செவ்வாய், 8 அக்டோபர், 2013

Mahindra பங்கு: சில நல்ல செய்திகள்

கடந்த ஆறு மாதமாக இந்திய பங்குச் சந்தையில் வாகன துறையும், வங்கித் துறையும் பயங்கர வீழ்ச்சி கண்டு வந்தன. தற்பொழுது நிலைமை ஓரளவு மாறத் தொடங்கியதாக எதிர் பார்க்கப்படுகிறது.

தொடர்பான பதிவு:
பங்கு ஒரு பார்வை: மகிந்திரா & மகிந்திரா

நாம் எமது பங்கு பரிந்துரையில் Mahindra & Mahindra நிறுவனத்தை பரிந்துரைத்து இருந்தோம். அதனால் தற்போதைய மாற்றம் இந்த பங்கிலும் எதிரொலிக்கும் என்று நினைக்கிறோம்.



இந்த நிறுவனத்துக்கு சில நல்ல செய்திகள் தற்பொழுது உலவி வருகின்றன. அதனை பார்ப்போம்.

  • மத்திய அரசு பொதுத் துறை வங்கிகளில் வாகன கடன்களுக்காக 14000 கோடி ஒதுக்கி இருந்தது. தற்பொழுது இதனை மேலும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இது வங்கி மற்றும் ஆட்டோ துறையினருக்கு நற்செய்தியாகும்.
  • மகேந்திராவின் ட்ராக்டர் விற்பனை கடந்த மூன்று மாதங்களில் கடந்த வருடத்தை விட அதிகமாக விற்று உள்ளது. (32%) 
  • மகேந்திரா தங்கள் கார்களின் விலையை 20000 ரூபாய் வரை கூட்டியுள்ளது. இது அடுத்த காலாண்டின் நிதி நிலை அறிக்கையில் எதிரொலிக்கலாம்.
  • இன்னும் கார் விற்பனை பிரிவு சரிவில் தான் உள்ளது. வரும் தீபாவளி மற்றும் ஆயுத பூஜை பண்டிகை நேரம் காரணமாக வாகன விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

வரும் நாட்களில் பங்கு விலை 900 ரூபாயைக் கடக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது..

தொடர்பான பதிவுகள்:

டிராக்டர் விற்பனையால் மேலே வந்த மகிந்திரா

தரை உயரம் குறைக்கப்படும் மகிந்திரா XUV-500



« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

2 கருத்துகள்:

  1. கார்களின் விலையைக் கூட்டினால், விற்பனை மேலும் குறையாதா பாஸ்?

    பதிலளிநீக்கு
  2. நல்ல கேள்வி! கார் விலை மகிந்திரா தவிர மாருதி போன்ற மற்ற நிறுவனங்களும் கூட்டி உள்ளன. அதனால் கார் வாங்குகிறவர்கள் ஒப்பீடு அடிப்படையில் பார்த்தால் இந்த விலை உயர்வு அவ்வளவு பாதிப்பு ஏற்படுத்தும் என்று கருதவில்லை.

    கார் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காரணமாக ஏற்பட்ட உதிரி பாகங்கள் விலை உயர்வே. இன்னும் வாகன் துறை மீண்டும் எழுச்சிக்கு செல்ல வில்லை என்பதும் உண்மையே.

    பதிலளிநீக்கு