புதன், 4 மார்ச், 2015

பெண் குழந்தைகளுக்கு பயனுள்ள செல்வமகள் திட்டம்

இந்த பட்ஜெட்டில் பெண் குழந்தைகளுக்கான ஒரு சேமிப்பு திட்டத்திற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதனைப் பற்றி பார்ப்போம்.

இந்த திட்டத்தின் பெயர்  "செல்வமகள் திருமணத்திட்டம் "



இந்த திட்டம் அஞ்சலங்களால் நடத்தப்படுகிறது. பத்து வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகள் மட்டுமே சேரலாம்.

முதலில் 1000 ரூபாய் கட்ட வேண்டும். அதன் பிறகு மாதந்தோறும் நமது விருப்பப்படி கட்டிக் கொள்ளலாம். அதற்கேற்ப ரிடர்ன் கிடைக்கும்.


ஒரு ஆண்டிற்கு குறைந்தபட்சம் 1000 ரூபாயும் முதல் அதிக பட்சம் 1.5 லட்சமும் கட்டிக் கொள்ளலாம்.

உதாரணத்திற்கு, ஒருவர் மாதந்தோறும் 1000 ரூபாய் வீதம் 14 ஆண்டுகள் கட்டி வந்தால் 21 வருடங்கள் முடிவில் ஆறு லட்சத்து 41 ஆயிரத்து 92 ரூபாய் கிடைக்கும்.

18 வயதாகும் போது, 50 சதவீதம் படிப்பு செலவுக்கும், திருமணம் நடைபெற்றால் முழுத் தொகையும் திரும்ப வழங்கப்படும்.  இதில் 9.1 சதவீதம் கூட்டு வட்டி வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தில் இணைவதற்கு பெரிதளவு சிரமங்கள இல்லை. அணைத்து அஞ்சலகத்திலும் கிடைக்கப்பெறும்.

திட்டத்தில் இணைவதற்கு கீழ் உள்ள இணைப்புகள் மட்டும் போதுமானது.
  • (1) தந்தையின் புகைப்படம் ஒன்று.மற்று இருப்பிடம் உறுதி செய்ய அடையாள அட்டை.(வாக்காளர் அட்டை. அல்லது ஆதார் அட்டை நகல் ஓன்று)
  • (2).பெண் குழந்தையின் பிறப்புச்சான்று நகல்
  • (3)₹1000 ஆயிரம் ரூபாய் பணம்

அரசு திட்டம் என்பதால் பாதுகாப்பானது கூட. அதே நேரத்தில் பயனான சிறு சேமிப்பு திட்டம்.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக