சனி, 28 பிப்ரவரி, 2015

பங்குச்சந்தையின் பார்வையில் 2015 பட்ஜெட்

நேற்று ரயில்வே பட்ஜெட்டை எதிராக எடுத்துக் கொண்ட சந்தை இன்றைய ஜெட்லியின் பட்ஜெட்டை மாறாக எடுத்துக் கொண்டு நேர்மறை புள்ளிகளில் சென்றது. இதற்கு நேற்று வெளியான பொருளாதார ஆய்வறிக்கையும் ஒரு காரணமாக அமைந்தது.

வியாழன், 26 பிப்ரவரி, 2015

ரயில் பட்ஜெட்டை எதிர்மறையாக எதிர்கொண்ட சந்தை

நேற்று இந்திய ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனை 200 புள்ளிகளுக்கும் மேல் குறைந்து சந்தை எதிர்மறையாகவே எதிர்கொண்டது.

புதன், 25 பிப்ரவரி, 2015

சாம்சங்கை கதறடிக்கும் இந்திய மொபைல் நிறுவனங்கள்

சில ஆண்டுகள் முன்பு சிதம்பரம் ஒரு பட்ஜெட்டில் உள்நாட்டு எலெக்ட்ரானிக்ஸ் உற்பத்தியாளர்களுக்கு அதிக வரி சலுகைகளை கொடுத்தது நியாபகம் இருக்கிறது.


அதனால் தான் என்னவோ, மொபைல், டேபிலேட் என்று இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் சந்தைகளில் இந்திய உற்பத்தியாளர்கள் தங்களது இடத்தை நிலை நிறுத்தி வருவது மகிழ்வாக உள்ளது.



இத்துடன் திறந்த இலவச மென்பொருள்கள், குறைந்த விலையில் சீனா, தைவானில் கிடைக்கும் ஹார்ட்வேர் போன்றவையும் இந்திய உற்பத்தியாளர்களுக்கு சாதகமாக உள்ளன.

கடந்த காலாண்டில் மைக்ரோமேக்ஸ் சாம்சங்கை இடத்தைப் பிடித்து இந்தியாவின் முதன்மை மொபைல் உற்பத்தியாளராக உயர்ந்தது.

செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

இந்திய பட்ஜெட் மீதுள்ள எதிர்பார்ப்புகள்

மோடி அரசின் முதல் முழுமையான பட்ஜெட் வரும் பிப்ரவரி 28ல் தாக்கல் செய்யப்படுகிறது.

திங்கள், 23 பிப்ரவரி, 2015

இந்திய GDPயைக் கணக்கிடுவதில் ஏற்பட்டுள்ள மாறுதல்கள்

நேற்றைய நாடாளுமன்ற துவக்க உரையில் ஜனாதிபதி GDP வளர்ச்சி 7.5% எனபதிற்க்கும் மேல் அடைவது சாத்தியம் என்று பேசி இருக்கிறார்.

ஞாயிறு, 22 பிப்ரவரி, 2015

பணப் பற்றாக்குறையில் அபார்ட்மெண்ட்களை விற்கும் DLF

இன்னும் பொருளாதாரம் சுணக்க நிலையிலிருந்து முழுமையாக மீளவில்லை என்பதற்கு இந்த செய்தியும் ஒரு சான்றாக அமையும்.

தனியார் வங்கி வீட்டுக் கடனில் ஒரு டிப்ஸ்

நண்பர் அனந்த குமார் அவர்கள் எழுதிய கட்டுரை ஹிந்து தமிழ் நாளிதழில் வெளிவந்துள்ளது. அவர் மின் அஞ்சல் மூலம் கட்டுரையை பகிர்ந்துள்ளார். இங்கு பகிர்கிறோம்.





வட்டி குறைந்தால் தவணை குறையுமா?

தனியார் வங்கியில் வீட்டுக் கடன் பெற்றவரா நீங்கள்? அப்படியானால் நீங்கள் விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் இது. வீட்டுக் கடன் பெற்று தவறாமல் மாதத்தவணை கட்டி வரும் அனைவருக்கும் இந்தக் கட்டுரை ஒரு விழிப்புணர்வைத் தரும்.