடுகளாகும்.

மியூச்சல் பண்ட் முதலீட்டிற்கு மட்டும் மூன்று ஆண்டுகளே லாக்-இன் டைம். அதனால் குறைந்த காலம் மட்டுமே வரி விலக்கு முதலீடுகளை வைத்துக் கொள்பவர்கள் மியூச்சல் பண்ட்டை விரும்பலாம்.

சனி, 21 டிசம்பர், 2013

மியூச்சல் பண்ட் முதலீட்டில் சில தவறுகள் - 5

இந்த கட்டுரை எமது மியூச்சல் பண்ட் தொடரின் செயலாக்க கட்டுரையே.

முந்தைய பதிவுகளில் Mutual Fund அறிமுகம், நமக்கு எது தேவை?, சில சுய கேள்விகள், மியூச்சல் பண்ட்டை அளவிடுதல் என்று பல பிரிவுகளை பார்த்தோம்.

அதனை நிகழ் வாழ்வில் எப்படி பயன்படுத்துவது என்பதையும் சுருக்கமாக பார்ப்போம். இதனால் இந்த தொடரின் முதல் பாகத்தில் இருந்து படித்து வருவது அதிக பலனை தரும்.

பார்க்க: ம்யூச்சல் பண்ட் முதலீடுகளின் அறிமுகம் - 1




எமது நெருங்கிய நண்பர் ஒருவர் ஏஜென்ட் சொல் கேட்டு ஒரு மியூச்சல் பண்ட்டில் முதலீடு செய்தார். அதுவும் வருமான வரி கட்டுவதற்காக அவசரம் அவசரமாக செய்த ELSS முதலீடு.

அடுத்து மூன்று வருடம் கழித்து பார்த்தால் நெகடிவ் ரிடர்ன். நஷ்டத்தில் எடுக்க மனதில்லாமல் அடுத்து வருடம் வரை வைத்து பார்க்கலாம் என்றால் அதிலும் மீளவில்லை.

இவ்வளவிற்கும் அவர் படித்து ஐடி துறையில் இருப்பவர் தான். இணையம் எளிதில் கிடைக்கும் வசதிகள் உள்ளது. ஆனாலும் அந்த தவறிற்கு காரணம் என்று பார்த்தால் அவசரத்தில் தவறாக முதலீடு செய்தது, ஏஜென்ட் பேச்சை அப்படியே நம்பியது என்பது தான்.

பொதுவாக நமது ஊரில் பார்த்தால் நிதி மேலாண்மை செய்யும் ஏஜெண்ட்களுக்கு முதலீடு தொடர்பான ஆழ்ந்த அறிவு என்பது குறைவு தான். எந்த பாலிசி, முதலீடு என்றாலும் இவ்வளவு போட்டால் இரண்டு மடங்கு, மூன்று மடங்கு கிடைக்கும் என்ற பேராசை காட்டுவது தான் முதல் படி. அதில் பல பேர் விழுவார்கள்.

அது எப்படி நிலையான வருமானம் வரும்? என்று மேலும் கேள்வி கேட்டால் அதன் பின் மேல் உள்ள மேலாளரை காட்டுவார்கள். அவர் கொஞ்சம் புரிந்தும் புரியாமலும் விளக்கி எப்படியும் முதலீடு செய்ய வைத்து விடுவார்.

அதன் பின் நாம் முதலீடு செய்யும் வரை அவர்களுக்கு கமிஷன் கிடைத்துக் கொண்டு தான் இருக்கும். அது எத்தனை வருடங்கள் சென்றாலும் சரி தான்.அதனால் கமிஷன் அதிகம் தரும் மியூச்சல் பண்ட்களை தான் அதிகம் பரிந்துரை செய்வார்கள். அது நல்ல நிதியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அந்த நிதியின் முதலீட்டு காலம் முடியும் போது யாரும் திருப்பி கேட்க மாட்டோம் என்ற நம்பிக்கையும் அவர்களுக்கு இருக்கிறது.

