திங்கள், 9 நவம்பர், 2015

தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

நண்பர்கள் அனைவருக்கும் எமது இதயங்கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்!


இந்த தருணத்தில் நமது தள வாசகர் யசோதா இராமசுந்தரம் அவர்களது கவிதையை இங்கு பகிர்கிறோம்.



தீபாவளி

முத்தமிழுக்கு நீ ஒளிவெள்ளம்

வடக்கின் புராணத்திற்கு
நீ அசுர வெற்றி!

தெற்கின் பகுத்தறிவிற்கு
நீ உறவின் இழப்பு!

நம்பிக்கை போகட்டும் எப்படியோ!

இருபத்தியோராம் நூற்றாண்டின் அறிவியலுக்கு
பிடித்த பெருஞ்சான்றா? அது

உன்னால் கொண்டாட்டம் யாவருக்கும்

மாணவனுக்கு விடுமுறை
தொழிலாளிக்கு ஓய்வு
வியாபாரிக்கு வரவு - அவ்வாறே

மகிழ்வே உன்வரவு...

வா! மீண்டும்.. மீண்டும் வா!

- யசோதா இராமசுந்தரம்
முன்னாள் அறிவிப்பாளர்,  கொடைக்கானல் எப்.எம்.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக