தொழில் நுட்பம் வந்து நன்மை செய்ததோ இல்லையோ. ஆனால் இன்னும் சிறிது காலத்தில் 99% உலக சொத்தும் 1% பணக்காரர்களிடமும் மீதி 1% சொத்து 99% மற்ற மக்களிடமும் இருந்தாலும் ஆச்சர்யமில்லை.
வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களால் வியாபாரம் முழுக்க ஒரு வித மையத்தன்மையை நோக்கி நகருவதையம் பார்க்க முடிகிறது. அந்த வகையில் தான் ஜியோவில் Facebook நிறுவனம் முதலீடு செய்வதையும் காணலாம்.
கிட்டத்தட்ட 45,000 கோடி ரூபாய் அளவு முதலீடு செய்து உள்ளார்கள். இது போக சில இதர நிறுவனங்களும் முதலீடு செய்து மொத்தத்தில் 75,000 கோடி அளவு முதலீடு செய்து உள்ளார்கள். அடுத்து, Microsoft நிறுவனமும் வரிசையில் இருப்பதாக செய்திகள் வருகின்றன.
ஏன், இத்தனை வரிசை என்ற கேள்வி வரும் போது, கொரோனோவானது இல்லுமினாட்டி சதியா? அல்லது மருந்து நிறுவனங்கள் சதியா? என்பதை விட மக்களை அதிகம் குழப்பம் செய்யத் தான் வைக்கிறது.
கொஞ்சம் பின்புலங்களையும் விரிவாக பார்ப்போம்.