சுயதொழில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுயதொழில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 1 ஜூன், 2020

JIO - Facebook முதலீடு, சூட்சமம் என்ன?

தொழில் நுட்பம் வந்து நன்மை செய்ததோ இல்லையோ. ஆனால் இன்னும் சிறிது காலத்தில் 99% உலக சொத்தும் 1% பணக்காரர்களிடமும் மீதி 1% சொத்து 99% மற்ற மக்களிடமும் இருந்தாலும் ஆச்சர்யமில்லை.

வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களால் வியாபாரம் முழுக்க ஒரு வித மையத்தன்மையை நோக்கி நகருவதையம் பார்க்க முடிகிறது. அந்த வகையில் தான் ஜியோவில் Facebook நிறுவனம் முதலீடு செய்வதையும் காணலாம்.



கிட்டத்தட்ட 45,000 கோடி ரூபாய் அளவு முதலீடு செய்து உள்ளார்கள். இது போக சில இதர நிறுவனங்களும் முதலீடு செய்து மொத்தத்தில் 75,000 கோடி அளவு முதலீடு செய்து உள்ளார்கள். அடுத்து, Microsoft நிறுவனமும் வரிசையில் இருப்பதாக செய்திகள் வருகின்றன.

ஏன், இத்தனை வரிசை என்ற கேள்வி வரும் போது, கொரோனோவானது இல்லுமினாட்டி சதியா? அல்லது மருந்து நிறுவனங்கள் சதியா? என்பதை விட மக்களை அதிகம் குழப்பம் செய்யத் தான் வைக்கிறது.

கொஞ்சம் பின்புலங்களையும் விரிவாக பார்ப்போம்.

வியாழன், 6 செப்டம்பர், 2018

OYO ROOMS பிசினஸ் மாடல் எவ்வாறு இயங்குகிறது?

சுயதொழில் பற்றி கட்டுரைகள் எழுதி நீண்ட நாள் ஆகி விட்டது. அதனை மீண்டும் தொடர்கிறோம்.

திங்கள், 16 ஜூலை, 2018

ட்ரேட் மார்க்கில் பாடம் கற்பிக்கும் சரவண பவன்

கடந்த நான்கு நாட்களாக திருப்பதி பயணம். கீழ் திருப்பதியில் இருந்து மேல் திருப்பதிக்கு நடை பயணம். அதனால்  பதிவுகள் எழுத முடியவில்லை.


எங்கும் கூட்டம், எதிலும் தமிழ் என்று ஆந்திர மாநிலத்தில் இருந்தது போலவே தோன்றவில்லை.



திருப்பதிக்கு அண்மையில் உள்ள காளகஸ்தியில் கூட இதே அனுபவம் தான்.

மதராஸ் மனதே என்று கேட்டவர்களுக்கு திருப்பதி அமைந்திருக்கும் சித்தூர் மாவட்டத்தை கொடுத்து விட்டோம். ஆனால் தமிழின் ஆதிக்கம் இன்னும் அதிகமாகவே உள்ளது என்றே சொல்லலாம்.

திருப்பதியில் கிடைத்த ஒரு அனுபவத்தை நிர்வாக ரீதியாக பார்ப்போம்.

வெள்ளி, 17 மார்ச், 2017

ஸ்டார்ட் அப்பும், மன்னாரன் கம்பெனியும்

நீண்ட நாட்களுக்கு பிறகு தனிப்பட்ட அனுபவம் சார்ந்த கட்டுரை.

கடந்த மூன்று நாட்களாக பதிவு எழுத முடியவில்லை.


நண்பர்களுடன் இணைந்து ஸ்டார்ட் அப் என்ற தொழில்முனையும் நிலையை நோக்கி பயணிக்க இருப்பதால் தற்போது பார்த்துக் கொண்டிருக்கும் வேலையை துறக்க வேண்டிய சூழ்நிலை.



அதனால் கடைசி நேர வேலைப்பளு அலுவலத்தில் அதிகமாக இருக்க, நமது தளத்தில் கவனம் செலுத்த முடியவில்லை.

இனி எமது கவனம் அதிக அளவில் முதலீடு தளத்திலும் இருக்கும். அதனால் தொய்வில்லாமல் எமது கட்டுரைகள் வர முயற்சிக்கிறோம். அத்துடன் விரைவில் எமது கட்டண சேவையில் பெரிய அளவில் மாற்றங்கள் செய்து அறிவிக்கிறோம்.

வெள்ளி, 10 மார்ச், 2017

ஆர்,கே,தமணியின் பங்குச்சந்தை வெற்றியில் D-Mart துவங்கிய வரலாறு - 2

ராதாகிருஷ்னன் தமணியின் பங்குசந்தை வெற்றி தொடரின் முந்தைய பகுதியை இங்கு பார்க்கலாம்.

ஆர்,கே,தமணியின் பங்குச்சந்தை வெற்றியில் D-Mart துவங்கிய வரலாறு - 1


இந்திய பங்குச்சந்தை வரலாற்றிலே ஒரு தனி நபர் வெறும் பங்குச்சந்தையில் புழலும் பங்குகளை மட்டும் வாங்கி ஒரு நிறுவனத்தை கைப்பற்ற முயன்றார் என்றால் ஆர்.கே.தமணியாகத் தான் இருக்கும்.




2000த்தின் தொடக்கத்தில் VST Industries என்ற ஒரு நிறுவனம் தான் ITC நிறுவனத்திற்கு போட்டியாக சிகரெட் தயாரித்துக் கொண்டிருந்தது.

VST நிறுவனத்தின் வளர்ச்சியை பார்த்த தமணி பங்குச்சந்தையில் கிடைத்த பங்குகளைக் கொண்டே நிறுவனத்தின் 15% பங்குகளை கைப்பற்றிக் கொண்டார்.

ஆர்,கே,தமணியின் பங்குச்சந்தை வெற்றியில் D-Mart துவங்கிய வரலாறு - 1

இதற்கு முன் பங்குச்சந்தையில் வெற்றியை தொட்டவர்கள் என்ற வரிசையில் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா, வாரன்  பபெட் போன்றவர்கள் பற்றி எழுதி இருக்கிறோம்.


ராகேஷ் ஜூன்ஜூன்வாலாவை பார்த்தால் 5000 ரூபாயில் ஆரம்பித்து இன்று 13,000 கோடியைத் தொட்டுள்ளார்.


Prof M என்று சொல்லப்படும் மற்றதொரு பேராசிரியர் பங்குசந்தையில் மட்டும் ஆயிரம் கோடியை  தாண்டியுள்ளார்.

பார்க்க:

இதையெல்லாம் பேராசையை தூண்டும் விதத்தில் இருந்தாலும் ஒரு நம்பிக்கையை தரும் விதத்தில் எடுத்துக் கொண்டால் நமக்கும் பங்குச்சந்தை வெற்றி என்பது தூரமல்ல.

ஏனென்றால் இவர்கள் அனைவருமே பரம்பரை பணக்காரர்கள் அல்ல. சிறிய முதலீட்டில் ஆரம்பித்து அதிக பொறுமையுடன் இருந்ததால் வெற்றியை சுவைத்தவர்கள்.

வெள்ளி, 24 பிப்ரவரி, 2017

பல மடங்கு ரிடர்னுக்காக பிரகாசிக்கும் பாதுகாப்பு துறை முதலீடு

முன்பொரு பதிவில் விப்ரோவில் 1000 ரூபாய் முதலீடு செய்து இருந்தால் தற்போது 43 கோடி ரூபாய் கூடி இருக்கும் என்று குறிப்பிட்டு இருந்தோம்.

பார்க்க: விப்ரோவில் 1000 முதலீடு செய்திருந்தால் இப்ப 43.6 கோடி


ஆனால் அதே மடங்கு தற்போது கூடும் என்று எதிர்பார்த்தால் நடக்காது.


மென்பொருள் துறை அதிக அளவில் வளர்ச்சி பெறும் என்று எதிர்பார்த்து எண்பதுகளிலே கணிசமான ரிஸ்க் எடுத்து முதலீடை செய்தவர்களுக்கு கிடைத்த வெகுமதி தான் அந்த பல மடங்கு வளர்ச்சி.



அதே போல் ஒரு துறையை நாம் இப்பொழுது பகிர்கிறோம்.

நாம் முன்னர் சொன்னது போல் ரிஸ்க் என்பது அதிகம் தான். கடந்து ஏழு வருடங்களில் L&T நிறுவனத்தின் வளர்ச்சியை பார்த்தால் சராசரிக்கும் கீழ் தான். அதற்கு ஒரு முக்கிய காரணம் பாதுகாப்பு துறையில் 10,000 கோடி அளவு டாங்கிகளை உற்பத்தி செய்யும் தொழிலுக்கு முதலீடு செய்து இருந்தார்கள்.

புதன், 18 நவம்பர், 2015

எஸ்பிஐ மினி வங்கி மூலம் கிடைக்கும் நல்ல சுயதொழில் வாய்ப்பு

இன்றும் இந்தியாவில் 40% மக்கள் வங்கி சேவைகளை பெறவில்லை என்று புள்ளி விவரங்கள் கூறுகிறது.


அதனால் ரிசர்வ் வங்கி முடிந்த அளவு வேகமாக மக்களுக்கு வேகமாக கொண்டு செல்வதில் முனைப்பாக இருக்கிறது.



அதன் ஒரு பகுதியாகத் தான் கடந்த சில வருடங்களாக பல புதிய வங்கிகள், பேமென்ட் வங்கி என்று புதிய அனுமதிகளை கொடுத்து வருகிறது.

ஆனாலும் புதிய வங்கிகள் பெரும்பாலும் தனியார் வங்கிகளாக இருப்பதால் அதிக லாபம் கிடைக்கும் நகர்ப்புறங்ளையே குறி வைக்கின்றன. கிராமங்கள் மற்றும் தொலை தூர பிரதேசங்களுக்கு ஆர்வம் காட்டுவதில்லை.

வெள்ளி, 16 அக்டோபர், 2015

சுயதொழில் துவங்க எளிதில் கடன் பெற உதவும் முத்ரா திட்டம்

இந்த பதிவு எழுதும் முன் பாஸ் என்கிற பாஸ்கரன் என்ற படத்தில் வரும் சந்தானம் டயலாக் தான் நியாபகம் வருகிறது.

அந்த வசனம் "லோன் கேட்டு வருபவர்களை லோ லோ என்று லொங்களிக்கும் ஐயா அவர்களே..." என்று ஆரம்பிக்கும்.



காமெடியாக இருந்தாலும் நமது ஊரில் நடக்கும் மிகவும் பொதுவான நிகழ்வு தான்.

கார்பரேட்களுக்கு லோன் கொடுக்கும் போது சலுகை அல்லது கரிசனம் காட்டும் வங்கிகள் தனி நபர்களாக சென்றால் எல்லாம் சரியாக இருந்தாலும் எளிதில் லோன் கொடுப்பதில்லை.

அப்படியே எல்லா ஆவணங்களும் சரியாக இருந்தாலும் செக்யூரிட்டி என்ற பெயரில் சொத்து பத்திரங்கள் கேட்கப்படும்.

திங்கள், 7 செப்டம்பர், 2015

மதுரை கிச்சனும், கம்மங் கூழும் - புதிய முயற்சி

இந்தக் கட்டுரை டெல்லியில் ஸ்பானிஷ் உள்கட்டமைப்பு நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் திரு.பிரபு அவர்களால் எழுதப்பட்டுள்ளது. மிகவும் விரிவான கட்டுரைக்கு மிக்க நன்றி!

சினிமாவில் விக்ரமன் படத்தில் வருவது போல வித்தியாசமான முயற்சி செய்து வெற்றி பெற்ற மதுரை கிச்சன் தம்பதியினர்...சென்னைவாசிகள் ட்ரை பண்ணுங்க...



வெங்கடேஷ் ஆறுமுகம் அவர்களின் மாத்தி யோசி அனுபவம் (#‎மாத்தி_யோசி)

சென்னை புரசைவாக்கம் அபிராமி மால் ஃபுட் கோர்ட்டில் ‪#‎மதுரைகிச்சன் என்ற புதிய கடை ஆரம்பித்துள்ளார் என் மனைவி. 

கடந்த மாதமே திறப்புவிழா என்ற போதிலும் இது பற்றி எழுத ஒரு மாதம் எடுத்துக் கொண்டதற்கு காரணம் இருக்கிறது. மக்களின் வரவேற்பை பொறுத்து எழுதக் காத்திருந்தேன்

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2015

இந்திய பங்குச்சந்தையில் ஒரு ரகசிய வெற்றியாளர்

இந்தக் கட்டுரையில் இந்திய பங்குச்சந்தையில் ஒரு முதலீட்டாளராக வெற்றி கண்ட ஒருவரைப் பற்றி பார்ப்போம்.


நமது சந்தையில் தனிப்பட்ட முதலீட்டாளர்களில் ராகேஷ் ஜூன்ஜூன்வாலாவை தவிர மற்றவர்கள் அறியப்படுவதில்லை.

அதற்கு ஜூன்ஜூன்வாலா அளவு மற்றவர்கள் பெருமளவு பணம் சம்பாதிக்கவில்லை என்பது ஒரு காரணமாக இருக்கலாம்.

இன்னொன்று, பல வெற்றிகரமான முதலீட்டாளர்கள் மீடியா வெளிச்சம் படாமல் இருக்க வேண்டும் என்றும் விரும்புகிறார்கள்.



கடந்த ஒரு கட்டுரையில் ஒரு ரகசிய பேராசிரியரைப் பற்றி பார்த்தோம்.

பார்க்க: பங்குச்சந்தையில் வெற்றிகளைக் குவிக்கும் ஒரு ரகசிய பேராசிரியர்

அவரைத் தொடர்ந்து இன்னொரு முதலீட்டாளரும் ரகசியமாக வெற்றி பெற்றுள்ளார்.

வியாழன், 23 ஜூலை, 2015

ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு நிதி திரட்டுவது எவ்வளவு கடினமாகிறது?

தற்போது இந்தியா Start-up என்று சொல்லப்படும் சுயதொழில் முனைவோர் காலத்திற்குள் நுழைந்துள்ளது.


கடந்த இரண்டு வருடங்களில் மிக அதிக அளவில் புதிய நிறுவனங்கள் தொடங்கப்படுவதாக செய்திகள் வருகின்றன.



சிலர் பெரிய நிறுவனங்களில் கிடைத்த அனுபவங்களைப் பெற்ற பிறகு அதனைத் தங்கள் சுயதொழில் நிறுவனங்கள் துவங்குவதற்கு பயன்படுத்தி வருகின்றனர்.

பல பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் இந்த செய்திகள் மிக நல்ல மாற்றம் என்று சொல்லலாம்.

இந்த சூழ்நிலையில் சில யதார்த்தங்களையும் மற்றொரு பக்கமாக பார்க்கலாம்.

புதன், 15 ஜூலை, 2015

விவேகமும் பொறுமையும் சுயதொழிலில் எவ்வளவு அவசியமாகிறது?

இணையத்தில் எமது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக திரட்டிய தகவல்களை கட்டுரை வடிவத்தில் பகிர்கிறோம்,


கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவை பார்த்தால் சிறு நிறுவனங்களை ஆரம்பிப்பவர் எண்ணிக்கை மிக அதிகமாகி விட்டது.



அதற்கு இ-காமெர்ஸ் துறையும் ஒரு முக்கிய காரணம் என்று சொல்லலாம். ப்ளிப்கார்ட், ஸ்னேப்டீல் என்று சாதரணமாக ஆரம்பிக்கப்பட்ட நிறுவனங்கள் மிகப்பெரிய நிறுவனங்களாகி விட்டன. இந்த நிறுவனங்கள் பல மடங்கு தன்னம்பிக்கையை மக்களிடம்  விதைத்துள்ளன என்று சொன்னால் மிகையாகாது.

மற்றொரு பார்வையில் பார்த்தால்,
முன்பு போல் இல்லாமல் மக்களிடம் பெரிய அளவில் பணப்புழக்கம் உள்ளது. அதே நேரத்தில் ஆரம்ப கட்ட முதலீடு என்பதை விட நல்ல ஐடியாக்களும், அதனை செயல்படுத்தும் திறமையுமே தற்போது முக்கியத்துவம் பெறுகிறது.

திங்கள், 13 ஜூலை, 2015

பகுதி நேர வேலைக்கு வருமான வரி செலுத்துவது எப்படி?

தற்போது இணைய உலகம் பிரபலமாகிய பிறகு பகுதி நேர வேலைகளும் அதிகரித்து விட்டது. அதிக அளவு வருமானம் தருமளவு பகுதி நேர வேலைகளும் மாறி விட்டது.