எம்மிடம் கேட்டால் Mutual Fund ஒன்றும் ராக்கெட் அறிவியல் போன்று புரியாத ஒன்று அல்ல. பங்குச்சந்தைக்கு நேரடியாக போவதற்கு பதிலாக Mutual Fund ஒரு ஏஜென்ட் போன்று செயல்படுகிறது. அதற்கும் நாம் ஏஜென்ட் ஒருவரை வைத்துக் கொள்வது அவசியமற்றது.

அடுத்து அவசர அவசரமாக வருமான வரிக்காக அலுவலகத்தில் கேட்கும் போது முதலீடு செய்வது. அதிக தவறுகள் இதில் தான் வருகிறது. இதற்கு மாதந்தோறும் SIP முறையில் முதலீடு செய்து வரலாம். டிமேட் ஸ்டேட்மென்ட்களே அலுவலகத்தில் சமர்ப்பிக்க போதுமானது. வருமான வரி பலனும் கிடைத்து விடும்.

சில எளிய அடிப்படை வழிகளை கூறுகிறோம்.

மியூச்சல் பண்ட்டில் முதலீடு செய்தவர்களை பார்த்தால் மூன்று பிரிவினர் தான். கண்டிப்பாக இதில் ஏதாவது ஒன்றில் நாம் வந்திருவோம்.

ஒன்று, 
இளமை துள்ளல் கொண்ட இப்பொழுது தான் வேலை கிடைத்து முதலீட்டை ஆரம்பிப்பாவார்கள். இவர்களுக்கு குறைந்தது இன்னும் 30 வருடங்கள் வேலை பார்க்க அளவு நேரம் இருக்கிறது. அதனாக கொஞ்சம் அதிக ரிஸ்க் எடுக்கலாம். அதிக அளவு பங்குசந்தையில் முதலீடு செய்யப்படும் Equity Fund ஏற்றது. 20% அளவு வருட  ரிடர்ன் எதிர்பார்க்கலாம்.

இரண்டாவது,
35 வயதில் குடும்பம், குழந்தை என்று சுமைகளை சுமககும் நேரம். இந்த நேரத்தில் வருமானமும் தேவைப்படும். ஆனால் பெரிய அளவு ரிஸ்க் எடுக்க முடியாது. அவர்கள் Balanced Fund நிதியில் முதலீடு செய்யலாம். 15% அளவு ரிடர்ன் எதிர்பார்க்கலாம்.

மூன்றாவது,
50 வயது கடந்து பென்ஷன் அல்லது Fixed Deposit வட்டியை நம்பி இருப்பவர்கள். பெரிய அளவில் ரிஸ்க் எடுக்க முடியாது. இவர்கள் Debt Fund வகையில் முதலீடு செய்யலாம். வருடத்திற்கு 10% அளவு ரிட்டர்ன் எதிர்பார்க்கலாம்.

பார்க்க: 

எந்த நிறுவனம்?


அடுத்து எந்த நிறுவனத்தை தேர்ந்தெடுக்க என்று. கேட்டால் பெரிய வங்கி துறை சார்ந்த SBI, HDFC, Axis Bank போன்றவற்றின் நிதிகளை தேர்ந்தெடுப்பது நல்லது. 

மற்ற மியூச்சல் பண்ட் நிறுவனங்களை பொறுத்தவரை ஏதேனும் சூழ்நிலையில் நிறுவனத்தையே விற்று விடுகிறார்கள். அதன் பின் வேறொரு பண்ட்டில் இணைக்கிறார்கள். நிர்வாக சிக்கலும் ஏற்படுகிறது. இங்கு தான் முதலீடு செய்ய வேண்டும் என்று ஒரு நிபந்தனையும் ஏற்பட்டு விடுகிறது.

எந்த மியூச்சல் பண்ட்?

இறுதியாக இந்த கட்டத்தில் வரும் போது குறைந்த பட்சம் உங்கள் மியூச்சல் பண்ட் பட்டியல் ஐந்து என்ற எண்ணிக்கையில் சுருங்கி இருக்கும். இதில் எந்த முதலீடும் ஓரளவு பாதுகாப்பானதாக இருக்கும்.

ஆனாலும் அதில் ஒன்றை தேர்ந்தெடுக்க மியூச்சல் பண்ட்டை அளவிடுவது எப்படி?  -4 என்ற கட்டுரையை படியுங்கள். அதில் பல டெக்னிக்கல் தகவல்கள் விரிவாக விளக்கப்பட்டு இருக்கும்.

என்ன தான் தியரி போன்று விளக்கினாலும் அனுபவமாக எதுவும் வராது. அதனால் ஒரு சிறிய தொகையில் நீங்களே ஒரு நிதியை மேற் சொன்ன அடிப்படைகளை வைத்து தேர்ந்தெடுங்கள். MoneyControl தளத்தில் சென்று மியூச்சல் பண்ட் பட்டியலை முழுவதுமாக பார்க்க முடியும்.

அதன் பின் Paper Investing முறையில் ரிடர்ன் மற்றும் தவறுகளை குறித்து வரலாம். அதனை அடுத்து வரும் முதலீடுகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். 

இந்த தொடரின் அணைத்து பாகங்களையும் E-Book வடிவில் பின்னர் பகிர்கிறோம். ஈமெயில் வழியாக இணைந்து இருங்கள்.


மியூச்சல் பண்ட்டை அளவிடுவது எப்படி? -4

(14-07-2020 அன்று மீள்பதிவு செய்யப்பட்டது)

மியூச்சல் பண்ட் தொடரின் கடந்த பாகங்களில் எந்த பிரிவு மியூச்சல் பண்ட் நமககு உகந்தது? என்பதை முடிவு செய்வது பற்றி எழுதி இருந்தோம்.

பார்க்க: மியூச்சல் பண்ட் முதலீட்டிற்கு சில சுய கேள்விகள் - 3

தற்பொழுது எந்த பிரிவு நமக்கு தேவை என்று முடிவு செய்யப்பட்டதால் சந்தையில் இருக்கும் 200 மியூச்சல் பண்ட்களில் 20 நிதிகளாக பில்டர் செய்யப்பட்டு இருக்கும். அதில் ஒன்றை தேர்ந்தெடுப்பது எப்படி? என்பதனை பார்ப்போம். அதற்கு தனிப்பட்ட நிதிகளை எவ்வாறு அளவிடுவது என்பது பற்றி தெரிந்திருத்தல் நலம்.



நடத்தும் நிறுவனம்?


எந்த நிறுவனம் அந்த மியூச்சல் பண்டை நடத்துகிறது என்பதை முதலில் கவனிக்க வேண்டும். பொதுவாக Mutual Fund முதலீடுகள் என்பது ஐந்து வருடங்கள், பத்து வருடங்கள் என்று நீண்ட காலத்திற்கு முதலீடு செய்யப்படும் வகையாகும்.

அந்த சூழ்நிலையில் அந்த நிதியை நடத்தும் நிறுவனங்கள் நன்றாக இருப்பதும் அவசியமாகும். அண்மையில் கூட பிரபலமான Franklin Templeton நிறுவனத்தின் நிதிகள் நிறுத்தி வைக்கப்பட்டு எப்பொழுது முதலீடு செய்த பணம் கிடைக்கும் என்ற நிலையும் வந்தது.

பார்க்க:
மியூச்சல் பண்ட்களுக்கும் வரும் ஆபத்து 
சஹாரா ம்யூச்சல் பண்ட் அங்கீகாரம் ரத்து செய்யப்படுகிறது

அதனால் மியூச்சல் பண்ட் சார்ந்து இருக்கும் நிறுவனம் குறைந்தபட்சம் கடந்த பத்து வருடங்களில் இந்த மாதிரியான பிரச்சினைகளில் சிக்காமல் இருத்தல் அவசியம்.

புதன், 25 செப்டம்பர், 2013

மியூச்சல் பண்ட் முதலீட்டிற்கு சில சுய கேள்விகள் - 3

(14-07-2020 அன்று மீள்பதிவு செய்யப்பட்டது)

Mutual Fund தொடரின் முந்தைய பாகத்தில் எந்த மியூச்சல் பண்ட் நமக்கு தேவை? என்பது பற்றி எழுதி இருந்தோம்.

200க்கும் மேற்பட்ட மியூச்சல் பண்ட் நிதிகள் இருக்கும் சூழ்நிலையில் அதில் 20 நிதிகளை பிரித்தெடுப்பதற்கு நமக்கு எது தேவை? என்பதை சரியாக உணர்ந்து கொண்டாலே போதும்.


முந்தைய பாகத்தின் தொடர்ச்சியாக சில கேள்விகளை நமக்கு நாமாகவே எழுப்பிக் கொள்வது என்பது மிகவும் அவசியமானது. ஏனென்றால் நமது தேவை என்பது மற்றவர்களை விட நமக்கு தான் அதிகம் தெரிந்திருக்கும்.

செவ்வாய், 17 செப்டம்பர், 2013

எந்த மியூச்சல் பண்ட் நமக்கு தேவை? - 2

(14-07-2020 அன்று மீள்பதிவு செய்யப்பட்டது)

மியூச்சல் பண்ட் பற்றிய இந்த தொடரின் முந்தைய பாகத்தில் ம்யூச்சல் பண்ட் முதலீடுகள் பற்றிய அறிமுகத்தினை பார்த்தோம்.

இனி 200க்கும் மேற்பட்ட மியூச்சல் பண்ட்கள் சந்தையில் இருக்கும் சூழ்நிலையில் அவற்றில் எதில் முதலீடு செய்வது என்பதில் குழப்பம் வரலாம். அதனை பார்ப்போம்.

அதற்கு முன் செல்வதற்கு நமக்கு எந்த மாதிரியான முதலீடு தேவை என்பதை முதலில் முடிவு செய்து கொள்ள வேண்டும்.



எந்தவொரு முதலீட்டிலும் RISK மற்றும் RETURN என்ற இரண்டும் இருக்கும். ரிஸ்க் அதிகமாக இருக்கும் இடங்களில் முதலீடு செய்தால் ரிடர்ன் அதிகமாக இருக்கும். அதே போல் மோசமான காலங்களில் இழப்பும் அதிகமாக இருக்கும். ரிஸ்க் குறைவாக இருக்குமிடத்தில் முதலீடு செய்தால் ரிடர்ன் குறைவாக இருக்கும். இழப்பும் குறைவாக இருக்கும்.

இதில் நாம் எங்கு வருகிறோம் என்பதை தீர்மானித்து கொள்ள வேண்டும். பல சமயங்களில் இடையில் இருக்கும் ஏஜென்ட் பேச்சை கேட்டே நாம் முதலீடுகளை தீர்மானிக்கிறோம். அது சரியானதல்ல.

Mutual Fund முறையிலும் மேல் சொன்ன ரிஸ்க் மற்றும் ரிடர்ன் என்பதனை அடிப்படையாக வைத்து பல பிரிவுகளாக பிரித்து வைத்துள்ளார்கள். அதில் நாம் எங்கு வருகிறோம் என்பதை அடிப்படையாக வைத்து தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.





Equity Fund

இந்த நிதியில் பெரும்பாலான முதலீடுகளை மியூச்சல் பண்ட் நிறுவனங்கள் பங்குகளில் முதலீடு செய்வார்கள். பங்குச்சந்தை என்பது அதிக ரிஸ்க்கான முதலீடுகளில் வருவதால் இந்த நிதிகள் அதிக ரிஸ்க் எடுப்பவர்களுக்கு ஏற்றது.

இதுவும் முதலீடு செய்யப்பட்ட பங்குகளில் பரவலாக்கப்பட்ட தன்மையைப் பொறுத்து பல வகைகளாக பிரிக்கப்பட்டிருக்கும்.

பல துறைகள், பெரிய, சிறிய நிறுவனங்களில் சமநிலை செய்யப்பட்டிருந்தால் Diversified Fund என்பார்கள். இதில் சராசரியான ரிடர்ன் மற்றும் குறைவான ரிஸ்க் இருக்கும். ஆரம்ப கால பரஸ்பர நிதி முதலீட்டர்களுக்கு ஏற்றது.

நடுத்தர, சிறிய நிறுவனங்களில் அதிகமாக முதலீடு செய்திருந்தால் Midcap Fund என்பார்கள். இதில் அதிகமான ரிடர்ன் மற்றும் அதிகமான ரிஸ்க் இருக்கும். நல்ல அனுபவமானவர்களுக்கு ஏற்றது.

ஒரே துறை சார்ந்து முதலீடு செய்து இருந்தால் Sector Specific Fund என்பார்கள். இதில் ரிடர்ன் மற்றும் ரிஸ்க் ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்து இருக்கும். FMCG, Pharma, IT போன்ற துறை சார்ந்த மியூச்சல் பண்ட்களை அதிகம் பார்க்க முடியும். ஆனாலும் இத்தகைய நிதிகளை நாம் பரிந்துரை செய்வதல்ல.

மியூச்சல் பண்ட்களை ஒரு பாதுகாப்பிற்காக தான் நாம் முதலீடு  செல்கிறோம். அந்த சூழ்நிலையில் இப்படி ஒரே துறையில் முதலீடு செய்யும் பண்ட்களுக்கு  பதிலாக நாமே நேரடியாக சந்தையில் முதலீடு செய்து விடலாம். இரண்டிலும் பெரிய வித்தியாசம் அல்ல.

மேற்சொன்ன எல்லா நிதிகளை எப்பொழுது வேண்டுமானாலும் வாங்கி விற்று கொள்ளலாம்.

இது போக வரி சலுகை பெறுவதற்காக உள்ள பரஸ்பர நிதிகளுக்கு ELSS Tax Saving Fund(ELSS) என்று பெயர். இந்த நிதிகளில் முதலீடு செய்யப்படும் நிதியை குறைந்தது 3 வருட காலத்திற்கு எடுக்க முடியாது. இதில் வருமான வரி சலுகை லாபமும் கிடைக்கிறது.

பார்க்க: வருமான வரி சேமிக்க உதவும் ELSS fund

Debt Fund

இந்த பரஸ்பர நிதி அரசு, தனியார் நிறுவங்கள் சார்ந்த கடன் பத்திரங்களில் (Bond) முதலீடு செய்யப்படும். இவை பொதுவாக நிலையான வருமானம் கொடுக்கவை. Fixed Deposit என்பதை விட சிறிது அதிக வருமானம் கொடுக்கும்.

ஓய்வூதியம் பலன் முதியவர்கள் Fixed Deposit முறையில் குறைந்த வட்டி கிடைக்குமாயின் இத்தகைய நிதியினை முயற்சிக்கலாம். அதிலும் குறிப்பாக அரசு துறை சார்ந்த கடன் பத்திரங்களில் முதலீடு செய்து இருக்கும் மியூச்சல் பண்ட்கள் அதிக பாதுகாப்பானது.

மேலும் அதிகமான விவரங்களை நெருக்கடியில் நிலையான வருமானம் தரும் Gilt Fund கட்டுரையில் பார்க்க.

Balanced Fund

இங்கு பங்குகள் மற்றும் கடன் பத்திரங்கள் இரண்டிலும் சில விகிதங்களில் பகிர்ந்து முதலீடு செய்யப்பட்டிருக்கும். இதனால் ஓரளவு சராசரியான வருமானம் மற்றும் சராசரியான ரிஸ்கும் இருக்கும். பொதுவாக மியூச்சல் பண்ட் முதலீடுகளுக்கு புதிதாக வருபவர்கள் இந்த பிரிவினை தேர்ந்தெடுக்கலாம்.

நமது தேவை என்ன என்பதனை பொறுத்து அதற்கேற்றவாறு முதலீடு செய்ய மியூச்சல் பண்ட்களில் பல வழிகள் உள்ளன. அவற்றில் ஒன்றை தேர்ந்தெடுக்கலாம்.

அடுத்த பதிவில் CheckList போன்ற  கேள்விகளை தருகிறோம். அதற்கு பதில் அளிக்கும் போது நமக்கு எந்த பிரிவு மியூச்சல் பண்ட் தேவைப்படும் என்பது தெரிந்து விடும்.

பார்க்க: மியூச்சல் பண்ட் முதலீட்டிற்கு சில சுய கேள்விகள் - 3