வெள்ளி, 9 ஜனவரி, 2015

கப்பலில் பதுக்கப்படும் கச்சா எண்ணெய்

கச்சா எண்ணெய் அரசியல் மற்றும் எண்ணெய் சப்ளையில் ஏற்ற மாற்றங்களால் அகல பாதாளத்திற்கு சென்றுள்ளது. தற்போது 50$ க்கும் குறைவாக வந்துள்ளது. ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 50% அளவு வீழ்ச்சி அடைந்துள்ளது.


பார்க்க: முக்கோண அரசியலில் அடிமாட்டு விலைக்கு செல்லும் பெட்ரோல்

இதற்கு மேல் வீழ்ச்சி அடைந்தால் தாங்க முடியாது என்று எண்ணெய் நிறுவனங்கள் ஏற்கனவே உற்பத்தி செய்த எண்ணையை கடலில் சேமிக்க ஆரம்பித்துள்ளன.



இதே போல் கச்சா எண்ணெயில் வர்த்தகம் செய்பவர்களும் பெரிய அளவிலான எண்ணையை சேமிக்கும் கப்பல்களை வாடகைக்கு பிடிக்க ஆரம்பித்துள்ளன. இதில் 3 பில்லியன் பரேல்லல்கள்  அளவு கச்சா எண்ணையை சேமித்து வைக்க முடியும்.

இதற்கு அடுத்த வருடம் எப்படியும் மீண்டும் கச்சா எண்ணெய் விலை மேலே வந்து விடும் என்ற ஒரு நம்பிக்கை உள்ளது. இதனால் கொழுத்த லாபத்தை சம்பாதிக்க முடியும்.

அநேகமாக அவர்கள் நம்பிக்கை வீண் போகாமால் நிறைவேற வாய்ப்பு உள்ளது போல் தான் உள்ளது. இதற்கு மேல் கச்சா எண்ணெய் விலை சரிவதற்கு இடம் இருப்பதாக தெரியவில்லை.

பார்க்க: எண்ணெய் விலை குறைவு ஆயில் நிறுவனங்களை எவ்வாறு பாதிக்கும்?

English Summary:
Due to sharp crude oil price falls, Oil traders are storing crude oil in sea using big container ships.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

2 கருத்துகள்: