வெள்ளி, 6 செப்டம்பர், 2013

சூழ்நிலையை மிக எளிமையாக சொல்லும் ரத்தன் டாடா

ஒரு செய்தி தளத்தில் ரத்தன் டாடாவின் இந்த பேட்டி வாசிக்க நேரிட்டது. தற்போதைய இந்திய பொருளாதார சூழ்நிலையை மிக எளிமையாக கூறியுள்ளார். எமக்கு மிகவும் பிடித்திருந்ததால் பகிருகிறோம்.

"நம்முடைய பிரதமர் மன்மோகன் சிங் கடுமையான நிதி நெருக்கடியின் போதும் இந்தியாவின் மரியாதையை உயர்த்தியவர் ஆனால் சமீப காலத்தில் நாம் அந்த மரியாதையை இழந்து விட்டோம்"


"நாம் உலகின் நம்பிக்கையை இழந்துவிட்டோம். மற்றும் அதை அரசாங்கம் ஏற்றுக்கொள்வதில் மெத்தனம் காட்டுகிறது.  கொள்கைகள் எதற்காக வடிவமைக்கப்பட்டதோ அந்த நோக்கத்திற்காக செயல்படுத்தப்பட்டு இருந்தால், அது நாட்டிற்கு நன்மை பயக்கும்"

"அரசாங்கம் அடிக்கடி சில தனி நபர்களுக்கு சாதகமாக கொள்கைகளை உருவாக்கியது, மாற்றியது, தாமதப்படுத்தியது மற்றும் திருத்தியது. எனவே, ஒரு சில காரணங்களுக்காக அல்லது வேறு காரணங்களுக்காக அரசு அந்த நபர்களின் செல்வாக்கின் கீழ் ஒளிந்து கொண்டது "

1991 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களை நினைவு கொண்ட டாட்டா, "அப்போது துணிச்சலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன, அதை செய்தவர்கள் இப்போதுள்ளவர்கள் தான் என்று கூறினார். என் பார்வையில் ஒருசில குறிப்பிட்ட நபர்களின் அதிகாரத்தின் காரணமாக, அவர்களுக்கு சாதகமான காரியங்கள் நடந்தேறிவருகின்றன. ஒட்டுமொத்தத்தில் என்ன நடந்தாலும் அவை இந்திய மக்களின் நலனுக்காக செய்யப்பட வேண்டும். ஒரு சில தனிநபர்களின் நன்மைக்காக இருக்கக்கூடாது"

"அரசு இயந்திரம் வெவ்வேறு திசைகளில் இழுத்துச் செல்லப்படுகிறது. அரசு இயந்திரத்தை இயக்குபவர்களே இந்த செயலைச் செய்கிறார்கள்"

"நமக்கு ஒரு திசைநோக்குப் பார்வை இருக்க வேண்டும். அரசு வெவ்வேறு திசைகளில் செல்கிறது. கூட்டணி கட்சிகள் வேறு திசைகளில் செல்கிறது, மாநிலங்கள் வேறு திசையில் செல்கின்றன. நம்முடைய அரசை நாம் பலப்படுத்தும் காரியத்தை செய்யவில்லை"

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தலைமையைப் பற்றி பேசும் போது, குஜராத்தில் மோடி தன் திறமையை நிருபித்து காட்டியுள்ளார் என நான் நினைக்கிறேன், குஜராத்தை முன்னேற்றப்பாதைக்கு அவர் கொண்டு சென்றுள்ளார். அவர் நாட்டிற்கு என்ன செய்வார் என்பதை பற்றி கருத்து கூறும் ஒரு நிலையில் நான் இல்லை"

இதை விட எளிதாகக் கூறுவது கஷ்டம். புரிய வேண்டியவர்களுக்கு மிகத் தாமதமாக புரிந்துள்ளது.

Read more at: Thatstamil News

English Summary:
Tata on economical crisis and Govt.

தொடர்புடைய பதிவுகள்:
ஒரு பயனுள்ள பதிவு




« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

4 கருத்துகள்:

  1. I had a reasonably high regard for him till I heard the Nira Radia Tapes. Here, I interpret his words as, என்ன நடந்தாலும் அவை இந்திய மக்களின் நலனுக்காக செய்யப்பட வேண்டும். ஒரு சில தனிநபர்களின் நன்மைக்காக இருக்கக்கூடாது" (அது நானாக இல்லாத பட்சத்தில்!)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே! எனக்கும் சிறிது ஏமாற்றம் தான். அம்பானிகள் ஒப்பீடுகையில் இவர் பரவாயில்லை என்றே நினைக்கிறேன்.

      நீக்கு
  2. பிரச்சினை இருக்கிறது என்று ஆட்சியாளர்கள் ஒத்துக்கொள்ளவே இத்தனை மாதங்கள் (18) எடுத்துக் கொண்டார்களே..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கருத்தும் சரியே! சில பேர் செய்யம் தவறுக்கு 100 கோடி பேரும் பாதிக்கப்படுகிறார்கள். நன்றி நண்பரே!

      நீக்கு