ஞாயிறு, 17 மே, 2020

20 லட்சம் கோடிக்கு கணக்கு வந்தாச்சு..

மோடி சொன்ன பிறகு கொரோனா உதவி தொகை பற்றி அதிக பேச்சு எழுந்தது. பங்குசந்தையில் கூட உயர்வை எதிர்பார்த்தார்கள். ஆனால் வெறும் 200 புள்ளிகள் உயர்வை மட்டும் பார்த்தது. அதன் பிறகு மேலும் கீழே வந்து விட்டது.

நண்பர்கள் கூட இது தொடர்பாக கட்டுரை எழுத கேட்டு இருந்தார்கள். அதனால் வெள்ளியன்றே எழுத வேண்டிய கட்டுரை. ஆனால் புரியாமல் இருந்ததால் என்ன எழுதவென்றே தெரியவில்லை. சரி மூன்று நாளும் உட்கார்ந்து கேட்போம் என்று இருந்தோம். அது நான்கு நாளானது. இன்று ஐந்தாவது நாளோடு வில்லிசை முடிந்தது.



இறுதியில் நிர்மலாஜி ஒரு புன் முறுவலோடு நீங்கள் கேட்ட 20 லட்சம் கோடிக்கு கணக்கு கொடுக்குறேன் என்று சொல்லிய போது அவர்களுக்கே மீம்ஸ் தாக்கம் புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

ஞாயிறு, 10 மே, 2020

அரசு கடன் பத்திரங்கள் எவ்வாறு செயல்படுகிறது?

நேற்று ஒரு செய்தியை பார்க்க நேரிட்டது.

டாஸ்மாக் வருமானத்தில்  தங்களுக்கும் பங்கு  வேண்டும் என்று மத்திய அரசின் வருமான வரித்துறை நீதி மன்றத்தில்  நீதியை நாடி இருக்கிறார்கள். அதிலும் கடந்த வருடத்தில் மட்டும் 14,000 கோடி ரூபாய் அளவு தர வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள்.



தமிழக அரசே பல பேர் ஏச்சு, பேச்சுக்களை கடந்து டாஸ்மாக்கை திறந்தால் அதற்கும் தடை வாங்கி வைத்துள்ளார்கள். இதில் மத்திய அரசுக்கும் பங்கு கொடுக்க வேண்டும் என்றால் பிச்சை எடுத்த பெருமாளிடம் திருடி தின்னும் அனுமார் கதை தான்.

புதன், 6 மே, 2020

வருமானத்திற்கு குறுக்கு வழியை நாடும் மாநில அரசுகள்

கடந்த ஏப்ரல் மாதம் டெல்லி அரசுக்கு 3500 கோடி அளவு வரும் வருவாய் 300 கோடியாக குறைந்துள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் கூறி உள்ளார். பல மாநிலங்களுக்கும் கிட்டத்தட்ட இதே நிலை தான்.

GST கொண்டு வரப்பட்ட பிறகு மாநிலங்களின் கையில் இருக்கும் வருவாய் என்பது மதுவும், பெட்ரோலும் தான். மீதி எல்லாமே மத்திய அரசின் கைக்கு சென்று விட்டது.



வெள்ளி, 1 மே, 2020

நிச்சயமற்ற நிலையும், முதலீடுகளும்

நேற்று சந்தை மீண்டும் ஏற்றத்தை கண்டது. வாய்ப்பை விட்டு விட்டோம் என்று தோன்றி இருக்கலாம். அதனால் பல நண்பர்களிடம்  முதலீடு செய்யலாமா? என்ற கேள்வியை பார்க்க முடிந்தது.

இந்த வாரம் முழுவதும் சந்தை உயர்ந்தாலும் அதற்கான ஒரு நேர்மறை காரணியை உருப்படியாக சொல்ல முடியாது என்பது தான் நிதர்சனம்.



கச்சா எண்ணெய் விலை இந்த அளவிற்கு எதிர்மறை நிலையில் செல்லும் என்று யாரும் கனவில் கூட நினைத்து இருக்க முடியாது.

ஞாயிறு, 5 ஏப்ரல், 2020

கணிக்க முடியாத கொரோனா ...

நண்பர்களுக்கு வணக்கம்! நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு பதிவு. இந்த இடைப்பட்ட தினங்களில் நிறைய நிகழ்வுகள் நடந்து விட்டன. அதில் எமது பதிவுகள் இல்லாதது நண்பர்களுக்கு வருத்தம் இருந்ததை அறிய முடிந்தது. மன்னிக்கவும்!



ஞாயிறு, 2 பிப்ரவரி, 2020

அரசாங்கம் என்னும் அட்டை பூச்சி

நீண்ட ஒரு நெடிய மௌனத்திற்கு பிறகு ஒரு பதிவு.

இந்த முறை தனிப்பட்ட விடயங்கள் பெரிய அளவு இல்லை.




ஆனால் இந்திய பொருளாதாரம் பற்றி பெரிதாக சொல்ல ஒன்றும் இல்லை என்றே சொல்ல முடியும்.

எந்த ஒரு குறிப்பிட்ட காரணியில் இருந்து கூட நல்ல செய்தி கிடைக்காத சூழ்நிலையில் சந்தை ஏறி ஏமாற்று வித்தையைக் காட்டிக் கொண்டு இருந்தது.

செவ்வாய், 22 அக்டோபர், 2019

நெருக்கடியில் நிலையான வருமானம் தரும் Gilt Fund

எம்முடைய தெரிவை விட வாசகர்களின் வேண்டுதலுக்கிணங்க கட்டுரைகள் எழுதும் போது அந்த கட்டுரை மிக பிரபலமாகி விடுகிறது.

அந்த வகையில் நண்பர் ராஜா கேள்விக்கேற்ப  Liquid Funds முதலீடு பாதுகாப்பானதா? என்ற கட்டுரை எழுதி இருந்தோம்.

அது அதிக அளவு பார்வையாளர்களை ஈர்த்து இருந்தது.



அதன் விளைவு Quoraவில் கேள்வி பதில்களுக்கு கூட தமிழில் பதிலளிக்க ஆரம்பித்தோம்.

நான்கு நாட்களில் நான்காயிரம் பார்வைகளை பெற்று நல்ல ஆதரவு கிடைத்து இருந்தது.

எமது பதில்களை இங்கு பார்க்கலாம். MUTHALEEDU.IN Quora கேள்வி பதில்கள்

Liquid Funds முதலீடு பாதுகாப்பானதா? என்ற கட்டுரையில் Comment பகுதியில் நண்பர் சந்துரு அவர்கள் Gilt Fund பற்றி எழுதுமாறு கேட்டு இருந்தார்.