செவ்வாய், 16 ஜூன், 2015

மகிந்திரா நிறுவனத்திற்கு கிடைத்த மிக முக்கிய ஏர்பஸ் ஆர்டர்

உலகின் மிகப்பெரிய விமான நிறுவனங்கள் என்று ஏர்பஸ் மற்றும் போயிங் என்ற இரண்டைத் தான் சொல்லலாம்.


சிறிய தவறும் விமானங்களில் பெரிய பிரச்சினைகளை ஏற்படுத்தி விடும் என்பதால் இந்த நிறுவனங்கள் தங்கள் உதிரி பாகங்களை தயாரிக்கும் நிறுவனங்களை கூட கவனமாக தான் தேர்ந்தெடுக்கும்.



அதில் ஏர்பஸ் நிறுவனத்தின் ஒரு மிக முக்கியமான பெரிய அளவு ஆர்டர் இந்திய நிறுவனமான மகிந்திராவிற்கு கிடைத்துள்ளது. இதன்படி, அவர்கள் விமானங்களுக்கு மகிந்திரா நிறுவனம் உதிரிப்  பாகங்கள் தயாரிக்க வேண்டும்.

இதனை பல ஆண்டுகள் செல்லும் ஒரு மல்டி-பில்லியன் டாலர் டீல் என்றும் சொல்லலாம். ஒரு பில்லியன் டாலர் என்பது 6000 கோடி ரூபாய் என்பதை நினைவில் கொள்க. இன்னும் முழுவதுமான தொகை வெளிப்படையாக குறிப்பிடப்படவில்லை.

இந்த தொகையைக் காட்டிலும் அவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கும் ப்ராஜெக்ட்டின் தன்மை உலக அளவில் இந்திய நிறுவனங்கள் மீதுள்ள நம்பிக்கை அதிகரித்துள்ளதை காட்டுகிறது.

இந்த ப்ரொஜெக்டை மகிந்திரா குழும நிறுவனங்களான Tech Mahindra மற்றும் Mahindra Aerospace நிறுவனங்கள் ஏற்று நடத்த இருக்கின்றன. இதற்கு தேவையான மென்பொருள் சேவைகளை Tech Mahindra அளிக்கும்.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த இரண்டு பைலட்களால் உருவாக்கப்பட்ட GippsAero நிறுவனத்தை 2008ல் மகிந்திரா நிறுவனம் வாங்கி கொண்டது அதன் பிறகு Mahindra Aerospace என்று பெயர் மாற்றிக் கொண்டார்கள்.

இன்னும் சொல்லப் போனால், தற்போதைக்கு இந்தியாவில் விமானத்தை தயாரிக்கும் ஒரே தனியார் நிறுவனம் மகிந்திராவாகும் .

இந்த நிகழ்வு மோடியின் Make In India கொள்கைக்கு பெரிதும் உதவலாம். இன்னும் பல ப்ராஜெக்ட்கள் இந்தியாவிற்கு வருவது பெரிதும் நல்லது.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக