வியாழன், 31 ஜூலை, 2014

தில் இருப்பவர்கள் இந்த பங்கில் முதலீடு செய்யலாம்

பெரும்பாலும் எமது பங்கு பரிந்துரைகள் அதிக அளவு ரிடர்ன் என்பதை மையமாக வைத்து இருக்காது. அதிக அளவு ரிடர்ன் என்றால் அதிக அளவு ரிஸ்க் உள்ளது என்பதும் உண்மையே. ஆதலால் பாதுகாப்பிற்காக போர்ட்போலியோவில் மிக அதிக ரிஸ்க் உள்ள பங்குகளை பரிந்துரை செய்வதில்லை.

புதன், 30 ஜூலை, 2014

பணம் போட்டிப் போட்டு கொட்டப்படுகிறது இந்திய ஆன்லைன் சந்தையில்..

இந்தியாவில் அதிகமாக பயன்பாட்டிற்கு வரும் இன்டர்நெட் உலகமும், அதிகரித்து வரும் இளைய தலைமுறையும் ஆன்லைன் ஷாப்பிங் துறைக்கு சாதகமாக உள்ளன.

இன்னும் மூன்று வருடங்களில் ஆன்லைன் வியாபாரம் இரண்டு மடங்காக மாறவும் வாய்ப்புகள் உள்ளது.

அதனால் தான் கடந்த பதிவில் இதில் ஊக்கப்படுத்தும் விதமாக ஒரு கட்டுரையை எழுதி இருந்தோம். அதில் சில நண்பர்கள் விரிவான விளக்கங்களையும் கேட்டு எழுதி இருந்தார்கள். அந்த கட்டுரையை இங்கு பார்க்க..
பன்சால்களால் முடிந்தது தமிழரால் முடியாதா?

அவர்களுக்கு இந்த பதிவும் பயனாக இருக்கும் என்று நம்புகிறோம்.



நேற்றைய முந்தைய நாள் ப்ளிப்கார்ட் வெளிநாடுகளில் இருந்து 6000 கோடி முதலீட்டை பெற்றுள்ளது. இது அவர்களது இணையத்தை மொபைல் பயன்பாட்டில் மேம்படுத்துவதற்கும் ஸ்மார்ட்போன் பயனாளிகளுக்கு விரிவாக்குவதற்கும் பயன்படும் என்று தெரிகிறது.

இந்த நிதி திரட்டல் மூலம் ப்ளிப்கார்ட் நிறுவனத்தின் மதிப்பு 42,000 கோடியாக உயரந்துள்ளது.

செவ்வாய், 29 ஜூலை, 2014

பங்குச்சந்தையில் Depreciation பற்றிய விளக்கம் (ப.ஆ - 25)

இன்று 'பங்குச்சந்தை  ஆரம்பம்' தொடரின் பகுதியாக நிறுவன நிதி அறிக்கைகளில் வரும் 'DEPRECIATION'  என்ற பதத்தைப் பற்றி பார்ப்போம்.

திங்கள், 28 ஜூலை, 2014

இந்தியாவின் மிகப்பெரிய பவர் நிறுவனமாக மாறிய ரிலையன்ஸ்

அனில் அம்பானியால் நிர்வகிக்கப்படும் ரிலையன்ஸ் பவர் நிறுவனம் 12000 கோடி மதிப்பில் ஜெய் பிரகாஷ் அசோசியேட்ஸ் நிறுவனத்தின் ஒரு பிரிவான ஜெய் பிரகாஷ் பவர் நிறுவனத்தின் நீர் மின்சாரம் தயாரிக்கும் உலைகளை வாங்கியுள்ளது.

ஞாயிறு, 27 ஜூலை, 2014

வருமான வரியை இலவசமாகவே பதிவு செய்யும் வழி

வருமான வரியைப் பதிவு செய்ய கடைசி நாள் ஜூலை 31 நெருங்கி வருகிறது.

லோன் எடுப்பதிலிருந்து விசா கிடைப்பது வரை வருமான வரி சான்றிதழ் தேவையாக இருப்பதால் அதனைப் பதிவு செய்து வைத்து இருப்பது நல்லது.



இதற்கு முன் சில இடைத்தரகர்கள் மூலமே வருமான வரி பதிவு செய்ய வேண்டி இருந்தது. அதற்கு 250 ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டி இருந்தது. இல்லாவிட்டால், அரசு அலுவலத்தில் கால் கடுக்க வரிசையில் நிற்க வேண்டி இருக்கும்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அரசு ஆன்லைனிலே வருமான வரி பதிவு செய்யலாம் என்ற முறையைக் கொண்டு வந்த பிறகு எல்லாம் எளிதாகி விட்டது.

சனி, 26 ஜூலை, 2014

நேர்மையில்லாத CAIRN பங்கை என்ன செய்யலாம்?

CAIRN நிறுவனம் உள்நாட்டில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. அடுத்த மூன்று வருடங்களில் நிறுவனத்தின் உற்பத்தி இரண்டு மடங்கு அளவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக எமது போர்ட்போலியோக்களில் பரிந்துரைக்கப்பட்டது.

வியாழன், 24 ஜூலை, 2014

அடுத்த வாரம் குறையும் போது பங்குகளை வாங்கிப் போடலாம்

பாண்டி செல்வன் என்ற நண்பர் நமது தளத்தில் பங்குச்சந்தை செய்திகளை தினமும் எழுதலாம் என்று ஒரு கருத்தை பதிவு செய்து இருந்தார். அவரது கருத்திற்கு நன்றி!