Freelancers, ப்ளாக் எழுதுவது என்று பல வழிகள்  மூலம் சம்பாதிப்பது என்பது இன்று மிக அதிகமாகி விட்டது. நல்ல விசயமும் கூட...

சில இந்திய ப்ளாக்கர்கள் மாதத்திற்கு ஐந்து லட்ச ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பதாக இணையத்தில் பார்த்து இருக்கிறோம். கண்டிப்பாக நாம் அந்த பட்டியலில் இல்லை...:)



இவ்வாறு அதிகமாக வரும் வருமானத்திற்கும் கணக்கு காட்ட வேண்டும். வருமான வரியும் செலுத்த வேண்டும் என்பது ஒரு முக்கிய விதிமுறை.

தற்போது வரை யாரும் இதனை பெரிதாக எடுத்துக் கொள்வது கிடையாது என்பதே உண்மை. ஏனென்றால் நமது வங்கி கணக்குகள் மேலை நாடுகளை போல் வருமான வரி அலுவலகத்துடன் இது வரை இணைக்கப்படவில்லை.

ஞாயிறு, 5 ஜூலை, 2015

தோல்விகளை வெற்றி படிக்கட்டுகளாக மாற்றிய அலிபாபாவின் ஜாக் மா - 2

அலிபாபா நிறுவனர்  ஜாக் மா அவர்களின் தன்னம்பிக்கை வெற்றி பற்றிய இந்த கட்டுரையின் முந்தைய பாகத்தினை இங்கு படிக்கலாம்.
தோல்விகளை வெற்றி படிக்கட்டுகளாக மாற்றிய அலிபாபாவின் ஜாக் மா


மீதி இரண்டிற்கும் அந்த சமயத்தில் எந்த நிறுவனங்களுமே இல்லை. ஜாக் மாவிற்கு வாய்ப்பும் அந்த புள்ளியில் தான் கிடைத்தது.

சீனாவை பொறுத்த வரை அப்பொழுது தான் ஏற்றுமதி பொருளாதரத்திற்கு மாறி இருந்தது. அதாவது அதிக அளவில் சீனாவின் குறுந்தொழில் நிறுவனங்கள் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து கொண்டு இருந்தன.



இது தான் வாய்ப்பு என்று ஜாக் மா நினைத்தார். சீனாவில் இருக்கும் பெரும்பாலான குறுந்தொழில் நிறுவனங்களையும், உலகம் முழுவதும் அவர்களுக்கு இருக்கும் நுகர்வோர் நிறுவனங்களை மறு முனையில் இணைத்து ஒரு இணையதளத்தை திட்டமிட்டார்.

இந்த B2B என்ற முறையை மையமாக வைத்து தான் அலிபாபா தொடங்கப்பட்டது.

தோல்விகளை வெற்றி படிக்கட்டுகளாக மாற்றிய அலிபாபாவின் ஜாக் மா

தோல்விகள் எப்பொழுதும் நிலையாக இருப்பதில்லை. அதில் துவண்டு விடாமல் படிப்பினைகளே என்று நினைத்து அடுத்த நிலைக்கு சென்றவர்கள் வாழ்வில் பெருவெற்றியை பெற்றிருக்கின்றனர்.


அதில் ஒருவர் தான் சீனாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான அலிபாபா நிறுவனத்தை தோற்றுவித்த ஜாக் மா. (Jack Ma)



அவரது தனிப்பட்ட வாழ்க்கை பலருக்கு பெரிய அளவில் தன்னம்பிக்கை கொடுக்க வாய்ப்பு இருக்கிறது. அதனால் கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.

சீனாவின் கிழக்கு மாகாணம் ஒன்றில் தான் ஜாக் மா பிறந்தார். அவர் பிறந்த போது சீனா தீவிர கம்யூனிசம் காரணமாக பிற நாடுகளில் இருந்து விலகி ஒரு தனி உலகத்திலே இருந்தது.

புதன், 3 ஜூன், 2015

பங்குச்சந்தையில் வெற்றிகளைக் குவிக்கும் ஒரு ரகசிய பேராசிரியர்

இந்திய பங்குச்சந்தையில் வெற்றிகளைக் குவித்தவர் என்று பார்க்கும் போது ராகேஷ் ஜூன்ஜூன்வாலா தான் நினைவுக்கு வருவார்.


ஆனால் அவரையும் தாண்டி சில மனிதர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள். சிலர் அவர்களாகவே மீடியா என்பதற்குள் வராமல் உள்ளனர்.



அதில் ஒருவர் தான் மாங்கேகர் என்ற கல்லூரி பேராசிரியர். இவரைப் பற்றிய பெரும்பாலான விவரங்கள் யாருக்கும் அவ்வளவாக தெரியாததால் Prof M என்றே சந்கேதத்தில் குறிப்பிடப்படுகிறார்.

இவர் 80களிலே சந்தையில் முதலீடு செய்ய ஆரம்பித்தாலும் 2003ல் தான் வெளிச்சத்துக்கு தெரிய வர ஆரம்பித்தார்.

திங்கள், 1 ஜூன், 2015

ஐந்து லட்ச ரூபாய் தேவைக்கும் பங்குச்சந்தையில் நிதி திரட்டலாம்

சிறிய நிறுவனங்களும் பங்குச்சந்தையில் நிதி திரட்டும் பொருட்டு செபி சில ஏற்பாடுகளை செய்து இருந்தது. இதற்கு Alternative Capital Raising Platform என்று பெயர் கொடுத்து இருந்தார்கள்.


இதனைப் பற்றி மிக விரிவாக இங்கு எழுதி இருந்தோம்.
இனி சுயதொழில் செய்பவர்கள் பங்குச்சந்தையில் பணம் திரட்டலாம்



அதன் பிறகு இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி அவர்கள் இந்த அமைப்பிற்கு தலைவராக நியமிக்கப்பட்டார்.

அவர் பொறுப்பேற்ற பிறகு சில முக்கியமான மாற்றங்கள் இந்த நிதி திரட்டலில் செய்யப்பட்டு இருந்தன.

புதன், 20 மே, 2015

சிறு தொழில் கடனுக்கு உதவும் முத்ரா வங்கி

மோடி அரசால் கொண்டு வரப்பட உள்ள முத்ரா வங்கி திட்டம் ஓரளவு சிறு தொழில் முனைவர்களுக்கு நல்ல பயனைத் தரும்.


தற்போது வங்கிகளில் தொழில் துவங்க வேண்டும் என்றால் எளிதில் கடன் கிடைப்பதில்லை. அதற்கு பயந்தே மக்கள் கந்து வட்டிகளிடம் கடன் வாங்குகிறார்கள்.



கடுமையான வட்டி என்பதால் தொழிலில் கிடைக்கும் வருமானத்தை வட்டியாகவே கட்டி விடுகிறார்கள். அதன் பிறகு தொழிலை மேம்படுத்துவது என்பது கடினமாகி விடுகிறது.

பலரது தொழில்கள் நலிவடைவதற்கு கந்து வட்டியும் ஒரு முக்கிய காரணம் என்பதை மறுக்க இயலாது.

வெள்ளி, 15 மே, 2015

ஆசியாவின் இளவயது டாப் பணக்காரார் சென்னையில் இருந்து..

சிங்கம் படத்தில் ஒரு டயலாக்  வரும். இவ்வளவு நாள் எங்கய்யா  இருந்தே என்று விஜயகுமார் சூர்யாவிடம் கேட்பார்.


அது போல் தான் இந்த செய்தி ஆச்சர்யமாக இருந்தது.

சினிமா, கிரிக்கெட் போன்றவற்றை தாண்டி மற்ற துறை பிரபலங்கள் உலக அளவில் கவனிக்கப்பட்டு அதன் பிறகு தான் சொந்த நாட்டில் அறிமுகமாகிறார்கள்.



அப்படிப்பட்ட ஒருவரை பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

நாம் ஆவணங்கள் தயாரிக்க அதிகம் பயன்படுத்துவது மைக்ரோசாப்ட் வோர்ட் போன்ற ஆபீஸ் மென்பொருட்கள். இதில் மைக்ரோசாப்ட் தான் மோனோபோலி.

உலகில் மைக்ரோசாப்ட் ஆபீஸ் மென்பொருளுக்கு அடுத்ததாக அதிகம் பயன்படுத்தப்படுவது Celframe office என்ற மென்பொருள்.