IncomeTax லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
IncomeTax லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 26 அக்டோபர், 2018

வரியை வாரி வழங்க தொடங்கும் இந்தியர்கள்

மத்திய அரசின் செலவுகளுக்கு வரி மூலமே பிரதான வருமானம்.


இது பல வழிகளில் பெறப்பட்டாலும் மூன்றை முக்கியமாக கருதலாம்.



ஒன்று , 
தனிப்பட்ட நம்மை போன்றவர்கள் மாத சம்பளத்தில் கிடைக்கும் வருமானத்திற்கு கட்டும் Personal Income Tax.

இரண்டாவது, 
தனிப்பட்ட வியாபாரம் செய்து கிடைத்து வரும் வருமானத்தில் கட்டும் Personal Income Tax.

மூன்றாவது,
நிறுவனங்கள் தங்கள் லாபத்தில் கட்டும் Corporate Tax.

இந்த மூன்றும் சேர்ந்து தான் Direct Tax என்று அழைக்கப்படுகிறது.

புதன், 11 ஜூலை, 2018

அபராதம் தவிர்த்து வருமான வரி பதிவு செய்க..

ஒவ்வொரு வருடமும் ஜூலை 31க்குள் வருமான வரி பதிவு செய்ய வேண்டும்.

இந்த வருடமும் வருமான வரி பதிவு செய்வதற்கான கடைசி தேதி நெருங்குகிறது.



ஆனால் இந்த வருடம் முதல் அரசு கட்டாய அபராதம் நிர்ணயித்துள்ளது.

ஐந்து லட்சத்திற்கு மேல் உள்ளவர்கள் ஜூலை 31க்கு பிறகு பதிவு செய்தால் 5000 ரூபாய் அபராதம் கட்ட வேண்டும். அதே நேரத்தில் டிசம்பர் 31க்கு மேல் பதிவு செய்தால் 10000 ரூபாய் அபராதம் கட்ட வேண்டும்.

ஐந்து லட்சத்திற்கு கீழ் உள்ளவர்கள் 1000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.

ஞாயிறு, 4 பிப்ரவரி, 2018

ஜேட்லியின் புதிய LTCG வரி, எப்படி சமாளிப்பது?

முந்தைய ஒரு பதிவிலே இந்த வருட தேர்தல் பட்ஜெட் பங்குசந்தைக்கு சாதகமாக இருக்காது என்று கூறி இருந்தோம்.


அதே போலவே, அருண் ஜெட்லியும் நிதி பற்றாகுறையை 3.5% என்று இருக்குமளவு பார்த்து விட்டு இருப்பதை மட்டும் அங்கும் இங்கும் பிரித்துக் கொடுத்து விட்டார்.



இதனால் பங்குச்சந்தையும் மகிழ்வு கொள்ளவில்லை. அதே நேரத்தில் விவசாயிகள், பொது மக்கள் என்று எவருக்கும் திருப்தி அளிக்காமல் போய் விட்டது.

இது ஒரு தற்காலிகம் என்பதால் விட்டு விடுவோம்.

அதே நேரத்தில் அருண் ஜெட்லி பங்குச்சந்தை முதலீடுகளில் கிடைக்கும் லாபத்திற்கு LTCG வரியில் சில மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளார்.

ஞாயிறு, 4 ஜூன், 2017

PAN எண்ணை ஆதாருடன் எவ்வாறு இணைப்பது?

மத்திய அரசின் வருமான வரித் துறை அணைத்து வங்கி கணக்குகளை ஆதாருடன் இணைத்து வருகிறது.


இந்த நேரம் ஆதார் எண் இணைக்கப்படாத வங்கி கணக்குகள் ஆக்டிவ் நிலையில் இருந்து மாறி இருக்கலாம். அவ்வாறு இருப்பின் தொடர்புடைய வங்கி கிளையை அணுக வேண்டும்.



அடுத்து, PAN எண்ணை ஆதாருடன் இணைக்க வருமான வரித்துறை உத்தரவிட்டு உள்ளது.

அவ்வாறு இணைக்காவிட்டால் இந்த வருடம் வருமான வரிக் கணக்குகளை தாக்கல் செய்ய முடியாது என்பது குறிப்பிட்டத்தக்கது.

ஆதார் எண்ணை இணைப்பதற்கு இரு வழிகள் உள்ளன.

வியாழன், 26 ஜனவரி, 2017

சேமிப்பு மூலம் வருமான வரி விலக்கு பெறும் நேரம்

மாத ஊதியம் பெறுபவர்கள் குறைவாக வருமான வரி கட்ட வேண்டும் என்றால் அதற்கான சேமிப்பு ஆதாரங்களை காட்ட வேண்டிய நேரமிது.


ஏற்கனவே வருமான வரி தொடர்பாக எழுதிய பதிவுகளை மீண்டும் பகிர்வது இந்த நேரத்தில் உபயோகமாக இருக்கும் என்பதால் தொடர்கிறோம்.



தற்போதைய நிலவரப்படி 2,.5 லட்சம் ரூபாய் வரை வருமானம் வந்தால் வரி கிடையாது. பெண்களுக்கு பத்தாயிரம் ரூபாய் வரை கூடுதல் வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

2.5 முதல் 5 லட்சம் வரை 10% வரி விதிக்கப்படுகிறது.

அடுத்து 5 முதல் 10 லட்சம் வரை 20% வரி விதிக்கப்படுகிறது.

வியாழன், 1 டிசம்பர், 2016

தங்க நகைகள் மீதான வரி விதிப்பு பற்றிய முழு விளக்கம்

இன்று வீடுகள் மற்றும் லாக்கரில் வைக்கப்பட்டுள்ள தங்க நகைகளுக்கும் வரி விதிக்கப்படும் என்பது போன்ற அறிவிப்புகள் பாமர மக்களிடையே ஒரு பதற்றத்தை ஏற்படுத்தியது என்று சொல்லலாம்.


ஆனால் அதனை தெளிவு படுத்த வேண்டிய மீடியாக்கள் மேலும் குழம்பிய குட்டையிலே மீன் பிடித்துக் கொண்டிருந்தது என்பது ஒரு வேதனையான விடயம் தான்.



செய்தியாக அறியப்பட்டது என்பது இது தான்.

ஒரு வீட்டில் மணமான பெண்ணுக்கு 500 கிராம் தங்க நகைக்கு மேலும், மணமாகாத பெண்ணுக்கு 250 கிராம் நகைக்கும் மேலும், அதே நேரத்தில் ஒரு ஆணுக்கு 100 கிராம் மேலும் வைத்து இருந்தால் அந்த தொகைக்கு வரியாக 85% கட்ட வேண்டும் என்பது தான் பரப்பப்பட்டது.

செவ்வாய், 26 ஜூலை, 2016

வருமான வரி ITR படிவங்களை பற்றிய சில குறிப்புகள்

கடந்த வாரம் ஒரு பதிவில் வருமான வரியினை cleartax.in என்ற தளம் மூலம் இலவசமாக எளிதாக பதிவு செய்து கொள்ளலாம் என்று குறிப்பிட்டு இருந்தோம்.

பார்க்க: வருமான வரியை பதிவு செய்ய ஒரு எளிய வழி

அதன் பிறகு நண்பர்கள் ITR என்ற பெயரில் பல படிவங்கள் இருப்பதை குறிப்பிட்டு அவை என்ன? என்று கேட்டு இருந்தார்கள்.



அதனைப் பற்றி சுருக்கமாக இங்கு பகிர்கிறோம்.

ITR என்பது Income Tax Return என்பதன் சுருக்கம் ஆகும்.

அதில் ITR-1, ITR-2, ITR-2A, ITR-3, ITR-4, ITR-4S என்ற பெயரில் தேவைக்கு ஏற்றவாறு பல படிவங்கள் இருக்கின்றன.

திங்கள், 18 ஜூலை, 2016

வருமான வரியை பதிவு செய்ய ஒரு எளிய வழி

இந்த முறை மத்திய அரசு பல வழிகளில் வருமான வரிகளை திரட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது,


இதற்கான கடைசி தேதி ஜூலை 31 என்பதால் இன்னும் இரண்டு வாரங்களே உள்ளது.



முன்பு போல், வருமான வரி அலுவலகத்தை நாடி செல்லும் நிலை முற்றிலும் நீங்கி விட்டதால் வருமான வரி செலுத்தாத நிலை இருந்தாலும் பதிவு செய்வது பல வழிகளில் உதவும்.

வங்கி கடன் வாங்குதல், எதிர்காலத்தில் வருமான வரித் துரையின் கேள்விகளுக்கு பதில் அளித்தல், விசா விண்ணப்பித்தல் என்று பல நிலைகளில் தேவைப்படுகிறது.

ஆன்லைன் மூலமாக வருமான வரித் தளத்திலே பதிவு செய்யலாம்.

வியாழன், 17 மார்ச், 2016

வரிக்கு பயந்து டிவிடென்ட்டை அள்ளிக் கொடுக்கும் நிறுவனங்கள்

இந்த வருட பட்ஜெட்டில் அருண் ஜெட்லி சில வித்தியாச வரி விதிப்புகளைக் கொண்டு வந்தார்.


அதில் பி.எப் தொடர்பான வரி விதிப்பு அவசர கோலத்தில் வடிவமைக்கப்பட்டு கடுமையான எதிர்ப்பு காரணமாக பின் வாங்கப்பட்டது.



அதனைத் தொடர்ந்து,  பங்குச்சந்தை நிறுவனங்களால் வழங்கப்படும் டிவிடென்ட்டுக்கும் வரி விதிக்கப்பட்டது.

டிவிடென்ட்டை பொறுத்த வரை அதனை வழங்கும் நிறுவனங்கள் ஏற்கனவே Dividend Distribution Tax என்ற பெயரில் வரியை செலுத்தி தான் நமக்கு வழங்குகின்றன.

வெள்ளி, 27 நவம்பர், 2015

வரிக்கான வருமானம் வராவிட்டாலும் பதிவு செய்ய வேண்டுமா?

பொதுவாக வருமான வரி கட்டிய பிறகு அதற்கான முழு விவரங்களை ரிடர்ன் ஆவணமாக பதிவு செய்வது வழக்கம்.


எதிர்காலத்தில் வருமானம் மற்றும் வரி கட்டியதற்கான ஆதராமாக இந்த ரிடர்ன் படிவங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.



ஆனால் சில சமயங்களில் நமது வருமானம் வருமான வரி வரம்பிற்குள் வராவிட்டாலும் பதிவு செய்ய வேண்டுமா? என்ற சந்தேகம் வரலாம்.

வருமான வரி சட்டங்கள் படி, நாம் வருமான வரி வரம்பிற்குள் வராவிட்டால் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. அதாவது தற்போது 2.5 லட்சத்திற்கு கீழ் வருடத்திற்கு வருமானம் வந்தால் பதிவு செய்ய வேண்டாம்.

புதன், 4 நவம்பர், 2015

தங்கத்திற்கு வட்டி தரும் அரசு பத்திரங்களை பயன்படுத்துவது எப்படி?

இன்று பிரதமர் மோடி அவர்கள் தங்க பத்திரங்கள் மற்றும் தங்க நாணயங்கள் தொடர்பான திட்டத்தினை தொடங்கி வைக்கிறார்.


இந்த திட்டம் கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டாலும் திட்டமிடுதல் மற்றும் ரிசர்வ் வங்கி ஒப்புதல் பெறுதல் போன்ற காரணங்களால் தற்போது நடைமுறைக்கு வருகிறது.



இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் வீட்டில் பயன்படாமல் இருக்கும் தங்கத்தை முதலீடு முறைக்கு கொண்டு வருதல் மற்றும் தங்கத்தை உலோகமாக வாங்கி வைப்பதை குறைப்பதும் ஆகும்.

இதனால் தங்க இறக்குமதி குறைந்து பெருமளவு அந்நிய செலாவணி மிச்சமாகலாம் என்பது அரசின் கணிப்பு.

பங்குச்சந்தையில் புழங்கும் தங்க ETF போன்ற பத்திரங்களை போல் அரசும் தங்க பத்திரங்களை வெளியிட உள்ளது.

வியாழன், 25 ஜூன், 2015

புதிய வருமான வரி படிவங்களை எப்படி பயன்படுத்த வேண்டும்?

காலங்காலமாக தொடர்ந்து வந்த கடினமான வருமான வரி படிவங்கள் இந்த நிதி ஆண்டு முதல் மாற்றப்பட்டுள்ளது.


இதில் தேவையில்லாத தகவல்கள் தவிர்க்கப்பட்டு படிவங்கள் எளிமையாக்கப்பட்டுள்ளன.



மொத்தத்தில் நான்கு படிவங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதில் நமக்கு வரும் வருமானத்திற்கு ஏற்ப படிவங்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.

எந்த படிவத்தை நாம் பயன்படுத்த வேண்டும் என்பதை கீழே பார்க்கலாம்.

செவ்வாய், 16 ஜூன், 2015

விவசாய வருமானத்தில் வரியை எப்படி சேமிப்பது?

நமது அரசியல் வாதிகள் வருமான வரித்துறையை ஏமாற்றுவதற்கு உபோயோகிக்கும் ஒரு முக்கிய ஆயுதம் விவசாய வருமானம் என்று சொல்லலாம்.


கடந்த முறை, சரத் பவார் அவர்களது மகள் 10 ஏக்கர் நிலத்தில் 114 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கப்பெற்றதாக தேர்தல் கமிசன் அறிக்கையில் கூறி இருந்தார்,

அவ்வளவு வருமானம் கிடைக்க அப்படி என்னது தான் பயிர் செய்தார் என்று தெரியவில்லை? சொன்னால் நன்றாக இருக்கும்.



இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. இந்திய அரசின் கொள்கைப்படி விவசாயத்தின் மூலம் கிடைக்கப்பெறும் வருமானத்திற்கு வரி கிடையாது. அதனால் தான் அரசியல் வாதிகள் போட்டி போட்டுக் கொண்டு விவசாயிகளாக மாறி விடுகின்றனர்.

உண்மையிலே முழுவதுமாக வரி இல்லை என்று சொல்ல முடியாது. Back Door என்ற முறை கணக்கு படி சிறிது வரி கட்ட வேண்டும். அது உங்களது மற்ற வருமானங்களை சார்ந்தும் இருக்கிறது. இருந்தாலும் அதிக அளவு பயன் உள்ளது.

திங்கள், 11 மே, 2015

ஜெயலலிதாவால் வருமான வரி செலுத்துபவருக்கு கிடைக்கும் டிப்ஸ்

நேற்று வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ஜெயலலிதா விடுவிக்கப்பட்டார்.


அதனை அரசியல் ரீதியாக நாம் விமர்சனம் செய்யாமல் நீதிபதியின் தீர்ப்பை பொருளாதார அடிப்படையில் மட்டும் பார்ப்போம்.



அதில் வருமான வரி செலுத்தும் நமக்கு தோதுவாக நீதிபதி ஒரு தகவலை கொடுத்துள்ளார்.

90களில் ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு 66 கோடி என்று வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதில் அவர் ஆட்சி செய்த ஐந்து வருடங்களில் 34 கோடி அளவிற்கு வருமானம் காட்டி உள்ளார்.

வியாழன், 23 ஏப்ரல், 2015

இனி வருமான வரி படிவங்களை போஸ்டில் அனுப்ப வேண்டாம்

கடந்த வருடம் வருமான வரி பதிவு செய்யம் போது யோசித்ததுண்டு.


இ-படிவங்கள் என்று தான் பெயர். ஆனால் எல்லாம் பதிவு செய்த பிறகு பிரிண்ட் எடுத்து போஸ்டில் அனுப்ப வேண்டி இருக்கிறதே என்று நினைத்ததுண்டு.



இது இ-படிவம் என்பதன் முழுப் பயனை அனுபவிக்க முடியாமல் தடுத்து இருந்தது.

தற்போது வருமான வரித்துறை மாற்றி விட்டது. நல்ல முடிவு.

இனி இ-பைல் செய்த பிறகு போஸ்டில் அனுப்ப வேண்டாம்.

ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

வெளிநாட்டிற்கு சென்றால் வருமான வரியில் சொல்ல வேண்டும்

அடுத்த வருடம் வருமான வரி படிவம் தாக்கல் செய்யும் போது பல இதர தகவல்களையும் இணைக்க வேண்டும் என்று அரசு கூறி உள்ளது.

இதன்படி,

இனி வெளிநாடு செல்பவர்கள் முழு விவரங்களுடன் வெளிநாட்டு செலவுகளுக்கான மூலங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். வெளிநாடுகளில் உள்ள சொத்து விவரங்களையும் குறிப்பிட வேண்டும்.




இது போக அணைத்து வங்கி கணக்குகளையும் வருமான வரி படிவத்தில் குறிப்பிட வேண்டும்.

பல வழிகளில் வந்துள்ள வருமானத்தை கண்காணிக்க இந்த வங்கி கணக்குகள் பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது.

திங்கள், 2 மார்ச், 2015

2015 பட்ஜெட்டால் தனி நபருக்கு என்ன லாபம்?

இந்த வாரம் முழுமையும் பட்ஜெட்டால் பயன் பெறும் விடயங்களைத் தான் விரிவாக எழுதி வருகிறோம்.

ஏற்கனவே பட்ஜெட்டை பங்குச்சந்தையின் பார்வையில் பார்த்தோம். நேற்று தங்க முதலீட்டில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை பார்த்தோம்.

இன்று தனி மனிதர்களுக்கு என்னென்ன வரி விலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன என்பதையும் பார்ப்போம்.



கடந்த வருடம் தான் ஜெட்லி வருமான வரி வரம்பை இரண்டு லட்சம் என்பதிலிருந்து 2.5 லட்சமாக உயர்த்தி இருந்தார். அதனால் இந்த வருடம் எந்த உயர்வும் காணப்படவில்லை. அதே வரம்புகளே தொடர்கிறது.

அதற்கு பதிலாக சில வருமான வரி விலக்கு சலுகைகளை வழங்கியுள்ளார்.

புதன், 27 ஆகஸ்ட், 2014

நிலங்களை விற்கும் போது இப்படி வரியை சேமிக்கலாம்

இதற்கு முன் பங்கு வருமானத்திற்கு வரி உண்டா? என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதி இருந்தோம்.

அதில் Long Term Capital Gain (LTCG) என்பதன் மூலம் பங்கு முதலீட்டில் முழுமையாக வரியை சேமிக்கலாம் என்று கூறி இருந்தோம். அதே கட்டுரையில் பங்குச்சந்தை அல்லாத ரியல் எஸ்டேட், தங்க முதலீடு போன்றவற்றிக்கு வரி உள்ளதையும் சுட்டிக் காட்டி இருந்தோம்.


சில கணக்கீடுகள் மூலம் அரசு நமக்கு வரியை சேமிக்கும் வழியை அளிக்கிறது. அதனைப் பற்றி விவரமாக பார்ப்போம்.

Long Term Capital Gain Tax


ரியல் எஸ்டேட் முதலீடுகளை மூன்று வருடத்திற்குள் விற்றால் அது Short Term Capital Gain (STCG) என்ற பிரிவிற்குள் வந்து விடும். அதாவது உங்கள் லாபத்திற்கு 30% வரை வரி கட்ட வேண்டி இருக்கும்.

ஆனால் மூன்று வருடத்திற்கு பிறகு விற்றால் LTCG முறை மூலம் அதிக பலனை பெறலாம். ஆனால் LTCG முறையில் கூட 20% வரி கட்ட வேண்டி இருக்கும்.

ஞாயிறு, 27 ஜூலை, 2014

வருமான வரியை இலவசமாகவே பதிவு செய்யும் வழி

வருமான வரியைப் பதிவு செய்ய கடைசி நாள் ஜூலை 31 நெருங்கி வருகிறது.

லோன் எடுப்பதிலிருந்து விசா கிடைப்பது வரை வருமான வரி சான்றிதழ் தேவையாக இருப்பதால் அதனைப் பதிவு செய்து வைத்து இருப்பது நல்லது.



இதற்கு முன் சில இடைத்தரகர்கள் மூலமே வருமான வரி பதிவு செய்ய வேண்டி இருந்தது. அதற்கு 250 ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டி இருந்தது. இல்லாவிட்டால், அரசு அலுவலத்தில் கால் கடுக்க வரிசையில் நிற்க வேண்டி இருக்கும்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அரசு ஆன்லைனிலே வருமான வரி பதிவு செய்யலாம் என்ற முறையைக் கொண்டு வந்த பிறகு எல்லாம் எளிதாகி விட்டது.

செவ்வாய், 15 ஜூலை, 2014

பட்ஜெட்டிற்கு பிறகு வருமான வரி கணக்கிடுவது எப்படி?

அருண் ஜெட்லி தாக்கல் செய்த பட்ஜெட்டில் தனி நபர் பிரிவினருக்கான வருமான வரியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு அதிக பலனைத் தருகிறது.

இந்த பதிவில் முதலில் என்னனென்ன சலுகைகள் தரப்பட்டுள்ளன என்பதைப் பார்ப்போம். அதன் பிறகு எப்படி பயன்படுத்தலாம் என்பதை உதாரணங்களுடன் பார்ப்போம்.

சம்பளக்காரர்களுக்கு கொஞ்சம் கரிசனை
காட்டி இருக்கிறார்கள் 

இவ்வளவு நாள் குறைந்தபட்சம் இரண்டு லட்சம் வருமானம் வந்தாலே வரி கட்ட வேண்டும். இனி 2.5 லட்சத்துக்கு மேல் வருமானம் வந்தால் மட்டுமே வரி கட்ட வேண்டும். இதனால் 10% வருமான வரி வரம்பிற்குள் வருபவர்கள் 5000 ரூபாயும், 20% வருமான வரி வரம்பிற்குள் வருபவர்கள் 10000 ரூபாயும், 30% வருமான வரி வரம்பிற்குள் வருபவர்கள் 15000 ரூபாயும் வருடத்திற்கு சேமிக்கலாம்.